Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி........................!

Featured Replies

ரஜினிகாந்த் என்ற மந்திரச்சொல் தமிழ் சினிமாவில் நெறைய பேரை வாழ வைத்திருக்கிறது.

அவரது எளிமை ....என்றும் எனக்கு ஆசரியத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறது.

சிவாஜி அவர்கள் இறந்த அன்று பெசண்ட் நகர் சுடுகாட்டுக்கு விடியற்காலையிலேயே சென்று விட்டேன்.(இதை எழுதியவர்)

அப்போதே போலிஸ் கெடுபிடி இருந்தது

.நான் அப்போது ஹோண்டா சிட்டி கார் வைத்திருந்தேன்.

அதனால் எனது காரை சுடுகாடு வாசல் வரை கேள்வியே கேட்காமல் அனுமதித்தனர்.

எனது கார் பக்கத்தில் ஒரு அம்பாஸிடர் கார் வந்து நின்றது.

அந்தக்கார் டிரைவரை... போலிஸ்காரர்.... “இங்கு நிறுத்தக்கூடாது” என விரட்டினார்.

அந்த டிரைவர்... “சார்.... இது ரஜினி சார் கார்...சிவாஜி சார் தகனம் முடிந்ததும்...அவரை அழைத்து செல்ல வந்துள்ளேன்...”என பவ்யமாக தெரிவித்தார்.

போலிஸ்காரர் விடாமல் ... “யார் கிட்ட காது குத்தற...எடுய்யா...வண்டியை” என மிரட்டினார்.

நான் தலையிட்டு... “ இந்த வண்டி ரஜினி சார் வண்டிதான்.

அதுவும் இப்போதுதான் சமீபத்தில் வாங்கினார்”.எனதெரிவித்தேன்.

ஆச்சரியத்தில் போலிஸ்காரர் வாயை பிளந்தார்.

ரஜினிஅம்பாஸிடர் வாங்கிய அதே நேரம் இசை அமைப்பாளர் தேவா மிட்சுபிச்ஷி லேன்சர் கார் வாங்கினார்.

இது பற்றி நெருங்கிய வட்டாரத்தில் தேவா அடித்த கமெண்ட்... “அம்பாஸிடரெல்லாம்... இந்தக்காலத்தில் தெய்வங்கள்தான் வாங்கும்.....

ரஜினி சார் தெய்வம்...

நான் சாதரண மனிதன் .அதனால்தான் லேன்சர் வாங்கினேன்”

ரஜினியை முதன் முதலில் கதாநாயகனாக போட்டு படம் தயாரித்தவர் கலைஞானம்.

படம் பைரவி.

இந்தப்படம் போஸ்டரில்தான்....

அப்படத்தின் விநியோகஸ்தர் கலைப்புலி தாணு... 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை வழங்கினார்.

அதற்க்கு கொஞ்ச நாள் முன்புதான் சென்னை கேசினோவில் ‘ஸ்னேக்’என்ற ஆங்கிலப்படம் வெளியாகி இருந்தது.

இப்பட போஸ்டர் 'SSSSSSSSSSNAKE' என்றிருந்தது.

அதை காப்பிஅடித்து தாணு "SSSSSSSSSSUPER STAR' ரஜினி காந்த் நடிக்கும்... பைரவி.... என மிகப்பிரம்மாண்டமான போஸ்டர் அடித்து தூள் கிளப்பினார்.

படமும் சென்னை பிளாசாவில் நூறு நாட்கள் ஒடியது.

கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே சூப்பர்ஸ்டார் பட்டம் ஒட்டி விட்டது.

கலைஞானம் ஒரு பைசா முதலீடு இல்லாமல் இப்படத்தை தயாரித்தார்.

படம் சூட்டிங் துவங்கும் முன்னரே... விநியோகஸ்தர்களிடம் விற்று...

அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்திலேயே மொத்தப்படத்தையும் எடுத்து விட்டார்.

தேவர் பிலிம்சில் கதை இலாகாவில் வேலை பார்த்த கலைஞானத்தை தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தியது

ரஜினி.

அதனால் தன்னை முதலில் கதாநாயகன் ஆக்கியவர் என்ற காரணத்திற்க்காக

கலைஞானத்துக்கு ரஜினி செய்த உதவி எண்ணிலடங்கா.

