Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3244
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அப்போது யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, விடுதியின் அனைத்து அறைகளிலும் திருட்டுத்தனமாக கமெராக்களை பொருத்தி அதன் மூலமாக வீடியோக்கள் பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து இளம் ஜோடியைப் படம் பிடித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதியில் கடமையாற்றிய ஊழியர்கள் சிலர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://samugammedia.com/secret-cameras-hidden-under-the-walls-of-jaffna-hotels---people-pay-attention-1674110137
  2. இதே பாம்புதானே ஏவளை ஏமாற்றி அவளை ஏதேன் தோட்டத்தில் விலக்கப்ட்ட க‌னியை புசிக்க வைத்தது.
  3. ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/blog-post_62.html ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாது... ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் பணி செய்யலாம். இலங்கையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது . ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதாலே இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/msg.html
  4. யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார். இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர். அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு : Samsug Galaxy S 22 22k Gold Chain 22k Gold Ring Cash 50000 Jack Daniels 03 Chocolate basket 21 letter Cake Heart Frames No France 12×15 frame Couple Frame Mug Magic pillow Protin basket 2 T. Shirts 4 Shirt 2 vesty set 03 Perfumes Citizen Men watch Teddy bear https://www.todayjaffna.com/320379
  5. செபால நல்லதொரு ஆய்வாளர். இவர் எல்லா மத மூட நம்பிக்கைகளையும் விமர்சிப்பவர். சமீபத்தில் தன்னை ஒரு தீர்கதரிசி என கூரிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ போதகரையும் இவர் விமர்சித்து இருந்தார்.
  6. இப்ப நான் இந்த தலையங்கத்தை பார்த்துவிட்டு இன்று வருடக்டைசி நாள் என்பதால் பீட்சா வங்கியுள்ளார்கள் கீழே கிச்சனுக்கு போய் ஒருதுண்டு எடுத்துவிட்டு வந்து எழுதுவோம் என்று இருந்தேன் அதற்குள் நாதமுனி எழுதியிருக்கிறீர்கள். இவர் அமெரிக்க பங்குச்சந்தையில் மோசடியான insider formation முறையில் லாபமீட்டிய ஒரி கிறிமினல் அல்லவா? பின்பு ஏன் இப்படி தமிழ் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதுகிறார்கள்?
  7. இழிவுபடுத்திய ஆண்களுக்கு பதிலடி கொடுத்த கிளிநொச்சி வீரபெண்கள் சர்ச்சைகளையும் சாதனையாக்கும் தமிழ் பெண்கள் https://fb.watch/hGShs2GZZU/
  8. இந்த ஆப்ப்ரிக்கா நாடுகள் எல்லாம் பிரான்ஸ்சின் கொலனி நாடுகள் அல்லவா?
  9. (ஊடகப்பிரிவு) வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினையாகிவிடக்கூடாது. வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள், இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கும் அதிகாரம் என்ன? இதுபற்றி அவர்கள் மனம் திறப்பது அவசியம். சூழ்நிலையைச் சமாளிக்கும் அறிக்கைகள் விடாமல், முஸ்லிம்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பேசுவதே சிறந்தது. இதே நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உள்ளமை ஏற்புடையதல்ல. வடக்கு கிழக்கு இணைய வேண்டுமா? அல்லது வடக்கும் கிழக்கும் வெவ்வேறாக பிரிந்திருக்க வேண்டுமா? என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இணைய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் இருப்பாரேயானால்,வடக்கு ,கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயங்கள் தொடர்பில், ஹக்கீமுக்கும், சுமந்திரனுக்கும் இதுவரை காலமும் இரகசியமாக நடாத்தப்பட்ட பேச்சுக்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.