Everything posted by colomban
-
தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
தாய்லாந்து – பட்டையா கடற்கரை சாலையில் சனிக்கிழமை இரவு, இலங்கை சுற்றுலாப் பயணி ஒருவர், திருநங்கை ஒருவரின் உயர் குதிகால் காலணியால் தாக்கப்பட்டு, தலையில் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு 10:30 மணியளவில், பட்டையா கடற்கரை சாலையில் உள்ள சோய் 13/3 பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 54 வயதான இலங்கையைச் சேர்ந்த சேபால என அடையாளம் காணப்பட்ட சுற்றுலாப் பயணி, தலையில் இரத்தம் வழியும் நிலையில் காணப்பட்டார். சவாங்போரிபுல் அறக்கட்டளையின் மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, முதலுதவி அளித்த பின்னர், இரு தரப்பினரையும் முவாங் பட்டையா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 29 வயதான திருநங்கை மின்ட்ரான் புரான், சேபாலவை உயர் குதிகால் காலணியால் தலையில் பலமுறை தாக்கியதாக ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின்படி, சேபாலா தன்னை அணுகி, சேவைக்கு 2,000 பாட் கட்டணம் என்று கூறியபோது, அவர் திருநங்கையின் பாலினத்தை உறுதி செய்ய விரும்பி, அவரது உடல் உறுப்பைத் தொட்டார். “நான் அவரை ஒரு முறை தொட அனுமதித்தேன். ஆனால், பணம் செலுத்தாமல் இரண்டாவது முறையாகத் தொட்டபோது, எனக்கு கோபம் வந்துவிட்டது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது,” என்று மின்ட்ரான் தெரிவித்தார். “நான் அவரது சட்டையைப் பிடித்தேன், அவரும் என் சட்டையை இழுத்தார். இதனால் என் மார்பில் கீறல் ஏற்பட்டது. கோபத்தில், அவரை உயர் குதிகால் காலணியால் நான்கு முதல் ஐந்து முறை தாக்கினேன்,” என்று அவர் கூறினார். ஆனால், சேபாலா காவல்துறையிடம் தெரிவிக்கையில், திருநங்கையின் பாலினத்தை உறுதி செய்யவே தொட்டதாகவும், அதன் பின்னர் சேவையைத் தொடர விரும்பவில்லை என்று முடிவெடுத்ததாகவும் கூறினார். “நான் ஒப்பந்தத்தை ரத்து செய்து விலகிச் செல்ல முயன்றபோது, அவர் என் சட்டையை பின்னால் இருந்து இழுத்து, உயர் குதிகால் காலணியால் தாக்கினார்,” என்று சேபால விளக்கினார். இரு தரப்பினரின் வாக்குமூலங்களையும் கேட்ட காவல்துறை, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சம்பவம், பட்டையாவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. https://madawalaenews.com/22100.html
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆம் என்னுடைய பதின்ம வயதில் பார்த்த , என்னால் இன்னும் மறக்கமுடியாத ஒரு படம் என்றால் இது சிறைதான். ஒரு ஐயாரின் மனைவியை (லக்க்ஷிமி) கற்பழித்து அதன் பின் அவர் படும் வேதனைகளை படம் விபரிக்கின்றது. ஆழ்ந்த அஞலிகள்! மரணம் கணிக்கவே முடியாது. இங்குதான் இயற்கை வலிமையானது. நேற்று கொழும்பு Havlock city இல் உள்ள தியேட்டரில் Final Destination Bloodlines என்னும் படம் பார்த்தேன் அந்த மாதிரி உறைய வைக்கும் மரணங்களை காட்சிகளை கொண்ட படம்
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த ராஜேஷ், திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம் ஆனைக்காடு, தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய இடங்களில் படித்தவர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ். 'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். . சிறந்த குணச்சித்திர நடிகரான ராஜேஷ், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்ல சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றார். 47 ஆண்டுகளுக்கும் மேலாக 'கன்னிப் பருவத்திலே' தொடங்கி 'சர்க்கார்' திரைப்படம் வரை நடித்து இருக்கிறார். ஹீரோ முதல் குணச்சித்திர வேடங்கள் வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய பாத்திரங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். https://tamil.news18.com/entertainment/cinema-famous-tamil-actor-rajesh-died-due-to-illness-nw-mma-ws-l-1816937.html
-
22 வயது இளைஞனும் 22 வயது யுவதியும் 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை கடத்திச்சென்ற சம்பவம் பதிவு
இரு வயது வந்தவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து வாழ்கின்றார்கள். இந்த ரவுடிகளுக்கு என்ன பிரச்னை? யாழ்பாணத்தவர்கள் இன்னும் நாகரீகம் அடையாத சமுதாயமாக உள்ளார்களே?
