Everything posted by colomban
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அவர்கள் செய்த கொலைகள் எத்தனை கோடி ? நாங்கள் கவலைப்படலாமா ? 1945 க்கு பின்பு உலகில் அமெரிக்கா நடாத்திய கொலையாட்டத்தில் இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது நடாத்திய அணுகுண்டு தாக்குதலினால் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அந்த பிராந்தியமே சுடுகாடானது. அதன் பின்பு 1950 இல் இருந்து ஆரம்பமான கொரியா யுத்தம், 1955 – 1975 வியட்நாம் போர் அத்துடன் 1980, 1990 காலங்களில் சோமாலியா மற்றும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் கொல்லப்பட்டும், காணாமல் போனவர்கள் என மொத்தமாக பல மில்லியன்கள் ஆகும். 1999 இல் இருந்து யூகோஸ்லாவியாவில் நேட்டோ என்ற போர்வையில் அமெரிக்கா 15,000 தடவைகள் நடாத்திய விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உள்ள வளங்களை சுரண்டுவதற்காக நடாத்திய கொலையாட்டம் மற்றும் சவூதி அரேபியாவுடன் இணைந்து யேமனில் நடாத்திய விமானக் கொலையாட்டம் என மொத்தமாக கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை மில்லியனை தாண்டும். இதில் நேரடி கொலையாட்டம் ஒருபுறமிருக்க, இஸ்ரேல் போன்ற தனது கூலிப்படைகளுக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி அவர்கள் மூலமாக உலகின் பல பாகங்களிலும் நடாத்தப்பட்ட கொலைகள் ஏராளம். அந்தவகையில் 1948 தொடக்கம் இன்று வரைக்கும் பாலஸ்தீனில் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் ஆகும். பொருளாதார இழப்புக்கள் பற்றி எதுவும் இங்கே குறிப்பிடவில்லை. மேலும், 1945 க்கு பின்பு இடம்பெற்ற சம்பவங்களை மாத்திரமே மேலோட்டமாக கூறியுள்ளேன். 1945 க்கு முன்பு நடந்தவை பற்றி எழுதினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளைத் தாண்டும். இவைகள் அனைத்தையும் விரிவாக எழுதினால் நீங்கள் வாசிக்கமாட்டீர்கள். அத்துடன் எனது முகநூல் முடக்கப்படலாம். உலகில் உள்ள வளங்களை சூறையாடி மற்றும் நாட்டுத் தலைவர்களை மிரட்டி, மிரட்டலுக்கு பணியாதவர்களை கொலை செய்து அல்லது ஆட்சியை கவிழ்த்து, கோடிக்கணக்கான மக்களை கொலை செய்த அராஜகவாதிகள் தற்போது உலகிற்கு ஜனநாயகம் போதித்துக்கொண்டு பாதுகாப்பான புவி அமைவிடத்தில் அமெரிக்க மக்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள். இவர்களை பழிவாங்குவதற்கு யாரும் நெருங்கமுடியாத நிலையில் லோஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் இயற்கையினால் ஏற்பட்ட தீ அனர்த்தமானது அவர்கள் செய்த அட்டூழியங்களில் ஒரு வீதமும் சமனாகாது. இந்த நிலையில் இங்குள்ள சில அப்பாவிகள் அவர்களுக்காக அனுதாபப்படுவதனை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. இவர்களை என்னவென்று கூறுவது ? முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2025/01/blog-post_86.html
-
காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
கிட்டத்தட்ட 20 ஊர்களையும் 51 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதே காத்தான்குடி பொலீஸ் பிரிவு! சமூக அரசியல் உரிமைகளிற்கான அமைப்பு (OSPR) ஊடகங்களுக்கு விளக்கம்! அண்மைக் காலமாக நாடு முழுவதும் போதைப் பொருள் பாவனை, கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் செய்து வருகின்றது. அந்த வகையில் காத்தான்குடி பொலீஸ் பிரிவும் தங்கள் எல்லைகளிற்கு உற்பட்ட பிரதேசங்களில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு பலரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி வருகின்றனர். அவ்வாறு கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பட்சத்தில் குறித்த செய்திகளினை பிரசுரிக்கும் சில ஊடகங்கள் கைதுகள் அல்லது சம்பவங்கள் நடைபெறும் ஊரைக் குறிப்பிடாமல் அல்லது பொலீஸ் பிரிவின் எல்லையினை குறிப்பிடாமல் காத்தான்குடி பொலீஸ் பிரிவிற்குள் அடங்கும் 20 இற்கு மேற்பட்ட ஊர்களில் ஒன்றான காத்தான்குடியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது போன்று செய்தியினை அண்மைக் காலமாக வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான பொறுப்பற்ற செய்தி பிரசுரிப்பினால் கடந்த 30 வருடங்களிற்கு மேலாக யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் குண்டு வெடிப்பு போன்ற சோதனைகளை கண்டு இன்று ஓரளவு சாதாரண நிலைக்கு திரும்பி சுற்றுலாப் பயணிகள் வருகை, வியாபாரம் என்று மீண்டு வரும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான பிழையான தலைப்பிடப்பட்ட செய்திகள் காத்தான்குடி மக்களிற்கு மனதளவில் பாரிய தாக்கத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்துவதை எமது அமைப்பு வெளிக் கொண்டு வருகின்றது. காத்தான்குடி பொலீஸ் பிரிவு என்பது கல்லடி, நாவலடி, வேலூர், நாவற்குடா, நொச்சிமுனை, பூநொச்சிமுனை, காத்தான்குடி, ஆரையம்பதி, காங்கேயனோடை, கர்பலா, பாலமுனை, கீச்சான்பள்ளம், ஒல்லிக் குளம், மண்முனை, தாழங்குடா, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், தர்மபுரம், வேடக்குடியிருப்பு, உப்போடை போன்ற 20 இற்கு மேற்பட்ட ஊர்களையும், குறித்த ஊர்களில் உள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதே தவிர “காத்தான்குடி” என்ற ஊர் மாத்திரம் காத்தான்குடி பொலீஸ் பிரிவில் அடங்கவில்லை என்பதை ஊடகங்களிற்கும், செய்திகளை வாசித்த பொது மக்களிற்கும் தெளிவு படுத்த கடமைப்பட்டுள்ளோம். காத்தான்குடி என்று பிழையாக தலைப்பிட்டு சில ஊடகங்களினால் பிரசுரிக்கப்பட்ட செய்திகளில் சில செய்திகளானது சம்பவம் தொடர்பானதும், சம்பவம் நடைபெற்ற பிரதேசம் தொடர்பாகவும் சரியான தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை மறைத்து காத்தான்குடி என்று வேண்டுமென்றே தலைப்பிட்டு ஊடக தர்மத்தை மீறும் வகையில் செய்திகளை பிரசுரித்தமையினை வண்மையாக கண்டிப்பதோடு இனிவரும் காலங்களில் செய்திகளை உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் மிக வினயமாக கேட்டுக் கொள்கின்றோம். பிரசுரிக்கப்படும் செய்திகள் மற்றும் சமூக அநீதிகள் விடயங்களில் சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு(OSPR) மிகக் கவனமாக இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம். https://madawalaenews.com/12994.html
