Everything posted by colomban
-
சமூகத்தை ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம்கள் ஒன்று பட்டு நிராகரிக்காத வரை முஸ்லிம் சமூகம் அரசியலில் வெற்றிபெற முடியாது.-முபாறக் அப்துல் மஜீத்
இருபது வருடமாக முஸ்லிம் சமூகத்தை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்தி எந்த உரிமையையும் பெற்றுத்தராத சமூகத்தை ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம்கள் ஒன்று பட்டு நிராகரிக்காத வரை முஸ்லிம் சமூகம் அரசியலில் வெற்றிபெற முடியாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருப்பது தவறு என ரிசாத் பதியுதீனுக்கு பகிரங்கமாக சொன்னோம். ஹக்கீம் இருக்கும் பக்கம் இருப்பது பிழை என்றும் அரசியல் சாணக்கியம் பற்றிய அறியாமை என்றும் சொன்னோம். இப்போது இரண்டு பெரிய முஸ்லிம் கட்சிகள் ஆதரித்தும் சஜித் பிரேமதாச தோற்றதன் மூலம் இந்த இரு ஏமாற்று கட்சிகளும் இருக்கும் பக்கத்தை ஆதரிப்பதில்லை என்ற சிங்கள மக்களின் முடிவு தெளிவாகியுள்ளது. இதையே கடந்த 2019 தேர்தலிலும் காட்டினர். அதிலும் தமிழ் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கிறதோ அவர் படு தோல்வி அடைவார் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்புடன் சஜித் பிரேமதாச இணைந்தது மிகப்பெரிய தவறு. 2010ம் ஆண்டு தேர்தலில் சம்பந்தன் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு தெரிவித்த போது அடித்துச்சொன்னேன் மஹிந்தவின் வெற்றி உறுதியாகிவிட்டது என. அத்தேர்தலில் ஆடையின்றி நிற்கும் முஸ்லிம் சமூகத்துக்குரிய கோவணம் சரத் பொன்சேக்கா என ஹக்கீம் கூறினார். பின்னர் கோவனத்தையும் இழந்து நின்றார். ஆகவே இருபது வருடமாக முஸ்லிம் சமூகத்தை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்தும் சமூகத்தை ஏமாற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அ.இ. மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளை முஸ்லிம்கள் ஒன்று பட்டு நிராகரிக்காத வரை முஸ்லிம் சமூகம் அரசியலில் வெற்றிபெற முடியாது. முபாறக் அப்துல் மஜீத் முப்தி ஸ்ரீலங்கா உலமா கட்சி 23.9.2024 https://www.importmirror.com/2024/09/blog-post_872.html
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
இவர் திருமணமானவரா என்று தெரியவில்லை? இவர் பொது நிகழ்வுகளில் குடும்ப அங்கத்தவர்களை தவிர்த்து வருகின்றார் என நினக்கின்றேன்.
-
புலிகளின் பணத்தை பதுக்கியவர்களே பொது வேட்பாளருக்கு நிதி
அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக குற்றஞ்சாட்டிய மூத்த போராளி இராகவன் தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு என்றார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது வேட்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள் குறுகிய நோக்கில் இனவாதத்தை பேசி தமது எதிர்கால அரசியலுக்கு திட்டமிடுகின்றனர். இன்று புலம்பெயர் நாடுகளில் செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக பணம் தாருங்கள் என புலம்பெயர் தமிழ் மக்களிடம் பணத்தைப் பெற்று அதனை கையகப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளனர். ஏனெனில் பிரச்சனை தீர்ந்து விட்டால் நீதி திரட்ட முடியாது தாங்கள் நினைத்தது போல் வாழ முடியாது என்ற அச்சத்தின் காரணமாக தற்போது பொது வேட்பாளரை நிறுத்தி இனவாத கருத்துக்களை பரப்புகின்றனர். தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டதன் நோக்கம் ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும் பின்னர் புலம்பெயர் அமைப்புக்களின் வழிகாட்டலில் தவறான பாதையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியினை வழங்கும் புலம்பெயர் புலிகள் என தம்மை அடையாளப்படுத்தும் விடுதலைப் புலிகள் காலத்தில் பணத்தை பதுக்கிய கும்பல் தற்போது பொது வேட்பாளருக்கு நிதியை வழங்குவதாக அறிகிறோம். இவர்களது செயற்பாடுகளால் தெற்கில் குறைந்திருக்கும் இனவாதத்திற்கு உரம் போட்டுள்ளனர். தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா உதவும், சர்வதேசம் வரப்போகுது, இதனால் தமிழீழம் வரப்போகிறது என சொல்லி தெற்கில் பூதாகரமாக காட்டப்படும். எனவே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். ஆனால் தமிழ் பொது வேட்பாளர் என்ற மாய மானுக்கு வாக்களிப்பது எதிர்காலத்தில் எமது தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார இருப்பை பாதிக்கும். தெற்கில் தமிழர்களுக்கு உச்ச பட்ச உரிமையை வழங்கும் வகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய சோசலிசக் கட்சியின் சிறீதுங்க ஜயசூரியவும் மக்கள் போராட்ட முன்னணியின் நுவான் போபகேவும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தேவையற்ற இனவாத கருத்துக்களை தவிர்க்க முடியும். தற்போதைய நிலையில் ரணிலோ சஜித்தோ அனுரவோ மூவரில் யார் வந்தாலும் தமிழர்கள் ஜக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வுக்காக பேரம்பேசும் நிலைமை காணப்படுகின்றது. தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி என்பதை விட கூட்டு களவு என்றே சொல்லலாம். எந்தவொரு அரசியல் கட்சியும் தமது பணக்கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படையாக வைக்க வேண்டும். ஜனநாயகம் வெளிப்படைத் தன்மை என பேசுபவர்கள் அதனை செய்யவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அவ்வாறு செயற்பட முடியாது. அவர்கள் ஆயுத இயக்கம். மில்லியன் கணக்கில் ஆயுதம் வாங்கினோம் என கணக்கு காட்டமுடியாது. வெளிப்படையாக ஜனநாயக அரசியல் செய்பவர்கள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டும் என்பவர்கள் தமது கணக்கு விடயத்தில் பலவீனமாக இருக்கிறார்கள். அது பாரிய மோசடி என நான் நம்புகிறேன். விடுதலைப் புலிகள் இருக்கும்போது இலங்கை அரசாங்கத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. சரி தவறுக்கு அப்பால் இராணுவ கட்டமைப்பை வைத்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு எதுவும் கிடையாது. விடுதலைப் புலிகளின் நிறங்களான சிவப்பு மஞ்சளை பயன்படுத்தி சிறுவர்கள் மற்றும் இளையோரை பயன்படுத்தி உணர்ச்சியை தூண்டி தற்கொலைக்கு அனுப்ப செயற்படுகிறார்கள் – என்றார் https://www.todayjaffna.com/364833
-
யார் அந்த JVP யினர் ? அவர்களது பிரதான கொள்கை என்ன ?
யார் அந்த JVP யினர் ? அவர்களது பிரதான கொள்கை என்ன ? கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஜே.வி.பி பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த தேர்தலில் அனைத்து தரப்பினரும் விமர்சிக்கின்ற நிலைக்கு இவர்களின் வளர்ச்சி உள்ளதனை எவராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜே.வி.பி யினர் இந்த நாட்டை நாசமாக்கிய வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், குழப்பக்காரர்கள் என்றெல்லாம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. தேர்தல் காலம் என்பதனால் இது அரசியலுக்காக கூறப்பட்டாலும், இன்றை இளைய தலைமுறையினருக்கு உண்மையான வரலாறுகளை எத்திவைப்பது எமது கடமையாகும். அவ்வாறு உண்மைகளை கூறுகின்றபோது இந்த கட்டுரை எழுதுகின்றவரையும் ஜே.வி.பியை சேர்ந்தவர் என்று கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் கருத்துக்களை துல்லியமாக விளங்கிக்கொள்வதில் மந்தபுத்தியுள்ள பலர் முகநூல் எழுத்தாளர்களாக உள்ளனர். ஜேவிபி யின் தலைவர் ரோகன விஜயவீர அன்றைய சோவியத் யூனியனின் தலைநகரான மொஸ்கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் கல்விகற்றபோது “மாக்சிசம், லெனிநிசம்” ஆகிய அரசியல் சித்தாந்தங்களில் கவரப்பட்டார். இவர் இலங்கைக்கு வந்ததன் பின்பு சேகுவேராவின் புரட்சியை பின்பற்றி அதனை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் விதத்தில் 1965 இல் இடதுசாரி அமைப்பினை நிறுவியதுடன் சிங்கள இளைஞர்களுக்கு தனது அரசியல் சித்தாந்தத்தை போதித்தார். 1970 இல் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) என்ற பெயரில் இயக்கத்தை கட்டியமைத்து அதே ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்தனர். இதற்காக தெற்கிலுள்ள பெரும் செல்வந்தர்கள் நிதி உதவிகளை வழங்கிவந்தனர். உலகில் முதலாளித்துவம், சோஷலிச சமஉடமைக் கொள்கை ஆகிய இரண்டு பிரதான பொருளாதாரக் கொள்கைகள் உள்ளன. அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகள் பின்பற்றுகின்ற முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையானது தனி நபர் முதலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இங்கே உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு எந்தவித முன்னுரிமையும் கிடையாது. ஆனால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பின்பற்றுகின்ற சோஷலிச சமஉடமைக் கொள்கையானது “கால்மாக்ஸ், லெனின்” ஆகியோர்களின் பொருளாதார சித்தாந்தத்தை பின்பற்றுகின்ற கொள்கையாகும். இங்கே முதலாளிகளுக்கு முன்னுரிமை இல்லை. பாட்டாளி வர்க்கத்தினர்களுக்கே முன்னுரிமை உள்ளது. உழைக்கின்ற பாட்டாளிகளின் உழைப்பானது முதலாளிகளினால் சுரண்டப்பட்டு செல்வம் தனி நபர்களிடம் குவிக்கப்படுகின்றது. ஆனால் கஷ்டப்பட்டு உழைக்கும் வர்க்கத்துக்கு அவர்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. அத்துடன் முதலாளி வர்க்கத்தினர், உழைக்கின்ற பாட்டாளி வர்க்கத்தினை சுரண்டி ஆளும் வர்க்கமாக ஆட்சி செய்வதுடன், உழைக்கும் வர்க்கத்தினர் ஆளப்படுகின்ற அடிமைகளாக வாழ்கின்றனர். முதலாளித்துவ வாதிகளின் பொருளாதார சுரண்டல்களையும், ஊழல்களையும் ஒழித்து சம உடமை பொருளாதார கொள்கையினை இலங்கையில் நடைமுறைப்படுத்தி தொழிலாளர்களின் உயர்வினை மேம்படுத்துவதுதான் ஜே.வி.பி யினரின் பிரதான கொள்கையாகும். தொடரும்................. முகம்மத் இக்பால் சாய்ந்தமருது இரண்டாவது தொடர் உலகில் மனித இனம் உருவானதிலிருந்து புரட்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் குறைவில்லை. வலதுசாரிக் கொள்கைக்கு எதிராக இடதுசாரிகளும், முதலாளித்துவத்துக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தினரும் மற்றும் ஆக்கிரமிப்பு, அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நீதியை நிலைநாட்டுவதற்காகவும், ஒரு இனத்தை இன்னொரு இனம் ஆழக்கூடாது என்பதற்காகவும் போராட்டங்களும், புரட்சிகளும் அன்றுதொட்டு இன்றுவரை உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் நடந்தவண்ணமே உள்ளன. அவ்வாறான நியாயமான போராட்டங்களில் தங்களது உயிரை அர்ப்பணித்து போராடுகின்ற போராளிகளை அழிக்கும் நோக்கில் “பயங்கரவாதிகள்” என்று அதிகார வர்க்கத்தினரால் ஊடகங்கள் மூலமாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் போராட்டத்தை அடக்குவதற்காக முதலாளித்துவ அரச இயந்திரம் மேற்கொள்ளுகின்ற கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, காணாமல் ஆக்குதல், மனித உரிமை மீறல்கள் போன்ற அரச பயங்கரவாதச் செயற்பாடுகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு போராளிகளை பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தில் அதிகார சக்திகள் வெற்றியடைகின்றன. அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியபோது தலிபான்களையும் மற்றும் பாலஸ்தீன போராளிகளை இன்றுவரைக்கும் பயங்கரவாதிகள் என்றே பட்டியலிடப்பட்டனர். அதுபோலவே இலங்கையில் முதலாளித்துவ சுரண்டல் சக்திகளிடம் இருக்கின்ற ஆட்சி அதிகாரத்தை பறித்து சமஉடமைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக 1971, 1987, 1988,1989 ஆகிய காலங்களில் ஒரு இலட்சியத்துடன் தங்களது உயிர்களை அர்ப்பணித்து போராடிய ஜே.வி.பி அமைப்பினர் பயங்கரவாதிகள், கலகக்காரர்கள், குழப்பவாதிகள் என்றெலாம் அழைக்கப்பட்டு வருகின்றனர். ஈரானில் மேற்குலக சக்திகளின் பொம்மையாக இருந்த ஷா மன்னருக்கு எதிராக 1979 இல் ஆயதுல்லாஹ் கொமைனி தலைமையில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அரபு வசந்தம் என்ற போர்வையில் மக்கள் புரட்சியின் காரணமாக துனிசியா, லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் சிரியா போன்ற சில நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கான புரட்சிகளும் போராட்டங்களும் தோல்வியடைந்தது. அண்மையில் வங்காளதேசில் ஏற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் புரட்சியின் காரணமாக ஆட்சித் தலைவரான பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடினார். இங்கே கவனிக்க வேண்டிய விடையம் என்னவென்றால், போராடும் வரைக்கும் போராளிகள் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவார்கள். போராட்டம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு “பயங்கரவாதிகள்” என்ற சொல் மறைந்துவிடுவதுடன் அவர்கள் ராஜதந்திரிகளாக பார்க்கப்படுகின்றனர். ஆனால் போராட்டம் தோல்வியடைந்தால் அவர்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் பயங்கரவாதிகளாகவே கான்பிக்கப்படுவார்கள். இதனையே உலகம் நம்புகிறது. ஒரு இலட்சியத்துடன் நீதியை நிலைநாட்டும் பொருட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உயிரைப் பணயம்வைத்து நடாத்துகின்ற போராட்டத்தினை வெறும் ஒரே வார்த்தையில் “வன்முறை” “குழப்பம் விளைவித்தல்” என்று கூறுவதானது அறியாமையின் வெளிப்பாடாகும். கியூபாவில் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோர்களின் தலைமையில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு 1959 இல் சோஷலிச சமஉடமை ஆட்சி நிறுவப்பட்டது. அதுபோன்றதொரு ஆட்சியை இலங்கையில் நிறுவுவதற்கு ரோகன விஜயவீர தலைமையில் ஜே.