-
22 வயது இளைஞனும் 22 வயது யுவதியும் 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை கடத்திச்சென்ற சம்பவம் பதிவு
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வாறான பின்னணியில் நேற்று வழக்கு நிறைவடைந்து வரும்போது பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இந்நிலையில் இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் குறித்த யுவதியை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. https://madawalaenews.com/21431.html
-
பிரியாணி சுவையில்லை; யாழ் மனைவியிடம் விவாகரத்து கோரும் ஐரோப்பிய வாழ் கணவர்
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு விசித்திரமான விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது மனைவி சமைக்கும் பிரியாணி சுவையில்லாமல் இருப்பதால் டென்மார்க்கைச் சேர்ந்த 41 வயதான கணவன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். அடிக்கடி வாக்குவாதங்கள் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மனைவி மீதே இவ்வாறு விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு, மனைவி சமைக்கும் பிரியாணி சுவையாக இல்லாததால், கணவருக்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக விவாகரத்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு பிரியாணி மீது தனக்கு தனித்துவமான ஆர்வம் உள்ளதாகவும், சமாதானமான வாழ்க்கையை தான் விரும்புவதால் தேவையற்ற மோதல்களை தவிர்ப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்ததாக டென்மார்க் கணவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முழுமையாக விசாரித்து சட்டப்பூர்வமான விவாகரத்தை வழங்குமாறு டென்மார்க் கணவர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த விவாகரத்து வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் https://canadamirror.com/article/husband-divorce-jaffna-wife-biryani-not-tasty-1746428433
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
பெரும்பாலான தங்க நகைகள் வடக்கு முஸ்லிம்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்டவை யே – ஆகவே விடுதலை புலிகளிடமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கத்தை அரசு, முஸ்லிம்களுக்கே வழங்க வேண்டும் பாறுக் ஷிஹான் விடுதலை புலிகளிடமிருந்த நகைகள் அரசுக்கு கிடைத்துள்ளமை ஜனாதிபதி அநுர குமார அரசுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் இந்த நகைகளில் அதிகமானவை வடக்கு முஸ்லிம்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்டவை என்பதால் அந்த நகைகளை அரசு முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசை கோரியுள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவரும் ஐக்கிய காங்கிரஸ் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 1990 ம் ஆண்டு வடக்கில் தமிழ் மக்களுடன் இரண்டற கலந்து வாழ்ந்த முஸ்லிம்களை இன ரீதியாக பிரித்து விடுதலைப்புலிகள் அம்மக்களின் அனைத்து சொத்துக்களையும் ஆயுத முணையில் பறிமுதல் செய்து வெளியேற்றியது யாவரும் அறிந்ததே. இதன் போது வடமாகாண முஸ்லிம்களின் ஒட்டுமொத்த உடமைகளையும் பறித்து எடுத்து விட்டு உடுத்திய உடுப்புடன் வெளியேற்றப்பட்ட போது பெண்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களையும் கைகளில் மறைத்து கொண்டு வருவதற்கு இருந்த நகைகளையும் குறிப்பாக சிறுமிகளின் காதுகளிலும் கழுத்துகளில் இருந்த நகைகளைக் கூட கழற்றி எடுத்து விட்டே துரத்தினர். அதன் பின் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் புலிகள் பதுக்கி வைத்திருந்த பெருந் தொகையான நகைகளை அரச படையினர் கைப்பற்றி அதனை தாம் கொள்ளையடிக்காது அரசாங்கத்திடம் ஒப்படைத்தது பாராட்டத்தக்க செயலாகும். அந்த நகைகள் நீதி மன்ற உத்தரவில் பாது காத்து வைக்கப்பட்டிருந்து தற்போதைய அரசு பொலிஸாரின் பாதுகாப்பில் பரிசீலனைக்காக கொடுக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவுடன் அவற்றை இழந்த மக்கள் உரிய ஆதாரங்களை காட்டினால் வழங்கப்படலாம் என்ற அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதிகமான முஸ்லிம்களிடம் எந்த வித ஆதாரமும் இல்லை என்பதுடன் நகைகளை பறி கொடுத்த பலர் மரணமடைந்து விட்டனர். இவ்வாறான நிலையில் பெருமளவில் இழந்த முஸ்லிம்களின் நகைகளை அரசு நியாயமான முறையில் ஆய்வு செய்து முஸ்லிம்களுக்குரிய நகைகளை மதிப்பீடு செய்து அவர்களிடம் இதற்கான சத்திய பிரமாண கடிதம் பெறப்பட்டு வழங்க வேண்டும் என கௌரவ ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என்றார். — Thanks & Best Regards, பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) Journalist-මාධ්යවේදී https://madawalaenews.com/20098.html
-
கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணத்தில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் இளைஞன் ஒருவர் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இவ்வாறு யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார். இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் – ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில், மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://nanban.ca/?p=111192