இவ்விரு மாகாணங்களும் பிரிந்திருக்க வேண்டுமென ஹக்கீம் கூறினால்,அந்தந்த மாகாணங்களில் அபகரிக்கப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் முஸ்லிம்களையும் உள்ளீர்க்கவே முயற்சிக்கப்படுகிறது. இப்பொது அடையாளத்துக்குள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே ,13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது கள நிலவரங்களுக்குப் பொருந்தாது. இது,அவரது தனிப்பட்ட விருப்பமே தவிர,வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷை இல்லை. எனவே, தீர்வு தொடர்பில் எவரும், எழுமாந்தமாகப் பேசக்கூடாது. வடக்கும், கிழக்கும் பிரிந்த மாகாணங்களாகவே இருப்பதானால், குறிப்பாக கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை, முஸ்லிம் பிரதேச செயலகங்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ ஒப்படைப்பது அவசியம். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன.அவற்றில் 04 முஸ்லிம் பிரதேச செயலங்களில் 27 வீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. அதிகாரக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களாலே இவர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன, கபடத்தனமாக பறிக்கப்பட்டன. மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர், அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படுவது அவசியம். மட்டுமல்ல காணிகளின் எல்லைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வட,கிழக்கில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர். கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டன. மட்டக்களப்பில், முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டன. இதனால்தான்,13 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இவ்விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனமும் கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். https://www.madawalaenews.com/2022/12/i_45.html
  10. இப்படித்தான் ஒர் நாடு வெற்றி பெற்றால் அதை மதத்துடன் கலப்பார்கள்
  11. மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும். இலங்கை முஸ்லிம்களின் இன உருவாக்கத்தின் சிக்கலான வரலாற்றுப் பின்னணியை சமூக கலாச்சார மற்றும் அரசியல் அம்சங்களுடன் விரிவாக விளங்கிக்கொள்தல் எமக்கும் மொரோக்கோவிற்கும் போர்த்துக்கலுக்குமான தொடர்பை ஓரளவு விபரிக்கும் என நம்பலாம். மூர் என்ற பெயரின் சொற்பிறப்பியல் தோற்றம் உலகளவில் அறியப்படுகிறது. இது லத்தீன் மூலமான மவுரியிலிருந்து வந்தது. இன்றைய மேற்கு அல்ஜீரியா மற்றும் வடகிழக்கு மொராக்கோவை உள்ளடக்கிய ரோமானிய மாகாணமான மவுரேட்டானியாவில் வசிப்பவர்களின் சந்ததியினரே உலகெங்கும் மூர் என முதலில் அழைக்கப்பட்டனர். இலங்கையைப் பற்றிய போர்த்துகீசிய வரலாற்றாசிரியர், ஃபெர்னாவோ டி குய்ரோஸ்(Portuguese historian Fernao De Queyroz) இலங்கை முஸ்லிம்கள் "முரிட்டானியாவைச் சேர்ந்தவர்கள்" என்பதால் 'மௌரோஸ்' என்று அழைக்கப்பட்டதாகக் கூறினார். இறுதியில் 'மௌரோஸ்' பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 'மூர்ஸ்' ஆனது. இலங்கையின் முதல் பிரதம நீதியரசர் சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டனும் (Sri