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை ( 21.01.2025) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கெதிராக இந்து சமய கலாசார அமைச்சு மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோர், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், "இராமநாதன் அர்ச்சுனா, பயன்படுத்துகின்ற வார்த்தைகள், சைவக்குருமார்கள், இந்துக்குருமார்கள் அனைவரையும் தாக்கக் கூடிய அளவிற்கு உள்ளன. ஆகவே, எமது புனிதமான திருநீற்றையும் அதனை அணிகின்ற சைவ மக்களையும், குறிப்பாக "அங்கு ஒருவன் இருப்பான்" என்று சுட்டிக் காட்டி அவர் பேசுகின்ற வார்த்தை மூலம் எங்களுடைய குருமார்களை தாக்கி அவர் பேசுகின்றார் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, இவ்வாறான மோசமான வார்த்தைகளை பயன்படுத்துபவருக்கு எதிராக இலங்கைச் சட்டத்தின்படி சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், அவர் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பேசுகின்ற இவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்கள் கவலைப்படுவர். எனவே, அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளை பேசுவதை நிறுத்த வேண்டும். இதேபோன்று, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்த்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாக பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இது சம்பந்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியோ, இந்து கலாசார அமைச்சோ அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்காவிடின் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இந்து குருமார்கள், சைவ அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் போராடிக் கொண்டிருப்போம் என்பதை சகலருக்கும் அறியத் தருகின்றோம்" என குறிப்பிட்டுள்ளனர். https://www.jaffnamuslim.com/2025/01/blog-post_859.html
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஐசே எங்கட புதுக்கட பாச வா. எலக்கிரி🤣
-
தவறான உறவுக்காக கசையடி வழங்கிய பள்ளிவாசல் - 6 பேர் கைது, இலங்கையில் சம்பவம்
(எப்.அய்னா) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசல் ஒன்றில், சட்டத்துக்கு முரணாக பெண் ஒருவருக்கும், ஆண் ஒருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். திருமணத்துக்கு புறம்பான உறவில் இருந்ததாக கூறி பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும், வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அழைத்து அங்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பெண்ணுக்கு 50 கசையடியை ஒத்த தண்டனையும், ஆணுக்கு 100 கசையடியை ஒத்த தண்டனையும் பள்ளிவாசலில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து வாழைச்சேனை பொலிசாருக்கு கிடைத்த தகவல் மற்றும் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போதே, குறித்த நடவடிக்கையுடன் தொடர்புபட்ட 6 பேரை வாழைச் சேனை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.- Vidivelli https://www.jaffnamuslim.com/2025/01/6_17.html
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
ஆம் இதுதான் உண்மை. கிறிஸ்தவர்கள் இதை அறுவடை நன்றி செலுத்தல் நாளாகவே கொண்டாடுகின்றார்கள். வருடத்தின் முதல் நாளில் தங்கள் கைபிரயாசத்தின் முதற் பலன்களை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டாடுகின்றார்கள். கத்தோலிக்கர் அல்லாதா பைபிள் சபையினர் இவற்றை கொண்டடுவதில்லை.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நான் 89/90களில் இருந்து இருந்து கண்களால் கண்டு, பங்கு பற்றிய அனுபவத்தில் சொல்கின்றேன். கொழும்பு செக்கடித்தெருவில் இருக்கும் தமிழ் கத்தொலிக்க பங்கு மக்கள் ஒவ்வொரு வருடமும் இந்த பொங்கல் விழாவை அன்று தொடக்கம் இன்றுவரை கொண்டாடி வருகின்றார்கள். இது கொழும்பு தமிழ் மக்கள் மத்தியில் தமிழர் விழாவகவே நோக்கப்படுகின்றது.
-
இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களா? அனுமதியளித்தது யார் என முஜிபுர் ரஹ்மான் கேள்வி
(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்) நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வாங்கி அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி அமைக்கப்படும் இந்த கட்டிடங்கள் என்ன? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட சில அரசாங்கங்கள் பலஸ்தீன் பிரச்சினையைவிட இஸ்ரேலுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ள மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தது. இதன்மூலம் இஸ்ரேலுடன் வைத்துக்கொண்ட சில தொடர்புகள் காரணமாக, பலஸ்தீன் தொடர்பில் எமது நாடு பின்பற்றிவந்த கொள்கைகளுக்கு சர்வதேச ரீதியில் எங்களுக்கு இருந்துவந்த நற்பெயரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் எமது நாடு தொடர்பில் இருந்துவந்த தொடர்பும் தற்போது ஓரளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. எமது நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கி அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. மாத்தறை வெலிகம பிரதேசத்தில், தெஹிவளை அல்விஸ் பிரதேசத்தில் இவர்களின் மத நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று கொழும்பு 7 இல் ரெட் சினிமனுக்கு முன்னால் பாரிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்களை நிர்மாணிக்கும் இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி அமைக்கப்படும் இந்த கட்டிடங்கள் என்ன? இலங்கையில் யூதர்கள் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர்களின் மத வழிபாட்டு இந்தளவு பாரிய கட்டிடம் எதற்காக என கேட்கிறோம்? கடந்த ஒரு தினத்தில் அல்விஸ் பிளேசில் அமைக்கப்படும் கட்டிடத்துக்கு அருகாமையால் நடந்து சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தெஹிவளை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்படுத்தியே விடுவிக்கப்பட்டார். அந்தளவு பலத்த பாதுகாப்பு இஸ்ரேலியர்களால் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் பலஸ்தீன் ஆதரவு அரசாங்கம் என்ற வகையில், பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக எங்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடியவர்கள் என்றவகையில் அமைக்கப்படும் இந்தக் கட்டிடங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? மறு பக்கத்தில் இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். ஏனெனில் மொசாட் இங்கு வருவது என்பது அது நல்ல விடயமல்ல. வெலிகமவில் முஸ்லிம் மக்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களின் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதுதொடர்பாக அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோன்று பலஸ்தீனில் பொது மக்களை, சிறுவர்களை கொலைசெய்யும் இஸ்ரேல் இராணுவத்தினர் எமது நாட்டுக்குள் நுழைகிறார்கள். குறிப்பாக அவர்கள் பலஸ்தீனில் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற செயல்கள் காரணமாக உளரீதியான ஆறுதலை பெறுவதற்கே வருகின்றனர். இதன் காரணமாக அதிகமான நாடுகள் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருவதை நிறுத்தி இருக்கின்றன. தென்ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மாலைத் தீவு போன்ற நாடுகள் நிறுத்தி இருக்கின்றன. அதேநேரம் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகளின் வருகை எமது நாட்டில் குறைவடைந்துள்ளது. அதனால் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் வருவதை தடுப்பதற்கு எதிர்காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறோம் என்றார்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18369