கலைஞானம் என்னிடம் சொன்னது.... “சினிமாவில் நேரில் போய் கேட்டால் கூட உதவி கிடைக்காது.

ஆனால் ரஜினி அவரே தேடி வந்து உதவி செய்வார்”.

அவரது ஸ்டைலிலே மிக உயர்வானது இதுதான்.

தேவர்தான் முதன் முதலில் ரஜினிக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தவர்.

மொத்தப்பணத்தையும் அட்வான்சாக கொடுப்பது தேவர் ஸ்டைல்.

ஒரு லட்ச ரூபாயை தட்டில் வைத்து பூ...பழங்களோடு வைத்து ஆசிர்வதித்து கொடுத்தார்.

ரஜினி லட்ச ரூபாயை முழுசாக கண்ணால பார்த்ததும் அப்போதுதான்.

அந்தப்படம்தான் தாய் மீதுசத்தியம்.

[இப்படத்தின் ஒரிஜினல் ஆங்கிலப்படத்தை இப்போதுதான் பார்த்தேன்]

தேவர் மறைந்தபிறகு அவரது வாரிசுகள் சோபிக்கவில்லை.

மொத்த சொத்தையும் அழித்து விட்டார்கள்.

கடன்காரன்களுக்கு பயந்து தேவர் மகன் சாதாரண லாட்ஜில் ஒளிந்து கிடந்தார்.

ரஜினி விஷயம் கேள்விப்பட்டு அந்த டஞ்சன் லாட்ஜுக்கு நேரிலேயே தேடிக்கொண்டு வந்து விட்டார்.

கையோடு ஒரு ஹிந்திப்பட கேசட்டும் கொண்டு போயிருந்தார்.

“இந்த ஹிந்திப்படத்தை ரைட்ஸ் வாங்கி பண்ணுங்க .

நானே ஹீரோவா நடிக்கிறேன்.

தம்பி பிரபுவை... ஒரு காரெக்டருக்கு நானே கால்ஷீட் வாங்கித்தாரேன்.

லாபத்தை வச்சு கடனை அடைச்சுட்டு நிம்மதியா இருங்க” என்று அபய கரம் காட்டினார்.

நேர்மை என்றால் தேவர்....ஆனால்அவரது மகன்... அந்தப்படத்தை...

ஒரே ஏரியாவுக்கு ஐந்து பேரிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டான்.

பிராடுத்தனம் வெளியாகியதும் ஒரே பஞ்சாயத்து....

அப்போதும் ரஜினியே காப்பாற்றினார்.

முதன்முதல் அட்வான்ஸ் கொடுத்தவங்களுக்கு... இந்தப்படம்.

அடுத்ததா... அட்வான்ஸ் கொடுத்தவங்களுக்கு... அடுத்தப்படம்...

என சாமாதானம் பண்ணி படம் வெளியாக உதவினார்.

அந்தப்படம்தான்... தர்மத்தின் தலைவன்.

படத்தின் பெயருக்கேற்றார் போல் ரஜினி... சாட்சாத்...

தர்மத்தின் தலைவன்தான்.

சிவாஜி சாரின் வீடு.... அன்னை இல்லம்... அவரது வாரிசுகளிடம் தங்கியிருப்பதற்க்கு காரணமும் ரஜினியே

ரஜினி குறுகிய காலங்களில் ஸ்டார் அந்தஸ்தை அடைந்து விட்டார்.

பட்டை சாராயம் சாப்பிட்ட மனிதனுக்கு.... ஸ்காட்ச், பாட்டில் பாட்டிலாக கிடைத்தது.

போதை, எதில் கிடைத்தாலும்... அதை தேடித்தேடி சுவைக்க ஆரம்பித்தார்.

கஞ்சா,ஜர்தா பீடா,ஜாதிக்காய்...என ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை மனிதன்.

ஒரு நாளைக்கு... மூன்று கால்ஷீட்டும் கொடுத்து விட்டு....

[எட்டு மணி நேரம்... ஒரு கால்ஷீட்] 24 மணி நேரமும் ஒய்வறியா உழைப்பை வாரி வழங்கினார்.

ரசிகர்களும்...தயாரிப்பாளர்களும்...மீடியாவும் விடாமல் ரஜினியை துரத்தினார்கள்.

