-
Posts
3242 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by colomban
-
சகோதரர்களான ஆண்டனி தாஸ்(சஞ்சய் தத்), ஹரால்டு தாஸ்(அர்ஜுன்) ஆகியோர் சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரம் செய்து வருவார்கள். ஆனால் உலகை பொருத்தவரை அவர்கள் புகையிலை வியாபாரிகள். ஆண்டனி தாஸின் மகன் லியோ(விஜய் )தான் போதைப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வார். புகையிலை ஃபேக்டரியில் ஏற்படும் தீ விபத்தில் லியோ இறந்துவிடுவார். அதிகம் விற்பனையாகும் டிவிகளில் 65% வரை தள்ளுபடி- பெரிய திரைகள் அதிக சேமிப்பு இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து இமாச்சல பிரதேசத்தில் மனைவி சத்யா(த்ரிஷா), இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் பார்த்திபன்(விஜய்) குறித்து தாஸ் சகோதரர்களுக்கு தெரிய வரும். பார்த்திபனின் புகைப்படத்தை பார்த்த தாஸ் சகோதரர்களோ லியோ சாகவில்லை என்று முடிவு செய்வார்கள். லியோ தான் பார்த்திபனா, இல்லை ஒரே மாதிரி இருக்கும் இரண்டு பேரை தவறாக புரிந்து கொள்கிறார்களா என்பதே கதை. லியோ படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகள் இருந்தாலும் அது விஜய்யின் ஒன் மேன் ஷோவாக இருக்கிறது. லியோ மற்றும் பார்த்திபனாக சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய். இவர் நிஜமாகவே பார்த்திபன் தானா இல்லை ஒரு வேளை லியா தான் டபுள் கேம் ஆடுகிறாரா என கிளைமாக்ஸ் காட்சி வரை நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசி நிமிடம் வரை இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. படத்தில் சில மைனஸுகள் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் தன் நடிப்பால் சரிகட்டிவிடுகிறார் விஜய். லியோ தாஸாக ஒரு Badass ஆக வித்தியாசமாக மிரட்டியிருக்கிறார் விஜய். தந்தை, கணவராக விஜய்யின் நடிப்பு சிறப்பு. விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவுக்கு பவர்ஃபுல்லான வில்லன் வேண்டும். அது தான் லியோவில் மிஸ்ஸிங். அர்ஜுன் மிரட்டியிருந்தாலும் அவர் படம் முழுக்க வரவில்லை. குடும்ப சென்டிமென்ட்டை கையில் எடுத்துள்ளார் லோகேஷ். அது ஆக்ஷனுக்கு இடையூறாக வந்துவிட்டது. வில்லன்களின் உலகை விரிவாக காட்டியிருந்தாலும், அது கவரவில்லை. சஞ்சய் தத், அர்ஜுன் ஆகிய இரண்டு நல்ல நடிகர்கள் வில்லன்களாக நடித்திருக்கும்போதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அனல் பறக்கவில்லை. இரண்டாம் பாதியில் அனிருத்தின் இசை உச்சத்தை தொட்டுவிட்டது. லியோ படம் துவங்கிய அரை மணிநேரத்திலேயே அடுத்தது என்னவென்பதை எளிதில் கணிக்க முடிகிறது. இருந்தாலும் அதை தன் ஸ்டைலில் கொடுத்து ரசிகர்களை திருப்தி அடைய செய்திருக்கிறார் லோகேஷ். த்ரிஷாவின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அவர் சும்மா வந்துவிட்டு செல்லவில்லை. அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். லியோ- விஜய் ஷோhttps://tamil.samayam.com/tamil-cinema/movie-review/vijay-starrer-leo-movie-review-and-rating/moviereview/104546721.cms
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
colomban replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஆம் நான் பலவருடங்கள் வாழ்ந்து அனுபவித்துள்ளேன். இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என நன்கு தெரியும் ஆம் நான் பலவருடங்கள் வாழ்ந்து அனுபவித்துள்ளேன். இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என நன்கு தெரியும் -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
colomban replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஆம் கர்த்தர் ஆபிராகாமுக்கு உன் சந்ததியை மணலைபோலவும், வானத்தின் நட்சத்திரங்களை போலவும் பொருகப் பண்னுவேன் என்றார். -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
colomban replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஆம் யோவான் புத்தகத்தில் இது குறிப்பிடபட்டுள்ளது. அருமை கோசான் இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
colomban replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஆம் ஆகர் எனும் அடிமைப்பெண்ணுக்கு பிறந்தவனே இஸ்மவேல். -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
colomban replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
பலஸ்தீனியர்களுடன் நொருங்கி பழகியவர்கள் என்னும் அனுபவத்தில் சொல்கின்றேன். இவர்கள் சக மனிதர்களை, விசேடமாக எம்போன்ற ஆசியர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார்கள். இவர்களுடன் வேலை செய்வது மிகவும் கஷ்டம். -