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஆம் இந்த சனி லேசுப்பட்ட சாமனல்ல இல்லவா யூரிப்பில் பின்வரும் தலைங்களில் பட்டையை கிளப்புவார். கெத்து காட்டும் சனி வைச்சு செய்யும் சனி கொட்டி கொடுக்கும் சனி சுக்கிரனுடன் சேரும் சனி, 100% நிச்சயமாக திருமணத்திற்கு அப்பால் இன்னொரு உறவுக்கு வழி வகுப்பார். சனியும் குருவும் வக்கிரம் மறுமணம் நிச்சயம் குருவும் சனியும் இணைவு வெளிநாட்டு யோகம் கதவருகில் சனி/செவ்வயும் தோசம், தலைகீழாக நின்றாலும் காலம் பூரவும் கையில்தான் கதை சுக்கிரதசை ஆரம்பம் அந்தப்புரம் போக தயராகும் மிதுனராசியினர் சனி பெயர்சி ஜக்போட் அள்ளப்ப்கும் ராசிகள் வாசகர் அனுபவத்தில் இன்னும் யூரிப் தலையங்கள் வரவேற்கப்டுகின்றது
-
அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
அம்மா 38 வருடங்களாக தனிமையாக வாழ்ந்துள்ளார். எவ்வளவு கொடுமை? இந்த பிள்ளைகள் ஏன் இவ்வளவு சுயநலமாய் நடந்து கொள்கின்றார்கள்? இந்த வயது போன காலத்திலும் ஒரு companionship தேவைதானே?
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சுய இன்பம் கண்டால் கண்கள் உள்ளே போய், கன்னங்கள் ஒட்டிபோய் மெலிந்து,உள்ளங்கயில் மயிர் வளர்ந்துவிடும் என நமபினேன்.
-
ஹிஜாப் அணியவில்லையாம்.. யூடியூப்பில் பாடிய பாடகிக்கு ஈரான் கொடுக்கும் தண்டனை.. நீதித்துறை அறிவிப்பு
டெஹ்ரான்: ஈரானை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதி ஆன்லைன் கான்சர்ட் நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் நீதித்துறை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று ஈரான். இஸ்லாமிய நாடாக அறியப்படும் இந்த நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பெண்கள் பொதுவெளியில் நடமாடும்போது ஹிஜாப் அணிய வேண்டும். மேலும் இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஈரான் நாட்டை சேர்ந்த பாடகி பரஸ்டு அஹமதிக்கு ரசிகர்கள் உள்ளனர். கடந்த 11ம் தேதி பரஸ்து அஹமதி ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். பரஸ்டு அஹமதி உடன் மொத்தம் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பரஸ்டு அஹமதி கருப்பு நிற ஆடை அணிந்து ஹிஜாப் அணியாமல் பாடல்கள் பாடியுள்ளார். முன்னதாக அந்த வீடியோவில், அவர், ‛‛நான் பரஸ்டு. எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன்'' என்று கூறியிருந்தார். அதாவது ஈரான் நாட்டில் பொதுவெளியில் பெண்கள் பாட அனுமதியில்லை. அதேபோல் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக உள்ளது. இருப்பினும் ஈரானின் இந்த உத்தரவை பரஸ்டு அஹமதி விரும்புவது இல்லை. இதனால் தான் அவர் ஹிஜாப் அணியாமல் பாடல் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் ஹிஜாப் அணியாத காரணத்தினால் மாஷா அமினி என்ற பெயர் கொண்ட பெண் போலீஸ் கஸ்டடியில் இறந்தார். இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெண்களை கொதிப்படைய வைத்தது. அப்போது அதனை எதிர்த்து பரஸ்டு அஹமதி பாடல் பாடியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது பரஸ்டு அஹமதி விவகாரம் ஈரானில் சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றி ஈரான் நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. நீதித்துறை சார்பில் மிஷான் ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‛‛பாடகி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி அவர் மீது அவரது இசைக்குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்''என்று கூறியுள்ளார். Read more at: https://tamil.oneindia.com/news/international/iranian-singer-who-performed-without-hijab-to-face-appropriate-action-says-judiciary-department-662997.html
-
திண்ணை
நானும் நாதமுனியை "பொய்பொத்தல்" என்று ஒரு முறை அழைத்தேன். அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். மறுபடியும் வந்து எழுத வேண்டுகிறேன்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
ஆம் இதை நானும் கேள்விப்பட்டுள்ளேன் ரசோ. 2000 அல்லது ௨001 காலத்தில் நைஜீரியர் ஒருவருடன் வேலை செய்தேன். இவர் அமெரிக்காவில் degree mill ஒன்றை ந்டத்துபவர். எந்த டிகிரியும் accredited இல்லை. ஆனால் வேலை அனுபவங்களை convert டிக்ரி செய்து degree கொடுப்பார்கள். இவை அமெரிக்கவில் சட்டரீதியானது, தொழில் வழன்குனோரினால் எற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறினார்
-
இஸ்ரேலின் கூலிப்படைகளுக்கு இலங்கையில் பயிற்சியா? அபாயமும் பின்புலமும்
லத்தீப் பாரூக் தமிழில்: சப்ரி அஹமட் கடந்த 14 மாதங்களுக்கு மேலாக தண்ணீர், உணவு, மருந்து, மின்சாரம் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளால் விநியோகிக்கப்பட்டு வீசப்படும் 85,000 தொன் இற்கும் அதிகமான குண்டுகளாலும் இஸ்ரேலின் அதி நவீன அழிவு தரும் ஆயுதங்களினாலும் இன்றுவரை காசா, பலஸ்தீன் மக்களின் மீதான படுகொலை தாக்குதல்கள் தினம் தினம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்த அப்பட்டமான இனப்படுகொலைக்கு அமெரிக்காவின் அடிவருடிகளாக செயற்படும் சில முஸ்லிம் அரபு நாடுகளும் உடந்தையாக உள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் மனிதகுல வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான இனச்சுத்திகரிப்பாகக் கருதப்படும் இத்தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனப்பிரதேசமானது உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமாக மாற்றம் பெற்று இதுவரை சுமார் 44,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்களை கொன்று குவித்ததன்மூலம் இன்று அது மாபெரும் மயான பூமியாக காட்சியளிக்கிறது.கொல்லப்பட்ட மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதில் எஞ்சியவர்கள் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமற்று தத்தமது உயிர்களை மட்டும் காப்பாற்றியவர்களாக திறந்தவெளியில் தற்காலிக கொட்டில்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். போர்க்குற்றங்களுக்காக உலகின் பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலை புறக்கணித்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விடயமாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பென்ஞ்சமின் நெதன்யாகு மீது போர்க்குற்றம் சுமத்தி அவரை கைது செய்வதற்கான பிடிவிறாந்தை பிறப்பித்துள்ளது. பலஸ்தீன் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இக் காட்டுமிராண்டித்தனமானது மேற்குலகில் உள்ள யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக்கோரி முஸ்லிம்களுடன் இணைந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது. இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு முடிவு கட்டக் கோரி உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக் கோஷங்களும் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக பல மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் இவை தினசரி நிகழ்வாகிவிட்டன. அந் நாட்டு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்க எடுக்கும் முயற்சிகளால் பல பல்கலைக்கழகங்கள் போர்க்களங்களாக மாறியுள்ளன. மனித குலத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் இஸ்ரேலின் அட்டூழியங்களால், இறைமையுள்ள நாடாக இருந்த பலஸ்தீன நிலத்தின் மீது 1948 ஆம் ஆண்டு யூத சியோனிச சதிகள் மூலம் ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலினை, ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோஷங்களும் முன்னரை விட தற்போது வலுப்பெற்று வருகின்றன. இவ்வாறு உலகமே இஸ்ரேலை ஒதுக்கித் தள்ளும் இந்தப் பின்னணியில், இலங்கையின் ஹிக்கடுவை மற்றும் அருகம்பை பகுதிகளில் பலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலிய படைகளுடன் இணைந்து போரிடுவதற்காக பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் அழைத்து வரப்பட்டுள்ள கூலிப்படைகளுக்கு பயிற்சி முகாம்கள் நடாத்தப்படுவதாக அதிர்ச்சி தரும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக அருகம்பை, எல்ல மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இவர்களது சட்ட விரோத செயற்பாடுகளின் பிரசன்னம் தொடர்பில் உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. மேலும் தெஹிவளை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் “சபாத்” (Chabad) என்று அழைக்கப்படும் யூதர்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வெளிவருகின்ற அறிக்கைகளின் படி, இலங்கையின் உள்நாட்டு சட்டங்களுக்கு மாற்றமாக இஸ்ரேலியர்கள் சொத்துக்களை வாங்குகிறார்கள், ஹோட்டல்களை கட்டுகிறார்கள் மற்றும் இலங்கையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பலஸ்தீனிற்கும் ஹமாசிற்கும் எதிரான மனோபாவம் உடையவர்களாக மூளைச்சலவை செய்வதில் திட்டமிட்டு செயற்படுகின்றனர். இன்று பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொள்ளும் போர்க்குற்றங்களை பிரதான ஊடகங்களில் வெளிவரா வண்ணம் தடுக்கும் முயற்சிகளிலும் இஸ்ரேலிய முகவர்கள் ஊடுருவி செயற்படுகின்றனர். குறிப்பாக தினசரி இடம் பெறும் பலஸ்தீன் காசா அழிவுகள் தொடர்பில் இலங்கையின் முன்னிலை ஊடகங்களில் செய்திகள் இருட்டடிப்பு செய்து வெளியிடப்படுவது கவலைக்குரியது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இஸ்ரேலின் மனித குலத்திற்கு விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் மிகக் குறைந்த தகவல்களே வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, இலங்கையில் ஒளிபரப்பப்படும் பியோ டீவி (Peo TV) இன் “செனல் 97” மூலமாக இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் யூத அரசை மிகவும் அமைதியை விரும்பும் ஒரு நாடாகவும் காண்பிக்கும் வகையில் அப்பட்டமான பொய்கள் பரப்பப்படுகின்றன. ஆதரவற்ற பலஸ்தீன மக்கள் மீதான போர், படுகொலைகள், மனித அவலங்கள் மற்றும் அழிவுகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய அரசு உள்ளது என்ற உண்மையை இந்த ஒளிபரப்பு அலைவரிசை மூடி மறைக்கின்றது. மேலும் ஒரு எடுத்துக்காட்டாக, யூடியூப் சமூக வலைத்தளத்தில் ஒரு சிங்களப் பெண்மணி யூதர்களை மிகவும் மனிதாபிமானமுடைய மக்கள் என்றும் பலஸ்தீனர்களையும் அவர்களின் பிரதிநிதியான ஹமாஸினையும் மிகவும் மோசமாக சித்தரித்து விவரிக்கும் காட்சிகளையும் காணக் கூடியதாக உள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் சியோனிச சார்புப் பேரணி ஒன்றை யூத முகவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதே வேளை, இலங்கையிலிருந்து தொழிலுக்காக அனுப்பப்பட்ட சுமார் 10,000 பேருக்கு அதிகமான மனித வளங்கள் இஸ்ரேலின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. மேலும் கடந்த ஆட்சியில் இலங்கை இஸ்ரேலுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையில் யூத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கும் பல்வேறு நாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் கூலிப்படையினருக்கு இலங்கையில் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கும் பொறுப்பாகவிருக்கும் இஸ்ரேலிய முக்கிய புள்ளி ஒருவருக்கு இலங்கை இராணுவம் பாதுகாப்பு வழங்குவதாக மற்றுமொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளாக இடம் பெறுவதாக யூடியூப் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. Kader Master (காதர் மாஸ்டர்) என்ற யூடியூபரின் தகவலின்படி இஸ்ரேலிய தனியார் பாதுகாப்பு நிறுவனங்களால் பயிற்சி மையங்கள் நடத்தப்படுவதாகவும் “சபாத்” எனப்படும் இஸ்ரேலிய வழிபாட்டுத் தளங்களில் ராணுவப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ஒரு மிக முக்கிய செய்தியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கான சபாத் தூதுவரான ரப்பி ஸ்வி கோகன் (Rabbi Zvi Kogan )கடந்த மாதம் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு கொலைத் தாக்குதல் என்று தெரிவித்தனர். “சபாத்” இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட்டின் ஒரு முன்னிலை அமைப்பாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதேவேளை மொல்டோவிய நாட்டு வம்சாவளி இஸ்ரேலியரான கோகன் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து சமூக வலைத்தளங்களின் பலமான எதிர்ப்புக்கு இலக்காகியிருந்தார். இலங்கையை பொறுத்தவரையில் இந்த விடயமானது இஸ்ரேல் தொடர்பில் காலம் காலமாக ஆட்சி செய்த முன்னைய அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகளின் பிரதி பலனாக தற்போதைய அரசாங்கத்திற்கு தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு நெருக்கடியாகவே தோன்றுகின்றது. எவ்வாறாயினும், இலங்கையின் சமூக மத நல்லிணக்கத்தையும், நாட்டின் தற்போதைய அமைதிச் சூழ்நிலையையும் தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இவ்விடயம் தொடர்பில் தீர ஆராய்ந்து சட்டவிரோத சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் யூதர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இலங்கையில் சில காலங்களுக்கு முன்பு முடுக்கி விடப்பட்ட முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையும் இஸ்லாத்தை பூதாகரமாக சித்தரிக்கும் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்ற போது இந்துத்துவ பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு கட்டமைப்புகளின் பிரசன்னம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வல்ல என எண்ணுவது ஆச்சரியமன்று. இதேவேளை இலங்கையில் பல அப்பாவி கிறிஸ்தவ மக்களின் படுகொலைக்குக் காரணமான ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்புலத்தில் இப்புனிதமற்ற சக்திகளின் கூட்டணிச் செயற்பாடுகளும் உள்ளது என்பதையும் மறந்து விடலாகாது.- Vidivelli https://www.vidivelli.lk/article/18166