Alexander Johnston) இலங்கை சோனகர்கள் முரிட்டானியாவைச் (Mauretania) சேர்ந்த அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதாகக் கூறுகின்றார். வேறு சில வரலாற்றாசிரியர்களின் கருத்தும் இதை உறுதிப்படுத்துகிறது. வட ஆப்பிரிக்காவின் அல்ஜீரியா, மாரிட்டானியா,லிபியா மற்றும் மொராக்கோ பகுதிகளை உள்ளடக்கிய மக்ரெப் பிராந்தியத்தில் இருந்த வணிக குழுவினருக்கும் மத்திய தரைக்கடல் மற்றும் அரபு வணிகர்களுக்குமான வியாபாரத்தொடர்புகளை பற்றிய கிபி 11ம் நூற்றாண்டின் அரபு புவியியலாளரான அல் பக்ரியின் பதிவுகள், அதேபோல கிபி 8ம் நூற்றாண்டில் சோனிங்கே மக்களின் வணிகத்தொடர்புகள் குறித்து அரபு புவியியலாளர் முஹம்மது இப்னு இப்ராஹிம் அல் ஃபஸாரி என்பவரின் பதிவுகள் இவர்களின் வணிக நோக்கத்திற்கான மரக்கலத்திலான இலங்கை நோக்கிய பயணம், திமிலரிடமிருந்து முக்குவர்களை பாதுகாப்பதில் பட்டாணியர், துலுக்கர் அல்லது சோனகர் என தமிழர்களாலும் மரக்கல மினிசு என சிங்களவர்களாலும் அறியப்பட்ட இவர்களின் தமிழ் பெண்களின் திருமண பந்தத்தால் உருவான இலங்கை சோனக முஸ்லீம்கள் ( Ceylon Moors) பற்றிய விரிவான ஆராய்ச்சி என்பன நமக்கும் மொரோக்கோவிற்குமான தொடர்பை விரிவாக எடுத்தியம்புகிறது. எனவே இலங்கை முஸ்லீம்களை குறிக்கும் சொற்களான மூர், சோனகர் அல்லது மரக்கல மினிசு என்கிற சொற்களின் அடிப்படை நம்முள் ஆப்பிரிக்க வணிகர்களின் குறிப்பாக மரிட்டானிய மற்றும் மொரோக்கோ இனக்கலப்பினை காட்டுவதாக உள்ளது. இதனால் நாமும் மொரோக்கோவின் வெற்றியை கொண்டாடலாம். . -கியாஸ் சம்சுடீன் - https://www.facebook.com/Kalmunai-today-news Kalmunai today news
  12. அரபு நாடுகளில் இருக்கும் தண்டனைகளில் லோக்கல் அரபுகள் தண்டிக்கப்பட மாட்டர்கள். அப்படி தண்டித்தாலும் பெயரளிவில் தண்டிப்பார்கள். ஆசிய/ஆப்பிரிகர்களே அதிகம் தண்டிக்க படுவார்கள்.
  13. நூருல் ஹுதா உமர்- சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் சமஸ்டி தீர்வுத்திட்டத்தை கிழக்கின் கேடயம் எதிர்க்கும். அதன் பாதகங்களை மக்கள் மயப்படுத்துவோம். வரவு செலவு வாக்கெடுப்புக்கு பின் வருகின்ற சுதந்திர தினத்துக்கு முன்னர் சிறுபான்மை மக்களில் பிரச்சினைகளுக்கு தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி கூறியிருப்பதனை வைத்து தமிழ்த்தரப்பு கட்சிகள் சமஸ்டி முறையிலான தீர்வுத்திட்டத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். இன்று (05) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பது நியாயமானதே. ஆனால் முஸ்லிம் மக்களை நசுக்கத்துடிக்கும் சமஸ்டி முறைக்கு நாங்கள் ஒத்து ஊதுகுழல் ஊத முடியாது. அதிகாரப்பகிர்வு என்பது மத்திய அரசு அளவோடு பகிர்ந்தளிக்கும் அதிகாரங்களை தேவை ஏற்படின் பாராளுமன்றத்தின் 3/2 பெரும்பான்மையுடன் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சமஸ்டி என்பது மாநில அரசாங்கம் நினைத்தால் மாத்திரமே மத்திய அரசாங்கத்தினால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் அதாவது ஒருநாட்டுக்குள் தனிநாடு போன்றதாகும். அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்ட இணைந்திருந்த வடகிழக்கிற்குள் முஸ்லிம்களை நீங்கள் நசுக்கியதையும் எங்களுக்கு கழிவுகளை கொடுத்து கழிவிரக்கம் காட்டியதையும் நாங்கள் மறந்துவிடவில்லை. இதனால்தான் முஸ்லிம் கட்சிகள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நமக்கு தேவையான தீர்வுத்திட்டத்தினை வரைவதற்கும் எமது மக்கள் தொடர்பான பிரச்சினைகளை பட்டியலிட்டு தீர்வினை உருவாக்கவும் அழைப்பு விடுத்தோம். அவைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அரசியல் கட்சிளின் தலைவர்களுக்கு இருந்தது மக்களும் அவ்வாறு இருந்துவிட முடியாது ஏனென்றால் இது உங்கள் குழந்தைகளின் எதிர்காலமாகும் என்றார் https://www.madawalaenews.com/2022/12/blog-post_34.html