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரிக்ரொக்கில் ஆடல், பாடல் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த யுவதியின், தீவிர ரசிகரான இளைஞரே யுவதியை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகின்றது. திருமணம் நடந்த இரண்டு வாரங்களில், பிறிதொரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர், யுவதியின் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்துள்ளதுடன், யுவதி மீது யாழ் நீதிமன்றமொன்றில் வழக்கு பதிவு செய்துள்ளாராம். ஐரோப்பிய நாடொன்றில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் குடும்பஸ்தர் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில், தற்போது மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாண ரிக்ரொக் அழகியின் வீடியோக்களில் மயங்கி, ரிக்ரொக் மூலம் யுவதியுடன் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் காதலித்ததாகவும், அக் காலப்பகுதியில் யுவதிக்கு சுமார் 32 இலட்சம் ரூபா பணத்தை குடும்பஸ்தர் அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் , யுவதி தன்னை நம்பிக்கை மோசடி செய்துள்ளதாகவும், அந்த பணத்தை மீள பெற்றுத்தர வேண்டுமென்றும் குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். அத்துடன் யுவதிக்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளதுடன் யுவதி தற்போது யாழ்ப்பாணத்தில் இல்லாத நிலையில், யுவதியின் பெற்றோர் வீட்டிற்கு சென்று அவர் கலாட்டாவிலும் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தின் போது, யுவதியின் வீட்டின் அருகிலிருந்த அந்த பகுதி கிராமசேவகர் தலையிட்டு, அந்த நபரை சமரசப்படுத்தி, எதுவாக இருந்தாலும் பொலிஸ் நிலையம் சென்று முறையிடுமாறு அனுப்பி வைத்துள்ளார். யுவதியுடன் சுமார் 2 வருடங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவித்த குடும்பஸ்தர், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களின் பிரதிகளை வீட்டில் வீசியெறிந்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், சட்டத்தரணியொருவர் மூலம், ஐரோப்பியவாழ் குடும்பஸ்தர் கடந்த வாரம் ரிக்ரொக யுவதிக்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. https://pagetamil.com/
-
யுத்தத்தை தொடர்ந்து வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 400க்கும் அதிகமான பௌத்த தொல்பொருள் சின்னங்களுள் அதிகளவானவை தற்போது அழிக்கப்பட்டுள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கடும்போக்குவாத சிங்கள அரசியல்வாதியுமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் நேற்றைய தினம் கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான தெரிவு குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கிலுள்ள சிங்கள தொல்பெருள் சின்னங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்களை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த அந்த திணைக்களத்தினருக்கு அதிகாரம் இல்லை. அச்சுறுத்தல்கள் மற்றும் எச்சரிப்புக்கள் விடுக்கப்படுவது காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளது. வடக்கிலிருப்பது வேறு ஒரு நாடா என நான் கேட்க விரும்புகிறேன். அத்துடன், சிங்கள மக்களுக்கு வடக்கில் குடியேற எந்த அனுமதியும் இல்லை. அவர்களுக்கு அங்கு வாழவே, தமக்கான காணியொன்றை வாங்கவோ வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ அனுமதி இல்லை. முஸ்லீம் மக்களுக்கும் இதே நிலை தான். என குறிப்பிட்டுள்ளார். https://www.jaffnamuslim.com/2023/10/blog-post_82.html
-
வயது போக போக qualitative factors ஐ அதிகம் தேர்வு செய்வோம். வாழ்க்கையில் எல்லாம் ஒரளவு அடைந்த பிறகு மனம் சிறுவயது அனுபவங்களயே நோக்கி ஏங்கும். மேலும் பணத்தை/வசதியை வைத்து வெற்றியை வாழ்வின் வெற்றி அளவை தீர்மானிப்பது தவறு என நினக்கின்றேன். எல்லாவற்றிற்கும் காரணம் மனமே என்பது எனது கருத்து. அது மட்டுமல்ல அதிஸ்டம் என்று ஒன்றுன்டல்லவா அது அவரவர் விதிப்படி நடக்கும்
-
கனடவுக்கு இங்கு வீசா இலகுவாக கொடுகின்றார்கள். எனக்கு தெரிந்தவரை கனடாவும், இத்தாலியும் பொதுவாக அகதிகோரிக்கை பெயில் ஆனாலும் திருப்பி அனுப்புவதில்லை. நிறைய வீசா வழிமுறைகள் இப்பொழுது உண்டு, digital nomad, self sponsorship, job search என இதை தமிழர்களை விட சிங்களவர்கள் நன்கு பாவித்து வருகின்றார்கள். போர்த்துக்கல் இப்பொழுது இதில் முக்கியமனது. மாஸ்டர் தர பட்டதாரிகளுக்கு ஜெர்மன், சுவீடன் போன்றன job search வீசா கொடுக்கின்றன. ஆம் இது உண்மை 2003ல் நான் முதன் முதலில் இலண்டன் வந்தபோது நிறைய பேர் இந்த வீசாவில் வந்திருந்தார்கள். இதுவே working holiday visa UK சட்டப்படி 10 வருடம் ஒருவர் ஸ்டுடன் வீசாவில் இருந்தால் அவருக்கு கிடைக்கும்
-
ஐஸே நேற்று 138 பஸ்ஸில் போகும்போது திம்பிரிகஸ்யாயா சந்தியில் எனக்கு இப்படி சீட் கொடுக்க வேண்டி ஏற்பட்டது வா 😁_ ஆம் எனக்கு தெரிந்தி 78 / 79 / 80 களில் ஜெர்மன் போக ஆட்கள் கொழும்பில் வந்து லொட்ஜில் தங்கி இருப்பர்கள். அப்பொழுது யுத்த காலம் அல்ல ஆனால் வெளி நாட்டிற்கு உழைக்க சென்றார்கள். நல்ல கருத்துக்கள். நான் இங்கு கொழும்பில் தான் இப்பொழுது இருக்கின்றேன். பட்டய கணக்களரான எனக்கு மேற்கு நாடுகளின் விசா இருந்தாலும் நான் கொழும்பு வாழ்க்கையே விரும்புகின்றேன். இங்கிலாந்திலும் வேலை செய்தேன். ஆனால் கொழும்பே எனக்கு சொர்க்கம். 50 வயதுக்கு மேல் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒன்றுதான். எதயும் சகித்து கொள்ளும் மனப்பக்குவம் எற்பட்டு விடும். அங்கு காலம் முழுவது மோட்கேஜ் கட்டுவதை விட இங்கு சொந்த வீட்டில் மன அழுத்தம் இல்லாமல் வாழலாம். என்னுடைய வகுப்பு நண்பர்கள் சிலர் 50 வயதில் கனடா சென்று வெற்றிகரமாக வாழ்க்கையை அமைத்துள்ளார்கள். எங்கு வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே சிறப்பு. எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை பார்போம்.
