Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராமேஸ்வரம் மீனவர் மரணம் தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்தியது தமிழக அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jeyalalitha.jpg

இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் மோதி மரணம் அடைந்த ராமேசுவரம் மீனவர் மரணம் பற்றி கடலோரக் காவல்படை விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.

இது பற்றி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காலை வெளியிட்ட அறிக்கை விவரம்:

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், இந்நிகழ்வுகளை ஒரு தேசிய பிரச்சனையாக கருதி பிரச்சனைக்கு தீர்வு காணவும் பாரதப் பிரதமரிடம் கடிதம் மூலம் பலமுறைவலியுறுத்தியுள்ளேன்.

இந்தச் சூழ்நிலையில், 10.5.2012 அன்று பாம்பன் கிராமத்தைச் சார்ந்த 5 மீனவர்கள் ஒரு நாட்டுப் படகில் ராமேஸ்வரம் அருகே அரியமான் கடற்கரையிலிருந்து நான்கு கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரவு 8.45 மணியளவில் இந்திய கடலோர காவல் படையின் கப்பலொன்று மீன்பிடிப்பு மேற்கொண்டிருந்த இப்படகின் மீது மோதியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக மீன்பிடி படகு சேதமுற்று கடலில் மூழ்கியது.

படகில் இருந்த 5 மீனவர்களில், நான்கு மீனவர்கள் சிறிது தொலைவு நீந்தி வேறு ஒரு வள்ளத்தில் ஏறி கரை சேர்ந்தனர். மற்ற ஒரு மீனவரான திரு பௌனிராஜ் என்பவரின் மகன் கால்வின் மில்லர் காயமுற்று நீரில் மூழ்கி காணாமல் போய்விட்டார். 12.5.2012 அன்று காலையில் இந்த 19 வயது இளைஞனின் உடல் மண்டபத்திலிருந்து 7 கடல் மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், அகால மரணமடைந்த மீனவர் கால்வின் மில்லர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்ததுடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உடனடியாக அளித்திட உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின்பேரில், தமிழக அரசின் தலைமைச்செயலாளர், புது டில்லியில் உள்ள இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநரை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு இவ்விபத்தின் உண்மை நிலையினை அறிய விரிவான விசாரணை ஒன்று மேற்கொள்ள வேண்டுமென்றும் மீனவரின் இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=59642

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய கடற்படை கப்பல் இடிப்பதற்கு ஒவ்வொரு மீனவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவன் சிங்களவன் போட்டு தள்ளினால் நரகம் தான். இந்த மீனவருக்கு ரெரக்டா சொர்க்கம் தான் .. யார் போட்டாலும் ஜெய் கிந்த் ஜெய் கிந்த் என சொன்னால் சொர்க்கதாம்..ஊர் ஏரி ஆறு குளம் குட்டை என இருக்க..கடலில் இந்த மீனவர்கள் மீன் பிடிப்பது எதற்கு..? சொர்க்கத்திற்கு போகணும் என்றுதான்...

டிஸ்கி:

ஒம் நமோ நாராயணா என்பது தேவ லோக வாக்கியம் அதை சொன்னால் மண்டை வீங்கி செத்து போவான் என்பதையும் மீறி சொன்னார் ராமானுஜர்.. பல பேர் செத்து சொர்க்கம் போய்விட்டார்கள் அது அந்த காலம் " ஜெய் கிந்து ஜெய் கிந்து" என சொல்லி செத்து போனால் தான் சொர்க்க வாசலின் கேட்டே திறக்குது என ஏற்கெனவே செத்து செத்து விளையாடியவர்கள் பேசி கொள்ளு சோறி கொல்லுகிறார்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.