-
ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு; முண்டியடித்து விண்ணப்பிக்கும் ஆண்கள் - சாதனைக்கு தயாராகும் நடிகை
ரே நாளில் 1000 பேருடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார். லில்லி பிலிப்ஸ் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகையான லில்லி பிலிப்ஸ்(lily phillips), 24 மணி நேரத்திற்குள் 1,000 ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு புதிய சாதனையைப் படைக்கத் திட்டமிட்டுள்ளார். ரெக்கார்டு பிரேக்கிங் ஈவன்ட் ஆஃப் தி இயர் என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 300 பேருடன் பயிற்சி இதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆண்களை தேர்வு செய்து வருகிறார். இதுவரை ஏகப்பட்ட பேர் இதற்காக விண்ணப்பித்து வரும் நிலையில், அதில் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது குறித்து பேசிய லில்லி பிலிப்ஸ், "எப்படியாவது இந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதற்காக கடந்த சில வாரங்களில் மட்டும் குறைந்தது 300 பேருடன் உடலுறவு கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன். பலரும் நான் செய்யும் வேலையைத் தப்பாகப் பேசுகிறார்கள். ஏதோ சுலபமான வேலை போலச் சொல்கிறார்கள். ஆனால், இது ஒரு குத்துச்சண்டை போட்டி போன்றது. இது உண்மையில் ரொம்பவே கஷ்டமான வேலை. வழக்கமான அலுவலக வேலையை விடப் பல மடங்கு கடினமானது" என தெரிவித்துள்ளார். எச்சரிக்கும் மருத்துவர்கள் இந்த விபரீதம் வேண்டாம் என்று லில்லி பிலிப்ஸை எச்சரிக்கும் மருத்துவர்கள், "ஒரே நேரத்தில் இத்தனை பேருடன் உடலுறவு கொள்வது பாலியல் நோய் பரவல் ஆபத்தைப் பல மடங்கு அதிகரிக்கும். அத்தோடு உடலுக்கும் பல பாதிப்புகள் ஏற்படும்" என கூறியுள்ளனர். இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டில் போலந்தில் நடந்த நிகழ்வில், லிசா ஸ்பார்க்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை, ஒரு நாளில் அதிகபட்ச 919 பேருடன் உடலுறவு கொண்டு ஒரே நாள் அதிக பேருடன் உடலுறுவு கொண்ட சாதனையை படைத்தார். அதே நேரம் அந்த நிகழ்வுக்குப் பிறகு ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டதாக லிசா கூறியிருந்தார். https://ibctamilnadu.com/article/actress-break-record-intimate-with-1000-men-in-day-1733654909
-
அனுரவின் ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா ?
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவினருடன் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆராயப்பட்டது. அதில், தேசிய இனப்பிரச்சினை, மாகாணசபை முறைமை, காணி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம், கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் கல்முனை வடக்கு பிரேதச செயலக தரம் உயர்த்தல் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இதில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் புதிய அரசியலமைப்பின் மூலமாக தமிழ் தரப்பின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தீர்வினை வழங்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும், தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறையை தொடர்ந்து நடைமுறைப்படுவதுடன், மாகாண சபைக்கான எந்தவொரு அதிகாரமும் குறைக்கப்பட மாட்டாது என்றும், காணிகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லையென்றும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை முழுமையாக அல்லது கட்டம் கட்டமாக விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தினால் கடந்த காலங்களில் JVP யினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த சட்டத்தின் இறுக்கமான போக்கை நீக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால் சில இனவாதிகள் இதனை வேண்டுமென்று குழப்ப முயற்சிப்பார்கள் என்பதனால் இதனை கவனமாக ஆராய உள்ளதாகவும், இழுபறியாக இருக்கின்ற கைதிகள் விடையத்தில் சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கவனமாக கையாள உள்ளதாகவும், வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு தமிழரசு கட்சியில் உள்ளவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமென்றும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல் பற்றிய நிருவாக விடையத்தில் அரசியலுக்கு அப்பால் நடைமுறைப்படுத்துவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பினால் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருப்தியை வெளியிட்டுள்ளனர். இவ்வாறுதான் நல்லாட்சி காலங்களிலும் அடுத்த தீபாவெளிக்குள் தீர்வு கிடைத்துவிடுமென்று இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் ஒவ்வொரு வருடமும் கூறிக்கூறி காலங்கள் கரைந்தது. இங்கே பேச்சுவார்த்தை மூலமாக ஏற்றுக்கொண்ட விடையங்களை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் நடைமுறைப்படுத்துவாரா அல்லது நல்லாட்சிக் காலத்தில் ஏற்பட்டதுபோன்று தடைகள் ஏற்படுமா என்பதனை சில மாதங்களில் உணர்ந்துகொள்ளலாம். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2024/12/blog-post_76.html
-
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை-உலமா கட்சித்தலைவர்
பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை. அத்துடன் இது விடயத்தில் கடந்த கால ஜனாதிபதிகள் இது பற்றி முஸ்லிம் தரப்புகளுடன் பேசாமல் எத்தகைய தீர்வுக்கும் வரமுடியாது என்றே கூறியுள்ளனர்.கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக அதற்குரிய அமைச்சின் செயலாளருடன் தான் பேசுவதாக ஜனாதிபதி அநுரகுமாரஇ சாணக்கியன் எம்பி உட்பட்ட தமிழ் கூட்டமைப்பு எம்பீக்களிடம் உறுதி தெரிவித்ததாக சாணக்கிய கூறியுள்ளமை பற்றி ஜனாதிபதி தரப்பு தெளிவு படுத்த வேண்டும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னரே சாணக்கியன் எம்பி கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை. அத்துடன் இது விடயத்தில் கடந்த கால ஜனாதிபதிகள் இது பற்றி முஸ்லிம் தரப்புகளுடன் பேசாமல் எத்தகைய தீர்வுக்கும் வரமுடியாது என்றே சொல்லியுள்ளனர்.2020ம் ஆண்டு பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் கருணா இக்கோரிகையை முன் வைத்த போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட உலமா கட்சித்தலைவர் இது சம்பந்தமாக முஸ்லிம்களின் கருத்தை கேட்காமல் முடிவுக்கு வரவேண்டாம் என தெரிவித்ததை மஹிந்த ராஜபச ஏற்றிருந்தார். இத்தனைக்கும் மஹிந்தவிக்கு எந்த தேர்தலிலும் கல்முனை முஸ்லிம்களில் 20 வீதத்துக்கு மேல் வாக்கு போட்டதில்லை.அது போல் பசில் ராஜபக்ச அமைச்சராக இருந்த போது இது சம்பந்தமாக பேச தமிழ் எம்.பீக்கள் முற்பட்ட போது அது பற்றி பேச வேண்டாம் என அவர் உறுதிபட கூறியிருந்தார்.