-
உள்நோக்கம் எதுவுமில்லை. ஒர் சாதரண செய்தியாகவே பதிவு செய்தேன். வலீமா என்ட கணக்குல வாப்பா
-
யாழ்.வேலனை மத்திய கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் ஒன்று தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. “கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வழங்கியுள்ள அறிவித்தலே இந்த சர்ச்சைக்கு காரணமாக மாறியுள்ளது. அத்தோடு இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பலரும் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். மாணவர்களின் போசாக்கு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலகின் பெரும் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. உலக உணவுத்திட்டம் பாடசாலையின் மதிய உணவுக்கு டின் மீன்களை வழங்கி வருவதோடு, மதிய உணவில் முட்டை, நெத்தலி என்பவனவற்றையும் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான பின்னணியில் கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு வேலனை மத்திய கல்லூரி அறிவித்துள்ளமை தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. https://www.jaffnamuslim.com/2023/09/blog-post_962.html
-
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு - கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது?" என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். 'திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது' - என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது - புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது? அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு - கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள். எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை - மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன என தெரிவித்துள்ளார். https://www.jaffnamuslim.com/2023/09/blog-post_65.html
-
மரணத்திற்குப் பின்னரும் வாழ்க்கை இருக்கிறது: நிபுணர் கூறுகிறார்
colomban replied to ஏராளன்'s topic in பேசாப் பொருள்
Neurosceience என்றால் என்ன? இது எதை பற்றிய படிப்பு? இங்கு கொழும்பில் ஒரு சபை போதகர் இதைப்பற்றி அடிக்கடி பிரசங்கிப்பார். இவர் மக்களை ஏமாற்றுகின்றார் என்றே நான் நினக்கின்றேன். -
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 1990ஆம் ஆண்டு ஏறாவூரில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நூல் ஏறாவூர் தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவரும் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுவுறச் சங்கங்களின் பொது முiகாமையாளருமான எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் கடந்த வெள்ளியன்று 18.08.2023 ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூல் விமர்சன ஆய்வுரையை கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் செய்ன் நிகழ்த்தினார். ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா, நிருவாக அலுவலர் ஜாஹிதா உட்பட காத்தான்குடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களின் ஊர்ப் பிரமுகர்கள், படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உற்றார் உறவினர்கள், தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் செயற்பாட்டாளர்கள், மார்க்கப் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி நடுநிசிக்குச் சற்று முன்னராக ஏறாவூருக்குள் புகுந்த ஆயுதக் கும்பலால் ஆற்றங்கரை, சுரட்டையன்குடா, ஓட்டுப்பள்ளியடி, புன்னைக்குடா வீதி, ஐயன்கேணி, சத்தாம்ஹ{ஸைன் ஆகிய கிராமங்களில் நித்திரையிலிருந்தபோது பச்சிளம் பாலகர்கள் கர்ப்பிணிகள், வயோதிபர்கள், பெண்கள். குழந்தைகள் உட்பட 121 பேர் சுட்டும் வெட்டியும் குத்தியும் அடித்தும் தீவைத்தும் கொல்லப்பட்டிருந்தார்கள். https://www.jaffnamuslim.com/2023/08/blog-post_554.html
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான அதிகாரப் பகிர்வை முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர், ஆனால் குறிப்பாக 13வது திருத்தம் வேறு வகையிலும் திருத்தப்பட வேண்டும் என சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மாகாணங்களை இணைக்கும் அதிகாரத்தை நீக்கி அரசியலமைப்பின் 154A(3) பிரிவை ரத்துச் செய்யவேண்டும் எனவும் ‘நிலம் மற்றும் குடியேற்றம்’ தொடர்பான அதிகாரங்கள் முழுமையாக மத்திய அரசுக்கு வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இலங்கை முஸ்லிம்கள் மற்றும் சிங்கள சமூகங்களின் பங்கேற்பு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும், அது 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு வழியிலோ அமைந்தாலும் ஒருபோதும் நிலையான தீர்வாக இருக்க முடியாது அரசியலமைப்பின் 13ஆவது திருத்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கோரும் உங்களுக்கு, நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தற்போதைய பாராளுமன்றத்துக்குத் தெரிவான ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக, அதன் பிரதித் தலைவராக (1) மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக நான். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் (மற்றும் சிங்கள) மக்களுடன் வாக்குறுதியளிக்கப்பட்ட கலந்துரையாடலை நடத்தாது 13ஆவது திருத்தம் தொடர்பாக 2023 ஆகஸ்ட் 9 புதன்கிழமை அன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டது ஏன் என்பது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளால் எங்களிடம் வினவப்பட்டது. கிழக்கு மாகாணத்தில், மிகப்பெரிய இன-மத சமூகத்தை முஸ்லிம்கள் உள்ளடக்கியுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் மக்கள் மிகப்பெரிய ஒற்றை சமூகமாக விளங்குகின்றனர், அவர்களில் பெரும்பாலாேனார் 1987 முதல் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். சில ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லின, பல மதங்கள் கொண்ட மக்கள் வாழும் இலங்கையில் இருந்து தனித் தமிழ்த் தேசத்தை உருவாக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்காத காரணத்தினால் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் இன ரீதியாக சுத்திகரிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டன, அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன என்பது அனைவரும் அறிந்தது. இலங்கை முஸ்லிம்கள் மற்றும் சிங்கள சமூகங்களின் சமமான மற்றும் சமத்துவமான செயல்முறைகள் மற்றும் பங்கேற்பு இல்லாமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து வரும் இனப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும், அது 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு வழியிலோ அமைந்தாலும் ஒருபோதும் நிலையான தீர்வாக இருக்க முடியாது. ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான தனது குறிப்புகளில் வடபகுதி தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதே தமது நோக்கமாகும் என தெரிவித்தமை பலரால் எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. நாடு பிளவுபடக் கூடாதென்பதற்காக நிலத்தையும் உயிர்களையும் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களைப் புறக்கணித்து, ஒரு சமூகத்துக்கு ஆதரவாக அவ்வாறு தெரிவித்தமையானது அதிர்ச்சியளிக்கும், ஏற்றுக்கொள்ள முடியாத பாரபட்சமான செயற்பாடாகப் பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களினதும் இன-மத அடிப்படையிலான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு இரண்டு மாகாணங்களிலுமுள்ள மூன்று பிரதான சமூகங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கும் வகையில் பாரபட்சமற்ற, உரிய நடைமுறையை கைக்கொள்வது ஜனாதிபதியின் கடமையாகும் என மக்கள் பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். * வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான அதிகாரப் பகிர்வை முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர், ஆனால் குறிப்பாக 13ஆவது திருத்தம் வேறு வகையிலும் திருத்தப்பட வேண்டும். * மாகாணங்களை இணைக்கும் அதிகாரத்தை நீக்கி அரசியலமைப்பின் 154A(3) பிரிவை ரத்துச் செய்யவேண்டும். * மாகாண சபையின் 2/3 பெரும்பான்மை அங்கீகாரத்துடன் மட்டுமே நிலம் மற்றும் காணி சம்பந்தமான அனைத்து அதிகாரங்களும் எந்த மாகாணத்திலும் பயன்படுத்தப்படும் என்ற விதிகளுக்கு உட்பட்டு ‘நிலம் மற்றும் குடியேற்றம்’ தொடர்பான அதிகாரங்கள் முழுமையாக மத்திய அரசுக்கு வழங்கப்படல் 1981 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாகாணத்தின் இன- மத மக்கள் தொகை விகிதாசாரம் மீறாத வகையிலும் அது அமைதல் அவசியம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரங்களும் பிரத்தியேகமாக மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும், ஆனால் எந்தவொரு மாகாணத்திலும் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பொறுப்பானவர்களின் எண்ணிக்கை, 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாகாணத்தின் இன- மத மக்கள் தொகை விகிதத்தை பிரதிபலிக்க வேண்டும். * யுத்தத்தின் போது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிகளையும் சொத்துக்களையும் பரிசீலித்து மீட்டெடுத்து வடமாகாண சபை நடைபெற்றபோது மேற்கொள்ளத் தவறிய அனைத்து முஸ்லிம்களினதும் மீள்குடியேற்றத்தை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். மேலும், எந்த கையிலும் எந்த வடிவத்திலும் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுளையும் நிறுத்தவும் அசாதாரணமான அவசர நிலையைத் தவிர்த்து, இரு மாகாணங்களிலும் உள்ள ஆயுதப்படைகளின் எண்ணிக்கை மற்றும் பங்களிப்பைக் குறைத்து, உண்மையான ஆலோசனை செயல்முறை மூலம் நாட்டில் உள்ள அனைத்து இன-மத சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுதல். * கிழக்கில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் கிராமவாசிகள், குறிப்பாக சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமவாசிகள் பலவந்தமாக முற்றாக வெளியேற்றப்பட்டு, மீளக் குடியமர்வதிலிருந்து தடுக்கப்படுகின்றனர். இந்த முஸ்லிம்கள் முழுமையாக அவர்களது சொந்த கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். * பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக விதிகள்) சட்டம் நமது நாட்டில் வெற்றிபெறவில்லை என்பதை நாம் ஏலவே அறிவோம். பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் இதேபோன்ற சட்டங்கள் வெற்றி பெறுவதில்லை என்பதால், முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவது முற்றிலும் தேவையற்றது. நீதிமன்றங்கள் உட்பட அதிகாரம் பெற்ற அனைத்து நிறுவனங்களாலும் நியாயமான, மற்றும் பாரபட்சமற்ற நிர்வாகத்தின் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். உலகளாவிய பார்வை என்னவென்றால், இத்தகைய சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பதிலாக சிறுபான்மையினரை மேலும் ஒடுக்குவதோடு அதிக தீவிரவாதத்துக்கு வழிவகுக்கும் மற்றும் நல்லிணக்கத்தையும் குலைத்து விடும். பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து நாடு வெளிவர வேண்டுமானால் இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.jaffnamuslim.com/2023/08/blog-post_675.html
-
நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் கலாச்சார விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபையின் கொடி சீர்செய்ய கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கடிதமொன்றை இன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்று மாகாணத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துவரும் பணியின் மற்றுமொரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இன மக்களினதும் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு மாகாண கொடி திருத்தியமைக்கப்பட வேண்டும். என்ற முன்மொழிவை முன்வைத்துள்ளார். மேலும், வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த ஆளுநர் ஒருதலை பட்சமாக மக்களின் அபிப்பிராயங்களோ, அதிகாரிகளின் ஆலோசனைகளோ பெறாமல் இனவாத சிந்தனையில் இப்போதுள்ள கிழக்கு மாகாண கொடியை உருவாக்கியுள்ளார் என்றும் அதில் கிழக்கில் வாழும் சமூங்கங்களின் அடையாளங்கள் இல்லாதிருப்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் வடமாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள வடமாகாண கொடி அந்த மாகாணத்தில் வசிக்கும் சகல இனங்களினதும் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். எனவே சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஆளுநர் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல சமூகங்களையும் குறிப்பாக மாகாணத்தில் 40 சதவீதமளவில் வாழும் முஸ்லிங்களின் கலாச்சாரத்தை பிரபலிக்கும் எவ்வித அடையாளமும் இந்த கொடியில் உள்ளடக்கப்படவில்லை மட்டுமின்றி ஆகக்குறைந்தது முஸ்லிங்களை அடையாளப்படுத்தும் வகையில் நிறம் கூட பிரதிபலிக்கவிலை என்பதை கவனத்தில் கொண்டு மட்டுமின்றி இந்த விடயமானது நீண்டகாலமாக முஸ்லிம் சமூகத்தை வேதனைக்கு உட்படுத்தியுள்ளது என்பதையும் மனதில் கொண்டு இந்த கொடி விடயத்தில் கவனம் செலுத்தி சீர்செய்ய உடனடியாக முன்வரவேண்டும் என்று அந்த கடிதத்தில் ஆளுநரை கேட்டுக்கொண்டுள்ளார். https://www.madawalaenews.com/2023/08/i_116.html
-
இராமன் = ரஹ்மான் , சீதா = சய்தா , நுஃமான் = அனுமான் என ஆராயும் போது இது முஸ்லீம்களின் ஒரு சிறிய வரலாறு தான் என்பது தெளிவாக விளங்குகிறது - மேலும் ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாகவே பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம்.