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
ஐசே நேத்து பூரா சக்தி டீ வீ பர்த்துகொண்டிருந்தன் வா. சிங்களவன் / தமிழன் ஆண் பெண் எல்லோரும் ஒன்றாக அப்படி கிளுப்பு..கிளுப்புவா... அஜல்... குஜால் வா... ஐசே தலவாணி அடி போட்டியில.... தமிழன் தலவாணி வச்சி தூக்கி... தூக்கி... அடிக்கிறாவா.. கீழ இருந்து சிங்கள குட்டிகள் கத்துராள்வள் வா.. சுந்தரலிங்கம் ஒந்தட காஹன்ட... உஸ்ஸ உஸ்ஸ காஹன்டா.. வெடுனத் அபி அல்லனவா.....🤣 ஐசே கயிரு இழுக்கிறான்கள்வா...தமிழ் / சிங்கள..ஆம்பள பொம்பள எல்லாரும் ஒரசி... ஒரசிவா... ........ rubbing shoulder இல்லவா இது rubbing with boobs. அம்மட சிரி ...அப்பிடி ஜொலி வா.. சொல்லி வேல இல்லவா... குளிர்ல வெரச்சி வெரச்சி இருக்கமா இங்க வாங்கா கோசன் தொர...😍 ஒரு தமிழன் கேற்கிறான் வா.. ஒர் அ ழகான சிங்கள குட்டிகிட்ட? "ஒயா காவா ஒந்த கொகிஸ் அச்சுவாக் தியனவா நேதா"? அவள் சொல்லினிறாள் "மகே கொகிஸ் அச்சு சமனல வகே என்று".....சிரிப்பு வா..😝 மார சூன் வா... இங்க கொக்கீஸ் அச்சு தேடுகின்றேம் வா நாங்கள்... இவன் இப்படி வீடியோ போடுரான்..... சாதரண ஒரு இந்திய வம்சாவளி தமிழரை, இந்த அரசாங்கம் யாழில் அமைச்சராக நியமித்ததையே ஏற்றுக்கொள்ளத / சக தமிழ் பேசும் மக்களை மதிக்காத இந்த யாழ் மையவாதம் எப்படி சிங்களவன்களை இனதுவேசம் பிடித்தவன் என கூறலாம்? "The pot calling the kettle black" வீடியோவில் இவர் அப்பாவிகள் கொல்லப்படவில்லை என்கிறார்? அப்போ மத்திய வங்கி குண்டு வெடிப்பில் எத்தனை அப்பாவிகள் இறந்தார்கள்?
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
தலையங்கத்தை பாத்து பயந்திட்டன் வா....
-
டொமினிகன் குடியரசில் இரவு விடுதி ஒன்றில் கூரை இடிந்து வீழந்து ஏற்பட்ட 184 பேர் உயிரிழப்பு!
இந்த நாட்டிலதானே காசு கொடுத்தால் இந்த நாட்டு பாஸ்போட் கிடைக்கும்
-
இஸ்ரேலுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக 22 வயது வாலிபர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது !
மார்ச் 22, 2025 அன்று, கொம்பனித்தீவு பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகத்தில் ஸ்டிக்கரை ஒட்டியதற்காக 22 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞன் அந்த வணிக வளாகத்தில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு,காசாவில் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக யாரோ ஒருவர் இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.இஸ்ரேல் ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு என இரண்டிற்காகவும் உலகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன.தங்கள் சொந்தக் கருத்துக்கள் குறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது ஒரு ஜனநாயக உரிமை. ஸ்டிக்கரை ஒட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, யாரோ அந்தப் படங்களை கொம்பனித் தெரு காவல்துறைக்கு அனுப்பியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் கண்காணிக்கப்பட்டு, இந்த ஸ்டிக்கரை ஒட்டிய நபரை போலீசார் கண்டுபிடித்தனர். 22 ஆம் தேதி காலை அந்த இளைஞன் தனது பணியிடத்திற்கு வரும் வரை காத்திருந்து,அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவும், புலனாய்வுப் பிரிவும் அங்கு இருந்தன,மேலும் இந்த இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.அந்த இளைஞன் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. காசாவில் இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு எதிராக ஸ்டிக்கரை ஒட்டியதற்காக அந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.அந்த ஜனநாயக உரிமைகள் பயங்கரவாதச் செயலா? காவல்துறையிடம் புகார் அளித்தது யார்? ஷாப்பிங் மால் நிர்வாகமா அல்லது கடை உரிமையாளரா அல்லது ஷாப்பிங் செய்ய வந்த ஒருவரா? மால் நிர்வாகம் இந்த மோசமான செயலைச் செய்தால்,முஸ்லிம்களும் பாலஸ்தீன உரிமைகளுக்காக நிற்கும் மக்களும் இந்த மாலுக்கு வருவதைப் புறக்கணிக்க வேண்டும்,ஏனெனில் அவர்கள் இந்த விஷயத்தை காவல்துறையிடம் எடுத்துச் சென்றிருக்கக்கூடாது. அவர் அந்த ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு வியாபார நிலைய ஊழியர் என்பதால் தேவையான நடவடிக்கை எடுக்க அவர்கள் ஒரு உள் விசாரணையை நடத்தியிருக்க வேண்டும். இது இஸ்ரேலியர்கள் எங்கள் மத விவகார அமைச்சின் எந்த ஒப்புதலையும் பெறாமல் வணிக விசாக்களில் தங்கள் மதக் கட்டமைப்புகளை அமைத்துக்கொள்வதைத் தெளிவாகக் காட்டுகிறது, ஆனால் இலங்கையர்களாக, கைக்குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சி, அவர்களின் தீய மனதைத் தளர்த்த இலங்கைக்கு வரும் ஒரு நாட்டின் இராணுவத்திற்கு எதிராக ஜனநாயக உரிமைகள் மூலம் கோபத்தைக் காட்ட எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. முஹீத் ஜீரன் சர்வதேச மனித உரிமைகள் ஆர்வளர் https://madawalaenews.com/17562.html
-
கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்
ஒரு சோக்கலேட்டுக்கு அடித்தவர் என்றால் மனித தனமை இல்லாத மிருகமா? புலிகளின் சொத்துகளுக்கு ஆட்டையை போட்டவர்களை என்ன செய்வது?