இந்த பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கல்முனைத்தொகுதி முஸ்லிம்களில் 70 வீதமானோர் வாக்கு போட்டதுடன் கல்முனை தொகுதியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற உலமா கட்சி உட்பட பலரும் உதவியுள்ளனர். ஆகவே கல்முனையை வடக்கு கிழக்கு என்றோ தமிழ் செயலகம் முஸ்லிம் செயலகம் என்றோ இன ரீதியில் பிரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.தமிழர்கள் பிரச்சினைகள் சம்பந்தமாகவும்இ கல்முனை செயலகம் சம்பந்தமாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றில் பேசுவதுடன் மட்டும் நிற்காமல் ஜனாதிபதியையும் நேரடியாக கண்டு பேசியுள்ளனர். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இது பற்றி பாராளுமன்றில் கல்முனையில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உண்டு என்றும் இது பற்றி கலந்துரையாட வேண்டும் என்ற வார்த்தையுடன் அடங்கிவிட்டார்.இது பற்றி நல்லாட்சி காலத்தில் எத்தனையோ கலந்துரைடாடல்கள் நடைபெற்று அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன. இந்த நிலையில் ஹக்கீம் மீண்டும் பழைய பல்லவி பாடாது எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதியை சந்தித்து கல்முனையை இனரீதியாக துண்டிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தமிழ் மக்களுக்கு பாண்டிருப்பு செயலகம் வழங்கலாம் என்பதையும் வலியுறுத்த வேண்டும் என்றார். https://madawalaenews.com/9925.html
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
கள்ளுத்தவறணைக்கும் அனுமதி பத்திரம் அவசியம்தானே? இதுவும் மதுபானமல்லவா?
-
முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளை வெல்வதற்கான சாத்தியமான வழி எது?
பி எம் எம் பெரோஸ் நளீமி ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர், மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல்கள் எல்லாம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொழுது வீட்டுக்குள் ஒழிந்து கொண்டிருந்தவர்கள் இப்போது முகப்புத்தக பொது வெளியில் மல்யுத்த வீரர்களாக பிரகாசிக்கிறார்கள்.. கடந்த பல தசாப்தங்களாக அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள் வடமாகாண முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் இன்னும் வட கிழக்குக்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்களுடைய கல்வி, பொருளாதார, பாதுகாப்பு பிரச்சினைகள், வியாபாரங்களை சுதந்திரமாக செய்ய முடியாமல் வியாபார தலங்கள் பள்ளிவாசல்கள் வீடுகள் எரிக்கப்பட்ட பல பிரச்சினைகள் எல்லாம் இடம்பெற்றன. கலாச்சார உரிமை மத உரிமை மத வணக்க வழிபாடுகளை செய்வதற்கான உரிமை மார்க்க கல்வியை கற்பதற்கான உரிமைகள் அதற்கான கலாபீடங்களை நடத்துவதற்கான உரிமைகள் எல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டன. தேர்தல்கள் வருகின்ற பொழுது முஸ்லிம்களுக்கு எதிரான, இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரான இனத் தேசியவாத தீவிர சிந்தனை உள்ள பல நபர்களின் வெறுப்பு பேச்சுக்கள் மார்க்கத்தை நமது கலாச்சார உடைகளையும் கொச்சைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் எல்லாம் இடம்பெற்ற பொழுது அன்றிருந்த அரசாங்கங்கள் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் சட்டத்தை அமுல்படுத்தாமல் அமைதியாக வேடிக்கை பார்த்த பொழுது இந்த போராளிகள் எங்கிருந்தார்கள்…? இந்த பிரச்சினைகள் சிறுபான்மை சமூகத்தின் சமத்துவ உரிமை, சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை, சட்டப்பாதுகாப்பை பெறுவதற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை கலாசார உரிமை மத உரிமை என பல்வேறு உரிமைகள் மீறப்பட்டன. அப்பொழுதெல்லாம் இருந்த அரசாங்கங்களுக்கு எதிராக இவர்கள் வாய் திறக்காமல் எங்கிருந்தார்கள்? மிகவும் சந்தோஷமான செய்தி தற்பொழுதாவது நம்மவர்கள் விழித்திருக்கிறார்கள் …. எனவே விழித்த கையோடு மேற்படி உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு தயாராகுங்கள். உங்கள் போராட்டங்கள் முகப்புத்தகத்திலோ அல்லது ஜும்மா முடிந்தவுடன் சில பதாகைகளை தூக்கிக்கொண்டு வீடு செல்கின்ற வழியில் ஒன்று சேர்ந்து கோசமிட்டு விட்டுச் சென்றுவிடுதோ அல்ல.. இந்தப் பிரச்சினைகளை ஆவண படுத்துவதற்கு தயாராகுங்கள்.. நீதிமன்றத்தில் வழக்கிடுவதற்கு தயாராகுங்கள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடாக பதிவு செய்வதற்கு வெளி வாருங்கள். இவைகளால் முடியாத பொழுது சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரைக்கும் கொண்டு செல்வதற்கு முன் வாருங்கள் இவற்றைச் செய்வதற்கு நிதிப்பங்களிப்பு செய்யக்கூடியவர்களாக மாறுங்கள் கல்வித்துறையில் அல்லது பல்கலைக்கழகங்களில் கற்கின்ற மாணவர்களுக்கு இப்படியான சமூகப் பிரச்சினைகளை ஆய்வுத் தலைப்புகளாக எடுக்கும்படி ஆலோசனை கூறுங்கள். இவைகள் உருப்படியான முன்னெடுப்புகளாக அமையும். இவைகளை விட்டு விட்டு சில்லறத்தனமான விடயங்களை சமூகத்தின் பிரச்சினைகளாக இந்த பொது வெளியில் பயன்படுத்தாதீர்கள். நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் நம்முடைய எழுத்துக்கள் எல்லாம் யாருக்கு என்ன மொழியில் வேண்டுமோ அவைகள் அடுத்த கணம் மொழி பெயர்க்கப்பட்டு பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நாம் அறிவில்லாத சமூகம் என பிறர் சிந்திக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள். புதிய அரசாங்கம் இனவாதத்தை ஒழித்து ஊழலையும் ஒழித்து சிறந்த நாட்டைக் கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை செய்வதாக கூறுகிறார்கள். இவர்களுடன் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று பார்க்க முடியும். நமது உரிமைகளை இழந்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்கிற ஒரு நிலை ஏற்படுமாக இருப்பின் அப்பொழுது விலகிக்கொள்ள முடியும்.மூன்றில் இரண்டை அவர்கள் வைத்திருக்கின்ற பொழுது நாம் மிகவும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18154
-
நினைவேந்தலுக்கு அநுர அரசு அனுமதிக்கக்கூடாது என்கிறார் விமல்
வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணி திரட்டிப் போராடுவோம்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். கடந்த 27 ஆம் திகதி கடும் மழை, வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். இது தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கொதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகும். தமிழ் மக்களின் பார்வையில் மாவீரர்கள் யார்? அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரணித்த விடுதலைப்புலிகளாவர். நாட்டை அழித்த – சிங்கள மக்களைக் கொடுமைப்படுத்திய அந்தப் பயங்கரவாதிகளை எப்படி நினைவேந்தலாம்? நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி இல்லை. எனவே, மாவீரர் நாள் நிகழ்வுக்கு அநுர அரசு ஏன் அனுமதி வழங்கியது? தமிழ் டயஸ்போராக்களுக்குப் பயந்து அநுர அரசு செயற்படுகின்றதா? வடக்கு, கிழக்கில் இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு அனுமதி வழங்குவதுதான் நல்லிணக்கம் அல்ல என்பதை அநுர அரசு புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார். https://madawalaenews.com/9470.html