colomban replied to colomban's topic in செய்தி திரட்டி
மனைவியுடன் சென்ற, முபாறக் அப்துல் மஜீத்தின் மகன் மீது தாக்குதல் - பாறுக் ஷிஹான் - ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தின் மகனும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான ஷாஹிட் முபாறக்(வயது-28) என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் வைத்து திங்கட்கிழமை(14) இரவு தனது வாகனத்தில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த வேளை ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஷாஹிட் முபாறக் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் மேற்கொண்டு தலைமறைவாகியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் தற்போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அத்துடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் என்பதும் அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மேலதிக கல்முனை தலைமையக பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.jaffnamuslim.com/2023/08/blog-post_971.html -
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
colomban replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஜூலை மாதம் 23ஆம் திகதி, வவுனியா, தோணிக்கல் பிரதேசம் அந்த வீட்டில், அதிகப்படியான சந்தேசம் நிறைந்து காணப்பட்டது. அதற்குக் காரணம், அனைவரின் பாசத்துக்குப் பாத்திரமான மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமாகும். எனினும், அந்தக் குதூகலம் நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை. நேரம், நள்ளிரவு 12.05ஐ அண்மித்துக் கொண்டிருந்தது.... வீட்டுக்குள் நுழைந்த கூலிப்படை, அங்கிருந்தவர்களை வெட்டியும் குத்தியும் வீட்டுக்கு தீவைத்தும் படுபயங்கர கொடூர அட்டகாசங்களில் ஈடுபட்டது. வவுனியாவில் வர்த்தகம் செய்யும் ‘சுரேஸ்’ என்கின்ற முஹமட் இக்ஸாட், தோணிக்கல்லில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 19 வயதான பாத்திமா சஜானாவுக்கு, இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட, தனது நண்பர்கள், உறவினர்கள் என சிலரை வீட்டுக்கு அழைத்திருந்தார். கொழும்பில் இருந்து வந்து, அந்த வீட்டில் தங்கியிருந்த இக்ஸாட்டின் சித்தி, சித்தியின் கணவன் மற்றும் மகளான 21 வயதான பாத்திமா சசீமா சைனி, அவருடைய கணவன் சுகந்தன் ஆகியோரும் அன்றைய தினம் சஜானாவின் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இரவு 12.05 மணியளவில் வீட்டின் முன் வாயில் கதவு (கேற்) தட்டப்பட்டது. வீட்டின் உரிமையாளரான ‘சுரேஸ்’, தனது மகளுக்கு ‘சப்பிரைஸ் கிப்ட்’ வந்துள்ளதாக நினைத்து, முன் கதவை திறந்து பிரதான வாயிலுக்கு சென்றிருந்தார். கூடவே, அவரின் மனைவியும் சசீமா சைனியின் தாயாரும் சென்றிருந்தனர். வாயில் கதவை திறந்ததும், அங்கு முகமூடி அணிந்திருந்த 10 இற்கும் மேற்பட்டவர்கள் “சுகந்தன் எங்கே” எனக் கேட்டனர். இதனால் அச்சமடைந்த ‘சுரேஸ்’, “எற்காக சுகந்தனைத் தேடுகின்றீர்கள்; நீங்கள் யார்” எனக் கேட்ட, மறுகணமே அவர் மீது வாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து ‘சுரேஸ்’, ஓடிச்சென்று தனது வீட்டில் ஒளிந்து கொண்டார். அவருடன் கூடவே சென்ற மற்றைய இரண்டு பெண்களும் பயத்தில் கத்தியுள்ளனர். இந்நிலையில், வீட்டின் முன் கதவு திறந்து காணப்படவே, வீட்டுக்குள் சென்ற கூலிப்படை, வீட்டில் இருந்தவர்களை வெளியேறுமாறு கூறி, சுகந்தனைத் தேடியுள்ளனர். இதன்போது, பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள், என்ன நடக்கின்றது என்பதை உணர முடியாத நிலையில், பயத்தால் உறைந்து, அறைகளுக்குள் ஒளிந்துகொண்டனர். இதன்போது, பெற்றோல் மற்றும் ஒயில் கலந்த கலன்களுடன் வந்த கூலிப்படை வீட்டுக்குத் தீவைத்தனர். இந்நிலையில் அறைக்குள் ஒளித்திருந்த சுகந்தன், தனது மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறியபோது, வீட்டின் முன்புறம் அதிகளவில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. சுகந்தனின் மனைவியான சசீமா சைனி, தடக்கி விழுந்துவிடவே, அவரைத் தூக்குவதற்கு சுகந்தன் முயன்றுள்ளார். எனினும், அது சாத்தியப்படாத நிலையில், சுகந்தனிலும் தீபற்றியது. அதனால் தனது மனைவியை தூக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, வெளியில் சென்று மண்ணில் புரண்டு தீயை அணைக்க முயன்றுள்ளார். இதற்கிடையில், அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்தபோது, வீடு முழுமையாக தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இந்நிலையில், அறைகளுக்குள் ஒளித்து இருந்தவர்களை மீட்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு, அவர்களை மீட்டெடுக்க முயலும்போதே, பொலிஸாருக்கும் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கும் தகவலை அயலவர்கள் வழங்கினர். எரியும் வீட்டுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் அயலவர்கள் ஈடுபட்டு, மூன்று வயது முதல் 46 வயது வரையான ஒன்பது பேரை தீக்காயங்களுடன் மீட்டனர். இந்நிலையில், வீட்டுக்கு தீ வைத்த கும்பல் தப்பியோடி இருந்தது. வீட்டுக்குள் விழுந்து கிடந்த சசீமா சைனியை எவரும் காணாததால், அவர் வீட்டுக்குள்ளேயே தீக்காயம் மற்றும் மூச்சு திணறலால் மரணித்த நிலையில், தீயணைப்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட வவுனியா மாவட்ட பதில் நீதிவான் த. ஆர்த்தி ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில், சுகந்தன் (35 வயது), பாத்திமா சஜானா (19 வயது), தேவராணி (33 வயது), தாரணி (46 வயது), சுதர்சினி (46 வயது), ஆக்ஸட்டினா (ஏழு வயது), தர்வின் சுதர்சினி, தனுசா, முஹமட் இக்ஸாட் (40 வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் கடும் காயங்களுக்குள்ளான சுகந்தன், வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மறுநாள் மரணமடைந்தார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். சி.சி.ரி.வி காணொளிகளை முதலில் ஆராய்ந்தபோது, வீட்டின் வெளியில் இருந்த சி.