வி.பியினர் திட்டமிட்டனர். தொடரும்...... முகம்மத் இக்பால் சாய்ந்தமருது மூன்றாவது தொடர் இலங்கையில் பாகிஸ்தான் இராணுவமும், இந்தியாவின் இராஜதந்திரமும். முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்ட சிந்தனைகளை ஆயுதங்களின்றி ஜனநாயக ரீதியில் மேலெழச் செய்வதற்கு அதிகார சக்திகள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. எப்படியும் இவர்களை அழித்தொழிக்கவே முற்படுவார்கள். இதனால் ஆயுதப் புரட்சிதான் இதற்கு ஒரே தீர்வு என்ற அடிப்படையில் மக்கள் ஆதரவுடன் அனைத்து தயார்படுத்தல்களுடனும் முழு நாட்டையும் கைப்பற்றும் புரட்சியில் ரோகன விஜவீர தலைமையிலான ஜேவிபி இயக்க சிங்கள இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். 1971.04.05 ம் திகதி அதிகாலையில் வெல்லவாய பொலிஸ் நிலையம்மீது முதன்முதலாக தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாட்டில் தென்பகுதியில் உள்ள 93 பொலிஸ் நிலையங்கள் ஒரே நேரத்தில் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டது. இதில் 35 பொலிஸ் நிலையங்கள் முற்றாக புரட்சியாளர்களிடம் வீழ்ந்தது. பல பொலிஸ் நிலையங்களில் இருந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் நிலையத்திலிருந்து தப்பி ஓடினர். ஆரம்பத்தில் இவர்களது தாக்குதல் எதிர்பார்த்ததையும் விட மிக விரைவாகவும், வெற்றிகரமாகவும் அமைந்திருந்தது. தென்னிலங்கையின் பல மாவட்டங்கள் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மிகவும் திட்டமிடப்பட்ட பாரியளவிலான இந்த தாக்குதல் இந்தளவுக்கு வெற்றியளிக்குமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவை சிறைப்பிடிப்பதற்கு அல்லது கொலை செய்வதற்கு இவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஜே.வி.பியினர் தென்னிலங்கையை கைபற்றிக்கொண்டு கொழும்பை நோக்கி விரைந்தனர். இன்னும் சில மணிநேரங்களில் கொழும்பு முற்றாக வீழ்ந்துவிடும் என்ற பதற்றம் நிலவியது. அன்றைய இலங்கை இராணுவத்திடம் இன்று இருப்பதுபோன்று நவீன ஆயுதங்களும், ஆளணிகளும் இருக்கவில்லை. அதனால் ஜே.வி.பியினரை எதிர்த்து போரிடும் ஆற்றல் அவர்களிடம் இருக்கவில்லை. இராணுவத்துக்குள் அவர்களது பலமான ஊடுருவல் இருந்ததுடன் ஜே.வி.பி யினர்களின் திட்டமிடலை அன்றைய அரசு முன்கூட்டியே அறிந்துகொள்ளாதது புலனாய்வுத் தோல்வியாகும். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களை தோற்கடித்து நாட்டை பாதுகாப்பதென்றால் வெளிநாட்டிடமிருந்து உடனடி இராணுவ உதவியை கோருவதென்று ஆட்சியாளர்களினால் முடிவெடுக்கப்பட்டது. தாமதிக்கின்ற ஒவ்வொரு மணித்தியாலங்களும் ஆபத்தானதாகவே இருந்தது. அன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் இலங்கைக்கு நெருக்கமான உறவு காணப்பட்டதுடன், இந்தியாவுடன் சற்று ராஜதந்திர முறுகல் இருந்தது. பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரிப்பதற்காக வங்காளதேசில் பாகிஸ்தானுடன் இந்தியா போரில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானிலிருந்து வங்காளதேஸ் நோக்கி செல்கின்ற பாகிஸ்தானின் போர் விமானங்களுக்கு இலங்கையில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இதனால் இலங்கைமீது இந்தியா கடும் கோபத்தில் இருந்தது. அவ்வாறான சூழ்நிலையிலேயே இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இந்தியாவிடம் இராணுவ உதவியை கோராமல், இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள பாகிஸ்தானிடம் இராணுவ உதவியை கோரியதற்கு காரணமாகும். பாகிஸ்தான் விமானப்படையும், இராணுவமும் குண்டுவீச்சு விமானங்கள், ஹெலிக்கொப்டர்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் அவசர அவசரமாக இரத்மலான விமான நிலையத்தில் வந்திறங்கி ஜே.வி.பி போராளிகளை அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில் இந்தியா களத்தில் இறங்கியது. அதாவது பாகிஸ்தான் இராணுவம் இலங்கையில் வந்திறங்கியது இந்தியாவினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் மூலமாக இலங்கைக்கு முழுஅளவிலான அழுத்தம் வழங்கியதுடன், தாங்கள் உதவப்போவதாக வலிந்து உதவிக்கரம் நீட்டியது. உடனடியாக இந்திய இராணுவத்தினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கி ஜே.வி.பி யினரின் கிளர்ச்சியினை ஒழிப்பதற்கு உதவிபுரிந்தனர். தொடரும்............. முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அரச இயந்திரங்களின் துஸ்பிரயோகமும், JVP யின் பிழையான திட்டமிடலும். 9/10/2024 11:26:00 AM LATEST NEWS , Slider , கட்டுரை நான்காவது தொடர் இந்தியாவின் உதவியுடன் ஜே.வி.பி யின் புரட்சியை கட்டுப்படுத்துவதற்கு இரண்டரை மாத காலங்கள் தேவைப்பட்டது. அதாவது 1971 ஏப்ரல் ஆரம்பம் தொடக்கம் ஜூன் மாதம் நடுப்பகுதிக்கு பின்பு புரட்சி நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பூரண கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த இரண்டரை மாத காலங்களுக்குள் நடைபெற்ற சண்டையில் இரண்டு தரப்பிலிருந்தும் சுமார் இருபதாயிரம் (20,000) பேர்கள் கொல்லப்பட்டனர். இதில் இளைஞர்கள் அதிகம். அரச பயங்கரவாதம் தனது கோரமுகத்தை மக்கள் மீது காண்பித்தது. ஜே.வி.பி யின் வன்முறைகளைவிட அரச இயந்திரங்களின் அத்துமீறல்கள் அதிகளவில் இருந்தன. இரக்கமின்றி வகைதொகையின்றி சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி போராளிகள் இராணுவத்தினரையும், பொலிசாரையும் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களையும் குறி வைத்தனர். ஆனால் இராணுவத்தினரோ தாங்கள் சந்தேகப்பட்டவர்கள், ஜே.வி.பி யினர்களுடன் தொடர்பினைக் கொண்டவர்கள் அனைவரையும் அவர்கள் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் வகை தொகையின்றி கொன்று குவித்ததுடன், கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இதில் பல்கலைக்கழக மாணவர்களும் ஏராளம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பிரபலமான சிங்கள அழகுராணியாக இருந்த இருபத்திரெண்டு வயதுடைய மன்னம்பேரி என்பவள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இரவு முழுவதும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பின்பு நிர்வானமாக வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அதன்பின்பு பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்டாள். இதில் வேடிக்கை என்ன தெரியுமா ? இந்த ஜே.வி.பி புரட்சியை அடக்குவதற்கு சோவியத் யூனியன், சீனா போன்ற சோஷலிச சமஉடமைக் கொள்கையை பின்பற்றுகின்ற நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ததுதான். அதாவது எந்தக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக ஜே.வி.பி யினர் போராடினார்களோ, அதே கொள்கையுடைய நாடுகள் அந்த கொள்கையினை நசுக்குவதற்கு உதவி புரிந்தன என்பதுதான் ஆச்சர்யமானது. புரட்சி அடக்கப்பட்டு சிவில் நிருவாகம் ஏற்படுத்தப்பட்டதன் பின்பு தென்னிலங்கையில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அத்துடன் ஏற்கனவே 1971 இல் ஜேவிபி யின் தலைவர் ரோகன விஜயவீர கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்பு ஜே.வி.பி இயக்கம் தடை செய்யப்பட்டது. இந்த புரட்சியி நடவடிக்கையினை ஜே.வி.பி யினர் மிக துல்லியமாகவும், இரகசியமாகவும் திட்டமிட்டு நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், இறுதியில் அது வெற்றி என்னும் இலக்கை அடைய முடியாமல் தோல்வியடைந்தமைக்கு காரணம் என்ன என்பது பற்றி ஆராய வேண்டும். பொதுவாக ஒரு நாட்டை இலகுவாகவும், விரைவாகவும் கைப்பற்றுவதென்றால் அனைத்து சக்திகளையும் பாவித்து முதலில் அதன் தலைநகரை கைப்பற்ற வேண்டும். கட்டளை மைய்யங்களான நாட்டின் ஆட்சித் தலைவர், முப்படைகளின் தலைமையகம், பாராளுமன்றம், திறைசேரி, விமானநிலையம், ஒலி, ஒளி பரப்பு நிலையங்கள் என அனைத்து தலைமை செயலகங்களும் தலைநகரில் அமைந்து உள்ளதனால், தங்களது முழு பலத்தையும் ஒன்றுதிரட்டி கொழும்பை கைப்பற்றி இருந்தால் நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவ படைமுகாம்கள் உட்பட அனைத்து அரச இயந்திரங்களும் செயலிழந்திருக்கும். அவ்வாறு செய்யாமல் தெற்கின் பெரும்பாலான நிலப்பரப்பை கைப்பற்றியதன் மூலம் தங்களது படைகளை அகலக்கால் ஊன்றச் செய்தனர். அதாவது தென்னிலங்கையில் தங்களால் கைப்பற்றப்பட்ட பெரும்பாலான பிரதேசங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக முக்கிய நிலைகளில் அதிகளவான போராளிகளை அமர்த்தி பாதுகாக்க வேண்டிய நிலை புரட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இது அவர்களது இராணுவ திட்டமிடலில் உள்ள குறைபாடாகும். தொடரும்.......... முகம்மத் இக்பால் சாய்ந்தமருது இந்த ஜனநாயக செயற்பாட்டுக்கான ஜே.வி.பி மீதான தடையும், மீள் எழுச்சியும் 9/10/2024 11:31:00 AM LATEST NEWS , Slider , கட்டுரை ஐந்தாவது தொடர் சில நேரம் ஜே.வி.பி.யின் புரட்சி வெற்றியடைந்திருந்தால், இன்று நாட்டின் அரசியல் நிலைமை முற்றாக வேறுவிதத்தில் இருந்திருக்கும். குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அது மட்டுமல்லாது தமிழர்களின் விடுதலை போராட்டம் எழுச்சி பெறவேண்டிய தேவை இருந்திருக்காது. அல்லது முதலாளித்துவ சக்திகளான மேற்கு நாடுகளின் ஆதரவுடன் தமிழர்களின் அரசியல் நோக்கம் இலக்கை அடைந்திருக்கலாம். 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்ததன் பின்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமான கொள்கையினை கடைப்பிடித்தார். அந்தவகையில் 1978 இல் ரோகன விஜயவீர சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், ஜே.வி.பி மீதான தடை நீக்கப்பட்டது. எதிர்காலத்தில் ஜே.வி.பி தனக்கு சவாலாக உருவாகுமென்று தெரிந்திருந்தால் அதன் தலைவரை ஜனாதிபதி ஜே.ஆர் விடுதலை செய்திருக்க வாய்ப்பில்லை. வன்முறை அரசியலை கைவிட்டுவிட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபட்டனர். அதன் வெளிப்பாடாக 1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி யின் தலைவர் ரோகன விஜயவீர போட்டியிட்டு 4.19 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார். இது சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் ஜே.வி.பி புத்துயிர் பெறுவதனை காண்பித்தது. ஜே.வி.பி யின் பெயரை உச்சரித்தாலே தங்களை இராணுவம் போட்டுத் தள்ளிவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியிலிருந்து நீங்கியது. அதன் பின்பு மீண்டும் ஜே.வி.பி யின் செல்வாக்கு தென்னிலங்கையில் படிப்படியாக வலுப்பெற ஆரம்பித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. இந்த நிலையில் பொது தேர்தலை நடாத்துவதற்கு ஜே.ஆர் விரும்பவில்லை. அவ்வாறு தேர்தல் நடந்தால் தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் இருந்த ஆறில் ஐந்து வீதமான செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்படுவதுடன், ஜே.வி.பி க்கு கணிசமான பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கும் என்ற காரனத்தினாலேயே நேரடியாக பொது தேர்தலுக்கு செல்லவில்லை. பொது தேர்தலுக்கு செல்லாமல் சர்வர்சன வாக்கெடுப்புக்கு சென்றதானது ஜே.ஆரின் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு என்று தெரிவித்து அதனை எதிர்த்து ஜே.வி.பி யினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பொது தேர்தலை நடத்த வேண்டுமா ? வேண்டாமா ? என்று மக்களிடம் கருத்தறிதல் என்ற போர்வையில் 1982 இல் சர்வர்சன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த தேர்தலானது அதிகாரத்தை பயன்படுத்தி மிகவும் முறைகேடாக நடைபெற்ற தேர்தல் என்று அப்போது விமர்சிக்கப்பட்டதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பிரஜா உரிமை பறிக்கப்பட்ட நிலையில், ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிமீது வெறுப்புக்கொண்ட சிங்கள மக்கள் மாற்று முகாமாக ஜே.வி.பி யை நாடினர். சிங்கள மக்கள் மத்தியில் ஜே.வி.