  14. பெண் உறுப்பினுள் ஐபோன் – சிறைசாலையில் திலினிக்கு நடந்தது என்ன? ”6 சிறைச்சாலை அதிகாரிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டனர். தன்னை கட்டாயப்படுத்தி படுக்க வைத்து இருவர் தனது இரு கால்களையும் அகட்டி பிடித்துக் கொண்டிருந்தனர். மற்றைய இருவர் தனது கைகளையும் தலையையும் ஆட்டாமல் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் எனது ஆடைகளை களைந்துவிட்டு தனது கைகளை முழுமையாக எனது பெண் உறுப்பினுள் செலுத்தினார். ஒரு அதிகாரி தன்னை பார்த்துக் கொண்டு பக்கத்தில் இருந்தார்.நான் வேதனை தாங்காது கத்திய போது அதை பொருட்படுத்தாது கைகளால் எனது பெண் உறுப்பில் வேதனை வரும் வகையில் தோண்டினார்கள். தனது பெண் உறுப்பின் உள்ளேயும் வெளியேயும் நகங்கள் பட்ட காயங்களும் கிழிவடைந்த காயங்களும் காணப்படுகின்றன. அத்துடன் எனது குதப்பகுதிக்குள்ளும் கையை முழுமையாக விட்டு பரிசோதித்தனர். அங்கும் காயங்கள் உள்ளது” என திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகளுக்கு அழுதவண்ணம் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சிறைக்குள் திலினி பிரியமாலி அதிகாரிகளுக்கு தெரியாது மறைத்து வைத்து கைத் தொலைபேசி பாவித்து வந்ததாகவும் பல தடவைகள் அவரது இருப்பிடத்தை பரிசோதித்தும் கைத் தொலைபேசியை கண்டு பிடிக்க முடியாததால் அவர் பெண் உறுப்பில் அல்லது குதப்பகுதிக்குள் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்ததாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சிறை அதிகாரிகள் திலினியின் இருப்பிடத்திற்கு வருவதை கண்ட திலினி தனது கைத் தொலைபேசியை மலசல கூட குழிக்குள் எறித்து விட்டிருக்கலாம் எனவும் அவர் நவீன ரக ஐபோன் ஒன்றையும் சிறைக்கு வரும் போது தனது அந்தரங்கப் பகுதிக்குள் செலுத்தி கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே இந்த சோதனை நடந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. https://ratamil.com/what-happened-to-thilini-in-prison/
  15. இப்பொழுதெல்லம் கோவில், சர்ச், பள்ளிவாசல்களில்தான் அடிதடி அதிகம்
  16. கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம் யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 32 ஆண்டுகளாகின்றன. 32 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம். “யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும், பனையிலையும் புகையிலையும் நன்றாக வளரும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள். புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று "இளம்பருதி" கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்; நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா? ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம். பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது. பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது...... விடுதலைப் புலிகளின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள். வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. 