சி.ரி.வி கமெரா உடைக்கப்பட்டிருந்ததுடன் வீட்டின் உட்பகுதியில் இருந்த கமெராக்களும் செயற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், அயல் வீடுகளில் உள்ள சி.சி.ரி.வி கமெராக்களை பரிசோதித்தபோது, முகமூடியும் கையுறையும் அணிந்த சிலர், கைகளில் கலன்கள், வாள்களுடன் வரிசையாக நடந்து வருவதையும் பின்னர் அவர்கள் தப்பிச் செல்வதையும் கண்டுகொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பிரதி பொலிஸ் மாஅதிபர் பி. அம்பாவிலவின் கண்காணிப்புடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் களுஆராச்சியின் ஆலோசனையில், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிநடத்தலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன், பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண தலைமையிலான பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்தன. இதையடுத்து, தோணிக்கல் பகுதியில் உள்ள மயானத்தில் இருந்து கையுறை, கல்வனைஸ் பைப் என்பன, மோப்ப நாயின் உதவியுடன் மீட்கப்பட்டன. பிரதி பொலிஸ் மாஅதிபர் பி. அம்பாவில, வவுனியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட நிலையில், பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு, சிவில் புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்தன. இந்தக் குற்றச்செயலுக்கான திட்டம், தவசிகுளம் குளக்கட்டுப்பகுதியில் இருந்து திட்டமிடப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கசிந்த நிலையில், குறித்த கிராமத்தில் விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தினர். இவ்வேளை, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது. இத்தொலைபேசி அழைப்பு, அப்பகுதியில் பல குற்றங்களைச் செய்திருந்த ஒருவருடைய அழைப்பாக இருந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக, தனக்கு சில தகவல்கள் தெரியும் என அவர் தெரிவித்திருந்தார். குற்றத்தடுப்பு பொலிஸார் அவரிடம் நேரடியாகத் தகவல்களைப் பெற்றபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வௌிவந்தன. இதன் பிரகாரம், குறித்த இடத்துக்கான அலைபேசி கோபுரத்தின் ஊடான அழைப்புகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள், மரணடைந்த சுகந்தன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படை மற்றும் அந்தக் கிராம மக்கள் வழங்கிய தகவல் என்பவற்றின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். தவசிகுளம் பகுதியில் வைத்து, 31 ஆம் திகதி முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, நான்கு பேர் கைதாகினர். இந்நிலையில், இச்சம்பவத்தை செய்வதற்காக ஒப்பந்தம் மேற்கொண்ட நபர், வவுனியாவில் இருந்து தப்பி ஓடியிருந்தார். கைதுசெய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள்கள், அலைபேசிகள் என்பன மீட்கப்பட்டன. இந்நிலையில், மிகுதி விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கமாறு பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்ட நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தொடங்கினர். இதன் பிரகாரம், சந்தேக நபர்களை தடுப்பு காவலுக்கு எடுத்து, விசாரணைமேற்கொள்ளப்பட்ட நிலையில், ஐந்து வாள்கள், கையுறைகள் உட்பட சில எரிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் தடுத்து வைத்து விசாரணைமேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, உயிரிழந்த சுகந்தனின் நண்பராக இருந்த ஒருவர், பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் மூன்றாம் திகதி கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் தடுப்பு காவல் உத்தரவை பெற்று விசாரணை செய்யப்பட்டார். விசாரணைகள் முடிவடைந்து, வைத்திய பரிசோதனைகளின் பின்னர், நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 11ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். கடந்த, 11ஆம் திகதி அடையாள அணிவகுப்பு இடம்பெற இருந்தபோதிலும், சாட்சி சிகிச்சை பெற்று வருவதால் அவர் நீதிமன்றத்துக்கு வர முடியாமையால், அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டதுடன், சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் வவுனியா நீதிவான் உத்தரவு வழங்கியிருந்தார். குறித்த சம்பவம் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு விவகாரத்தால் சம்பவித்தது என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், ( சுகந்தன் பாத்திமாவை திருமணம் செய்வதற்கு முன்னர் வேறு ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கொலை குற்றம் ஒன்றில் சிறைக்கு சென்ற வேளையில் அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் தகராறுகள் ஏற்பட்டுள்ளன ) அத்துடன் போதைப்பொருள் வியாபாரமும் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்குமா என்பது தொடர்பிலான சந்தேகமும் மக்கள் மத்தியில் நிறைந்து காணப்படுகின்றது. ஏனெனில், மரணமடைந்த சுகந்தனும் பிரதான சந்தேக நபராக கைதானவரும் அடிதடி மற்றும் சமூக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தமையையும் மக்கள் மறுப்பதற்கில்லை. இரண்டு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாட்டின் காரணமாக சந்தேகநபர்கள் குழு மிகவும் கவனமாக ஏற்பாடு செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. . எது எவ்வாறாயினும், சட்டம் தன் கடமையை செய்யும் நிலையில், தனி நபர்கள் தீர்ப்பு வழங்கும் ‘ரவுடீஸ’ போக்கு, ஒழுக்கமுள்ள சமூகத்துக்கு ஏற்புடையதல்ல. எனவே, உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை நீதியினூடாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். https://www.madawalaenews.com/2023/08/i_875.html -