-
முஸ்லிம்களுக்கான அரசியல் அந்தஸ்தை மறுக்கிறதா அநுரவின் தே.ம.ச. அரசாங்கம்!
எஸ்.என்.எம்.சுஹைல் ஐரோப்பியரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இலங்கை அரசியல் நிர்வாக முறைமை அறிமுகமானது. 1505 இல் போர்க்கீசர் இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றினர், அவர்களிடமிருந்து 1658 இல் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். இவர்கள் இந்நாட்டை ஆக்கிரமித்த போது நாட்டில் பல்வேறு நிர்வாக முறைமை இருந்துவந்தது. குறிப்பாக கண்டி இராஜியம் வலுவான அரசாக இருந்தது. எனினும் 1796 இலங்கைக்கு படையெடுத்த பிரித்தானியர் 1815 இல் முழு இலங்கையையும் கைப்பற்றி ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். காலனித்துவத்தின் வருகைக்கு முன்னரும் பின்பும் இலங்கையின் ஆட்சியில் முஸ்லிம்கள் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக குருநாகல் யுகத்தின்போது அரசனாகவும் குராசான் மன்னரின் கதையும் இருக்கிறது. இருப்பினும் பிரித்தானியர் 1833 இல் அறிமுகப்படுத்திய கோல்புறூக் அரசியல் யாப்பின் படி ஆறு நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் தந்தையான எம்.சி.சித்திலெப்பை போன்றோரின் போராட்டத்தின் பின்பு 1889 ஆம் ஆண்டு கோல்புறூக் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டு பிரதிநிதித்துவம் எட்டப்பட்டது. இதன்போது, இலங்கை முஸ்லிம் ஒருவர் சட்ட நிரூபன சபையின் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராக தெரிவானார். 1910 ஆம் ஆண்டு குருமக்கலம் யாப்பிலும் 1921 தற்காலிக மெனிங் அரசியலமைப்பின் ஊடாகவும் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டது. எனினும், 1924 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மனிங் டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மூன்றாக உறுதி செய்தது. இவ்வாறே 1931 இல் டொனமூர் சீர்திருத்தம் முன்வைத்த நிர்வாக முறையில் மந்திரி சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது. இதனிடையே, 1947 சோல்பரி யாப்பு, சுதந்திரத்திற்கு பின்னரான அமைச்சரவையில் தொடர்ச்சியாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்துவந்துள்ளனர். எந்தவித அழுத்தங்களும் இன்றி நாட்டின் இன பல்வகைமையை கருத்திற்கொண்டு ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டின் நிர்வாகத்துறையின் பங்குதாரர்களாக முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியொன்றை உள்ளீர்க்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. எனினும், முதன் முறையாக இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் பத்தாவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 22 பேர் கொண்ட அமைச்சரவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. இதனால், தேசிய மக்கள் சக்தியை 61 வீதத்திற்கும் அதிகமான வாக்குப் பலத்துடன் மூன்றில் இரண்டு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்று வலுவான ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவதற்கு பங்குதாரர்களாக இருந்த முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டமை பல்வேறு வகையிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. வாக்களித்த, வாக்களிக்காத, ஆதரவளித்த, ஆதரவளிக்காத மக்கள் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைக்கும் நிலையில் அரசாங்கம் இதற்கு பதிலளிக்கும் விதம் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சிம்மாசன உரையின்போது தனது உரையின் ஆரம்பத்திலேயே இனவாதம், மதவாதம் பற்றியெல்லாம் பேசியிருந்தார். எனினும், கடந்த 18 ஆம் திகதி அவர் வழங்கிய அமைச்சரவை நியமனம் குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் இந்த பதிலை குறிப்பிட்டாரா என்ற கேள்வியும் எழுந்தது. இதைவிட கடந்த வார இறுதியில் அக்குறணை அஸ்னா பள்ளிவாசலுக்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் இது விடயமாக முஸ்லிம்கள் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித, “முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வேண்டுமென கேட்காதீர்கள். அது தவறு. 2004 ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்தபோது, முஸ்லிம் பாடசாலை மாணவிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கான துணியை வழங்க வேண்டுமென அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தேன். நான் சிங்கள அமைச்சர் தானே. முஸ்லிம் அமைச்சர் அல்லவே?அம்பாறையில் எங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகவில்லை. ஆனால் நாங்கள் ஆதம்பாவாவை தேசியப்பட்டியலில் நியமித்தோம்.மேல்மாகாண ஆளுநர் முஸ்லிம் ஒருவர். எனவே முஸ்லிம் ஒருவர் அமைச்சரவையில் இலையென்று, அந்த விடயத்தில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம்” என குறிப்பிட்டிருந்தார். இது இப்படியிருக்க கடந்த திங்களன்று சபாநாயகர் அசோக்க ரன்வல அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைக் காரியாலயத்திற்கு சென்று அதன் தலைவர் முப்தி ரிஸ்வி, செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் மற்றும் உலமா சபையின் நிர்வாக பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார். இதன்போது, நாட்டில் சகல இன மக்களும் தங்கள் மத, கலாசார அடையாளங்களை பேணி வாழும் உரிமை பெற்றுள்ளனர். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பாராளுமன்ற அக்கிராசன உரையை மேற்கோளிட்டு, நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும். இனவாத, மதவாத சிந்தனைகளை தூண்டி மக்களை பிரிப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது என வலியுறுத்தினார். எனினும், அவர் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிபடுத்தப்படாமை குறித்து எந்த கருத்தையும் நேரடியாக குறிப்பிட்டிருக்கவில்லை. இதனிடையே, இதுவிடயமாக நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டது. ஊடகவியலாளர் றிப்தி அலியினால் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதி இல்லாமை தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரிடம் நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்”நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சு அதிகாரங்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர் போன்ற பதவிகளை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வகிக்கின்றனர். மேலும், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஒருவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட இனங்கள், மதங்கள் அல்லது சாதிகள் அன்றி ஒட்டுமொத்த இலங்கை தேசத்துக்கும் சேவை