2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது. முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 32 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும். தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம். . முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம். . யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற கனவு நனவாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்...!! *கலாபூஷணம் பரீட் இக்பால்-* *யாழ்ப்பாணம்.* https://www.madawalaenews.com/2022/10/i_743.html முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் - புத்தளத்தில் கறுப்பு சுவரொட்டிகள் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் ஆகின்ற இந்த நிலையில் அவர்கள் அதனை நினைவு கூறும் வகையில் யாழ் முஸ்லிம்கள் புத்தளம் பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டி நினைவுபடுத்துவதை காண முடிந்தது. 32 வருடங்களாகியும் மறுக்கப்படும் உரிமை வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் விடு­தலைப் புலி­களால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்டு சரி­யாக 32 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. எனினும் அன்­றி­லி­ருந்து இன்று வரை பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் அனு­ப­விக்கும் துய­ரங்கள் எழுத்தில் வடிக்க முடி­யா­தவை. 1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம், வட­புல முஸ்­லிம்கள் 75,000 பேர் இரண்டு வார காலப்­ப­கு­தி­யினுள் அவர்­களின் வாழ்­வி­டங்­களை விட்டு பல­வந்­த­மாக விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட துயரம் நடந்­தே­றிய ஒக்­டோபர் மாதத்­தினைக் கறுப்பு ஒக்­டோபர் என்றால் அது மிகை­யா­காது. அதி­க­மான குடும்­பங்கள் 500 ரூபா பணத்­துடன் சில உடு­து­ணி­களை மாத்­தி­ரமே எடுத்துச் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டன. சில குடும்­பங்கள் வெறுங்­கை­யுடன் வெளி­யே­றி­யி­ருந்­தன. தென் மாகா­ணத்தின் எல்­லை­யினை நெருங்கும் வரை போக்­கு­வ­ரத்­தினைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாத மக்கள் பல நாட்கள் நடந்தே ஊரைக் கடந்­தி­ருந்­தனர். இற்­றை­வரை எம் சமு­தாய மக்­களின் துன்­பங்­களும் துய­ரங்­களும் அடை­யாளம் காணப்­ப­ட­வு­மில்லை, ஆற்­றப்­ப­ட­வு­மில்லை. மூன்று தசாப்த கால­மாக உள்ளூர்க் குடி­யி­ருப்­பா­ளர்­களும் அர­சாங்க அதி­கா­ரி­களும் சர்­வ­தேசக் கொடை­யா­ளர்­களும் தெற்கு முஸ்­லிம்­களும் காட்­டிய புறக்­க­ணிப்பும் புரி­த­லின்­மையும் நம்­பு­வ­தற்கு யாரு­மில்­லையே எனும் உணர்­வினை இந்த வட­புல மக்­களின் உள்­ளங்­களில் விதைத்­து­விட்­டன. வட­புல முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை தொடர்பில் விசா­ரிக்க ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினை நிய­மிக்­கப்­போ­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜக்‌ஷ 2005ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். 2009 இல் யுத்தம் முடி­வ­டைந்­த­மை­யினை நினை­வு­கூர்ந்து நடத்­தப்­பட்ட நிகழ்­வொன்றில் அவர் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார் “வட­புல முஸ்­லிம்கள் துன்­பு­றுத்­தப்­பட்டு அவர்­களின் வாழி­டங்­களை விட்டுப் பல­வந்­த­மாகப் புலி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­போது அவர்­களின் இடப்­பெ­யர்­வினைத் தடுத்து நிறுத்த யாரும் முன்­வ­ர­வில்லை. இப்­போது எனது அர­சாங்கம் பயங்­க­ர­வா­தத்­தினை முடி­வுக்குக் கொண்­டு­வந்­துள்ள கார­ணத்­தினால், 2010 மே மாத­ம­ளவில் முஸ்­லிம்­களை மீளக் குடி­ய­மர்த்த சகல முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­படும்.” அவரின் எந்த வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான தேசத்­தினைக் கட்­டி­யெ­ழுப்பும் துரித செயன்­மு­றையில் வட­புல முஸ்­லிம்­களின் உரி­மை­களை முன்­னு­ரி­மைப்­ப­டுத்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ தவ­றி­விட்டார். அதன் பின்னர் முஸ்­லிம்­களின் ஆத­ர­வுடன் பத­விக்கு வந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் வட புல முஸ்­லிம்­களின் விட­யத்தில் எந்­த­வித கரி­ச­னை­யையும் காட்­ட­வில்லை. 