Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

NSB பரிவர்த்தனை ஊடாக பிரதம நீதியரசருக்கு வலை வீசும் மகிந்த ராஜபக்‌ஷ!

Featured Replies

தேசிய சேமிப்பு வங்கி ‘த பினான்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புவிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தனியார் ஊடகங்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்‌ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கைபொம்மையாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தார். எனினும், நாட்டில் நீதித்துறை மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், இந்த நிலையில் தொடர்ந்தால் நீதிமன்றம் மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுப்போகும் எனவும் நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரை எச்சரித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரைச் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் காதுகளுக்குச் சென்றுள்ளன. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, பிரதம நீதியரசரை தொடர்ந்து கைபொம்மையாக வைத்திருப்பதற்குத் தேவையான சூழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.

இதற்கமையவே தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்தை பங்குச்சந்தை பரிவர்த்தனையில் ஜனாதிபதி சிக்கவைத்ததாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.

இந்த சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பப் பணிகளை தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சுமனதாஸவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.

பங்குச் சந்தையில் துமிந்த சில்வாவின் சகோதரர் ரெய்னோ சில்வாவிற்கும் அவரது நண்பர் ஒருவருக்கும் சொந்தமான பங்குகளையே தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் கொள்முதல் செய்துள்ளார். இந்தப் பரிவர்த்தனைக்குத் தேவையான தடைகளை அகற்றுமாறு சில தினங்களுக்கு முன்னர் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசத்தை இந்த சூழ்ச்சியில் சிக்கவைப்பதன் மூலம் பிரதம நீதியரசரை தன்பக்கம் இழுந்து தொடர்ந்து கைபொம்மையாக செயற்பட வைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்.

இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு, பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த விடயம் பிரதீப் காரியவசத்தையும், அவரது மனைவி ஷிராணி பண்டாரநாயக்கவையும், அவரது குடும்பத்தாரையும் விரக்தியடையச் செய்துள்ளது. இதனால் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு குடும்ப உறுப்பினர்கள் கோரி வருவதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரதம நீதியரசர், அரசியலமைப்பின் பிரகாரம் அந்தப் பதவியில் இன்னும் 09 ஆண்டுகள் நீடிக்க முடியும். இதற்கமைய எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கெதிரான கடுமையான தீர்மானங்களை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே காணப்படுகிறன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதித்துறையின் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர், ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அநீதிக்கெதிராக அந்நாள் பிரதம நீதியரசராகப் பதவி வகித்த நெவில் சமரகோன் இவ்வாறான தருணங்களில் கடுமையான தீர்மானங்களை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதேபோன்று தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க செயற்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரமும், ஞானமும் அவருக்கு இருப்பதாகவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.

ஷிராணி பண்டாரநாயக்க, அந்நாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனைப் பின்பற்றினால் மாத்திரமே நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை மதிக்கும் அனைவருக்கும் அது எடுத்துக்காட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

http://thaaitamil.com/?p=18411

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.