பி யினரின் செல்வாக்கு அதிகரித்து வருவதனை அறிந்துகொண்ட ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன அவர்கள், அதனை தடுக்கும் நோக்கில் அவ்வப்போது பல அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்தவகையில் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான ஜூலைக் கலவரம் நடைபெற்றதற்கு ஜே.வி.பி யினரே முழுக் காரணம் என்று குற்றம் சுமத்தியதுடன் மீண்டும் அவ்வியக்கம் தடை செய்யப்பட்டது. அந்த தடையினால் ஜே.வி.பி யினர் தாக்கல் செய்திருந்த வழக்கு புஸ்வாணமானது. ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதற்கும் தடை ஏற்பட்டது. மறுபுறத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் இளைஞர்களின் தனி நாடு கோரிய போராட்டம் எழுச்சியடைந்தது. ஜே.வி.பி தங்களை மீளக் கட்டமைத்தாலும் தென்னிலங்கையில் மீண்டுமொரு கிளர்ச்சியில் இறங்குவதற்குரிய சூழ்நிலை இல்லாததன் காரணமாக அரசாங்கத்தின் முழுக் கவனமும் வடகிழக்கு பகுதிகளில் இருந்தது. தொடரும்.......... முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அரசியல் சூழ்சிகளும், கொலைக்களமாக காட்சியளித்த தென்னிலங்கையும். 9/10/2024 11:35:00 AM LATEST NEWS , Slider , கட்டுரை ஆறாவது தொடர் இந்தநிலையில் பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது 1983 ஜுலை 23ஆம் தேதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 15 இராணுவத்தினர்களின் சடலங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று கொழும்பு - பொரள்ளை மயானத்தில் அடக்கம் செய்வதன்மூலம் மக்களை திரட்டி வன்முறை ஒன்றினை தோற்றுவிப்பதற்கான சூழலை ஜே.ஆரின் அரசாங்கம் ஏற்படுத்தியது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சிறில் மெத்யு மேற்கொண்டிருந்தார். அன்றைய போராட்ட வரலாற்றில் முதன் முறையாக இவ்வளவு பெரியளவில் இராணுவத்தினர் கொல்லப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதனால் சிங்கள இளைஞர்கள் தூண்டப்பட்டு தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளில் இறங்கினர். இதுவே ஜூலைக் கலவரம் எனப்படுகிறது. இந்த ஜூலைக் கலவரத்திற்கும் ஜே.வி.பி யினர்களுக்கும் சம்பந்தம் உள்ளதென்று பாதிக்கப்பட்ட தரப்புக்களான எந்தவொரு தமிழ் இயக்கங்களோ அல்லது தமிழ் கட்சிகளோ அல்லது தமிழ் வரலாற்றுக் குறிப்புக்களிலோ குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக ஜே.ஆரின் அரசாங்கத்தை மாத்திரமே குற்றம்சாட்டினர். ஆனால் ஜே.ஆரின் அரசாங்கம் ஜே.வி.பி மீது பழியை சுமத்தி அவர்களது இயக்கத்தை முற்றாக தடை செய்ததன் காரணமாக ஜனநாயக அரசியலில் பங்கெடுத்த ஜே.வி.பி யினர் மீண்டும் வன்முறை அரசியலுக்கு தூண்டப்பட்டனர். அதாவது ஜே.வி.பி யை ஜனநாயக அரசியலிலிருந்து வன்முறை அரசியலுக்குள் தள்ளியது ஜே.ஆரின் அரசாங்கம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. அதுமட்டுமல்லாது ஜூலைக் கலவரத்தின் பின்புதான் தமிழர்களின் ஈழப்போராட்டம் புத்தெழுச்சி பெற்றது. இவைகள் அனைத்துக்கும் ஜே.ஆரின் சர்வாதிகார நடவடிக்கைகளே காரணமாகும். 1987 இல் இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை ஜே.வி.பி கடுமையாக எதிர்த்ததுடன், இந்திய அமைதிப் படையினரின் இலங்கை வருகைக்கு எதிராக செயற்பட்டது. இதே நிலைப்பாட்டில் பிரேமதாசாவும், விடுதலைப் புலிகளும் இருந்தனர். அத்துடன் இந்தியப் படையை வெளியேற்றும் போராட்டத்திற்காக ஜே.வி.பி க்கு புலிகள் ஆயுதங்களை வழங்கி உதவி புரிந்ததாக அப்போது சில செய்திகள் கசிந்தது. 1987 தொடக்கம் 1989 வரைக்கும் இந்திய அமைதிப் படையினர் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே மீண்டும் ஜே.வி.பி யினர் தெற்கில் தாக்குதல்களை ஆரம்பித்தனர். ஜே.வி.பி யின் இந்த இரண்டாவது கிளர்ச்சியானது 1971 இல் நடைபெற்ற முதலாவது கிளர்ச்சியை போன்று தங்களது அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி ஒரே தடவையில் ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக ஆங்காங்கே குண்டுவெடிப்புக்களும், வங்கிக் கொள்ளைகளும், பொலிஸ் நிலையம், இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இதில் கண்டி பல்லேகல இராணுவ முகாம், கட்டுநாயக்க மற்றும் பண்ணல விமானப்படை தளங்கள், பாராளுமன்றம் மீதான தாக்குதல் மற்றும் இந்திய படையினர் மீதான சில தாக்குதல்களும் முக்கியமான தாக்குதல் சம்பவங்களாகும். மூன்றாண்டுகள் நடைபெற்ற ஜே.வி.பி யினர்களுடனான சண்டைகள் 1989 நவம்பரில் இல் அதன் தலைவர் ரோகன விஜயவீர கைது செய்யப்பட்டதன் பின்பு முடிவு நிலையை அடைந்தது. இந்த சண்டைகளில் சுமார் அறுபதாயிரம் (60,000) உயிர்கள் பலியானதுடன் பலர் காணாமல் போனார்கள். ஏராளமான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டது. குறிப்பாக அரச சொத்துக்கள் பெருமளவில் சேதமாக்கப்பட்டன. தென்னிலங்கையின் பல பிரதேசங்களிலும் ஆங்காங்கே மூலை முடுக்குகளிலெல்லாம் பிணங்கள் வீசப்பட்டுக் கிடந்தது. குறிப்பாக வீதிகளில் டயர்களில் எரிந்த நிலையிலும், குளக்கரைகளிலும் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட பிணங்களுக்கு குறைவிருக்கவில்லை. மேலும் களனி கங்கை, நில்வளவ கங்கை போன்ற கங்கைகளில் அடிக்கடி பிணங்கள் மிதந்து வருகின்ற காட்சிகள் காணப்பட்டது. ஜே.வி.பி யுடன் சம்பந்தட்டவர் என்று சந்தேகப்பட்ட அனைவரும் பிணமாக காட்சியளித்தனர். இதில் ஏராளமான பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணமல் ஆக்கப்பட்டனர். அவைகள் ஒருபுறமிருக்க உலகை திரும்பிப் பார்க்கச்செய்யும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதுதான் சூரியகந்த மனிதப் புதைகுழியாகும். பாரியளவிலான இந்த மனிதப்புதைகுழி கண்டெடுக்கப்பட்டு தோண்டப்பட்டது. காணாமல் போனவர்கள், தடுத்துவைத்து சித்திரவதை செய்யப்பட்டு பின்பு கொலை செய்யப்பட்டு இரகசியமாக புதைக்கப்பட்டிருக்க முடியும். தொடரும்.......... முகம்மத் இக்பால் ஜனாதிபதி பிரேமதாசாவும், பட்டலந்த வதை முகாமும். ஜே.வி.பி யின் இரண்டாவது எழுச்சி 1987, 1988, 1989 ஆகிய மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது. குறித்த காலகட்டத்தில் வடகிழக்கில் தமிழ் இயக்கங்களுடனான சமாதான பேச்சுவார்த்தை, இந்தியப் படைனர்களின் வருகை, தமிழ் இயக்கங்களின் ஆயுதக் களைவு, இந்தியப் படையுடன் விடுதலைப் புலிகளின் யுத்தம், வடகிழக்கு மாகாண சபை தேர்தல் என தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனம் அனைத்தும் வடகிழக்கு பகுதியை முதன்மைப் படுத்தியதாக இருந்தது. இதன் காரணமாக தென்னிலங்கையில் ஜே.வி.பி யின் தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் அதற்கு எதிராக நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை முதன்மைப்படுத்தவில்லை. இந்த நிலையில் ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்பு ஜே.வி.பி யினரை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் அவரது அழைப்பை ஜே.வி.பி நிராகரித்தது. ஜனாதிபதி பிரேமதாசாவிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரது அரசியல் எதிரிகளை விட்டுவைப்பதில்லை. அதாவது மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள அமைப்புக்கள் குறிப்பாக தனக்கு போட்டியாக உள்ளவர்கள் அல்லது எதிர்காலத்தில் போட்டியாக வரக்கூடியவர்கள் ஆகியோர்களை முதலில் தனக்கு நண்பர்களாக மாற்றிகொண்டு அரசியல் செய்ய முற்படுவார். அது சாத்தியமற்றதாக இருந்தால் அவர்களை போட்டுத் தள்ளிவிடுவார். இதுதான் பிரேமதாசாவின் கொள்கை. சிங்களப் பகுதிகளில் எப்போதுமில்லாத அளவில் ஜே.வி.பி க்கு செல்வாக்கு அதிகரித்துக் காணப்பட்டது. அதனால்தான் ஜே.வி.பி யின் கொள்கைகள் பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அவர்களை அரசியல் பங்காளிகளாக ஆக்கிக்கொள்வதற்காக சமாதான பேச்சுக்கு அழைத்திருந்தார் பிரேமதாச. தென்னிலங்கையில் ஜே.வி.பி யினர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை உக்கிரமடைந்தது. இதற்கென்று விசேடமாக “ப்ளக் கெட்ஸ், யெலோ கெட்ஸ், ஸ்கோபியன், ஈகிள்ஸ்” போன்ற துணைப்படைகள் அமைக்கப்பட்டதுடன், பல வதைமுகாம்கள் பிரேமதாசா அரசினால் உருவாக்கப்பட்டது. அந்தவகையில் ஜே.வி.பி யின் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய ரணில் விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டதுதான் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட “பட்டளந்த” வதைமுகாமாகும். சித்திரவதை என்ற வார்த்தைக்கு அர்த்தமே பட்டலந்ததான் என்று கூறப்படுகின்றது. பின்னாட்களில் சந்திரிக்கா ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்ததன் பின்பு பட்டலந்த விசாரணை ஆணைக்குழு 1996 இல் நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தது. அதில் கொல்லப்பட்டவர்களில் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என கண்டறியப்பட்டது. 1988 இல் கம்பஹா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 64 கட்டடங்களை உள்ளடக்கிய இரசாயன உர ஆலை அதிகாரிகள் விடுதியையே இலங்கை பொலிஸ் தனது முக்கியமான சித்திரவதை முகாமாக மாற்றியிருந்தது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அந்த சிறப்பு முகாமிற்கு பொறுப்பாக செயற்பட்டார். கடத்தி வரப்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் நிர்வாணமாக கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சுமார் பத்தாயிரம் இளைஞர்கள் இந்த வதை முகாமில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. பட்டலந்த வதைமுகாம் படுகொலைகள் பற்றி 1996 நவம்பரில் குற்றத்தடுப்பு பிரிவினராலும், 1997 ல் ஜனாதிபதி ஆணைக் குளுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார். பின்பு பதினொரு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அவர்களை கைதுசெய்ய இருந்த நிலையில் அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றிருந்தார். தொடரும்............ முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2024/09/blog-post_47.html
-
கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு- கண்ணீர் விட்டு கதறும் தாய்
கலாபூஷணம் பரீட் இக்பால் கிளிநொச்சியில் பறிபோகும் நிலையில் 50 வருடம் வாழ்ந்த இடம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக விடுதலை புலிகளினால் ஒட்டுமொத்த வடமாகாண முஸ்லிம்களும் குறுகிய மணித்துளியில் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் உலகம் அறிந்த விடயம். . 34 வருடங்கள் கடந்தும் விரட்டி அடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் சிலரால் அபகரிக்கப்பட்டதால் கிளிநொச்சி பிரதான வீதி கந்தசாமி கோயில் முன்பாக இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமான முறையில் அவர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 34 வருடம் கடந்தும் அவர்கள் புத்தளம் போன்ற பகுதிகளில் அகதிகளாக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் பல தடவை மாவட்டச் செயலகம் பிரதேச செயலகம் போன்றவற்றுக்கு பல முறைப்பாடுகளை கொடுத்தும் அவர்களுக்கான தீர்வை அவர்களினால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை 09/09/2024 திங்கட்கிழமை காலை ஊடக சந்திப்பில் யாழ் முஸ்லிம் வட்டார சர்வதேச மனித உரிமைகள் பணிப்பாளர் ஆரிப் அப்துல் பரீட் அவர்கள் கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு விடயம் சம்பந்தமாக பத்திரிகையாளர்களை ஒன்று கூட்டி விபரித்தார். பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு தங்களின் அவல நிலைகளை பத்திரிகையாளர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சகல ஆவணங்கள் இருந்தும் அவர்களுடைய சொந்த இடத்துக்கு செல்ல முடியாத அவல நிலையை கண்ணீரோடு தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில் சர்வதேச மனித உரிமை அமைப்பின் செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் போன்றவர்கள் இந்த ஏழைகளுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம் https://madawalaenews.com/4225.html
-
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
ஆம் 70களின் ஆரம்பத்தில் பிறந்த என் வயதையொத்த என் சிங்கள நண்பர்கள் 1990 களின் நடுப்பகுதியில் தாங்களை ஒரு தேசாபிமானியாக காட்டிக்கொண்டார்கள். பழக இனிமையானவர்கள் என்றாலும் இனவாதமும் சிங்கள பவுத்த மேலாதிக்கம் இவர்களிடம் எப்பொழுதும் இருக்கும். புலிகளையும், தமிழ் மக்களையும் பற்றி இழிவாகவே கதைப்பார்கள், என்ன ஆச்சர்யம், இன்று இவர்களில் பலர் வெளினாடுகளிலேயே இருக்கின்றார்கள். தாங்கள் பிள்ளைகளை வெளினாடுகளுக்கு அனுப்பிவிட்டு 50 வயதை கடந்த இவர்களும் வெளினாடுகளுக்கு ஓடி விட்டார்கள் அங்கிருந்து இலங்கையயை தூசிக்கின்றார்கள். காலம் எப்படி இவர்களை மாற்றிவிட்டது.