2015 முதல் 2019 வரை­யான நிலை­மா­று­கால நீதிக் காலப்­ப­கு­தியின் போது சூழ்­நிலை தொடர்ந்தும் மாறா­ம­லேயே இருந்­தது. முன்­மொ­ழி­யப்­பட்ட பொறி­மு­றைகள் மூலம் வடக்கு முஸ்­லிம்­களின் துய­ரங்­களைத் தீர்ப்­ப­தற்­கான ஆரம்­ப­கால முயற்­சிகள் கைவி­டப்­பட்­டன. ஜ.நா. மனித உரி­மை­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் அலு­வ­ல­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ரணை, 2002 பெப்­ர­வரி யுத்­த­நி­றுத்தம் முதல் 2011 வரை­யான காலப்­ப­கு­தி­யினை மட்­டுமே ஆராய்ந்­தது. ஆனால், 1990 இல் நடத்­தப்­பட்ட முஸ்லிம் மக்­களின் வெளி­யேற்ற நிகழ்வு போன்ற முன்­னைய குற்றச் செயல்­களை ஆரா­யாமல் விட்­டு­விட்­டது. மீள்­கு­டி­யேற்­றத்தைப் பொறுத்­த­வரை அது ஒரு சிக்­க­லான பொறி­மு­றை­யா­கவே மாறி­யுள்­ளது எனலாம். திரும்பிச் செல்­ப­வர்கள் புத்­த­ளத்தில் ஒரு பிடி­மா­னத்­தினை வைத்­துள்­ளனர் என்­பது உண்­மை­யாகும். ஆனால், இம்­மக்­களின் பூரண மீள்­தி­ரும்­பலைப் பாதிக்கும் தடை­களை இந்த யதார்த்தம் பிர­தி­ப­லிக்­கின்­றது என்றால் அது மிகை­யா­காது. இம்­மக்­களின் காணிகள் காடு­க­ளாக மாறி அவற்றில் குடி­யேறி வாழ்­வதே சாத்­தி­ய­மற்­ற­தாக இருக்கும் நிலையில் இம்­மக்­க­ளுக்கு மீள்­கு­டி­யேற்ற உத­விகள் வழங்­கப்­ப­டு­வ­தற்­கான எச்­சாத்­தி­யமும் தென்­ப­டாத சூழ்­நி­லையே நில­வு­கின்­றது. இவ்­வா­றான சூழ­மைவில் இந்த மக்கள் 32 வரு­டங்­க­ளாக வாழ்ந்த இடங்­களை விட்டுச் சடு­தி­யாகத் திரும்பிச் செல்ல முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். திரும்பிச் செல்லும் இடங்­களில் அடிப்­படை வச­திகள் இல்லை என்­பது ஒரு புற­மி­ருக்க இவ்­வாறு திரும்பிச் செல்லும் மக்­களை அர­சாங்க அதி­கா­ரி­களும் வர­வேற்கத் தயா­ராக இல்லை என்­ப­துடன் இம்­மக்­களின் முன்னாள் அய­ல­வர்கள் கூட இவர்­களை வர­வேற்கத் தயா­ராக இல்லை என்­பதே யதார்த்­த­மாக இருக்­கின்­றது. நிலைமை இவ்­வா­றி­ருக்க, யாரி­ட­மி­ருந்தும் எதையும் பெரிதும் எதிர்­பார்க்­காது தமது வாழ்­வினை மீண்டும் பூச்­சி­யத்தில் இருந்து ஆரம்­பித்து தமிழ் உற­வு­க­ளுடன் சக­வாழ்வு வாழலாம் என்ற ஆர்­வத்­துடன் முஸ்­லிம்கள் வடக்­கிற்குத் திரும்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். சம­மாக நடத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு, தமது காணி­களை அணு­கு­வ­தற்­கான சந்­தர்ப்பம், அடிப்­படை வாழ்­வா­தார உத­விகள், மேலும் காடு மண்டிக் கிடக்கும் தமது காணிகளைத் துப்பரவுசெய்தல் போன்ற சாதாரண கோரிக்கைகளுக்கு அப்பால் இம்மக்கள் விடுத்திருக்கும் முக்கியமான வேண்டுகோள்கள் சொற்பமானவைதான். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்களின் சொந்த இடங்களில் தங்களின் சொத்துக்களை மீளக் கோருவதற்கும் வாழ்வாதார உதவிகளைப் பெறுவதற்கும் உரிமையினைக் கொண்டுள்ளனர் என்பதையும் தற்காலிகமாக இவர்களின் குடும்பங்கள் வேறு இடங்களில் வாழும் தெரிவினை மேற்கொண்டிருந்தாலும் இந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்பதையும் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அங்கீகரிப்பது இன்றியமையாததாகும். https://www.jaffnamuslim.com/2022/10/32.html