செய்வதிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம்” என்றார். அத்துடன், தற்போதைய நிலைமையை இனம் அல்லது மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். ஒன்றிணைந்த இலங்கை தேசம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிய அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த அணுகுமுறையானது பிரச்சினைகளை மிகவும் திறம்பட கையாள்வதற்கு எமக்கு இடமளிக்கும்” என்றும் அமைச்சரவை பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறினார். இங்கு அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் ஒரே மாதிரியான பதில்களையே குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்திற்கு இப்படித்தான் பதிலளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினால் முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்ற வினா எழுகிறது. இதனிடையே, மிகவும் தகுதியுடைய அனுபவமுள்ளவர்களுக்குத்தான் அமைச்சுப் பதவிகளும் பிரதியமைச்சுப் பதவிகளும் அமைச்சுகளின் செயலாளர் பதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக, தேசிய மக்கள் சக்தி ஊடாக எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகினர். இவர்களில் ஒருவர் மாத்திரம் பிரதியமைச்சுப் பதவிக்கு தகுதியானவராக இருந்துள்ளார். அத்தோடு, பிரதி சபாநாயகர் பதவியே இன்னொரு முஸ்லிம் பிரதிநிதியின் தகுதிக்கு பொருத்தமானதாக இருந்துள்ளது. எனினும், இலங்கை நிர்வாக சேவையில் இருக்கும் முஸ்லிம் அதிகாரிகள் தகுதியற்றவர்களாக கணிக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இம்முறை பொதுத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. இந்த மாற்றத்தை விரும்பியே பெரும்பாலான முஸ்லிம் மக்களும் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தனர். இந்நிலையில், அவர்கள் பாராம்பரியமாக ஆதரித்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி அல்லது அந்த கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தியையும் முஸ்லிம் கட்சிகளையும் விட்டு வெளியேறி புதிய அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தனர். ஜனாதிபதி அநுர மீதான நம்பிக்கை மற்றும் முஸ்லிம் கட்சிகள் மீதான அதிருப்தியினால் மக்கள் இந்த தீர்மானத்திற்கு தள்ளப்பட்டனர். மோசமான முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை பிழை என்று கருதி தமது பாதையை மாற்றிக்கொண்ட முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்களை அரவணைக்க தவறுகிறதா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அதனை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர முஸ்லிம் சமூகத்தை அதிருப்திக்குள்ளாக்கும் தீர்மானங்களை எடுக்கக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விடயங்களில் தேசிய மக்கள் சக்தி எடுக்கப் போகும் நிலைப்பாடுகளிலேயே அதன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.- Vidivelli https://www.vidivelli.lk/article/18149
-
முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது !
இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஷ்டிக்க நேரிடும் - பொதுஜன பெரமுன விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரையறைகளுடன் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எவ்வாறு இடமளிக்க முடியும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் மனோஜ் கமகே (Manoj Gamage) கேள்வியெழுப்பியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஷ்டிக்க நேரிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கயைில், ”வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இம்முறை வடக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுபாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் வடக்கு மக்கள் இம்முறை போராளிகளையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் பகிரங்கமாக நினைவு கூர்ந்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் 32 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை எவ்வாறு வரையறைகளுடன் அனுஷ்டிக்க இடமளிக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் ஒசாமா பின் லேடனையும் இலங்கையில் அனுஷ்டிக்க நேரிடும். தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆணையை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் நாட்டு பற்றுள்ள இலங்கையர்களுக்கு கிடையாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையர்கள் என்ற அபிமானத்துடன் வாழ்வதற்கே விரும்புகிறார்கள். பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி அக்காணிகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மாதமளவில் பெருமளவான இராணுவ முகாமைகளை வடக்கில் இருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி, காணிகளை பகிர்ந்தளித்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் விரிவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய மீளாய்வுகளுக்கு பின்னர் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இச்செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு சிறிதளவேனும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும். இலங்கையில் 30 ஆண்டுகள் நீடித்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள். வடக்கிலும், கிழக்கிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருத்தல் வேண்டும் என்பதை அரசாங்கமும் அரச தலைவர்களும் மறக்க கூடாது“ என தெரிவித்தார். https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_706.html
-
பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது - அலி சப்ரி
(நா.தனுஜா) இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். இந்நிலையில், நினைவுகூரல் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, மேலும் கூறியிருப்பதாவது, நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும். அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதற்குரிய மிகமுக்கிய நகர்வாகும். இருப்பினும் இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது. மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன. வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது. மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும். அதேபோன்று தெற்கில் உள்ள கடும்போக்கு சக்திகள் இனவாதத்தைப் பரப்புவதற்கு ஏதுவான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்குவதைத் தவிர்ப்போம். அதேவேளை , பல்லினத்தன்மை என்பது பிரிவினைக்கு வழிவகுப்பதாகவன்றி, எமது பலமாகத் திகழக்கூடிய 'இலங்கையர்' என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி நாமனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அழைப்புவிடுத்துள்ளார். https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_953.html