Jump to content

ஹிலாரி கிளின்டன் பீஜிங்கில் சீன அரசுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை


Recommended Posts

அமெரிக்காவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் சீன அரசுடன் உயர்

மட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று (புதன்) புறப்பட்டு பீஜிங்கை வந்தடைந்தார். இவ்விஜயத்தின் போது சீன அரசுடன் மிகச் சிக்கலான இராஜதந்திர நகர்வுகள் குறித்தும் பொருளாதாரம் குறித்தும் கிளின்டன் பேசவுள்ளார். இவற்றில் சீனாவின் கண் பார்வையற்ற மனித உரிமை ஆர்வலரான சென் குவாங் செங் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு நிமித்தம் தஞ்சம் கோரியிருக்கும் விடயம் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவின் கிராமங்களில் மேற்கொள்ளப் படும் மனித உரிமை மீறல்களினைத் தட்டிக் கேட்பவரான கண் பார்வையற்ற சென் குவாங் செங் ஷான்டொங் மாகாணத்திலுள்ள இவரது கிராமத்தில் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினராக சேவை அளித்து வரும் போது அரசியல் காரணங்களுக்காக சீன அரசால் கைது செய்யப்பட்டு இக்கிராமத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனினும் 20 மாதங்களுக்கு முன்னர் இவர் தப்பித்து தலைமறைவானதுடன் கிளின்டன் வர சில நாட்களுக்கு முன்னமே பீஜிங்கிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு நிமித்தம் தஞ்சம் அடைந்தார்.

ஹிலாரி கிளின்டன் சீனாவுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான மனித உரிமை தொடர்பான விவகாரங்கள் எந்தளவுக்கு மதிக்கப் படுகின்றன என்பது குறித்த விடயங்கள் தமது பேச்சுவார்த்தையில் உள்ளடக்கப் படும் எனவும் இதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் செங் பற்றி அவர் இப்பேட்டியில் குறிப்பிட்டு சொல்லவில்லை.

இதேவேளை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் செங் விவகாரம் தொடர்பாக கருத்துச் சொல்வதற்கு நேரடியாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தென் சீனக் கடலில் உள்ள ஒரு தீவை சீனாவும் அமெரிக்க நட்பு நாடான பிலிப்பைன்ஸும் சொந்தம் கொண்டாடி சண்டை பிடித்து வருவதை நிறுத்தி இணக்கம் காணவும் கிளின்டன் முயற்சி செய்யவுள்ளார்.

http://www.4tamilmedia.com/newses/world/5038-2012-05-02-22-43-44

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 11 MAY, 2024 | 06:25 AM   ஐக்கியநாடுகள் சபையில்  பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை  வழங்குவது குறித்து  ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது. 143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. https://www.virakesari.lk/article/183203
    • பொதிசெய்யப்பட்ட இரண்டு பாண் பாக்கெட்டுகளில் எலியின் உடலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 100,000 க்கும் மேற்பட்ட பாண்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் உயர்தர சுகாதாரம் பேணப்படும் நாடாகும். இவ்வாறான சம்பவங்கள் அங்கு நடைபெறுவது அரிதாகும். எலியின் எச்சங்கள் அதன் தயாரிப்புகளில் எவ்வாறு ஊடுருவின என்பதை ஆராய்ந்து வருவதாக குறித்த பாண் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஷிகிஷிமா தெரிவித்துள்ளார். “எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியதற்காக நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என்று குறித்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜப்பானில் தூய்மை மற்றும் சுகாதாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஆனால் உணவு விஷம் மற்றும் மோசமான தரம் ஆகியவை அண்மைக்காலத்தில் ஜப்பானிய தலைப்புச் செய்திகளாக அவ்வப்போது வருகின்றன. கடந்த ஆண்டு, அரிசி உருண்டையில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மன்னிப்புக் கேட்கப்பட்டதோடு அவை திரும்பபெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301373
    • Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 08:27 AM   இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டால் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை ஆதரவளிக்க  எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த அமெரிக்காவின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் துடிப்பான சிவில்சமூகம்  காணப்படுகின்றது, நான் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் இலங்கை அமெரிக்க சமூகங்கள் உட்பட மக்கள் மத்தியிலான தொடர்புகளை வலுப்படுத்த எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளேன். உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலிற்கு நான் ஆதரவளிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இலங்கையின் பொறுப்புகூறும் விவகாரங்களை கையாள்வதற்கான எலிசபெத் கே கோர்ஸ்டின் திறமை மாற்றுக்கருத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிப்பதற்கான திறமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதன்போது இலங்கை நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய சட்டங்கள்  இலங்கை மக்களிற்கான சுதந்திரங்களை மேலும் முன்னேற்றமாக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து செனெட்டர் பென்கார்டின் சுட்டிக்காட்டினார். நான் தூதுவராக நியமிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் பின்பற்றவேண்டிய சர்வதேச தராதரத்திற்கு அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவேன் என எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183206
    • சித்திரை புதுவருடத்திற்கு இலங்கை பயணம் 👍 ஓம் இலங்கையில் செய்யபடும்  சொக்லேட் மட்டும் சுவை இல்லை . முஸ்லிம் மதத்தை பின்பற்றும் ஒருவர் தன்னை தமிழன் என்று சொன்னது எனக்கும் ஆச்சரியம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.