Jump to content

மட்டக்களப்பில் 17 வயதான தமிழ் சிறுமியைக் கடத்திய சிப்பாய்கள் வல்லுறவு!


Recommended Posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்றுப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன வாவெட்டி கிராமத்தில் கிட்டத்தட்ட 150 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்த அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் உகுன என்ற கிராமம் இருக்கின்றது. இங்கு 1990ஆம் ஆண்டிலிருந்து சிங்கள இராணுவத்தினரின் ஆயுதக் குழுக்களின் குடியேற்றம் இருந்து வருகின்றது. 02 வாரத்திற்கு முன்னர் சிங்களவரான இலத்திரனியல் வேலைசெய்யும் ஒருவர் குருணாகலையிலிருந்து இக்கிராமத்துக்கு வந்துள்ளா்.

அவர் 17 வயதான தமிழ் சிறுமியை தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் பெற்றெர் தம் உறவினரிடம் முறையிட்டிருக்கின்றனர். இதற்கிடையில் ராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு படையினன் ஒருவன் அண்மையில் மீளக்குடியமர்ந்தள்ள அந்தக் குடும்பத்தை தனது காவலரணுக்கு மரக்கறி மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டுவந்து தருமாறு வற்புறுத்தியிருக்கின்றான்.

அப்படி மரக்கறி கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில் இன்னொரு சிவில் பாதுகாப்பு படையினனும் சேர்ந்து குறித்த தமிழ் சிறுமிமை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருக்கின்றனர். இது குறித்து மண்டுர் பொலிசாரிடம் வினவியபோது குறித்த சிறுமி சிவில் ராணுத்தினனை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது குருணாகலவில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

http://thaaitamil.com/?p=15756

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பாலியல் வல்லுறவு என்ற வார்த்தையை நமது வெளிநாட்டு அரை குறை தமிழ் ஆர்வலர்கள் தவிர்கிறார்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.