Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் நகரில் பொறியியல்பீடம் அமைக்க இந்தியா 500 மில்லியன் ரூபா உதவி : எஸ்.பி. நேரில் சென்று பார்வை

Featured Replies

யாழப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை கிளிநொச்சிக்கு கொண்டு செல்வதற்கும் அத்தோடு அங்கு புதிதாக பொறியியல் பீடமொன்றை ஆரம்பிப்பதற்கும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கிளிநொச்சி அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள இப்பல்கலைக்கழகத்திற்காக இந்திய அரசாங்கம் ரூபா 500 மில்லியன் ரூபா நிதியை வழங்கவுள்ளதோடு இலங்கை அரசாங்கம் இதற்காக ரூபா 394 மில்லியனை செலவு செய்யவுள்ளது.

400 ஏக்கர் பரப்பிலேயே இப்பீடங்கள் அமைக்கப்படவுள்ளன. நேற்று முன்தினம் வியாழக்கிழமை கிளிநொச்சி அறிவியல் நகர் பிரதேசத்திற்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயகா இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தாவுடன் விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, தற்போது அறிவியல் நகர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்டோம். எம்மோடு இந்திய உயர் ஸ்தானிகரும் கலந்து கொண்டுள்ளார். இங்கு நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்காக இலங்கை அரசாங்கம் ரூபா 394 மில்லியனை செலவு செய்யவுள்ளது.

அதே போன்று இந்திய அரசாங்கம் ரூபா 500 மில்லியனை வழங்க இணங்கியுள்ளது. அத்தோடு ரூபா 215 மில்லியனை இப்பீடங்களில் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும் இந்திய உயர் ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார். இதற்கமைய இக்கட்டிடங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இவ்வருட இறுதிக்குள் விவசாய பீடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த வருட இறுதிக்குள் பொறியியல் பீடங்களின் இரண்டு திணைக்களங்களையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

இதன் மூலம் இப்பிரதேசம் பாரிய அபிவிருத்தியடையும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு நீண்ட கால அபிவிருத்திப் பயணம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தை வெகு விரைவில் அபிவிருத்தி செய்வோம்.

இதற்காக உதவி புரியும் இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுக்கும் உயர் கலவி அமைச்சின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கையின் உயர் கல்வியின் உயர்வுக்காக உதவி வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம். பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் துரித கதியிலான அபிவிருத்திகள் புத்திஜீவிகளை அதிகளவில் உருவாக்குவதில் உந்துசக்தியாக அமையும். எமது அண்மைய நட்பு நாடான இலங்கைக்கு உதவி செய்வதில் நாம் அதிக நாட்டம் கொண்டுள்ளோம் என்று இங்கு கருத்து தெரிவித்த இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்தார்.

விவசாய, பொறியியல் பீடங்கள் மிக விரைவில் ஆரம்பிப்பதற்கு எனது நல்வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.

கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன அமைச்சின் செயலாளர் ஆசியாவின் கல்வி வளர்ச்சியின் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இலக்காகும். இதற்காக எமது அமைச்சர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார். எமது பல்கலைக்கழகங்கள் இன்று உலகத் தரத்திற்கு உயர்த்தப்படுவதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்தார்.

உயர்கல்வி அமைச்சரின் இந்நேரடி விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37996

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.