அவர் ஏறிய உயரத்தை தாங்க முடியாமல்... தள்ளாடினார்.

மன நிலை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில்...

நினைத்தாலே இனிக்கும் படத்துக்காக சிங்கப்பூர் சென்ற போது... பாலச்சந்தரையே அடிக்க கை ஒங்கி விட்டார்.

அடிக்க வந்தது ரஜினி அல்ல...மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை.... எனக்கண்டு கொண்ட இயக்குனர் பாலச்சந்தரும்...சிவாஜியும் சேர்ந்து...

தங்களுக்கு வேண்டிய டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளித்து நார்மலாக்கினார்கள்.

ஆனால் மீடீயாதொடர்ந்து பைத்தியக்கார பட்டம் கட்டி கொண்டே இருந்தது.

தயாரிப்பாளர்கள் ரஜினியை வைத்து படமெடுக்க தயங்கிய காலத்தில்...

சிவாஜி, தன்னுடைய படங்களில் ரஜினியை நடிக்க வைத்து வாழ்வளித்தார்.

rajini136.jpg

எம்ஜியார் முதல்வரானதால்... சிவாஜி, தமிழ் சினிமாவில்....

ஏக போக சக்ரவர்த்தியாக கொடி கட்டி பறந்த காலம்.

ரஜினியை... நான் வாழ வைப்பேன் ...என கை கொடுத்த சிவாஜி...

அதே பெயரில் ஒரு படமும் கொடுத்தார்.

அந்தப்படம் ரஜினிக்கு மறு வாழ்வு கொடுத்தது.

Naan-Vazha-Vaipen.jpg

அதற்க்கு பிறகு வந்த நல்லவனுக்கு நல்லவன்... சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உறுதி செய்தது.

அதற்க்கு முன்னால் பில்லா,ரங்கா,பொல்லாதவன் என கொடியவர்கள் பெயரிலேயே ரஜினி நடித்தார்

ந.ந படத்துக்குப்பிறகு ரஜினியின் படப்பெயர்கள் மாறின .

தர்மதுரை,மனிதன்,கை கொடுக்கும் கை.... என பாசிட்டிவ் பெயர்களுக்கு மாறினார்.

படங்களின் பெயருக்கேற்றார் போல் தானும் மாறினார்.

சிவாஜியின் படங்களை... சிவாஜி பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரித்த போது அந்தப்பணிகளை சிறப்பாக செய்தவர் அவரது தம்பி.சண்முகம்.

அவரது மறைவுக்குப்பிறகு அந்தப்பதவிக்கு வந்தவர் சிவாஜியின் மகன்

ராம் குமார்.

இவரது நிர்வாகத்தில் சிவாஜி பிலிம்ஸ் அதல பாதளத்துக்கு வந்தது.

சிவாஜி என்ற சிங்கமும்,பிரபு என்ற சிங்கக்குட்டியும் வீட்டில் இருக்க...

சின்னி ஜெயந்த் என்ற பூனைக்குட்டியை வைத்து எந்த மடையனாவது படம் எடுப்பானா?

ஆனால் ராம் குமார் எடுப்பார்.

சிவாஜியின் மறைவுக்குப்பிறகு இன்னும் மோசமாக செயல் பட்டதன் விளைவு சிவாஜியின் கனவு இல்லமான அன்னை இல்லம் விற்பனைக்கு வந்தது.

விஷயம் கேள்விப்பட்டு ஒடி வந்த ரஜினி கை கொடுத்தார்.

பிரபுவின் தயாரிப்பில் சந்தரமுகி வந்தது...

மற்றதை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்.

ராம் குமார் நல்லவர்...மிகவும் நல்லவர்.

அந்த ஒரு தகுதி போதாதா...வியாபாரத்தில் தோற்க...!

யானை படுத்தாலும் குதிரை மட்டம்.

அவசரத்தேவைக்காக சிவாஜியின் தோட்டத்தை விற்றார்.

வாங்கிய ரியல் எஸ்டேட் வியாபாரி.... பல மடங்கு மேற்க்கொண்டு விற்று பல கோடிகளை பார்த்து விட்டார்.

அதில் சில கோடிகளை ராம் குமாரிடம் கொடுத்தார்.

“எங்களுக்கு உரிய தொகையை நீங்கள் கொடுத்து விட்டீர்கள்.

