Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையேயான உறவு ஊசல்

Featured Replies

இடையேயான உறவு ஊசல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 மார்ச், 2012 - 14:39 ஜிஎம்டி

120124063930_kasmir_army_snow1.jpg

காஷ்மீரீில் உள்ள இந்திய இராணுவத்தினர்

இந்திய ராணுவம் சவால்களை சந்திக்கக் கூடிய தயார் நிலையில் இல்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் வி கே சிங், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மார்ச் மாதம் 12 ஆம் தேதி எழுதிய கடிதம் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள விமான எதிர்ப்பு கட்டமைப்பு 97 சதவீதம் பழுதாகிவிட்டது என்றும், டாங்கிப் படைகளுக்குத் தேவையான குண்டுகள் இல்லை என்றும் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடிதக் கசிவு நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமான விவாதங்களைக் கிளப்பியது.

இராணுவத் தளபதியின் வயது விவகார சர்ச்சையின் போது அரசு நடந்து கொண்ட வித்தத்தை விமர்சித்திருந்த பிரதான எதிர் கட்சியான பாரதிய ஜனத கட்சியைச் சேர்ந்த அருண் ஜெட்லி, ரகசியக் கடிதங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவது அதிர்ச்சியளிக்கும் விடயம் என்றார்.

எதிர்கட்சிகள் ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாரம் யெச்சூரி கடித்ததை கசியவிட்ட நபர் கண்டறியப்பட்டு நடவடக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஷிவானந்த் திவாரி இராணுவத் தளபதியின் முறையற்ற நடத்தை காரணமாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

120328135243_india_armychief_genvksingh_304x171_bbc_nocredit.jpg

ஜெனரல் வி கே சிங், தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒருவர் போல பேசுகிறார் என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பீகாரின் முன்னாள் முதல்வர் லலு பிரசாத் யாதவும் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத் தளபதி பிரதமருக்கு கடிதம் எழுதியதை உறுதிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி, பாதுகாப்புக் காரணங்களுக்காக அதில் எழுதப்பட்டிருந்த விடயங்களை வெளியே கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.ஆனால் நாட்டைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதே நேரம் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோர் இந்த சர்ச்சை குறித்து புதன்கிழமை(28.3.12) காலை கூடி விவாதித்துள்ளனர்.

இந்திய இராணுவத்துக்கு 1980களில் வாங்கப்பட்ட வெளிநாட்டு ஆயுதங்களில் பெரும் ஊழல் நடைபெற்றதாக வந்த புகார்கள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக 90களில் இந்திய இராணுவத்துக்கு புதிதாக ஆயுதங்களை வாங்குவது பெருமளவு குறைந்தது.

இதனால் நாட்டின் பாதுகாப்புத் திறணில் குறைபாடுகள் ஏற்பட்டதை கார்கில் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட நிபுணர் குழு பதிவு செய்தது. அதே போல நவீன ஆயுதங்களை உள்நாட்டில் தயாரிக்கும் திட்டங்களும் பெரும் முன்னேற்றத்தைத் தராத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பெருமளவு ஆயுதங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.

இறக்குமதி

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாதான் உலக அளவில் அதிகப்படியான ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ள நாடு என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தவிர 126 போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா பிரான்சுடன் தற்போது இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பொருளாதார வித்தியாசம் ஆண்டுதோறும் அதிகரிக்கும் அதே வீதத்தில் இராணுவ வல்லமையும் வித்தியாசப்படுவது குறித்து இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கவலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆனால் இது போன்ற கருத்துக்களை இராணுவத் தளபதி பாதுகாப்பு அமைச்சரிடம் முறையிடாமல் நேரடியாக இந்தியப் பிரதமரிடம் தெரிவித்தது முறையான செயலா என்ற கேள்வி பலரால் தற்போது ஏழுப்பப்படுகிறது.

இராணுவத்தின் தயார் நிலை குறித்து கடந்த அரசின் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலேயே பல கடுமையான கருத்துக்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் – இராணுவத் தளபதியின் கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை விட – அதை தெரிவிக்க அவர் கையாண்ட உத்தியே பெரும் அதிர்ச்சியை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்தியாகையால் இங்கு இணைக்க படுகிறது

http://www.bbc.co.uk/tamil/india/2012/03/120328_chieflettercreatesfurtherrow.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்டை பிடிக்காத அளவிற்கும் இந்தியா உலகில் வல்லரசு தான். இது எவருக்கும் புரியாத யதார்த்தம்.

ஆயிரம் அறிவாளிகளுக்குள் வாய்திறவாமல் இருக்கும் முட்டாளும் வாய்திறக்கும் மட்டும் அறிவாளிதான்

ஆயிரம் முட்டாளுகளுக்குள் வாய்திறவாமல் இருக்கும் அறிவாளியும் வாய்திறக்கும் மட்டும் முட்டாள் தான்

இதில் இந்தியா எந்த ரகம். ஆனால் இந்தியா ஒரு பொருட்டே அல்ல என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் சிங்களச் ஸ்ரீலங்கா.

ஏனென்றால் ராஜீவ்வுக்கு அடி கொடுத்தபின்னும் கூனிக்குறுகி கைகட்டி ஒன்றும் இல்லாத ஸ்ரீ லங்காவிற்குச் சேவை செய்யும் ஒரு வல்லரசும் ஒரு வல்லரசா?

ஸ்ரீ லங்காவைச் சொல்லப்போனால் வெறும் பெட்டியை மூடி வைத்துவிட்டு அணுகுண்டு இருக்கு பிரச்சனை செய்தால் திறந்திடுவன் என்ற வெருட்டுமாப்போல் இருக்கு.

இந்த வண்டவாளமும் தண்டவாளமும் வெகுவிரைவில் வெளிச்சத்திற்கு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப்புதினத்தில் இருக்கிற இந்த தலைப்பினைப் பார்த்தவுடன் நான் நினைச்சேன் இலங்கை அரசுக்கும் இலங்கை இராணுவத்தளபதிக்கும் இடையில் எதோ பிரச்சனையென்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.