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
டாக்டர் அர்ச்சுனாவை குடியுரிமையை பறித்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ்ப்பாண முஸ்லிம்களை 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஈவிரக்கமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்தனர். டாக்டர் .அர்ச்சுனா இராமநாதன் தலைவர் செய்தது பிழையென்றும் ஒட்டுமொத்தமாக இவர்களை உள்ளே வைத்து சீமெந்து பூசி இருக்க வேண்டும் என்று ஒரு நச்சுக்கருத்தை வெளியிட்டுள்ளார். கேட்க > https://www.facebook.com/share/v/1DyRWcSwHn/ காலம் தாழ்த்தி, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியடித்தது தவறு என உணர்ந்தனர் புலிகள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகலின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மோசமான கருத்தை கொண்டுள்ளார் டாக்டர் .அர்ச்சுனா இராமநாதன். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இவரைத் தவிர அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் மொழியாகவிருப்பதால் தமது சகோதரர்கள் என்று தான் கூறுவார்கள். பாராளுமன்றத்தில் எத்தனையோ தடவைகள், முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பியுள்ளனர். 1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்களை புலிகள் விரட்டியடிக்கும் போது, யாழ்ப்பாணத்தினுள்ள தமிழ் மக்களின் முக்கியமானவர்களும் இந்து சமய குருக்களும் சேர்ந்து யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசர பேச்சு வார்த்தைகளை நடாத்தியும் கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. இவ்வாறுதான் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் மேயராக ஒரு முஸ்லிமை சட்டத்தரணி எம். எம்.சுல்தான் அவர்களை மேயராக தெரிவு செய்து கெளரவப்படுத்தினார்கள். இவ்வாறுதான் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். புலிகள்தான் முதலில் ஒற்றுமையை சீர்குழைத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது முஸ்லிம்கள், தமிழர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கிறார் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன். இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குழைக்கும் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் இந்த நாட்டின் குடியுரிமைக்கு கூட தகுதியில்லாத டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினருக்கு தகுதியில்லை. எனவே டாக்டர் அர்ச்சுனா இராமநாதனின் குடியுரிமையை பறித்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என கூறுகிறோம். யாழ்ப்பாணத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த முஸ்லிம்களின் இன்றைய நிலையை அறிந்து கொள்ளுங்கள் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களே! யாழ்ப்பாண முஸ்லிம்களை புலிகள் விரட்டியடிக்கும்போது உங்களுக்கு 4 வயது தான். அறிந்து கொள்ளுங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் துயர நிலைமையை . யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று பல திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு 34 ஆண்டுகளாகின்றன. 34 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம். “யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும், பனையிலையும் புகையிலையும் நன்றாக வளரும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள். புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று “இளம்பருதி” கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்; நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா? ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம். பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது. பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது…… விடுதலைப் புலிகளின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள். வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. 2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது. முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 34ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும். தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் அச்சுறுத்தலாக விளங்குகிறார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி யாழ்ப்பாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம். யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற கனவு நனவாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்…!! *கலாபூஷணம் பரீட் இக்பால்-* https://madawalaenews.com/16689.html
-
பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
கொலை செய்து இப்படி உடல்களை பகிரங்கமா வைப்பது மற்றவர்களை அச்சுறுத்துவதத்காதானே? தமிழ் இயக்கங்களும் இவ்வாறு தங்களுக்குள் அடிபட்டு படுகொலை செய்து உடலங்களை பகிரங்கமாக வைத்தார்கள் அல்லவா?