-
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
எம்.எல்.எம்.மன்சூர் சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஓர் இயல்பை கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி தேர்தல்களில் இதுவரையில் இருந்து வந்த இரு முனைப் போட்டி இந்தத் தடவை ஒரு நான்கு முனைப் போட்டியாக மாற்றமடைந்திருப்பது முதலாவது விசேஷம். பலர் நாமல் ராஜபக்சவின் பெயரை தவிர்த்து ‘இது ஒரு மும்முனைப் போட்டி’ என்று சொல்லி வந்தாலும் கூட, நாமலும் ஒரு குறிப்பிடத்தக்க போட்டியாளராக இருந்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல்களில் இதுவரையில் 5% க்கு குறைவான வாக்குகளை மட்டுமே பெற்று வந்த ஒரு விளிம்பு நிலைக் கட்சி ஒரு முதன்மை போட்டியாளராக எழுச்சியடைந்திருப்பது இரண்டாவது சிறப்பம்சம். 1990கள் தொடக்கம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது சிங்கள சமூகத்தின் கொடிய எதிரிகளாக கட்டமைக்கப்பட்டு வந்த தமிழ் பிரிவினைவாதம், டயஸ்போரா சமூகம் மற்றும் 2019 இல் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் போன்ற கோஷங்கள் பிரச்சார மேடைகளிலிருந்து தலைமறைவாகியிருப்பது. அடுத்த விசேஷம். அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் வெளிப்படையாக இனவாதம் பேசப்படாமல் நடத்தப்படும் முதலாவது தேர்தல் இது. சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் (Sinhala Heartland) தெளிவாகவே ஒரு ஜேவிபி / என்பிபி ஆதரவு அலை நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெவ்வேறு தரப்புக்களால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் மீண்டும் மீண்டும் இதனை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் ஆய்வாளர்களும் கூட ‘ஆம் அவர்களுக்கு ஒரு ஆதரவு அலை இருந்து வருகிறது; அதை மறுக்க முடியாது’ என்ற பீடிகையுடனேயே தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதே வேளையில், சஜித் மற்றும் ரணில் ஆகியோர் இந்தத் தடவை முன்வைத்திருக்கும் பிரச்சார சுலோகங்கள் பெரிதாக வாக்காளர்களை கவரக்கூடியவையாக இருந்து வரவில்லை. சார்புரீதியில், ஜேவிபி / என்பிபி அணிக்குக் கிடைத்திருக்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அனுகூலம் – ‘எதிரி யார்’ என்பதை தெளிவாக அடையாளம் காட்டக் கூடிய ஆற்றல். சஜித் அணியை பொறுத்தவரையில் அவர்கள் ‘வீழ்த்த விரும்பும் முதன்மை எதிரி’ யார் என்பது அவர்களுக்கே தெளிவில்லாமல் இருப்பது முக்கியமான ஒரு பலவீனம். ராஜபக்சகளின் அரவணைப்பில் இருந்த பலரை தனது அணிக்குள் உள்ளீர்த்துக் கொண்ட பின்னர் ‘திருடர்களை களை எடுப்போம்’ போன்ற ஜனரஞ்சக சுலோகங்களை முன்வைக்கும் தார்மீக உரிமையை இழந்திருக்கிறார் சஜித். அவருடைய மற்றொரு பலவீனம் இன்றைய இலங்கையின் பொருளாதார யதார்த்தங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத விதத்தில் கோமாளித்தனமான வாக்குறுதிகளை வழங்குவது. சொல்லப்போனால் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன போன்ற நாட்டு நடப்புக்களை நன்கு அறிந்து வைத்திருக்கும் SJB முக்கியஸ்தர்களை பெரும் சங்கடத்தில் நெளிய வைக்கும் வாக்குறுதிகள் அவை. ‘அநுர குமாரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்களுக்கும் கொடுத்துப் பார்ப்போமே’ என்பது. அதாவது, ‘இவ்வளவு காலமும் எத்தனையோ பேருக்கு வாக்களித்து ஏமாந்திருக்கிறோம். கடைசியில் இன்றைய வங்குரோத்து நிலைதான் எமக்கு எஞ்சியிருக்கின்றது’ என்ற ஆதங்கமே இந்தப் பேச்சுக்களில் தொனிக்கிறது. அதனையே அதாவது – ‘ இந்தத் தடவை திசைகாட்டிக்கு’ என்று மக்கள் சொல்வதையே – ஜேவிபி/ என்பிபி அணி தனது பிரச்சார சுலோகமாக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, 2022 அறகலய மக்கள் எழுச்சிக்குப் பின்னர் நாட்டில் உருவாக்கியிருக்கும் ஜேவிபி/ என்பிபி ஆதரவு அலையின் குடிசனவியல் பண்புகள் (Demographic Features) எவை, புதிதாக ஜேவிபி ஆதரவாளர்களாக சேர்ந்திருக்கும் பல இலட்சக் கணக்கானவர்கள் எங்கிருந்து வந்தார்கள், இந்த முடிவை நோக்கி அவர்களைத் தள்ளிய சமூக, உளவியல் காரணிகள் எவை போன்ற கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் 2004 வரைக்கும் பின்நோக்கிச் செல்ல வேண்டும். 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஜாதிக ஹெல உருமய (JHU) கட்சி சார்பில் மேல் மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 9 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் புத்த பிக்குகள். விடுதலைப் புலிகளுடனான போரை சந்திரிகா – மங்கள அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் விரக்தி நிலையில் இருந்து வந்த தீவிர சிங்கள -பௌத்த உணர்வாளர்களின் ஒரு பிரிவினரே இவ்விதம் திடீர் JHU ஆதரவாளர்களாக மாறியிருந்தார்கள். அவர்களை அவ்விதம் அணி திரட்டுவதில் பாட்டலி சம்பிக்க ரணவக்க முதன்மையான ஒரு பாத்திரத்தை வகித்திருந்தார். கங்கொடவில சோம தேரர் உருவாக்கிய பௌத்த எழுச்சி அலையினால் தூண்டப்பட்டிருந்த ஒரு பிரிவினரின் இன உணர்வுகளை அச்சந்தர்ப்பத்தில் ரணவக்க மிகவும் சாதுர்யமாக தனக்கு சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இந்தச் சமூகப் பிரிவினர் மேல் மாகாணத்தில் – குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் – செறிந்து வாழ்ந்து வருகிறார்கள். 1980 களில் உருவாகிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்று, வெளி மாகாணங்களிலிருந்து வந்து கொழும்பு புற நகர் பகுதிகளில் குடியேறியவர்கள். ஜே.ஆர். அறிமுகம் செய்து வைத்த திறந்த பொருளாதார கொள்கையின் மூலம் பயனடைந்த முதல் தலைமுறையினர் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்கும் கெஸ்பாவ, கடுவெல, கோட்டே, மகரகம, ஹோமாகம போன்ற கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதிகளில் இந்த வகுப்பினரின் பிரசன்னம் அதிகம். சிங்கள மத்திய தர வரக்கத்தின் ஒரு புதிய பிரிவினரின் எழுச்சியாக (Sociological Phenomenon) அப்பொழுது அது பார்க்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் கெஸ்பாவ மற்றும் மகரகம போன்ற தொகுதிகளில் வாக்குகளின் அடிப்படையில் யூஎன்பியை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு, JHU இரண்டாவது இடத்தை பிடித்துக் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு அப்போதைய சிங்கள பௌத்த அலை வலுவானதாக இருந்து வந்தது. இதேபோல கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் JHU கணிசமான அளவிலான வாக்குகளை பெற்றுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் இந்தப் பிரிவினர் 21 ஆம் நூற்றாண்டு சிங்கள பெருந் தேசியவாதத்தின் ‘Trendsetter’ களாக உருவாகியதுடன், அவர்கள் தூண்டிவிட்ட அந்த உணர்வு சிங்கள சமூகம் நெடுகிலும் மிக வேகமாக பரவியது. 2010, 2019 ஜனாதிபதி தேர்தல்களில் முறையே மஹிந்தவுக்கும், கோட்டாபயவுக்கும் இப்பிரிவினரே அமோக ஆதரவை வழங்கியிருந்தார்கள். 2022 பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் போன்ற பிரச்சினைகள் அவர்கள் இதுவரையில் அனுபவித்து வந்த ‘Comfort Zone’ இலிருந்து அவர்களை வெளியில் எடுத்து வந்தன. அந்த நிலையில், ராஜபக்சகளை ஆதரித்த அதே அளவு தீவிரத்துடன் அவர்களை எதிர்க்கவும் தொடங்கினார்கள். சுருக்கமாகச் சொன்னால் 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய படித்த சிங்கள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பல இலட்சக்கணக்கில் இப்பொழுது திசைகாட்டியின் பக்கம் வந்திருக்கிறார்கள். இந்த அலை ‘கம்யூனிஸ்ட் / சோஷலிச ஆதரவு அலை அல்ல’. என்பதை முதலில் சொல்ல வேண்டும். அநுர குமாரவும், அந்த அணியின் ஏனைய தலைவர்களும் (குறிப்பாக லால் காந்த போன்றவர்கள்) அதனை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஜேவிபி / என்பிபி மேடையில் கழுத்துப்பட்டி அணிந்த கனவான்கள் ஏராளம் பேர் உட்கார்ந்திருக்கும் காட்சி மற்றொரு சுவாரஸ்யம். யுஎன்பி மற்றும் லங்கா சுதந்திர கட்சி போன்ற பாரம்பரிய கட்சிகளின் பிரச்சார மேடைகளில் கூட முன்னர் அந்த மாதிரியான காட்சிகள் தென்படவில்லை. கட்சிக்கு ஒரு கண்ணியமான, மத்திய தர வர்க்க முகத்தோற்றத்தை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் குறியீடு அது. ஒரு பெரும்போக்கு அரசியல் கட்சியாக (Mainstream Political Party) மாற்றமடைவதற்கு ஜேவிபி செலுத்தியிருக்கும் விலையே என்பிபி அணியின் இணைப்பு. 1971 மற்றும் 1987 – 1989 ஜேவிபி கிளர்ச்சிகளின் போது நிலவிய இலங்கை சமூகம் – குறிப்பாக சிங்கள சமூகம் – இப்பொழுது பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கின்றது. நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் புதிய மத்திய தர வர்க்கத்தினர் எழுச்சியடைந்திருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் நுகர்வு கலாசாரத்தின் பிரமாண்மான வளர்ச்சியின் பின்னணியில் இருந்து வருபவர்கள் அவர்கள். முன்னைய தலைமுறைகளிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்ட அபிலாஷைகளை கொண்டிருப்பவர்கள். இலங்கை பொது சமூகத்தில் 2022 இன் பின்னர் ஓங்கி ஒலித்து வரும் -‘உடனடியாக எமக்கொரு System Change தேவை’, ‘225 பேரையும் துரத்தியடிப்போம்’ போன்ற கோஷங்களை இச்சமூகப் பிரிவினரே கையில் எடுத்திருக்கிறார்கள். காலிமுகத்திடல் அறகலய பூமியில் குமார் குணரத்னத்தின் ‘பெரட்டுகாமி’ கட்சியினால் முன்வைக்கப்பட்ட சுலோகங்கள் அவை. ஒரு விதத்தில், தீவிர கம்யூனிஸ்டுகள் காண விழையும் சமூக மாற்றத்தை வலியுறுத்துபவை. ஆனால், இன்றைய இலங்கையில் அச்சுலோகங்கள் அதே அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இங்கு முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டும். இந்தக் கோஷங்களை முன்வைத்து வருபவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான ‘System Change’ எது? இன்றைய ஊழல் அரசியல்வாதிகளை பிரதியீடு செய்யும் பொருட்டு எந்த வகையான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? அவர்களுடைய ஆதர்ச புர்ஷர்கள் யார்? தனது முறை வரும் வரையில் பொறுமையுடன் கியூ வரிசையில் காத்திருக்கும் ஒரு ஜனாதிபதி. போக்குவரத்து விதி மீறலொன்றை இழைத்து விட்டு அதற்கு அபராதம் செலுத்தும் ஒரு பிரதம மந்திரி. தனது பிள்ளையை பொறுப்புடன் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தையான ஒரு அரச தலைவர் போன்றவர்களை காட்டும் காணொளிகளை புதிய தலைமுறையினர் பிரமிப்புடன் பார்க்கிறார்கள். தமது ஆதர்சங்களாக அவர்களை கொண்டாடி வருகிறார்கள். ஆனால், மேற்படி உதாரணங்கள் அனைத்தும் லிபரல் ஜனநாயக நாடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தான் இங்குள்ள சுவாரஸ்யம். ஊழல், முறைகேடுகள் இல்லாத எவருக்கும் பாரபட்சம் காட்டாத அரச நிர்வாக கட்டமைப்புக்களுக்கான ஆதர்சங்களாகவும் இந்த மேலைய லிபரல் ஜனநாயக நாடுகளையே இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். “நான் சுதந்திரத்திற்கு முன்னர் பிறந்தவன். வாழ்நாள் முழுவதும் ஒரு தேசாபிமானியாகவே இருந்திருக்கிறேன். எனது வாழ்க்கையின் முதல் 75 ஆண்டுகளை இந்த மண்ணிலேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடியாத நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் எனது பிள்ளைகள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார்கள். அவர்களுடைய வற்புறுத்தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அளவுக்கு சீரழிந்தவர்களாக இருந்து வருகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு முன்னணி சிங்கள நாடகக் கலைஞர். மேற்படி கூற்று இன்று ஜேவிபி / என்பிபி அணியின் பின்னால் திரண்டிருக்கும் சிங்கள மத்திய தர வர்க்கத்தினரின் மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றின் துல்லியமான ஒரு பிரதிபலிப்பு எனச் சொல்லலாம். சரியாகச் சொன்னால் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் அவர்கள் ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் நவ லிபரல் பொருளாதாரத்தின் ஆதரவாளர்கள். ஆகவே, இந்தப் பின்னணியில், அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வைக்கும் விடயத்திலும், அவர்களை தமது அணிக்குள் தக்க வைத்துக் கொள்ளும் விடயத்திலும் ஒரு எதிர்கால ஜேவிபி / என்பிபி அரசாங்கம் கடும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (வெற்றியின் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார வெற்றியீட்டினால் அது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய மாற்றமாக (Paradigm Shift) வரலாற்றில் பதிவு செய்யப்படும். மறுபுறத்தில், ஜேவிபி/என்பிபி வேட்பாளர் தோற்றாலும் கூட, அதனை அந்த அணி எதிர்கொண்ட ஒரு பின்னடைவாக கருத வேண்டியதில்லை. ஏனென்றால், வாக்குகளின் அடிப்படையில் அது நிச்சயமாக நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக எழுச்சியடைந்திருக்கும். அந்த மாற்றமும் இலங்கை அரசியலுக்கு இதுவரையில் இல்லாத ஒரு புதிய இயங்கியலை (Dynamics) எடுத்து வர முடியும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/17705
-
ரணில் ஒரு வடக்கு தமிழ் இனவாதி என்றால் சுமந்திரன் தமிழினத்தின் துரோகி
ஊடகவியலாளர்- ஏ சி பௌசுல் அலிம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிப் பழகி வந்த சுமந்திரன் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, தனிநபர் சட்ட முன்வரைவுகளை தடுப்பதற்கு சாட்சி சமர்ப்பித்து, ரணில் விக்ரமசிங்கவை இனவாதி என குற்றம் சுமத்தியுள்ளர். தமிழ் மக்கள் சுமந்திரன் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு அறிந்துள்ள நிலையில், அவர் ரணிலை குற்றம் சுமத்துவதற்கு எந்த தகுதியும் இல்லை என்ற கேள்வி எழுகிறது. ஒன்றாக இருந்து குழிபறித்த கூட்டத்தில் இருந்தவர் சுமந்திரன் என்பதை அவர் மறக்க முடியுமா? என்று கேட்க வேண்டி இருக்கிறது. சுமந்திரன் ஒரு சட்ட வல்லுநராகவும், வாதத் திறமை கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால், அவர் மனசாட்சியை தொட்டுப் பேச வேண்டும். ரணிலை நம்ப வைத்து மோக்ஷம் செய்தவர் சுமந்திரன் என்பது தமிழ் மக்களுக்குப் புதிதல்ல ஏனைய மக்களும் இதை நன்கு அறிந்துள்ளனர். சம்பந்தன் ஐயா உயிரோடு இருந்தபோது அவரோடு இணைந்து உறவாடி தமிழினத்தை ஏமாற்றி வந்தவர் இன்று சம்பந்தன் ஐயா உயிரோடு இருந்திருந்தால் இந்த இழிவான செயல்களை கண்டித்திருப்பார் என்பது நிச்சயம். தமிழர் சமூகத்தின் நலனை முன்னெடுக்கும் வழியில் செயல்பட்டிருந்தால் தமிழரசு கட்சியும், சுமந்திரனும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து அவருக்கு ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு சுமந்திரன் செய்திருக்கும் செயல்கள், ரணிலின் முதுகில் குத்திய கொடுமையான செயலாகவே தமிழர் சமூகத்தால் பார்க்கப்படுகின்றன. ரணில் எப்படிப்பட்டவர் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ளனர் அவர் ஒருபோதும் தமிழினத்துக்கு எதிரானவர் அல்ல.வடக்கு மக்களுக்கு குரல் கொடுத்து வந்த ரணிலின் செயல்களை சுமந்திரன் போன்றவர்கள் மறந்தாலும், தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கப் போவதில்லை. சுமந்திரன் அவரின் போலித்தனத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க ஒரு இனவாதி எனக் குற்றம் சுமத்தி அவரை பழிவாங்கும் எண்ணம் கொண்டவர் அல்ல. சுமந்திரன் செய்யும் துரோகத்தை தமிழ் மக்கள் விரைவில் வெளிப்படுத்துவர். ஏற்கெனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் குழப்பம் ஏற்படுத்தி, தமிழரசு கட்சிக்குள் சண்டையை தூண்டியவர் என்று தெரியும். இந்நிலையில் ரணிலை இனவாதி என சுமந்திரன் சொன்னால், அவரே அதைவிட மோசமான இனவாதியாக இருக்கும். தமிழ் மக்கள் சுமந்திரனின் துரோகித்தனத்தை நன்கு அறிந்து கொண்டுள்ளனர். வெற்றி, தோல்வி எதுவாயினும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயங்கியவர் சுமந்திரன் என்பதால், அவரை மக்கள் எப்படி நம்பப் போகிறார்கள்? சுமந்திரனின் போலித்தனமான முகம் கலைந்து விட்டது; அவரை நம்புவதற்கு தமிழ் மக்கள் தயங்குகின்றனர். ஹக்கீம், ரிஷாட் போன்ற முஸ்லிம் தலைவர்கள் சஜித் பக்கம் சென்றதால் அச்சம் கொண்டு, தன்னிச்சையாக தமிழரசு தீர்மானம் என அறிவித்துள்ளார் சுமந்திரன். தமிழரசு முக்கிய குழுவினர் கூட அவரது முடிவை எதிர்த்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டார்கள். சஜித்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் தான் சுமந்திரன் ரணிலை கைவிட்டு, சஜித்திடம் நல்ல பெயர் வாங்க முற்பட்டார். சட்டப் பாடத்தை நன்கு கற்றவர் அரசியல் பாடத்தை இன்னும் கற்றுக் கொள்ளாததுதான் கவலையாகும். சுமந்திரன் இன்னும் எத்தனை போலி நாடகங்களை அரங்கேற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். https://madawalaenews.com/3772.html
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
சுவிசில், சுவிஸ் ஆர்மி கத்தி (swiss army knife) பிரபலம் என்று கேள்விப்ப்ட்டுள்ளேன். அதை கையில் வைத்து காட்டி, சுழற்றி படம் பிடித்தாரோ தெரியாது.