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கெதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இனவாதமாக பேசும் நிலையை ஏற்படுத்தியவர்கள் தமிழ் கூட்டமைப்பினரே என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடமாகாணத்தில் பௌத்த மதஸ்தலங்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் அங்குள்ளோரின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என மேர்வின் கூறியது மிக கடுமையான தவிர்க்க வேண்டிய வார்த்தையாக இருப்பினும் அவரது சமூக அக்கறை என்று பார்க்கும் போது இந்நிலைக்கு அவரை ஆக்கிய தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ நாசமாக்கிய நாட்டை ஜனாதிபதி ரணில் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்த்திக் கொண்டிருக்கையில், நாடு அமைதியாக இருக்கும் போது இந்த நாட்டில் அடிக்கடி இனவாத சூட்டை உருவாக்குவது தமிழ் கட்சிகள்தான். சிங்களவர்களும் முஸ்லிம்களும் தமக்கு நேரத்துக்கு சாப்பாடு கிடைத்தால் மட்டும் போதும் என்றிருக்கும் போது 13 வேண்டும், வடக்கு கிழக்கு இணைக்க வேண்டும், ஜனாதிபதி இனப்பிரச்சினை பற்றி பேச வேண்டும், சமஷ்டி வேண்டும் என தமிழ் இனவாத கட்சிகள் கூப்பாடு போடுவதால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இக்கருத்துக்களை எதிர்க்க வேண்டியுள்ளது. போதா குறைக்கு சாணக்கியனும் ஆளுனர் தொண்டைமானும் தம் முட்டாள்தனமான இனவாத காட்டுமிராண்டி செயலால் சும்மா குறட்டை விட்டு தூங்கும் கிழக்கு முஸ்லிம்களையும் உசுப்பேத்தி விட்டார்கள். இத்தகைய இனவாத கருத்துக்கள் அதிகரித்ததால் காணாமல் போயிருந்த மேர்வின் சில்வாவும் வாளோடு கிளம்பி விட்டார். அவர் இந்தளவு பேச வழி சமைத்தது தமிழ் கட்சிகள்தான் என்பதை மறுக்க முடியாது. மேர்வினின் பேச்சில் பல உண்மைகள் உள்ளன. போகிற போக்கில் தமிழ் கூட்டமைப்பினர் மேர்வினை எம்பியாக்கி விடுவர் போலுள்ளது. ஆகவே நாட்டில் இனங்களுக்கிடையில் சூடேற்றுவதை சகலரும் தவிர்த்து அனைத்து மக்களினதும் அடிப்படை பிரச்சினையான பொருளாதார முன்னேற்றத்துக்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கூறிக்கொள்கிறது. https://www.jaffnamuslim.com/2023/08/blog-post_657.html
-
- பாறுக் ஷிஹான் - கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம். ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது. இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம் .வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும் நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்றத்தில் அண்மையில் இராமாயணம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றமை தொடர்பில் இன்று(15) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது பாராளுமன்றத்தில் அண்மையில் ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.இராவணன்.தமிழில் இராவணன்.சிங்களத்தில் இராவண என்று சொல்வார்கள்.இந்த இராவணன் என்பவர் யார்?இந்த இராவணன் தமிழனா? சிங்களவனா என்று விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.உண்மையில் இந்த விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விடயமல்ல. படித்த மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இவ்விடயம் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.ஆனால் இவ்விடயம் 100 க்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்கள் இருக்கின்ற பாராளுமன்றத்தில் விவாதிப்பது என்பது ஒரு அதிசயமாகவும் ஒரு அருவருக்கத்தக்க விடயமாகவும் நாம் பார்க்கின்றோம். கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம்.2013 ஆண்டு இவ்வாறு தெளிவாக தெரிவித்துள்ளேன் என நினைக்கின்றேன்.இது தவிர 2020 ஆண்டு பொதுத்தேர்தல் காலப்பகுதியிலும் இவ்விடயம் குறித்து சொல்லி இருக்கின்றோம்.இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராணவன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன். காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது.இவ்விடயம் கிட்டத்தட்ட 7000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறுகின்றார்கள்.கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் கிட்டத்தட்ட 25000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறி இருந்ததை காண்கின்றோம். ஆகவே இராமாயணம் என்பது ஒரு புராணக்கதை.இந்த புராணக் கதை சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டிருந்தது.அது தமிழிலோ அல்லது சிங்களத்திலோ எழுதப்பட்ட புராணக் கதை அல்ல.புராணக் கதை எனும் போது அதில் கற்பனைகளும் இருக்கலாம் உண்மைகளும் இருக்கலாம்.இவ்விடயம் ஒரு சிறிய சம்பவம் .ஆனால் மிகைப்படுத்தபட்ட ஒரு புராணக் கதை என்பதே எமது கருத்தாக உள்ளது. ஆனால் நாங்கள் கேட்கின்ற கேள்வி என்னவெனில் அந்த புராணக் கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள் தமிழர் பெயர்களாகவோ அல்லது சிங்களவர் பெயர்களாகவோ அல்லது சமஸ்கிரத மொழி பேசுகின்றவர்களின் பெயர்களாகவோ இல்லாமல் அரபு மொழிக்கு நெருக்கமான இருக்கின்ற காரணம் என்ன என்ற கேள்வியை நாம் பலகாலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம் . இந்த கேள்விக்கு பதில் தராமல் பலரும் எங்களுடைய கருத்தை நையாண்டி செய்வதை தான் நாம் பார்க்கின்றோம்.நாங்கள் இன்னும் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம்.இந்த கதைகளில் வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும் நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும். இதில் இராமன்-ரஹ்மான் இராவன் -இராவணன் சீதா - சய்தா நுஃமான் -அனுமான் என்பது ஒரு மொழியில் தான் வருகின்றது.ஏன் இவ்வாறு வருகின்றது என்பதை ஆராயும் போது இது முஸ்லீம்களின் ஒரு சிறிய வரலாறு தான் என்பதுடன் பின்னர் அது கற்பனையாக புராணக் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் எங்களுக்கு ஏற்பட்ட தெளிவான கருத்தாக உள்ளது. இராமாயணம் 7000 வருடங்களுக்கு முந்தியது எனும் போது அது எப்படி முஸ்லீம்களின் வரலாறாக முடியும் என்பது சிலருக்கு ஆச்சரியமளிக்கலாம்.இஸ்லாமியர்களின் வரலாறு என்பது 1400 ஆண்டு கால வரலாறு தான் என்பதை சிலர் கேட்க கூடும்.இது உண்மையில் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களின் கருத்தாகவே நாம் கருதுகின்றோம்.இஸ்லாத்தின் வரலாறு என்பது 1400 வருடமல்ல.