-
கணவர் ஹிரானுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவிப்பு
கணவர் ஹிரானுடனான திருமண பந்ததில் இருந்து விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள விடயத்தின் தமிழாக்கம் 👇 நீண்ட யோசனைக்கு பிறகு ஹிரானும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தோம், இந்த முடிவு பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் எடுக்கப்பட்டது. நாங்கள் கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஒன்றாகக் கழித்துள்ளோம். நாங்கள் எங்கள் கனவுகளின் வாழ்க்கையை ஒன்றாக உருவாக்கியுள்ளோம். நண்பர்களாக நாங்கள் அனுபவிக்கும் அன்பிற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் திருமணம் செய்துகொண்டபோது, நாங்கள் எப்போதும் உறுதியளிக்கவில்லை, ஏனென்றால் வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை எடுக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். அதற்குப் பதிலாக, எங்களின் சிறந்ததை அன்றாடம் கொடுக்க உறுதிபூண்டோம், அதையே பல மகிழ்ச்சியான வருடங்களாகச் செய்தோம். இது இலகுவாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல, பல மாதங்களாக நாங்கள் சிந்தித்தோம், ஆனால் இறுதியில் ஒருவருக்கொருவர் சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தோம். நாங்கள் பகிர்ந்து கொண்ட நேரத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் சிறந்ததை மட்டுமே விரும்புகிறோம். உங்கள் கருணை, அன்பு மற்றும் எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி. ஹிருணிகா மற்றும் ஹிரன் (ஐயோ கையும் ஒடல்ல காலும் ஓடல்ல ) Madawala Newsகணவர் ஹிரானுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக முன்ன...கணவர் ஹிரானுடனான திருமண பந்ததில் இருந்து விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவித்து
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
ரணிலை வைத்து, மெஹ்தி ஹஸன் செய்துவிட்டாரா...? Mynthan Shiva - சுதந்திரத்திற்குப் பின்னரான, மிகவும் ஆளுமையுள்ள சிங்களத் தலைவர் ரணில்! சந்தேகமா? ரணிலின் இந்த இடத்தில் மகிந்தவையோ இன்னொரு தலைவரையோ உட்கார வைத்திருந்தால் என்னவாகியிருக்கும் என நினைக்கிறீர்கள்? Mehdi Hasan உடனான அல்ஜெஸீரா நேர்காணல் கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த - மிகவும் intense ஆன, நேரமெடுத்து யோசித்து பதில் சொல்ல முடியாத வகையிலான, உடனடி நேரடிப் பதில்களை கேட்டு நின்ற நேர்காணல். அதுமட்டுமல்லாது, ரணிலின் ஐம்பத்தி ஐந்து வருடகால அரசியல் வாழ்க்கையில் சந்தித்த மிக நெருக்கடியான நேர்காணலும் இதுவாகத்தான் இருக்கமுடியும். அல்ஜெஸீரா என்கிற சர்வதேச புகழ்வாய்ந்த ஊடகத்தின் முன் நின்று- மெஹ்தி ஹஸன் என்கின்ற புகழ்பெற்ற ஊடகவியலாளரினை முகம்கொடுத்து, கொடுக்கப்படும் ஒவ்வொரு பதில்களும் இலங்கையையும்- இலங்கை சிங்கள பவுத்த அரசுகளையும், கடந்தகால- இக்கால அரசுகளை சங்கடத்துக்குள் - பிரச்சனைக்குள் தள்ளக்கூடும் என்று தெரிந்துகொண்டு, தொடுக்கப்பட்ட ஒவ்வொரு உக்கிரமான கேள்விகளுக்கும் நேரடிப் பதில்களைக் கொடுக்காமல், எதனையும் ஒப்புக்கொள்ளாமல்,எந்தப் பொறியிலும் தானும் தன் அரசும் தன் நாடும் விழுந்துவிழாமல், மிகக் கச்சிதமாக தன்னை ஒரு பொய்யராக - நேர்மையற்றவனாக - மக்கள் விரோதியாக காட்டி, மொத்தப் பழியையும் தன் மேல் போட்டுவிட்டு, பேரினவாத கடந்த - நிகழ்கால அரசுகளையும், தன் அரசியல் தோழர்களையும், நாட்டையும் திறமையாக காப்பாற்றியிருக்கிறார் பிறவி அரசியல் ராஜதந்திரி ரணில் விக்கிரமசிங்க! கவனமாகப் பாருங்கள்- இதுவரை அரசியல் வெளியில் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மைகளை மட்டுமே இந்த நேர்காணலில் ரணில் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ளவே இல்லை! அதற்கான accountability யை தொடக்கூட இல்லை. I am clean என்பதை தொடர்ந்தும் மெய்ண்டெய்ன் செய்துகொண்டேயிருந்தார்! அதுமட்டுமல்லாது இலங்கை அரசின் அத்தனை குற்றங்களையும் முடிந்தளவு சாக்குப்போக்குச் சொல்லி மடைமாற்றியவண்ணமிருந்தார். மெஹ்தி ஹஸன் அழைத்து வந்திருந்த அவர் சார்பு பார்வையாளர்களின் இகழ்ச்சிச் சிரிப்புகளையும் தலைக்குள் ஏற்றாமல், நிலை தவறாது ஐம்பது நிமிடங்களை நெருப்பாற்றில் கடந்து முடித்திருப்பது, சிங்களவர்களுக்கு இதுவரைகாலும் கிடைத்த ஒப்பற்ற அரசியல் ராஜதந்திரி ரணில் என்கின்ற ஆளுமையின் திறமையே! சர்வதேச மட்டத்தில் பதில் சொல்ல முடியாவிட்டாலும் கூட, தன்னை அடைமானம் வைத்து நாட்டை காப்பாற்றியிருக்கிறார் - இது பெரும்பான்மைக்கு கிடைத்த ஒப்பற்ற வரமில்லையா? ஹஸன் அழைத்துவந்த மூன்று பேச்சாளர்களில் ப்ரான்ஸிஸ் ஹரிஸன் மட்டும் காத்திரமாக பேசியிருந்தார். மதுராவும் டேவிட்டும் நேர்காணலின் கனத்தை உணர முடியாமல் பேசினார்கள். ரணிலை வைத்து செய்துவிட்டார் ஹஸன் என்று பலரும் ரணிலின் மேலான கோபத்தை / கடுப்பை கொண்டாடுகிறார்கள் - அது சிற்றின்பமே! ரணில் மீண்டுமொருமுறை நம் அனைவரையும் தன் ராஜதந்திரத்தால் (வெல்லமுடியாமல் நீங்கள் சொல்லும் நரித்தனத்தால்) தோற்கடித்திருக்கிறார் என்பதுதான் கசப்பான உண்மை! https://www.jaffnamuslim.com/2025/03/blog-post_14.html
-
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் ஜனாஸாக்களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்கவில்லை