-
கோட்’ விமர்சனம்.. காந்தியா? ஜீவனா? யார் ஹீரோ.. யார் வில்லன்?.. வெற்றி பெற்றாரா விஜய்?
சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதையெல்லாம் கடந்து கோட் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.. கோட் படத்தின் கதை: SATS (Special Anti-Terrorist Squad) எனப்படும் ரகசிய படையின் தலைவராக காந்தி (விஜய்) இருந்து வந்த போது வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை விஜய் மற்றும் அவரது டீமில் உள்ள பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முறியடித்து வருகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது. அதன் பின்னர் நடக்கும் மோதல்களும், பாச போராட்டமும் தான் இந்த கோட் படத்தின் கதை. படம் எப்படி இருக்கு?: ஒட்டுமொத்த படத்தையும் டபுள் ஆக்ஷனில் விஜய் தனது தோளில் தாங்கி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என விஜய்யின் டீமில் உள்ளவர்களின் நடிப்பும் அவர்களுக்குள் நடக்கும் ட்விஸ்ட்டும் கலக்கல். இளம் விஜய்யாக வரும் டீ ஏஜிங் விஜய்க்கு ஜீவன் என பெயர் வைத்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் அவர் பண்ணும் சேட்டைகள் மற்றும் அலப்பறைகள் தான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. யோகி பாபு, பிரேம்ஜியின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. விஜய்யும் காமெடி காட்சிகளில் தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம் உள்ளிட்டோருக்கு சரியான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கேமியோக்கள் அதிரடி: விஜயகாந்தின் ஏஐ கேமியோவின் சீக்ரெட் ட்விஸ்ட் மூலமாகத்தான் படமே தொடங்குகிறது. ஏற்கனவே சோஷியல் மீடியாவில் லீக்கான பல பிரபலங்களும் கேமியோவாக நடித்து தூள் கிளப்பியுள்ளனர். அதிலும், கிளைமேக்ஸ் கேமியோ வேறலெவல். பிளஸ்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அந்த இறுதி கிளைமேக்ஸ் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் இளம் விஜய்யின் டீ ஏஜிங் அந்நியமாக தெரிந்தாலும், படம் போகிற போக்கில் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததே இந்த படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. வெங்கட் பிரபு விஜய் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான படம் பிடிக்கும் என்பதை பார்த்து ஸ்க்ரீன்பிளே செய்திருக்கும் விதம் சிறப்பு. தளபதி விஜய் இப்படியெல்லாம் நடித்து விட்டு தமிழ் சினிமாவை விட்டே செல்லப் போகிறேன் என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். மைனஸ்: டீ ஏஜிங், சிஜி குறைகள் படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்தாலும், சில இடங்களில் அடிவாங்கத்தான் செய்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வேகத்தடையாக மாறியுள்ளது. தளபதிக்கும் இளைய தளபதிக்கும் இடையேயான மோதல்கள், வில்லன் போர்ஷன் உள்ளிட்ட இடங்களில் இன்னமும் ஸ்ட்ராங்கான விஷயங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சில இடங்களில் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட சினிமாட்டிக் லிபர்ட்டி மற்ற ஆடியன்ஸை கவருமா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. சில சில குறைகளை தவிர்த்து விட்டு ஒட்டுமொத்தமாக படமாக பார்த்தால் நிச்சயம் இந்த கோட் பிளாக்பஸ்டர் தான். சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதையெல்லாம் கடந்து கோட் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.. கோட் படத்தின் கதை: SATS (Special Anti-Terrorist Squad) எனப்படும் ரகசிய படையின் தலைவராக காந்தி (விஜய்) இருந்து வந்த போது வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை விஜய் மற்றும் அவரது டீமில் உள்ள பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முறியடித்து வருகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது. அதன் பின்னர் நடக்கும் மோதல்களும், பாச போராட்டமும் தான் இந்த கோட் படத்தின் கதை. படம் எப்படி இருக்கு?: ஒட்டுமொத்த படத்தையும் டபுள் ஆக்ஷனில் விஜய் தனது தோளில் தாங்கி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என விஜய்யின் டீமில் உள்ளவர்களின் நடிப்பும் அவர்களுக்குள் நடக்கும் ட்விஸ்ட்டும் கலக்கல். இளம் விஜய்யாக வரும் டீ ஏஜிங் விஜய்க்கு ஜீவன் என பெயர் வைத்துள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் அவர் பண்ணும் சேட்டைகள் மற்றும் அலப்பறைகள் தான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. யோகி பாபு, பிரேம்ஜியின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. விஜய்யும் காமெடி காட்சிகளில் தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம் உள்ளிட்டோருக்கு சரியான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கேமியோக்கள் அதிரடி: விஜயகாந்தின் ஏஐ கேமியோவின் சீக்ரெட் ட்விஸ்ட் மூலமாகத்தான் படமே தொடங்குகிறது. ஏற்கனவே சோஷியல் மீடியாவில் லீக்கான பல பிரபலங்களும் கேமியோவாக நடித்து தூள் கிளப்பியுள்ளனர். அதிலும், கிளைமேக்ஸ் கேமியோ வேறலெவல். பிளஸ்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அந்த இறுதி கிளைமேக்ஸ் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் இளம் விஜய்யின் டீ ஏஜிங் அந்நியமாக தெரிந்தாலும், படம் போகிற போக்கில் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததே இந்த படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. வெங்கட் பிரபு விஜய் ரசிகர்களுக்கு என்ன மாதிரியான படம் பிடிக்கும் என்பதை பார்த்து ஸ்க்ரீன்பிளே செய்திருக்கும் விதம் சிறப்பு. தளபதி விஜய் இப்படியெல்லாம் நடித்து விட்டு தமிழ் சினிமாவை விட்டே செல்லப் போகிறேன் என்பது நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். மைனஸ்: டீ ஏஜிங், சிஜி குறைகள் படத்தின் பட்ஜெட் பெரிதாக இருந்தாலும், சில இடங்களில் அடிவாங்கத்தான் செய்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வேகத்தடையாக மாறியுள்ளது. தளபதிக்கும் இளைய தளபதிக்கும் இடையேயான மோதல்கள், வில்லன் போர்ஷன் உள்ளிட்ட இடங்களில் இன்னமும் ஸ்ட்ராங்கான விஷயங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சில இடங்களில் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட சினிமாட்டிக் லிபர்ட்டி மற்ற ஆடியன்ஸை கவருமா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. சில சில குறைகளை தவிர்த்து விட்டு ஒட்டுமொத்தமாக படமாக பார்த்தால் நிச்சயம் இந்த கோட் பிளாக்பஸ்டர் தான். https://tamil.filmibeat.com/reviews/goat-review-in-tamil-vijays-double-action-avatar-is-pakka-treat-to-thalapathy-fans-141135.html
-
யார் வெல்வார்?
ஸஃபார் அஹ்மத் ahmedzafaar@gmail.com ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் களத்தின் வெப்பம் தறிகெட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அனுமார் வால் போன்று முப்பத்தெட்டு வேட்பாளர்களுடன் வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் போட்டி என்ற ஒன்று இருப்பதோ மூன்று பேருக்கும் இடையில் தான். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அழிவில் இருந்த நாட்டை தான் மீட்டெடுத்ததாய்க் கூறிக் கொண்டு களமிறங்கி இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமோ அள்ளி வீசுவதற்குக் கட்டுக் கட்டாய் வாக்குறுதிகள் அவர் சட்டைப்பையில் பத்திரமாய் இருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, சம்பூரணமான அரசியல் ஒழுங்கு மாற்றம் என்று கூறிக் கொண்டு பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். தனிப்பட்ட குரோதங்களால் பகைத்துக் கொண்டும், முறைத்துக் கொண்டுமிருந்தாலும் சஜித்தும், ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒரே பாசறையில் வளர்ந்தவர்கள். ஆரம்பகாலத்தில் ரணில் செய்வது எல்லாம் நாம் முன்வைக்கும் பொருளாதார சீர்திருத்தங்கள் தான் என்று சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா வீணை வாசித்துக் கொண்டிருந்தார். இப்போது என்ன ஆனதோ தெரியவில்லை.ஹர்ஷ எதையும் சொல்வதில்லை. ஹர்ஷ உட்பட பதினைந்து, இருபது பேர் ரணிலிடம் சரணாகதியடைவார்கள் என்று கடந்த இரண்டு வருடமாய் உலாவிய வதந்தியும் அப்படியே செத்துப் போய்விட்டது. வேறு வழியின்றி ரணில், மக்களின் பரிகாசத்திற்கும், எள்ளலுக்குமுள்ளான பொதுஜன முன்னணியின் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு பவனி வருகிறார். நூறுக்கும் மேற்பட்ட பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் இன்று ராஜபக்சாக்களைக் கைவிட்டு விட்டு ரணிலோடு இருக்கிறார்கள். பேசாமல் ரணிலை பொதுஜன முன்னணியின் தலைவராக நியமிக்கலாம் போல இருக்கிறது. தேர்தல் கோலங்களை அவதானிக்கும் போது எல்லோருக்கும் பொது எதிரியாய் தேசிய மக்கள் சக்தி இருப்பதாகத் தெரிகிறது. தொட்டதுக்கெல்லாம் குறைபிடிக்கும் கொடுமைக்கார மாமியிடம் அகப்பட்ட மருமகள் போலத்தான் அநுரகுமாரவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் நிலைமை இருக்கிறது. என்னதான் தேசிய மக்கள் சக்தி என்று கூறிக் கொண்டாலும் ஜே.வி.பி சித்தாந்தப்புலத்தில் வளர்ந்தவர்கள் இவர்கள் என்றவாறு 1988/1989ம் ஆண்டு கால ஜே.வி.பி கிளர்ச்சி மீண்டும் சமூகவலைத்ளங்களில் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இம்முறை இந்த சேறுபூசல்கள், வழக்கமான தேர்தல்கால வாக்கியங்கள் எதுவும் பெரியளவில் சிங்கள மக்களிடம் எடுபடவில்லை.1980ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிப்பு, 1981ல் எரிக்கப்பட்ட யாழ்நூலகம், 1982ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடத்தாமல் தன் சொல்படி கேட்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நடத்திய சர்வஜன வாக்கெடுப்பு என்னும் மோசடித் தேர்தல், சிங்கள மக்களின் அரச எதிர்ப்பை மடைமாற்ற அதனைத் தொடர்ந்து 1983ல் ஜே.ஆர் அரசு நடத்திய ஜூலைக் கலவரம் என்று இலங்கை நிரந்தர இருட்டுக்குள் விழுவதற்குக் காரணமான அத்தனையும் புள்ளிவிபரங்களுடன் அதே சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வழக்கமாய் இலங்கைத் தேர்தல்களில் இனவாதம் ஒன்றுதான் பேசு பொருளாகும். ‘தமிழன் நாடு கேட்கிறான். தேசத்தைக் காப்பாற்ற வாக்குப் போடுங்கள்’ என்ற கோஷம் புலிகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை இருந்தது. 2009ம் ஆண்டு புலிகள் முற்றாய்த் துடைத்தெறியப்பட்ட பின்னர் அரசியல் செய்ய ‘இஸ்லாமோபோபியா’ பேசுபொருளானது. 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு கோட்டாபயவிற்கு தேர்தல் விஞ்ஞாபனம் உண்மையில் தேவைப்பட்டிருக்கவே இல்லை. முஸ்லிம் வெறுப்பு அவரை வெல்லவைக்கத் தாராளமாய்ப் போதுமானதாய் இருந்தது. இந்த தேர்தலில் இத்தகு இனவாதப் பரப்புரைகள் எல்லாம் காலியாகிப் போனதற்கு 2022ம் ஆண்டு மக்கள் எழுச்சிக்குப் பிறகான இலங்கையைப் புரிந்து கொள்வது முக்கியம். வயிற்றுப் பசியும், வரிசைகளும், தட்டுப்பாடும் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் இனவாதிகள் எல்லாம் ‘நாங்கள் இனவாதிகள் அல்லர்’ என்று மேடை தோறும் சத்தியம் செய்யுமளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. இதனால் தானோ என்னவோ இப்போது இலங்கை அரசியலில் பெரும் மாற்று சக்தியாய் உருவெடுத்து இருக்கும் ஜே.வி.பிக்கு எப்படி வசைபாடலாம் என்று புரியாமல் பாரம்பரியக் கட்சிகளின் தலைவர்களும், அவர்களது பக்த கோடிகளும் 1988 –1989ம் ஆண்டுகால சர்வநாச சரித்திரத்தில் தம் வகிபாகத்தை இடது கையால் மறைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப பேசிக் கொண்டு இருக்கிறார்கள். சரி, இப்போதைய நிலைமையில் இம்மூன்று போட்டியாளர்களினதும் நிலைமை என்ன? ரணில் வரிசையை ஒழித்தார்தான், தட்டுப்பாட்டை நீக்கினார் தான், அத்தியவசியங்களை பல்பொருள் அங்காடிகளில் ராக்கையில் நிரப்பினார் தான். ஆனால் அதற்காக மக்கள் கொடுத்த விலை ரொம்பவே அதிகம். இது எல்லோரையும் விட ரணிலுக்குத் தெரியும். அவருக்கு தேர்தல் என்றாலே அலர்ஜியாகிவிடுகிறது. உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தது போல ஜனாதிபதித் தேர்தலைத் தள்ளிப் போட அவரால் முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் என்பது அரசியல் சாசனத்தில் தெளிவாய் வரையறுக்கப்பட்ட ஒன்று. அதற்காக ஜனாதிபதித் தேர்தல் என்ற அறிவிப்பைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் இலங்கைப் பிரஜைகளுக்கு அத்தனை இலகுவான காரியமாய் இருக்கவில்லை. ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வசிக்கும் ராஜகுமாரியை அடையப் போகும் போது இளவரசர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் போலத்தான் ரணில் ஜனாதிபதியாக இருக்கும் தேசத்தில் தேர்தலைப் பெற்றுக் கொள்ள மெனக்கிடுவதும் என்பதற்கு கடந்த இரு மாதங்களாய் நடந்து வந்த கண்ணுக்குத் தெரியாத சூழ்ச்சிகளே போதுமான சான்று. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்குப் பிறகு மின்சாரம், நீர்க்கட்டணங்கள் எல்லாம் மூன்று மடங்காகின. அரச ஊழியர்களின் சம்பளப் பெறுமதி முப்பத்தாறு சதவீதத்தால் தேய்மானத்திற்குள்ளானது. கிட்டத்தட்ட இருபத்தைந்து சதவீதமனவர்கள் வறுமைக்கோட்டிற்குள் தடாலடியாய் உள்வாங்கப்பட்டார்கள். வேலையின்மை அதிகரித்தது. இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் மூலப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடுவிழாக் கண்டன. கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் ஆறு லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். இந்த வலியும் வேதனைமிகு தியாகங்களும் சாமானியர்களுக்கு மட்டுமாய் இருந்தது தான் இங்கே சோகம். கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரத்து இருநூறு பில்லியன் ரூபாய்கள் வரி ஏய்ப்பு நடந்து இருப்பதாய்க் கூறுகிறது திறைசேறி. அதாவது இலங்கையின் பிரதான வருவாய் மூலாதாரங்களான சுங்கம், இறைவரித் திணைக்களம், மதுசாரத் திணைக்களம் அறவிடத் தவறிய தொகை இது. இந்த வரிகளை எல்லாம் முறையாக அறவிட எந்தவொரு திட்டமுமின்றி சர்வதேச நாணய நிதியம் சொன்னபடி வரி வருமானத்தை அதிகரிக்க நடந்த கபடி ஆட்டத்தில் மொத்தமாய்ப் பாதிக்கப்பட்டது அப்பாவிகள் தான். 2027 வரை கடன்களை மீள் செலுத்த தேவை இல்லை என்று இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. மற்றபடி, எப்போதும் போல அந்நியச் செலாவணியை அள்ளித் தரும் சுற்றுலாத்துறையும், வெளிநாடு வாழ் இலங்கையர்கள் அனுப்பும் பணமுமே டொலர் கையிருப்பைப் பேண உதவிக் கொண்டு இருக்கின்றன. உற்பத்திகள் என்று எதுவுமில்லை. இஞ்சி, பால், மீன், முட்டை என உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது நிலைமை. இப்படியாக சர்வதேச நாணய நிதியத்தை பூச்சாண்டியாகக் காட்டிக் கொண்டு மக்களின் மானியங்களுக்கும், நிவாரணங்களுக்கும் ஆப்புச் சொருகிய ரணில் இப்போது திடீர் கிறிஸ்மஸ் தாத்தா அவதாரம் எடுத்து இருக்கிறார். 2025 ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 25 முதல் 50 சதவீதமாய் அதிகரிக்கப் போவதாய் சர்வதேச நாணய நிதியமே அரண்டு ஓடுமளவுக்கு ஒரு வாக்குறுதியை அறிவித்து இருக்கிறார். இதற்கு மட்டும் மாதம் மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் மேலதிகமாய் செலவாகும் என்று சொல்லப்படும் நிலையில் தப்பித் தவறி ரணில் வென்றால் இப்பணத்தை திரட்ட யார் மீது வரி விதிப்பார் என்று தெரியவில்லை. மூச்சுவிடுவதற்கும் வரி விதித்தால் தான் இதெல்லாம் சாத்தியம். இதை எல்லாம் தாண்டியும் ரணிலுக்கு வர்த்தக சமூகத்தில் இருக்கும் செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது. ரணில் யாரோடு ஆட்சி செய்தாலும் சரி, இப்படி தெரிந்த பிசாசே இருந்துவிட்டுப் போகட்டும் என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் அபிலாஷைகள் ரணிலை வெல்ல வைக்க இன்றைய திகதியில் போதுமானதாய் இல்லை. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தன் அப்பா முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவைப் போல அரசியலில் ஒரு முதிர்ச்சியான ஒருவரல்ல. சில சமயங்களில் அவரது நடவடிக்கைகளும், பேச்சும் மூடன் – மட்டி கதைகளில் வருவது போன்று இருக்கும். நான் ஜனாதிபதியானால் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்களா என்று அறிந்து கொள்ள இரவு வேளைகளில் உங்கள் வீடு தேடி வருவேன் என்பார். யானை விரட்டும் மந்திரம் சொல்வார். மூன்றாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் ‘என் அருமைத் தோழர்களே! இந்த ரணிலைப் பாருங்கள்’ என்று உரையாற்றி பேட்டை எங்கும் பயப் பிராந்தியை ஏற்படுத்திவிட்டுப் போவார். திடீரென்று ஆங்கிலத்தில் பேசுவார். வெள்ளைக்காரனே தோற்குமளவுக்கு அந்த ஆங்கிலம் இருக்கும். IELTS மாணவர்களுக்கு நல்ல பிரயோசனமாய் இருக்கும். சஜித் பிரேமதாஸ தனக்கு அடித்தள சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது என்று நினைக்கிறார். 2020ம் ஆண்டு ஐ.தே.க யை உடைத்துக் கொண்டு சஜித் பிரேமதாஸ வெளியேறிய போது வழக்கமாய் ரணிலுக்கு ஸலாம் போடும் தமிழ்- முஸ்லிம் கூட்டணிகளும் சஜித்தோடு சேர்ந்து கொண்டன. அதே கூட்டணிதான் இன்னமும் தொடர்கிறது. இவர்களின் தயவில் மலையகம் மற்றும் வடக்கு – கிழக்கில் பெருவாரியான வாக்குகளை அள்ள முடியும் என்பது சஜித்தின் திட்டம். ரணிலோடு ஒப்பிடும் போது சஜித்திற்கு சிங்கள மாவட்டங்களில் வாக்கு வங்கி இருக்கிறது. வடக்கு–கிழக்குக்கு வெளியே தமிழ்–முஸ்லிம்களின் பரவலான ஆதரவும் இருக்கிறது. இதெல்லாம் பலனைத் தருமா என்பதுதான் கேள்வி. சந்தேகமே இல்லை. ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க தான் இம்முறை பெரும்பாலன சிங்கள மக்களின் விருப்பத்திற்குரிய தேர்வு. முன்னர் ராஜபக்ச கம்பெனி கோலோச்சிய இலங்கையின் தெற்கு மாவட்டங்கள் உட்பட வடக்கு – கிழக்கைத் தவிர ஏனைய மாவட்டங்களில் அநுரவின் கொடிதான் பறக்கிறது. கடந்த எழுபத்தாறு வருட காலமாய் மாறி மாறி ஆண்ட பாரம்பரியக் கட்சிகள் மீது ஏற்பட்டு இருக்கும் காரமான விமர்சனமும் 2022ம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியுமே பெரும்பான்மை சமூகத்தின் அலை அநுர மீது திரும்பி இருக்கப் பிரதான காரணம். சரி.என்னதான் சிங்களப் பிரதேசங்களில் ஜே.வி.பி அதன் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டாலும் வடக்கு – கிழக்கில் அதுவும் தமிழர்கள் மத்தியில் இன்னமும் தவழும் நிலையிலேயே இருக்கிறது. மகிந்த ராஜபக்சவுடன் தேனிலவில் இருந்த காலப் போக்கில் ஜே.வி.பி, தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக பேணி வந்த கொள்கைகள் இதற்குக் காரணமாய் இருக்கலாம். அல்லது ஜே.வி.பி இன் கொள்கைகள் பற்றிய போதிய தெளிவின்மையாக இருக்கலாம். இதேவேளை ஏனைய மாவட்டங்களைப் போலவே கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முன்னர் இருந்ததைவிட ஜே.வி.பி யின் செல்வாக்கு கணிசமாய் அதிகரித்து இருக்கிறது. ஜே.வி.பி இற்கு இத்தேர்தல் களத்தில் அமைந்திருக்கும் ஜாக்பாட் அதிர்ஷ்டம் என்னவென்றால் இது நாள்வரையான முக்கிய தேர்தல்களில் ஒன்றாய் இருந்த ரணிலும் சஜித்தும் பிரிந்திருப்பதுதான். அதுவும் வடக்கு மற்றும் கிழக்கில் வாக்குகள் ரணில் என்றும் சஜித் என்றும் சிதறும் போது ஜே.வி.பி மூன்றாம் இடத்திற்கு வந்தாலும் சேதாரம் ஒன்றுமில்லை. ஜே.வி.பி இன் வெற்றி என்பது வடக்கு–கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே சிங்கள வாக்குகளை எந்தளவுக்கு அள்ளும் என்பதிலேயே முழுமையாய் தங்கியிருக்கிறது. சரி ஜே.வி.பி யின் பிரதான பலவீனம் என்ன? வடக்கு கிழக்கில் சிறுபான்மை வாக்குகளைக் கவரப் பெரிய திட்டம் எதுவும் இன்றி இப்போதே வென்றுவிட்டதாய் நினைத்துக் கொண்டு அடுத்த கெபினட் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பதுதான்.- Vidivelli https://www.vidivelli.lk/article/17687
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
தமிழக_அரசியல் – நேற்று வெளியிடப்பட்ட அரசியல் கட்சிக்கொடி, ஸ்பெயின் நாட்டுக் கொடியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக புகார் அளிக்கபட்டது. தமிழக வெற்றிக் கழக இருப்பதாக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார். முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. https://madawalaenews.com/3015.html
-
தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு
இப்படியெல்லாம் அழகிய பிரதமர்கள் இருக்கின்றார்களா?
-
தலித்துகள் முதலமைச்சராக முடியாது.! திருமாவளவனின் கருத்துக்கு சீமான் - கார்த்தி சிதம்பரம் ஆதரவு..!!
ஒரு தலித் எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது என்ற திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும் போகும் என்றும் ஆனால் எந்த காலத்திலும் ஒரு தலீத்தை முதலமைச்சர் ஆக முடியாது என்றும் திருமாவளவன் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆனால் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற திருமாவளவனின் கருத்தை எதிர்க்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார். https://tamil.webdunia.com/
-
9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.. அரசு அளித்த அனுமதி
9 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஈராக் நாட்டின் அரசு அனுமதி அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் நாட்டில் தற்போது பெண்களின் திருமண வயது 18 என்று உள்ள நிலையில் புதிய மசோதா அவர்களின் படி ஆண்களுக்கு 15 வயதிலும் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்துடன் ஒன்பது வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்பது சட்டமயமாக்கப்படுகிறது. பெண்களின் திருமண வயது 18 என்று இருந்தபோதிலும் ஏற்கனவே ஈராக்கில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா குழந்தைகள் அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. தற்போது ஈராக் அரசாங்கமே பெண்களின் திருமண வயது 9 என அறிவித்ததால் குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. https://tamil.webdunia.com/
-
குச்சவெளியில் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை அபகரிக்க பிக்கு முயற்சி
திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வயல் காணிகளை அப்பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி துப்பரவு செய்வதால் அப்பகுதியில் பதற்ற நிலை எழுந்துள்ளது. இச் சம்பவமானது 25.07.2024 அன்று இடம்பெற்றுள்ளது. குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியிலுள்ள பிச்சமல் புரான ரஜமகா விகாரையின் விகாராதிபதி குச்சவெளியான் குளத்துக்கு அருகே, முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்புரவு செய்ய முயற்சித்த போது அங்கு பதற்ற நிலை தோன்றியது. அப் பகுதிக்கு வருகை தந்த காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பதாக குற்றம்சாட்டியதையடுத்து அங்கு பதற்றமான நிலை தோற்றம் பெற்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன்; ஜனாதிபதி செயலகத்துக்கும் அறிவித்துள்ளதாக குச்சவெளி விவசாய சம்மேளனத்தின் தலைவர் ஜே.எம்.ரகுமான் யூசுப் தெரிவித்தார். இந்த விடயம் குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, குறித்த காணி துப்புரவு நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜே.எம்.ரகுமான் யூசுப் தெரிவித்தார். இக் காணிகளின் வரலாறு தொடர்பில் ஜே.எம்.ரகுமான் யூசுப் மேலும் குறிப்பிடுகையில், “இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். இங்கு வாழ்ந்த மக்களுக்கு 1 ஏக்கர் குடியிருப்புக் காணியும் 2 ஏக்கர் வயல் நிலமும் சொந்தமாகவிருந்தது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இப் பகுதியில் மக்கள் குடியிருக்காவிட்டாலும் தமது வயல் நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந் நிலையில் இப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையில் உள்ள பிக்கு, ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்தவர். இவர் வீரகெட்டிய பகுதியிலுள்ள சிங்களவர்களை இங்கு அழைத்து வந்து எமது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, துப்புரவு செய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும் அங்கு பௌத்த விகாரை ஒன்றை அமைக்கவும் முயற்சித்து வருகிறார். இப் பகுதியில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான சதித்திட்டமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. இப் பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம், அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக உள்ளன. 1968 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கிணறு ஒன்றும் அதே இடத்தில் இன்னமும் உள்ளது. அப்போது கட்டப்பட்ட வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுகின்றது. இப் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 300 ஏக்கர் காணி உள்ளது. அதில் 22 ஏக்கர் தொல்பொருள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலத்தையே இப்போது பௌத்த பிக்கு ஆக்கிரமிக்க முனைகிறார். முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு கடந்த காலங்களில் உடந்தையாகவிருந்தார். எனினும் வன இலாகா திணைக்களத்தின் எதிர்ப்பு காரணமாக அவரது காலப்பகுதியில் இக் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கை வெற்றி பெறவில்லை. இந்நிலையில்தான் சில வருடங்கள் கழிந்து மீண்டும் இந்த ஆக்கிரமிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.- Vidivelli
-
ழக்கு மாகாணத்தில் 170 கோடி ரூபா நிதி மோசடி விசாரணைகளின் முன்னேற்ற தன்மை என்ன?