  17. சவூதி - ரியாத் boulevard இல் வியாழன் மற்றும் வெள்ளியன்று நடந்த "ஸ்கேரி வீக்கெண்ட்" சீசன் இல் Holloween நிகழ்வுகள் இடம்பெற்றன. பார்வையாளர்களை பயமுறுத்தும் ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ரியாத் boulevard இற்கு இலவச நுழைவு வழங்கப்பட்டது. திகிலூட்டும் மாறுவேடங்களைக் காண்பிப்பதற்காகவும், சவுதியை சேர்ந்த மற்றும் அந்நாட்டில் வசிக்கும் மக்களின் ஆக்கப்பூர்வமான வடிவமைப்புகளை அணிவகுப்பதற்காகவும் இந்த நிகழ்வு அர்ப்பணிக்கப்பட்டது என தெரிவிக்க படுகிறது. பல்வேறு கேரக்டர் உடைகளுக்குப் பின்னால் உள்ள கதைகளை பார்வையாளர்களுக்கு இவர்கள் வெளிப்படுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன அப்துல்ரஹ்மான் என்ற ஒரு பங்கேற்பாளர், , வட அமெரிக்க புராண உயிரினமான வெண்டிகோவின் உடையை காட்சிப்படுத்தினார். நாட்டுப்புற உயிரினம் மனிதர்களைக் கொண்டிருக்கும், பேராசை மற்றும் பசியின் உணர்வுகளை அழைக்கிறது, மேலும் மக்களை நரமாமிசமாக்கி, அவர்களின் சதையை உண்ணும் ஒரு தீய ஆவி என்று புராணக்கதை கூறுகிறது என கூறிய அப்துல் ரஹ்மான் நாட்டில் ஹாலோவீன் கொண்டாடுவது இதுவே முதல் முறை என மேலும் தெரிவித்தார் "இது ஒரு பெரிய கொண்டாட்டம், மகிழ்ச்சியாக உள்ளது இருக்கிறது... ஹராம் அல்லது ஹலால் அடிப்படையில், எனக்கு அதைப் பற்றி தெரியாது. நாம் அதை வேடிக்கைக்காக மட்டுமே கொண்டாடுகிறோம், வேறு எதுவும் இல்லை. நாங்கள் எதையும் நம்பவில்லை, ”என்று அவர் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்தார். ஹாலோவீன் நிகழ்வு நீண்ட காலமாக மத்திய கிழக்கு முழுவதும் புறக்கணிக்கப்பட்டாலும், நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இந்த நிகழ்வை பாதிப்பில்லாத பொழுதுபோக்கு என்று விவரித்தனர். “செயல்கள் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. நான் வேடிக்கை பார்க்க இங்கு வந்துள்ளேன் என ஒரு நிகழ்வில் பங்கேற்ற, கலீத் அல்ஹர்பி கூறினார்: அல்ஹர்பி தனது குடும்பத்தினருடன் இரத்தம் தோய்ந்த மருத்துவர், செவிலியர் மற்றும் ஆலோசகர் போன்ற உடையணிந்து உறுப்பினர்களுடன் வந்தார். அவர்கள் தங்கள் ஆடைகளுக்குப் பின்னால் ஒரு பின்னணியை உருவாக்கினர், தனது குடும்பம் ஹாலோவீன் கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும் என தெரிவித்தார். இதேபோன்ற நிகழ்வு இந்த இந்த ஆண்டின் தொடக்கத்தில் Boulevard Riyadh City மற்றும் Winter Wonderland ஆகிய இடங்களில் மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. News Sauce & Photos - Arab News https://www.madawalaenews.com/2022/10/halloween.html
  18. கடடார் பலவர்ணங்களில் மின்னுகின்றது. வீதிகள் எல்லாம் செப்பனிட்டு அந்த மாதிரி. டிக்கட் வாங்கவில்லை அகன்ற திரையில் அரபி பெண்களோடு ஹூக்கா அடித்து ச‌ல்லாபித்தவாறு பார்க்கவுள்ளேன். இங்கிலந்து நம்ம பேவரிட். கட்டாரும் விளையாடுகின்றது பார்ப்போம். https://www.gulf-times.com/story/727365/Football-frenzy-grips-Qatar
  19. யாழ்ப்பாண மாவட்டத்தில் 19,147 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வேலை தேடுகின்றனர். மாவட்டச் செயலகம் மனிதவள வேலைவாய்ப்புத் துறையில் அறிக்கை செய்துள்ளதாக மாவட்டச் செயலர் கே.மகேசன் தெரிவித்தார். யாழ். தேசிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தை விட மாவட்டத்தில் வேலையில்லாப் பிரச்சினை அதிகமாக உள்ளது. மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம் வடமாகாணத்தில் 21 வீதமானவர்கள் வேலையின்றி உள்ளனர். யாழில் கடந்த ஆண்டு 7.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் தேசிய அளவில் 4.5 சதவீதமாக இருந்தது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது https://www.todayjaffna.com/315370