தற்போதைய ஆட்சியாளர்கள் அவர்களுடைய தலைவர் ரோஹன விஜயவீரவின் நினைவாக “மஹவிரு தின’ என்பதை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகின்றார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவாக தமிழ் மக்கள் தரப்பில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி “மாவீரர் தினம்” அனுஷ்டிக்கின்றது. ஆனால் “இஸ்லாத்தின் பெயரால்” நடந்த பயங்கரவாதத்தில் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அவர்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்துகின்ற விடயத்தைக் கூட செய்யவில்லை. இதனை இந்த ஆட்சியாளர்களும் பெரும்பான்மை சமூகத்தினரும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். இலங்கை வானொலி, முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் கலாபூஷணம் எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் எழுதிய “ஆயிரமாவது குத்பா அஞ்சலும் -வரலாறும்” நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-7, புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது, அதில் அதிதிச் சொற்பொழிவு ஆற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு உரையாற்றும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, ஒரு காலத்தில், முன்னர் இப்னு நபாதா என்பவர் அரபுத் தமிழில் எழுதிய குத்பா பிரசங்கங்களே நாட்டில் அநேக பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்பட்டு வந்தன. பின்னர் உள்நாட்டு அரபு கலாசாலைகளிலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கற்றுத் தேறிய தரமான உலமாக்களால் சிறப்பான முறையில் ஜும்ஆ குத்பாக்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இன்று இந்த 1000 ஆவது குத்பா வானொலி அஞ்சல் பற்றிய நூலை ஓர் அடையாளமாக வெளியிட்டு வைக்கின்ற பணியை செய்வதன் மூலம், அதை ஓர் ஆவணமாக விட்டுச் செல்வதற்கும், தொடர்ந்தும் இந்தப் பணி நிகழ வேண்டும் என்பதற்குமான ஒரு முயற்சியைத்தான் அஹ்மத் முனவ்வர் செய்திருக்கின்றார். சமூகம் என்ற வகையில் நாங்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களில் ஒன்றுதான் எங்களுக்கு இடையில் இருக்கின்ற ஆன்மீக ரீதியான சில வேறுபாடுகளை மிகைப்படுத்துகின்ற நிலைவரம் சில இடங்களில் காணப்படுவதாகும். அதை எப்படி குறைத்துக் கொள்ளலாம் என்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்புக்கள் மிக சிறப்பாகச் செயல்பட்டு, எங்களுக்கிடையில் இருக்கின்ற ஆன்மீக ரீதியான சில கருத்து வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றுமையைக் காண்பது எப்படி என்பது பற்றிய முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. மாறி வருகின்ற உலகில், நிறைய புதுமைகள் நிகழ்கின்ற ஒரு யுகத்தில் குத்பா பிரசங்கங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி ,நமது மக்களை நல்வழிப்படுத்துகின்ற முயற்சிகள் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு மத்தியில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், நாம் எல்லோரும் எதிர்நோக்கிய துர்ப்பாக்கிய சம்பவமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும். அது நடந்த பிறகு, குறிப்பாகச் சொல்லப் போனால், சென்ற நூற்றாண்டினதும், இந்த நூற்றாண்டினதும் மிகப்பெரிய இஸ்லாமிய ஆளுமைகளான, இரண்டு வருடங்களுக்கு முன்பு கத்தார் நாட்டில் தன்னுடைய 96ஆவது வயதில் உயிர் நீத்த கலாநிதி யூசுப் கர்ழாவி மற்றும் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களான ஷஹீத் செய்யத் குதூப், மௌலானா செய்யத் அபுல் அஃலா மௌதூதி போன்றோரின் பெயர்கள் எல்லாம் இந்த நாட்டில் துரதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்படும் பெயர்களாக இருக்கின்ற ஒரு நிலைமை உருவாகியிருக்கின்றது. அல்லாமா யூசுப் கர்ழாவியை பொறுத்த மட்டில் அவருடைய முயற்சிகளில் குறிப்பாக இஸ்லாமிய சிந்தனையை நவீன உலகுக்கு உகந்த வகையில் வடிவமைத்த அவருடைய பணி அளப்பரியது. அதிலும் குறிப்பாக, பிக்ஹுல் ஜிஹாத் – ஜிஹாத் பற்றிய சிந்தனை என்ன, ஜிஹாத்தின் பல முகங்கள், அது தவறாக பயன்படுத்தப்படுகின்ற விவகாரம் பற்றியும், பிக்ஹுல் அக்கல்யாத் என்ற புதிய துறையை பற்றி, அதாவது முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகமாக வாழ்கின்ற நாடுகளில் எப்படி தங்களுடைய வாழ்வின் நெறிமுறைகளை அடுத்த சமூகங்களோடு சகவாழ்வுக்காக வடிவமைத்து கொள்வதில் புதிய சிந்தனைகளைப் புகுத்துவது பற்றியும் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கின்றார். இவர்களைப் பற்றித் தவறான விதத்தில் பொருள் கோடல் செய்வதற்கு அப்பால், இன்று இந்த நாட்டுக்குள் வருகின்ற தரமான இஸ்லாமிய நூல்களையும் சுங்கத் திணைகளத்தில் தீவிர பரிசோதனைக்குட்படுத்துகின்ற பெரிய அவஸ்த்தைக்குள் நாங்கள் வாழ்கின்றோம். அலிசப்ரி அமைச்சராக இருந்த காலம் தொட்டு இது சம்பந்தமான முயற்சிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். இன்றைய ஆட்சியாளர்கள் மத்தியிலும் இந்த பாதுகாப்பு அமைச்சருக்கும் இதனைக் கொண்டு சென்றிருக்கின்றோம். இது சமூகங்களுக்கு மத்தியில் தேவையில்லாத விபரீதத்தையும், தவறான எண்ணத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றோம். இந்த