(எம் ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கிழக்கு மாகாணத்தில் அப்பாவி மக்களின் 170 கோடி ரூபாவை மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிதி நிறுவனத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு கொண்டு வர முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்துள்ள கேள்விகள் இன்று வரை இழுபறி நிலையில் உள்ளது. ஒன்று பதிலளியுங்கள், இல்லையேல் வாய்மூல விடைக்கான வினாக்கள் முறைமையை இரத்து செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சம்மாந்துறை, கல்முனை,பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய பகுதிகளில் 2014.02.05 ஆம் திகதி முதல் ப்ரிவெல்த் க்ளோபல் பிரைவட் லிமிடெட் எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திச் செல்லப்பட்டதா,? அந்நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஹமட் செரீம் முஹம்மது சிஹாப் மற்றும் பாத்திமா பர்ஸானா மார்கார் ஆகியோர் சுமார் 1400 பேரின் 170 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை மோசடி செய்துள்ளார்கள் என்பதையும், மேற்குறிப்பிடப்பட்ட பணியாளரும் அவரது குடும்பத்தினரும் இன்று வரை இந்தியாவில் தலைமறைவாகி இருப்பதையும் இது தொடர்பில் கல்முனை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவாரா? இவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னவென்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா? என கேள்வியெழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க 3 மாதங்கள் கால அவகாசம் கோரினார். இதன்போது எழுந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இந்த கேள்விகளை 2020 செப்டெம்பர் மாதம் கேட்டேன். நடுத்தர மக்களின் 170 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் முறையிட்டு, பாராளுமன்றத்தின் ஊடாக பதிலை எதிர்பார்த்துள்ளார்கள். 2020 முதல் இன்று வரை மூன்று தடவைகள் இந்த கேள்விகளை தொடர்ந்து சமர்ப்பித்துள்ளேன்.ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை.மக்கள் மத்தியில் செல்லும் போது பாதிக்கப்பட்டவர்கள் எம்மிடம் கேள்வி கேட்கிறார்கள்.தொடர்ந்து தாமதப்படுத்துவதால் நாங்களும் இதில் தொடர்புபட்டுள்ளோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகப்படுவார்கள். முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் பற்றி கேட்கும் போது அதற்கு பதிலளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையற்றது. ஆகவே சபாநாயகர் இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என்றார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ‘நீங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடளித்தீர்களா’ என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், வெளிவிவகாரத்துறை அமைச்சின் ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு இவ்விடயங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரை முன்னேற்றகரமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இலங்கை பொலிஸார் இவ்விடயத்தை நீதிமன்றத்துக்கு அறிவித்து பிடியாணை உத்தரவை பெற்றுக்கொண்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று இந்திய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.ஆகவே இவ்விடயத்தில் உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுங்கள் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, இது பாரிய நிதி மோசடியாகும். 170 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே இந்த விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றத்தன்மை தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இரு நாட்களுக்குள் அறிவிக்கிறேன் என்றார். – Vidivelli
-
வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்துமாறு தொழில் வாண்மையாளர் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அதிகாரிகளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு உரிமைகளும் மறுக்கப்பட்டு வருவதாக தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. அத்துடன், இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் செயற்திட்டத்தின்போது வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களை மட்டக்களப்பு “ஈஸ்ட் லகூன்” உல்லாச விடுதியில் சந்தித்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிய தவிசாளர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் அவ் அமைப்பின் உபதலைவர் ஜாபீர் நளீமி ஆகியோர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். முதலில் கருத்து தெரிவித்த தொழில் வாண்மையாளர் ஒன்றியத்தின் தவிசாளர் முபீன் அண்மையில் வடமாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஆகிய நீங்கள் 13 ஆம் திருத்தத்தை பொலிஸ் அதிகாரம் இன்றி நடைமுறைப்படுத்தப் போவதாக கூறி இருந்தீர்கள். உண்மையில் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியதை முஸ்லிம் சமூகம் வரவேற்கிறது. ஆனால் நான் பின்னால் சொல்லப் போகின்ற பல்வேறு காரணங்களினால் இத்தகைய தீர்வுகள் வழங்கப்படுவது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக முடிந்து விடுமா? என்று அச்சம் முஸ்லிம்களுக்குள்ளே தொடராக இருந்து வருகின்றது. காரணம் இங்கே பதவியில் இருக்கின்ற தமிழ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கிழக்கு மாகாணத்தில், வடமாகாணத்தில் முஸ்லிம்களை நசுக்கும் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர். தற்போது அரசியல் யாப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்க நடைமுறைகளின் ஊடாக அதாவது பிரதேச செயலகம், கச்சேரி முறைமைகளின் ஊடாக அவ்வதிகாரங்களை பயன்படுத்தியே முஸ்லிம்களின் உரிமைகளை தொடர்ந்துதேச்சியாக இந்த தமிழ் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு அதிகாரங்களை கொடுக்கின்றபோது அவ் அதிகாரங்களைக் கொண்டு மேலும் முஸ்லிம்களை அவர்கள் நசுக்குவார்கள் என்ற அச்சம் முஸ்லிம்களை பீடித்துள்ளது. எனவேதான் 13வது திருத்தம் அமுல்படுத்தப்படுகின்ற போது முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்ற கேள்வியை அதிமேதகு ஜனாதிபதியாகிய உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கின்றோம்? இனப்பிரச்சினைக்கான தீர்வை நீங்கள் வழங்க வேண்டும். ஆனால் அத்தீர்வு வழங்குகின்ற போது முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முஸ்லிம்களுக்குரிய பொருத்தமான தீர்வையும் நீங்கள் வழங்க வேண்டும் என்று உங்களை மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம். அடுத்த விடயமாக தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் பாரிய நிலப்பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 27% வாழ்கின்ற முஸ்லிம்கள் வெறுமனே 46 சதுர கிலோமீட்டர் காணியையே பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. மட்டக்களப்பிலே 2854 சதுர கிலோமீட்டர் மொத்த காணியில் தமிழ் பிரதேசத்தில் 2808 சதுர கிலோமீட்டர் அவர்களுக்கு உரியதாக காணப்பட நான்கு பிரதேச செயலகங்களைக் கொண்ட முஸ்லிம்கள் வெறுமனே 46 சதுர கிலோ மீற்றர் காணிகளையே பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. இது மொத்த காணி அளவில் 1.5 வீதம் ஆகும். 2023 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட புள்ளி விவர அறிக்கையின்படி முஸ்லிம்களின் விகிதாசாரம் 27% ஆகும் எனவே, 27 வீதத்திற்கு மொத்தமாக முஸ்லிம்களுக்கு 770 சதுர கிலோமீட்டர் காணி உரித்துடையது ஆனால் மட்டக்களப்பு கச்சேரி திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களின் காணி உரிமைகளை மறுத்து வெறும் 46 சதுர கிலோ மீட்டருக்குள் அவர்களை முடக்கியுள்ளது. கடந்த உள்நாட்டு யுத்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் 33 கிராமங்களில் இருந்து பலவந்தமாக துரத்தி அடிக்கப்பட்டனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா போன்ற பிரதேசங்களில் குடியேறினர். இதனால் ஏற்கனவே அங்கு நிலவிய காணிதட்டுப்பாடு மேலும் பாரிய தட்டுப்பாட்டை அம் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தியது. அத்தோடு 1999 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பனம்பல ஆணைக்குழுவிற்கு புதிய பிரதேச செயலக கோரிக்கையை முன்வைத்த தமிழ் தரப்பினர் தங்களுக்கான ஒரு புதிய தமிழ் பிரதேச செயலகமாக கோரளை தெற்கு கிரான் பிரதேச செயலகத்தை உருவாக்குகின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு காணி இருந்த ஒரே ஒரு பிரதேசமான கோரளை மேற்கு ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து ஐந்து கிராமங்களை திட்டமிட்ட அடிப்படையில் இணைத்து தங்களுக்கான பிரதேச செயலகத்தை உருவாக்கிக் கொண்டனர். ஏற்கனவே பலமான காணி தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய முஸ்லிம்களுக்கு இத்தகைய திட்டமிட்ட செயல் அவர்களின் காணியை உரிமையை மேலும் மிகப்பெரிய சிக்கலுக்கு உள்ளாகியது. எனவே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப 770 சதுர கிலோமீட்டர் காணியை நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எமக்கு பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இலங்கையில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்காக 1999 ஆம் ஆண்டு பணம்பலன ஆணை குழு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது, இவ்வாணைக்குழு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து ஆறு பிரதேச செயலகங்களை உருவாக்கியது. இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களில் இரண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்று கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஆகும். இக்கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் முஸ்லிம்களுக்கு என உருவாக்கப்பட்டதுடன் அதேவேளை கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் தமிழர்களுக்கான உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களில் கிரான் பிரதேச செயலகத்தை உத்தியோகப்பற்றற்ற முறையில் 620 சதுர கிலோமீட்டர் காணியை வழங்கி அப்பிரதேச செயலகத்தை இயங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அனுமதி வழங்கியது. அதே வேளை முஸ்லிம்களுக்கு என உருவாக்கப்பட்ட அதாவது 240 சதுர கிலோமீட்டர் காணி பரப்பைக் கொண்ட கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தை அதற்குரிய காணி அளவீட்டினை அளவீடு செய்யாமல் மட்டக்களப்பு கச்சேரி மறுத்து வருவதுடன் இன்று வரை சுமார் 23 வருடங்கள் கடந்தும் இக் கோரளை மத்தி முஸ்லிம் பிரதேச செயலகம் வெறும் ஆறு சதுர கிலோமீட்டருடன் இயங்கி வருகிறது. அத்துடன், 2000 ஆண்டு இச்செயலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை அமுல்படுத்தாமல் இழுத்தடித்து முஸ்லிம்களின் காணி உரிமையை இந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மறுத்துவருகிறது. இதுவரையில் 9 அரசாங்க அதிபர்கள் அமைச்சரவை தீர்மானத்தை மறுத்து அரசாங்கத்தின் ஆணைக் குழுவின் சிபாரிசையும் மறுத்து முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஜனாதிபதி, பிரதமர் என பலரை சந்தித்தும் இதுவரை இந்த அநியாயத்துக்கு முடிவு கிடைக்கவில்லை. எனவே உங்களுடைய காலத்திலாவது இந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கள் என்றார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சகலருடனும் கலந்துரையாடி தீர்வை வழங்க எதிர்பார்க்கிறோம். ஏனைய விவகாரங்கள் தொடர்பில் தேர்தல் முடிந்ததன் பின்னால் மீண்டும் வருகை தந்து எல்லோரிடமும் கலந்துரையாடி இதற்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் உப தலைவரான அஷ்ஷெய்க் ஜாபிர் நளீமி, காத்தான்குடியின் எல்லை பிரச்சினைகள் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இவ் எல்லைகள் தொடர்பில் தெளிவான மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் இருந்தும் இரண்டு பக்க எல்லைகளிலும் முஸ்லிம்களின் காணி அடாத்தாக ஏனைய பிரதேச செயலகங்களால் கைப்பற்றப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகிறது. பாரிய காணித்தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் காத்தான்குடிக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. எனவே இவ் எல்லை பிரச்சினையை தீர்த்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் காத்தான்குடி பிரதேச சபை நகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட வேளையில் காத்தான்குடியின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அண்மையில் அமுல்படுத்தப்பட்ட “உருமய” வேலைத் திட்டத்தில் காத்தான்குடியில் பாரிய காணிப் பிரச்சினையை எதிர்நோக்கும் முஸ்லிம்களுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே புதிய காத்தான்குடியை ஒரு பிரதேச சபையாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதோடு அப்பிரதேச சபையுடன் காத்தான்குடிக்கு நெருக்கமாக உள்ள முஸ்லிம் கிராமங்களான பூனொச்சிமுனை, மஞ்சந் தொடுவாய், பாலமுனை போன்ற கிராமங்களையும் இணைத்து புதிய காத்தான்குடி பிரதேச சபை ஒன்றை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.- Vidivelli
-
பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்
எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள், பிரிட்டனின் நிலவரம் பற்றியும் பேச வேண்டும் இலங்கையில் நடக்கும் சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள் பிரிட்டனின் நிறவெறி குறித்து கவனம் செலுத்த வேண்டும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், கடந்த மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியாவில் வடக்கு பிரதேசத்தில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதனால் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுடன்,பலர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு முஸ்லிம் இளைஞர். இதில் பலியான சிறுமிகள் ருவாண்டா நாட்டில் இருந்து வருகை தந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் என்று ஒருசில ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தின் பின்னர் பிரிட்டனின் புறநகர் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் நிறவெறி தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.தெற்கு பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைக்க முயற்சித்துள்ளார்கள்.பாதுகாப்பு தரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பிரிட்டன் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாகவே எமது பாராளுமன்றம் செயற்படுகிறது.இலங்கையின் விவகாரங்கள் பற்றி பிரிட்டன் பாராளுமன்றத்தில் அதிகளவில் பேசப்படும்,தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்.எனவே இலங்கைக்கு ஜனநாயகம் பற்றி பேசும் பிரிட்டனில் 2011 ஆம் ஆண்டும் நிறவெறி செயற்பாடுகள் மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றன.இலங்கையில் நடக்கும் சிறு விடயங்களையும் பெரிதுப்படுத்தி எமக்கு வகுப்பெடுக்கும் வெள்ளையர்கள் பிரிட்டனின் நிலைவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.jaffnamuslim.com/2024/08/blog-post_921.html
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
7 தமிழ் கட்சிகளுடைய வேட்பாளராக, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிய பா.அரியநேத்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புக்களும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஊடாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு | Tamil Presidential Candidate மேலும், பொதுவேட்பாளராக களமிறங்குவதற்காக தவராசா மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த அரிநேந்திரன் முலிம்களுக்கு எதிராக இனவாதப் பேச்சுக்களை பேசி வந்தமை குறிப்பிடத்தக்கது https://www.jaffnamuslim.com/2024/08/7.html
-
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 34 ஆண்டுகள் நிறைவு
காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 34 வருடங்களுக்கு முன், இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் இன்று 03-08-2024 நினைவு கூறப்பட்டுள்ளது. 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும்ஆ பள்ளிவாசலில், இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும். அவர்களுக்காக பிரார்த்திப்போம். https://www.jaffnamuslim.com/2024/08/34.html கிழக்கு முஸ்லிம்களின் இழப்புகளுக்கு நீதி வேண்டும் காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் சரியாக 33 வருடங்களாகின்றன. இன்றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனை நினைவு கூரும் முகமாக இன்று காத்தான்குடியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்குமிடையிலான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகளின் உச்சபட்சமே இந்த பள்ளிவாசல் படுகொலையாகும். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அன்று புலிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதன் காரணமாக காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் படுகொலை, அளிஞ்சிப்பொத்தானை படுகொலை, குருக்கள்மடம் கடத்தலும் படுகொலையும்,பல்வேறு குணடுத் தாக்குதல் சம்பவங்கள், அவ்வப்போதான ஆட்கடத்தல்கள், கல்விமான்களை இலக்கு வைத்த படுகொலைகள் என அக் காலப்பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர். இவ்வாறான வன்முறைகளால் சுமார் 7000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை முஸ்லிம்கள் இழந்துள்ளனர். இதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தில் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மிக நெருக்கமாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பல்வேறு சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த நாட்டை பிரிவினையிலிருந்தும் பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பாரிய விலையைக் கொடுத்துள்ளனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து எவ்வாறு விரட்டப்பட்டதன் மூலம் தமது வாழ்வையே தொலைத்தார்களோ அதேபோன்று கிழக்கு முஸ்லிம்களும் மேற்குறிப்பிட்ட வன்முறைகளால் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் இவற்றுக்கு இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவித நஷ்டயீடுகளையோ நீதியையோ அவர்கள் பெறவில்லை என்பது கவலைக்குரியதாகும். கடந்த காலங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம்களைத் தனித்தரப்பாக அங்கீகரிக்குமாறும் இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குமாறும் கோரிக்கைவிடுத்தும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்லிம்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றுக்கு எவரும் உரிய பதிலளிப்பதாகத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட கடந்த காலங்களில் கிழக்கு முஸ்லிம்களின் அவலங்களை வைத்தே அரசியல் செய்து அதிகாரங்களுக்கு வந்தனர். முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் இந்த இழப்புகளை சந்தைப்படுத்தியும் அவற்றுக்கு தீர்வு தருவதாகவும் கூறியே அரசியல் செய்தன. இன்றும் செய்து வருகின்றன. எனினும் மக்களுக்கு எந்தவித நலனும் கிடைத்ததாக இல்லை. அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனத் தெரிவித்து வருகிறார். அண்மையில் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவுடனும் பேச்சு நடத்தியிருந்தார். இருப்பினும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகள் தொடர்பில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருக்கவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் முன்வைத்த பிரச்சினைகளில்இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் தரப்பே இதனை ஒரு பிரச்சினையாக கருதி ஜனாதிபதியிடம் பேசாத போது இவ்விடயத்துக்கு அவர் முக்கியத்துமவளிப்பார் என எதிர்பார்க்க முடியாது. எனவேதான் எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகள் குறித்துப் பேசும்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பிலும் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுவது குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தமது தூதுக் குழுவில் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும். யுத்த காலத்தில் முஸ்லிம் தரப்பின் இழப்புகள் எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டனவோ அதேபோன்று தற்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக 33 ஆவது வருடமாக அனுஷ்டிக்கப்படும் இன்றைய ஷுஹதாக்கள் தினத்தில் அனைவரும் அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனைப் பேசுபொருளாக்க வேண்டும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/15564
-
மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி!