  20. கனடா, அவுஸ், இத்தாலி எதுவுமல்ல இப்பொழுது ரீயுனியன் தீவுக்கே செல்கின்றார்கள். இந்து சமுத்திரத்தின் மொரிசுயசுக்கு பக்கத்தில் உள்ளது. இது பிரன்சின் ஆளுகைக்குட்பட்டது. இதுவும் தமிழர்களின் தீவு, சில காலத்தின் பின் அங்குள்ள தமிழர்களை அடித்து விரட்டுவார்கள்
  21. போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன என்று கூறிய அவர், போரின் போது மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த செயற்பாட்டை மக்கள் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.madawalaenews.com/2022/10/i_49.html
  22. மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் (25) இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது, மதுபான போத்தல்களின் விலையும் அதிகரித்துள்ளது. மதுபானம் வாங்க முடியாத நிலையில், இவர் தொடர்ச்சியாக ஓடிகலோன் குடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய மதியம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. Facebook https://www.madawalaenews.com/2022/09/i_169.html
  23. அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு வருவோரை இது பாதிப்பதாகவும் நாட்டில் இரவு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த அவர், மன்னாரை பொழுது போக்கு வலயமாக மாற்றலாம் என்றும் மேலும் சில சர்சை கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மன்னார் குறித்த அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எவ்வித அருகதையும் இல்லை என்றும் அவரது கருத்தை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன், இன்று (14) தெரிவித்தார். புதிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மன்னார் மாவட்டம் தொடர்பாக கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தை ஊடகங்கள் மூலம் அவர் தெரிவித்துள்ளதாக, சாள்ஸ் எம்பி குறிப்பிட்டார். மன்னார் மாவட்டத்தை ஒரு களியாட்ட இடமாக மாற்றவுள்ளதாகவும் குறிப்பாக தன்னை கருவாடு காய வைப்பதற்கு மன்னாருக்கு அனுப்ப உள்ளதாக சிறு வயதில் தன்னை பயமுறுத்தி வளர்த்ததாகவும் டயானா கமககே வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் எம்.பி தெரிவித்தார். மன்னார் மாவட்டம் மிகவும் கலை, கலாசார பண்புகள், கடல் வளம், விவசாய வளம் அனைத்தோடு பொருந்திது என்றும் தற்போது கல்வியில் தலை சிறந்து விளங்கி காணப்படுகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம், மடு திருத்தலம் ஆகிய இரு பழமை வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன என்றும் மன்னாரின் கலை, கலாசார பண்புகள் தெரியாமல், ஊடகங்கள் முன் அவர் பேசியமை கண்டிக்கத்தக்கது என்று என்றார். நாட்டில் கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கொழும்பை இரவு நேர களியாட்ட வலயமாக மாற்ற வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் டயானா கமகே பேசியதாகவும் சாள்ஸ் எம்.பி சுட்டிக்காட்டினார். அவருடைய செயல்பாடுகள் தொடர்ச்சியாக இவ்வாறு இருக்கும் போது அவருக்கு இராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கியமை குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். எஸ்.றொசேரியன் லெம்பேட் https://www.madawalaenews.com/2022/09/i_30.html
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.