நாட்டில் மூன்று சமூகங்களுக்கு மத்தியிலும் அரசியலுக்காக வன்முறையை பாவித்தவர்கள் இருந்திருக்கின்றார்கள். இன்று ஆட்சியில் இருக்கின்ற கட்சியினரும் ஆரம்ப காலத்தில் வன்முறையோடு ஆட்சியை கைப்பற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அவர்களுடைய தலைவர் ரோஹன விஜயவீரவின் நினைவாக அந்த கட்சியினர் “மஹவிரு தின’ என்பதை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகின்றார்கள். இந்த நாட்டில் சர்ச்சைகள் இருந்தபோதிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவாக தமிழ் மக்கள் தரப்பில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி “மாவீரர் தினம்” அனுஷ்டிக்கின்ற ஒரு வழமை இருப்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் “இஸ்லாத்தின் பெயரால்” நடந்த பயங்கரவாதத்தில் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை இந்த ஆட்சியாளர்களும் பெரும்பான்மை சமூகத்தினரும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் அவர்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்துகின்ற விடயத்தைக் கூட செய்யவில்லை. இந்த நாட்டில் எந்த நோக்கத்துக்காக இவ்வாறு செய்யப்பட்டது என்பது பற்றிய விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய ஆட்சியாளர்கள் மீது இந்த நாட்டு முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை வைத்ததோடு, முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படுகின்ற இந்த மிகப்பெரிய பழிக்கு சமூகம் காரணமல்ல,இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருந்தது என்பது இன்று ஒரு பேசுபொருளாக மாறியிருக்கின்றது. இவற்றிற்கு விடைகாண வேண்டியிருக்கின்றது. கலாநிதி யூசுப் கர்ழாவி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் கூறியதைப் போல ,வஸத்திய்யா -உம்மத்தன் வஸத்தன் என்ற நடுநிலையான சமுதாயம் என்பதற்கான உண்மையான கருதுகோள் என்ன என்பதை அடிப்படையாக வைத்து, அதனை தனியான துறையாக உருவாக்கி, எப்படி முஸ்லிம் சமூகம் நடுநிலையான ஒரு சமுதாயமாக இந்த உலகில் இருக்கின்றது என்பதை மெய்ப்பித்து, உயிர்ப்பித்த உலமாக்களின் கருத்துக்களை உள்வாங்கி, இன்னும் ஆழமாக மாற்று சமூகத்தினர் மத்தியில் இந்த சமூகம் பற்றிய சரியான தெளிவை கொண்டு செல்கின்ற ஒரு முயற்சியில் இலங்கை வானொலி ஊடாக அஞ்சல் செய்யப்படு கின்ற குத்பா பேருரைகள் உட்பட நல்வழி காட்டுகின்ற நவீன யுகத்தில் நாங்கள் வாழ்கின்றோம் என்றார்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18648
-
அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனையில் அதிகரிப்பு
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அடிப்படைவாத கொள்கைள் தொடர்பான செயற்பாடுகள் கல்முனை பிரதேசத்தில் அதிகம் பதிவாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால சன்டே டைம்ஸுக்கு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் அடிப்படைவாத கொள்கைகளை பரப்புவதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு ஆகியவற்றிடமிருந்தே இந்த அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மதச் செயல்பாடுகள் நடக்கும் சில இடங்களைக் கண்காணித்ததில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் அடிப்படைவாத கொள்கைகள் புகுத்தப்படுவது கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அடிப்படைவாத கொள்கைள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானது என அமைச்சர் ஆனந்த விஜயபால கூறினார். நாட்டில் தீவிரவாதம் மற்றும் இனவாதம் மீண்டும் பரவ ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இது போன்ற பிரச்னைகளை முளையிலேயே அகற்ற நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://madawalaenews.com/15612.html முஸ்லிம்ளிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி, முளையிலேயே கிழித்தெறிவோம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்துக்கு, புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வுத் துறை ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். சில மத நடவடிக்கைகளுக்கான இடங்களில் நடத்தப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்கள், புகுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக, விஜேபால கூறியுள்ளார். இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற செயல்பாடுகளில் பெரும்பாலானவை கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன, இதனையடுத்து, SIS மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள், இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளன. நாட்டில் மீண்டும் தீவிரவாதம் மற்றும் இனவெறி பரவுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிழித்தெறிய நடவடிக்கை எடுப்போம் என்று விஜயபால கூறியுள்ளார். இதற்கிடையில், கடந்த ஆண்டு ஒக்டோபரில் அறுகம் விரிகுடா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக தாக்குதல்கள் குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். உளவுத்துறை தகவல்களை கையாள்வதில் அரசாங்கம் தொழில்முறை முறையில் செயல்பட்டதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார். https://www.jaffnamuslim.com/2025/03/blog-post_53.html