லங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு "மனித இருப்பை" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது. "மூதூர் வெளியேற்றம்" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ளன. மூதூர் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதித்தான் எனவும், அதுவொரு தற்செயல் நிகழ்ச்சியெனவும் வாதிடுபவர்களும், வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றுவதில் எந்த தவறும் இல்லையென வாதிடுபவர்களும் இன்னமும் உள்ளனர். மேற்படி கருத்துக் கொண்டவர்களின் நிலைப்பாடுகளை விட, மனிதர்களை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, ஆதிக்கத் தரப்புகளின் மீறல்களை துணிந்து கண்டிக்கும், அவற்றை அம்பலப்படுத்தும் குரல்களை அதிகம் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணமிது! அந்தக் குரல்களின் உறுதியிலும் தீர்க்கத்திலும்தான் உண்மையான நிம்மதியும் மனித வாழ்விற்கான நம்பிக்கைகளும் தங்கி உள்ளன. வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை வடக்கு கிழக்கு தாயகத்திலிருந்து விரட்டியடிப்பதும் அவர்களைக் கொன்றொழிப்பதுமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தமும் செயற்பாடுமாகும், இதில் எமக்கு எந்தவித சந்தேகமுமில்லை. 1990 இறுதிப் பகுதியில் வடக்கிலிருந்து புலிகளால் திட்டமிட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் 17 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் தமது தாயகத்திற்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து ஏற்பட்ட அமைதிச் சூழலிலும் அம் மக்களால் வட மாகாணத்திற்கு சென்று வாழ முடியவில்லை, திரும்பிச் செல்ல வடமாகாண முஸ்லிம்கள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் தலைமை நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்து நிறுத்தி வந்துள்ளன. 1990களின் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றிய அதே காலகட்டத்தில், கிழக்கு மாகாணம் பூராகவும் வாழும் முஸ்லிம்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சியை, முஸ்லிம்கள் துணிந்து நின்று தமது மண்ணிலேயே காலூண்றி எதிர்த்ததனால்தான் அவர்களால் அங்கு இனச்சுத்திகரிப்புச் செய்யப்படாத வரலாற்றுடன் இன்னமும் வாழ முடிகிறது. இல்லையேல் 1990களில் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நிகழ்ந்த துயரமும் வாழ்வும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைத்திருக்கும். இதுதான் யதார்த்தமான நிலவரமுமாகும். 1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம் மக்களின் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான இராணுவ நெருக்குவாரங்களைத் தொடுத்து அவர்களை வெளியேற்ற தெண்டித்தனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் இராணுவ முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இறுதியில் புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியில் பெரிதும் தோல்வியையே சந்தித்தனர். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சியை புலிகளினால் சாத்தியப்படுத்த முடியாது போனாலுங்கூட, முஸ்லிம்கள் தொடர்பில் தமது சித்தாந்தத்தையோ, செயற்பாடுகளையோ கைவிடவில்லை. மிக மோசமான இராணுவ, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளை காலத்திற்கு காலமும் தருணம் கிடைக்கும் பொழுதுகளிலும் புலித் தலைமை நிறைவேற்றியே வந்திருக்கின்றன. இந்த இனச் சுத்திகரிப்புச் செயற்பாட்டின் ஒரு விளைவாகவே, கடந்த ஆகஸ்ட் 2006 மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றமும் நிகழ்ந்தது. உலகளவில் இன்று மாறிவரும் அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, புலிகள் தந்திரோபாய அடிப்படையில் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை திட்டமிட்டு நடத்தினர். இருந்தும், மூதூர் மக்களின் தாயகம் திரும்பும் உறுதியான முடிவும், வாழ்வும், மீண்டும் மூதூர் மக்களை தமது தாயக மண்ணிற்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறது. கிளாந்திமுனை மலையடிவாரக் கூட்டுப் படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் மரித்துப்போக வாய்ப்பிருந்தும், அச் சூழலின் புற நிலைகளின் காரணமாக பெருமளவு உயிர்ப்படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கிளாந்தி முனை மலையடிவாரத்தை மூதூர் முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைக்கான கொலைக்களமாகவே பார்க்கின்றனர். அந்த நாளின் அனுபவங்களை அச்சத்துடன் இன்றும் இன்னும் நினைவுகூர்கின்றனர் வயது, பால் வேறுபாடின்றி.... நான்கு தினங்கள் நீடித்த மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின்போது 54 பேர் மரணமடைந்தும் 1176 பேர் காயமடைந்துமுள்ளனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்திழப்புகளும், பெருமளவு மனச்சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன. மூதூர் முஸ்லிம்களை வெளியேற்றுவதுதான் புலிகளின் நீண்டகாலத் திட்டமென்பதும், பெருமளவு கூட்டுப் படுகொலையை நடாத்துவதே புலிகளின் நோக்கமாக விருந்தது என்பதற்குமான சாட்சியம், அந்த துயர வாழ்வை நேரடியாக எதிர்கொண்ட முப்பத்தெட்டாயிரம் முஸ்லிம் உயிர்களுமாகும். இதற்கு வேறு சாட்சியங்கள் தேடிப் போகவேண்டிய எந்த அவசியமும் இல்லை. முஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறை, வெளி உலகுக்கான பிரச்சார ரீதியான பொய்களைக் கொண்டதாகவும் அகரீதியில் முஸ்லிம்கள் தொடர்பில் சித்தாந்த விரோதமிக்க அடக்குமுறைச் செயற்பாடுகளையும் கொண்டுள்ளதை நாம் அறிவோம். தாகத்திற்கு தண்ணீர் வழங்கும் புலிகளின் பிரச்சாரத் தந்திரத்தை மூதூர் வெளியேற்றத்தின் போது புலிகள் கடைப்பிடித்தனர். இடம்பெயர்ந்து வரும் முஸ்லிம்களுக்கு புலி உறுப்பினர்கள் "தாகசாந்தி" வழங்கியதை புலி ஊடகங்களும், புலி ஆதரவாளர்களும் பெரிய விடயமாக பிரச்சாரப்படுத்திக் கொண்டிருந்தனர்... தமது உண்மை முகத்தை மறைக்க திட்டமிட்ட பிரச்சாரத்தில் செயற்கையாக புலிகள் ஈடுபட்டனர். புலிகளின் இந்தப் பிரச்சாரங்கள் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும், புலிகளின் முஸ்லிம் விரோதத்தை நன்கு அறிந்தவர்களிடமும் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை, ஏனெனில் இவர்களுக்குத் தெரியும் புலிகளின் உண்மை முகம்! வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதோ, காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தான படுகொலைகளின் போதோ... அந்தச் சூழலை ஆவணமாக்கும் உடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது பெரும் இழப்பே. அந்த நிகழ்வு மூதூர் வெளியேற்றத்தின் போதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற அக்கறையின் பால் இச்சிறு தொகுப்பு வெளியிடப்படுகிறது. இச்சிறு தொகுப்பில் சொல்லப்பட்டவைகள், மூதூர் மக்கள் அனுபவித்த மிகப்பெரும் துயரின் ஒரு சிறு பக்கமேயாகும்! இச்சிறு தொகுப்பின் கதை சொல்லி, 53 வயதுடைய ஓய்வுபெற்ற ஒரு ஆசிரியராகும்... தனது அனுபவங்களை அவரது வார்த்தையில் இங்கு பதிவு செய்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மாபெரும் வெளியேற்றத்தின்போது தான் அனுபவித்ததையும் கண்டதையுமே எந்த மிகையுமின்றி தெரியப்படுத்தி உள்ளார். எமது இந்த முயற்சிக்கு தனது அனுபவத்தை வழங்கிய அவருக்கு எமது நன்றிகள். கந்தளாய்க்கு வந்து சேர்ந்த மூதூர், தோப்பூர் முஸ்லிம்களை இலங்கை அரசு நடாத்திய விதமும், அவர்கள் அகதிவாழ்வில் எதிர்கொண்ட நெருக்கடிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத்தனமும், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கெதிரான கந்தளாய் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வுகளும் பதிவு செய்யப்பட வேண்டிய, இந்த வெளியேற்றத்துடன் தொடர்புபட்ட முக்கியத்துவமான தொடர் நிகழ்வுகளாகும்.. அந்த அனுபவங்களையும் எதிர்காலத்தில் ஒரு சிறு ஆவணமாக பதிவு செய்யவேயுள்ளோம்! https://tamilcircle.info/ 006.08.01ஆம் திகதி மூதூர், புலிப் பயங்கரவாதிகளினால் முற்றுகையிடப்படுகிறது. முற்றுகையின் விளைவாக ஏற்பட்ட யுத்த களத்தில் அப்பாவி பொதுமக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்: மரணமானோர் - 54 படுகாயமடைந்தோர் - 196 காணாமற்போனோர் - 05 மனநிலை பாதிக்கப்பட்டோர் - 24 பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் - 1425 முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகள் - 286 மக்களில் 99% மானோரின் வீடுகளிலிருந்த சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டது. வயல்நிலங்கள், கால்நடைகள், மீன்பிடி, விவசாயம், வியாபாரத்தளங்கள் என அனைத்தும் முற்றாக பாதிக்கப்பட்டன. 2006.08.04 ஆம் திகதி யுத்தத்தின் கொடூரத்தை தாங்க முடியாது மூதூர் மக்கள் கந்தளாய்க்கு இடம்பெயர்தார்கள் சுமார் 1 மாதகாலம் அகதி வாழ்வை அனுபவித்த மூதூர் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பி சொந்த மண்ணில் குடியேறினார்கள். அப்பாவி மக்களை அழித்து அகதிகளாக்க நினைத்தோர் தடயமின்றி மறைந்து போயினர். - அபு அரிய்யா - https://www.jaffnamuslim.com/2024/08/18.html
-
ஐந்து பெண்களை திருமணம் செய்து , 49 பெண்களுடன் தொடர்பிலும் இருந்த நபர் ஏமாற்று,மோசடி குற்றச்சாட்டில் கைது.
ஐந்து பெண்களை திருமணம் செய்த நபரொருவர், 49 பெண்களுடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால். 34 வயதான இவர், தான் ஒரு பொலிஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சமாலால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள், காவல் நிலையத்தில் தனித்தனி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி சமாலை கைதுசெய்தனர். குறிப்பாக, சமாலை கைதுசெ ய்ய பொலிஸார், ஒரு பெண் அதிகாரியை பயன்படுத்தி பொறி வைத்தனர். அந்த பெண் அதிகாரியை திருமணம் தொடர்பாக சமால் சந்திக்க வந்தபோது அவரை பொலிஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட சமாலிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை திருமண தளங்கள் மூலம் குறிவைத்து தான் ஒரு பொலிஸ் அதிகாரி எனக்கூறி சமால் அவர்களிடம் பேசியும் சந்தித்தும் வந்துள்ளார். பின்னர், திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை கட்டாயப்படுத்தி கார் மற்றும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. சமாலால் பாதிக்கப்பட்ட பெண், முதலில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று ரூ.8.15 லட்சம் மதிப்பிலான காரை வாங்கியுள்ளார். மேலும் தொழில் தொடங்க ரூ.36 லட்சம் கொடுத்துள்ளார். மற்றொரு பெண், வங்கியில் கடன் வாங்கி ரூ.8.60 லட்சம் பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும் சமாலுக்கு கொடுத்துள்ளார். இந்த பணத்தின் மூலம் சமால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, பணத்தை திரும்ப கேட்டபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வந்துள்ளார். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், அவர் மேலும் 49 பெண்களுடன் மேட்ரிமோனியல் தளத்தில் சாட்டிங்கில் இருப்பது பொலிஸாருக்கு தெரிய வந்தது. அவரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், ரூ.2.10 லட்சம் ரொக்கம், கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் திருமணம் செய்துகொண்டதற்கான இரண்டு ஒப்பந்த சான்றிதழ்களை பொலிஸார் கைப்பற்றினர். சமலின் மூன்று வங்கிக் கணக்குகளையும் பொலிஸார் முடக்கினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது https://madawalaenews.com/1780.html
-
உனக்கு எப்போது திருமணம் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த நபரை அ*டித்துக் கொ*ன்றவர் கைது.
எப்போது திருமணம் என்று அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. இந்தோனேசியா, வடக்கு சுமத்திரா பகுதியில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரியொருவர் வசித்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது அதிக அக்கறைக் கொண்ட இவர் சிரேகரைப் பார்க்கும் போதெல்லாம் ”எப்போது திருமணம்?” என்று கேட்டு வந்துள்ளார். இந்தக் கேள்வியால் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதியவரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று மரக்கட்டையால் குறித்த முதியவரைத் தாக்கியுள்ளார். குறித்த முதியவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். முதியவர் உயிரிழந்ததையடுத்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்ட போது திருமணம் குறித்து அவர் கேட்டுக்கொண்டே இருந்ததது மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டதால் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். https://madawalaenews.com/1797.html
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் , குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குழந்தையின் தாயார், " குழந்தை பால் குடிக்க மறுப்பதால் , கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை" என தெரிவித்துள்ளார். பொலிஸார் தாயை கைது செய்துள்ளதுடன் குழந்தையின் தந்தையையும் , குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் , குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னர் , நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது https://seithy.com/breifNews.php?newsID=320990&category=TamilNews&language=tamil