இந்த உலகத்தில் முதல் மனிதன் ஆதம் என்பவரை நாங்கள் நபி என்கின்றோம்.இந்த உலகத்தில் ஆதம் எப்போது இறங்கினாரோ அல்லது கால் வைத்தாரோ அன்று முதல் இஸ்லாமும் முஸ்லீம்களும் இந்த உலகில் வாழ்கின்றனர் என்பதை ஹதீஸ் குர்ஆன் என்பன மிக தெளிவான கருத்தாக கூறுகின்றன. நாங்கள் நபி இப்றாகீம் அவர்களை முஸ்லீம் என்கின்றோம்.நபி இப்றாகீம் வரலாறு என்பது இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.எனவே அவ்வாறாயின் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது தான் இஸ்லாமிய வரலாறு என்பதை நாம் காண்கின்றோம்.அதே போன்று நூஹ் நபி அவர்களின் வரலாற்றை சாதாரணமாக கணிப்பின் ஊடாக ஆராய்ந்தால் கிட்டத்தட்ட 1 இலட்சம் ஆண்டு வாழ்க்கை வரலாறாக தெரிவிக்கப்படுகின்றது.ஆகவே இவ்வாறான விடயங்களை வைத்து பார்க்கின்ற போது இஸ்லாம் என்பது முதல் மனிதன் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை இஸ்லாமிய வரலாறாக இருந்து கொண்டே இருக்கின்றது.முஹம்மது நபி அவர்கள் இஸ்லாத்தினை கொண்டு வரவில்லை.இஸ்லாத்தை புதுப்பிக்க வந்தவர்கள் தான் எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.அவர் இறுதி நபியாக தான் இவ்வுலகத்திற்கு வருகை தந்தார்கள்.இஸ்லாத்தை புதுப்பிக்க வருகை தந்தவர்களே தவிர இஸ்லாத்தை அவர்கள் கொண்டு வரவில்லை.இப்றாகீம் நபியினுடைய வழியில் தான் இருக்கின்றென் என்பதை எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே கூறி இருக்கின்றார்கள் என்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறு எல்லாம் பார்க்கின்ற போது இந்த இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது எங்கயோ ஒரு இடத்தில் நாம் சொல்கின்ற காரணம் எவராலும் மறுக்க முடியாத விடயமாகவே உள்ளது.இந்த காரணத்தை நாம் கூறுகின்ற போது அதாவது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம்.என்ற கருத்தை கூட நாம் கூறி இருக்கின்றோம்.உதாரணமாக இராவணன் எனும் பெயருக்கு நாம் அனைவரும் அறிந்த எகிப்து நாட்டு மன்னன் ராவுன் அல்லது பிர்அவ்ன் எனும் பெயர் ஏன் இங்கு வந்தது என்ற வினா எழுகின்றது.அதாவது இலங்கையில் இராமாயண புராணக்கதை இடம்பெற்றிருந்தால் அங்கு இருந்த மன்னனுக்கு ஏன் சிங்கள பெயராகவோ அல்லது தமிழ் பெயராகவோ இல்லாமல் எகிப்திலே இருந்த மன்னனுடைய பெயர் பிரவுன் என்பது போன்று ஏன் இராவனை அழைக்க வேண்டும்.என்ற கேள்வியை நாம் கேட்க விரும்புகின்றோம். இந்த கேள்விக்கு எவரும் பதில் தர முன்வருவதில்லை.உண்மையில் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர சிவஞானம் சிறிதரன் ஆகியோர் நாங்கள் பாராளுமன்றத்தில் இல்லாவிடினும் எமக்கு பதில் அளிக்க முன்வாருங்கள். ஏன் இந்த புராணக்கதையில் வருகின்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் முஸ்லீம் பெயர்கள் போன்று இருக்கின்றன. இதற்கான காரணம் என்ன?நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.அவ்வாறு இவ்விடயத்தை தெளிவு படுத்த முடியவில்லை எனின் நாங்கள் சொல்கின்ற முஸ்லீம்களின் சம்பவத்தை கற்பனையாக வடிவமைத்து இராமாயணமாக உருவாக்கி உள்ளார்கள் என்பதே எமது கருத்தாக உள்ளது என்பதை நாங்கள் தெளிவு படுத்த விரும்புகின்றோம்.இதை விட பாராளுமன்றத்தில் விவாதங்களில் கலந்து கொள்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கையின் வரலாறு சிங்கள தமிழ் மக்களது வரலாறு மிக சரியாக தெரியாது என்பது எமது கருத்தாகும். மகாவம்சத்தில் சிங்களவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இளவரசன் விஜயன் மூலம் உருவானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.2700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர்களது வரலாறு சான்று பகிர்கின்றது.அவ்வாறாயின் இராவணன் ஆட்சி என்பது 2700 க்கு உட்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.அவ்வாறாயின் இராவணனை எப்படி சிங்களவர் என்று கூறுவீர்கள்.அதே போன்று தமிழ் மொழிக்குரிய வரலாறு என்று பார்க்கின்ற போது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பின் படி 5000 ஆண்டுகளாகும்.அதே போன்று எழுத்துருவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் என்றும் தமிழர் வரலாற்றை கூறுகின்றார்கள்.ஆனால் அந்த காலத்தில் கூட தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக எந்தவொரு வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவுமில்லை.மாறாக இளவரசன் விஜயன் தனது 700 கூட்டாளிகளுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் போது அந்த 700 பேருக்கும் மனைவிகள் இல்லாத சூழ்நிலையில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் இளவரசிகளும் அவர்களது தோழிகளும் இலங்கைக்கு வந்து மணம் முடித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது. இதை நாங்கள் சொல்லவில்லை.வரலாறு தான் கூறுகின்றது.அவ்வாறாயின் விஜயனின் வருகையின் பின்னர் தான் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக காண்கின்றோம்.இந்த வரலாறுகளை கூறி இனங்களுக்கிடையே மோதல்களை உருவாக்காமல் நீங்களும் நாங்களும் கணவன் மனைவிமார் அல்லது சிங்களவர் தமிழர்களும் சம்பந்திமார் என கூறி ஒற்றுமையாக இருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முயற்சிக்க வேண்டும்.இராவணன் சிங்களவனா தமிழனா அல்லது இந்த நாடு சொந்தம் என்ற வாத பிரதி வாதங்களை தவிர்த்து கொண்டு இன ஒற்றுமைக்காக பாடுபட முன்வர வேண்டும்.உண்மையில் தமிழர் சிங்களவர் சம்பந்திகள் தான்.அன்றும் சம்பந்திகள் தான் இன்றும் கூட சம்பந்திகள் தான் இருக்கின்றார்கள்.இன்றும் கூட திருமணங்கள் இவர்கள் மத்தியில் இடம்பெற்று கொண்டு தான் உள்ளது.சிலர் தங்களது அரசியலக்காக மக்கள் மத்தியில் தங்களது வாக்குகளை பாதுகாக்க பாராளுமன்றத்தில் உசுப்பேத்தகின்றார்கள். எனவே உண்மையான வரலாற்றை சொல்லுங்கள் .ஒரு தொல்லியல் ஆய்வு ஊடாகவோ அல்லது வரலாற்று ஆசிரியர் ஊடாகவோ பேசுங்கள்.அவ்வாறு இல்லாமல் மக்களை ஊசுப்பேத்த பேச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன். https://www.madawalaenews.com/2023/08/i_484.html