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
You mean ஜக் கோலயாஸ்
-
அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
நூருல் ஹுதா உமர் முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை, அவர்களும் தமிழர்கள் தான் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். சிங்களவர், தமிழர் எனும் இரண்டு இனங்களே இலங்கையில் உள்ளன. முஸ்லிம்கள் தமிழர்களுக்கு தான் உள்ளனர் என்று நாடாளுமன்றில் அவர் இனவாதம் பேசினார். அர்ச்சுனா ராமநாதன் எம்.பியின் இந்த கருத்து தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் எம்.பியும் கண்டனம் வெளியிடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், விடுதலை புலிகள் ஆயுதமுனையில் கடந்த காலங்களில் செய்தவற்றை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு செய்யலாம் என விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் முனைவது பல்லினம் வாழும் சோஷலிச ஜனநாயக குடியரசு நாடான இலங்கையில் எப்போதும் நடக்காது என்பதை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும். தான் பாராளுமன்றம் சென்ற முதல் நாளிலிருந்து முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அர்ச்சுனா ராமநாதன் பற்றி கூறியதை மெய்ப்பிக்கும் விதமாக நடந்து வருவதை நாட்டுமக்கள் அறியாமலில்லை. தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு நாட்டின் இறையாண்மையையும், அரசியலமைப்பையும் மீறும் விதமாக நடப்பது அர்ச்சுனா ராமநாதன் போன்றவர்களுக்கு பொருத்தமில்லை. இந்த உரைக்காக அவர் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி இந்த கருத்தை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைவர்களும், எம்.பிக்களும் மௌனத்தை கலைத்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை கண்டிக்க வேண்டும் என்பதுடன் அவரது உரையின் இனவாத கருத்தை பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://madawalaenews.com/15188.html
-
யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த தமிழக் காவாலியின் கொடூர தாக்குதல்! அப்பா பலி!
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த (19.02.2025) அன்று மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும்,சகோதரனின் மனைவி மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH – 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல் நடத்தியிருந்தார். அடி காயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பலத்த காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நபர் இன்று(23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். https://vampan.net/64644/
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
ஐசே நா நல்ல Juicy கத இரிரகின்ன்னு பாய்ந்து வந்தே வா. என்ட சூன் எல்லாம் ஒடன்சு போய்ட்டுவா.😁
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
கொழும்பில் கென் பாலெந்திராவை தெரியதவர்கள் இருக்க முடியாது? நல்லதொரு கோர்பரேட் லீடர். இவருடன் நேற்று தொழிலதிபர் ஹாரி ஜயவர்த்தனவும் காலமானார்
-
அரசாங்கத்தினால் முஸ்லிம்கள் தொடராக புறக்கணிப்பு - இம்ரான் எம்.பி
அபு அலா- அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது முஸ்லிம் சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முஸ்லிம்கள் புறக்கணிப்பு விடயத்தில் தற்போது உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம் பேசுபொருளாகியுள்ளது. சிரேஸ்டத்துவ அடிப்படையில் முன்னிலையிலிருந்த ஒருவரை விடுத்து புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. விடப்பட்டவர் முஸ்லிம். இவர் முஸ்லிம் என்ற காரணத்திற்காக விடப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுள்ளது. நீதித்துறை நியமனங்களில் கூட முஸ்லிம் சமுகத்திற்கு நீதியில்லை என்றால் இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் எப்படி நியாயமான செயற்பாடுகளை எதிர்பார்க்க முடியும் என்று கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் அடுத்தடுத்து பறக்கணிக்கப்படுகின்ற போதிலும் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவை குறித்து இதுவரை எதுவும் பேசாது மௌனம் காப்பது முஸ்லிம் சமுகத்தில் பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்து இப்போது பேசுகின்றது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்குதல் மற்றும் ஏற்றாத்தாழ்வுகளை ஒழித்தல் என இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இதுபோன்ற புறக்கணிப்பு செயற்பாடுகளைப் பார்க்கும் போது எங்கே சம உரிமை உள்ளது. எப்படி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. எந்தத் திட்டமும் கடதாசியில் இருக்கலாம். அது வாசிப்பதற்கு திருப்தியாகத்தான் இருக்கும். நடைமுறையில் அது இல்லை என்றால் அதனால் என்ன பயன் ஏற்படும் என்பதையும் கேட்க விரும்புகிறேன். எனவே, இந்த அரசாங்கமும் கோத்தாபாயவின் முஸ்லிம் விரோத வழியில் பயணிப்பதான சந்தேகமே இப்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்றார். https://www.importmirror.com/2025/01/blog-post_30.html