இது உங்கள் வியாபார த்திறக்கு கிடைத்த லாபம்.

இதில் எங்களுக்கு பங்கு தரத்தேவையில்லை” என திருப்பி கொடுத்த நல்லவர் ராம் குமார்

சிவாஜிராவ் என்ற கண்டக்டரை ரஜினிகாந்த் ஆக்கிய பிரம்மா கே.பாலச்சந்தர்.

அறிமுகப்படுத்திய இயக்குனர்களை... தயாரிப்பாளர்களை...

திரும்பியே பார்க்காத தமிழ் திரை உலகில்....நன்றிக்கடன் செலுத்துவதில் கர்ணனாக இன்றும் ஜொலிப்பவர் ரஜினிகாந்தே.

கவிதாலயா என்ற நிறுவனம் மூலம்.... பல படங்களை தாயாரித்து இயக்கினார் பாலச்சந்தர்.

ரஜினியை வைத்து இயக்குவதை தில்லு முல்லுவோடு நிறுத்தி கொண்டார்.

எஸ்.பி.முத்துராமன் போன்ற மசாலா பட இயக்குனர்கள் மூலம்...

ரஜினி படங்களை தயாரிக்க மட்டுமே செய்தார்.

நூறு படங்களை தயாரித்த கவிதாலாயா நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது.

அத்தனை படங்களின் வரவு செலவை பார்த்தது கவிதாலாயா நடராஜன்.

அந்த ஊழல் பெருச்சாளி.... சமயம் பார்த்து பல கோடிகளை சுருட்டிக்கொண்டு பிரமிட் என்ற நிறுவனத்தை தொடங்கி படம் தயாரிக்க துவங்கியது.

[ஆனால் பாலச்சந்தர் வயிற்றில் அடித்து துவங்கிய... பிரமிட் நிறுவனம்... தயாரித்த ஒரு படம் கூட ஒடவில்லை]

.கடனுக்காக...கடல் மாதிரி இருந்த பங்களாவை விற்று...

ஒரு பிளாட்டில் வாடகைக்கு சரஸ்வதி குடியேறினாள்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட அன்று நான் தூங்கவில்லை.

ஒரு வாரம் நான் விட்ட சாபங்கள் நடராஜனை எழு ஜென்மங்களுக்கும் துரத்தும்.

பாலச்சந்தர் ரசிகனான நானே கொதித்து போனேன்.

ரஜினிக்கு இருக்காதா!

அண்ணாமலையாக அவதாரம் எடுத்தார்.

46744398665466096049.png

குசேலன் மூலமாக மீண்டும் குருவை குபேரனாக்கிய கண்ணன் ரஜினி.

போன பதிவில் லகுட பாண்டி என்ற கொசு விடாமல் துரத்தியது.

விஷயத்தை.... முந்தைய பதிவின்.... பின்னூட்டத்தில் காண்க...

அலோ...மிஸ்டர் லகுட பாண்டி...

எம்.ஜி.யார் முதல்வராக இருந்த நேரம்...

மயிலை குருபாதம் என்றொரு தயாரிப்பாளர்....அதிமுக ரவுடி.

அவரை ரஜினி காரில்....ஒட...ஒட... விரட்டி....

கொல்ல முயற்ச்சித்தார்.

காம்பவுண்ட் சுவரில் மோதிநிறுத்தினார்.

ஜஸ்ட்... மிஸ்... குருபாதம்.

இந்த கொலை முயற்ச்சி கேஸ் பற்றி தெரியுமா?....லக்க்க்க்குட பாண்டி.

தனது கல்யாணம் பற்றிய செய்தியை பத்திரிக்கையாளர்களை கூட்டி அறிவித்தார்.

திருப்பதியில் நடக்கும் கல்யாணத்துக்கு யாரும் வரக்கூடாது என்றார்.

“வந்தால்”....எனக்கேட்ட பத்திரிக்கையாளரிடம் “செருப்பால் அடிப்பேன்” என்ற உண்மையான மனிதன் ரஜினி.

நிஜத்தில் நடிக்க தெரியாது.

அந்த திறமை அவருக்கு கிடையாது.

கமலுக்கும் கிடையாது.

அதனால்தான் அவர்கள் அரசியலுக்கு வர மறுக்கிறார்கள்.

http://worldcinemafan.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.