Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Rs 40000- தண்டப்பணமாக செலுத்த வேண்டுமாம் கூறகிறது இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம்

Featured Replies

குமார் குணரட்ணம் 40 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்த வேண்டுமாம் கூறகிறது இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம்

குமார் குணரட்ணம் தண்டப்பணம் செலுத்தும் வரை இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குமார் குணரத்தினத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணத்தை செலுத்தும் வரைக்கும் அவர் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவின் பிரஜாவுரிமை பெற்றவர் என்ற முறையில் அவர் அங்கிருந்து இலங்கை வந்து, தமது வீஸா காலம் முடிவடைந்திருந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்காக அவருக்கு 40 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ச்சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

முற்போக்கு சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்ணம் அவுஸ்ரேலியாவில் இருந்து நொயல் முதலிகே என்ற பெயரில் இலங்கை வந்திருந்தார். அதன் பின்னர் இலங்கையில் தங்கியிருந்த போது இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

தான் கடத்தப்பட்ட விவாகாரத்தில் அரசாங்கம் முற்று முழுதாக சம்பந்தப்பட்டிருப்பதாக இவரினால் தெரிவிக்பட்ட போதிலும் அரசாங்கம் இக் கூற்றினை அடியோடு மறுத்து வருகின்றது. அத்துடன் இவரின் கடத்தலில் பல முரண்பாடான கருத்துக்கள் வந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=61629972613714050

  • தொடங்கியவர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடுகடத்தப்பட்ட முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிரேம்குமார் குணரட்ணத்தை கைதுசெய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் அவுஸ்திரேலிய அதிகாரிகளைக் கோரியுள்ளார்.

குணரட்ணம் பிழையான தகவல்களை வழங்கி பிரயாணம் மேற்கொண்டுள்ளதால் அவரை உடனடியாகக் கைது செய்யவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மோசடி மேற்கொண்டு அவுஸ்திரேலிய பிரஜா உரிமை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37586

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா ஊடகங்களில் இவர் இரட்டைக்குடியுரிமை(இலங்கை, அவுஸ்திரெலியா) பெற்றவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இரட்டைக்குடியுரிமை பெற்றவர் இலங்கை செல்ல விசா தேவையா?.

என்னுடன் வேலை செய்யும் தெழுங்கு பேசும் இந்தியர் ஒருவருக்கு முள்ளிவாய்க்கால் அவலம் பற்றியும், சனல் 4 காணொளி பற்றியும் அடிக்கடி சொல்லியும் காது கேட்காமல் இருந்தவர், அவுஸ்திரெலியா தொலைக்காட்சிகளில் குமார் குணரட்டினத்தின் கைதினைப் பார்த்தபின்பு சிறிலங்காவும் பாகிஸ்தான் மாதிரி மோசமான நாடு என்றும் பாகிஸ்தான் முஸ்லிம் போல சிங்களவர்களும் கொடியவர்கள் என்று சொன்னார். அதற்கு நான் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் செல்லும் இந்தியர்களை பாகிஸ்தான் அரசாங்கம் கொல்லுவதில்லை. ஆனால் இலங்கைக் கடல் எல்லைக்குள் செல்லும் இந்தியர்களை இலங்கை அரசு கொல்லுகின்றது. அதற்கு இலங்கை அரசு இந்திய மீனவர்களை கொல்கிறதா?. தனக்கு தெரியாது என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.