Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமனுக்கு (oman) அருகே எண்ணெய்க் கப்பல் கடத்தல் - 11 இந்தியர்கள் சிறைப் பிடிப்பு

Featured Replies

oman.jpgசைபீரியா நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய எண்ணெய்க் கப்பலான ஸ்மிர்னி சோமாலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஓமன் நாட்டுக்கு அருகே

வைத்து சோமாலியக் கடற் கொள்ளையர்களால் இன்று நண்பகல் கடத்தப் பட்டுள்ளது. இக்கப்பலில் 11 இந்தியர்கள் உட்பட 26 வெளிநாட்டவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இக்கப்பல் மூலம் சோமாலியாவுக்கு கொண்டு செல்லவிருந்த 135 000 டன் எடையுள்ள எண்ணெய் சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப் பட்டுள்ளது. செங்கடல் வழியாகவும் இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதியினூடாகவும் பயணம் செய்யும் பல சரக்குக் கப்பல்களை சோமாலியக் கடற் கொள்ளையர்கள் இதற்கு முன்னர் கடத்தியிருந்ததுடன் அவற்றை விடுவிப்பதற்கு பல மில்லியன் டாலர்களைப் பேரம் பேசுவது வழக்கம்.

இன்று கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலான ஸ்மிர்னியை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஐரோப்பிய யூனியனால் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.

இதுவரை சோமாலியக் கடற் கொள்ளையர்களால் 17 பெரிய கப்பல்களும் 300 இற்கும் அதிகமான ஊழியர்களும் கடத்தப்பட்டு பேரம் பேசிய பின் விடுவிக்கப் பட்டிருந்தனர்.

இக்கடற் கொள்ளையர்களின் ஆதிக்கத்தை அடக்குவதற்கு இந்தியா,பிரிட்டன்,அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டாக இணைந்து அரேபியத் தீபகற்ப பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்றன

http://www.4tamilmedia.com/newses/world/5279-hijacked-oil-tanker-near-oman-has-indians-among-crew-on-board

  • கருத்துக்கள உறவுகள்

சைபீரியா நாடு?? :unsure:

  • தொடங்கியவர்

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் எண்ணெய் தாங்கி கப்பலொன்று கடத்தப்பட்டுள்ளது.

கிறீஸ் நாட்டிலுள்ள நிறுவனமொன்றுக்குச் சொந்தமான இக்கப்பலில் 15 ஊழியர்கள் இருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைபீரிய கொடி தாங்கிய, ஸ்மைர்னி எனப் பெயரிடப்பட்ட, இக்கப்பல் 135,000 தொன் எண்ணெணெயுடன் சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழனன்று பிற்பகல் இக்கப்பல் ஊழியர்களுடனான தனது தொடர்புகளை இழந்துவிட்டதாக மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமானிலிருந்து 630 கிலோமீற்றர் தொலைவில் இக்கடத்தல் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. மேற்படி கப்பல் 2011 ஆம் ஆண்டிலேயே முதல் தடவையாக பயணம் மேற்கொண்டது. அக்கப்பலின் இரண்டாவது பயணத்தின்போது அது கடத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் பல கப்பல்களை கடத்தி பல மில்லியன் டொலர்களை கப்பமாக பெற்றுள்ளனர். அதையடுத்து அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களில் ஆயுதமேந்திய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நியமிக்கும் நடவடிக்ககைளை கப்பல் நிறுவனங்கள் மேற்கொண்டன. இதனால் சில மாதங்களாக கப்பல் கடத்தல்கள் குறைவடைந்திருந்த நிலையில் இப்போது மீண்டும் கப்பலொன்று கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirr...2-14-03-50.html

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.