Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் தினக் குழப்பம் தீருமா ?

Featured Replies

y-busme18%20%283%29.jpg(வாசகர்களின் கருத்துக்களும் இணைப்பு)முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பிரித்தானியாவில் எங்கே நடைபெறுகிறது ? என்ற குழப்பங்கள் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. சில ஊடகங்கள் அது கிறீன்பேடில் உள்ள திடல் ஒன்றில் மே 18ம் திகதி(வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) அமைப்பு இந் நிகழ்வானது லண்டன் நகர மையப்பகுதில் உள்ள ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது. ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறும் நினைவு தினம் மே 19(சனிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த நிகழ்வுக்கு நாம் செல்லவேண்டும் என மக்கள் மத்தில் குழப்பங்கள் பலதை ஏற்கனவே மின்னஞ்சல்களும், ஊடகங்களும், மற்றும் தொலைக்காட்சிகளும் தோற்றுவித்துவிட்டது யாவரும் அறிந்ததே.

இன்னிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எங்கே நடைபெறவேண்டும் ? எங்கு நடந்தால் அது நமக்குச் சாதகமாக அமையும் ! எங்கு நடந்தால் அது எமக்கு பாதகமாக அமையும் என, வேகமாக ஆராய்ந்து பார்க்கலாமா ?

பிரித்தானிய தமிழர் பேரவையில் உள்ள அதிருப்தியாளர்கள் சிலர், சங்கீதன் என்னும் கோஷ்டியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கிறீன்பேட்டில் உள்ள மைதானம் ஒன்றில் நடத்துகின்றனர். முழுக்க முழுக்க தமிழர்களால் தமிழர்களுக்கு என்று நடத்தப்படும் இந் நிகழ்வில், வேற்றின மக்கள் யார் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பது பெரும் கேள்வி ! கிறீன்பேட் நகரம் முழுக்க முழுக்க இந்திய வம்சாவெளி மக்களால் சூழப்பட்ட ஒரு நகரம். அத்துடன் அது லண்டன் புறநகர்ப் பகுதியாகும். இங்கே வைப்பதால் என்ன நடக்கப்போகிறது ? தமிழ் மக்கள் திரண்டுவந்து அங்கே தீபத்தை ஏற்றிவிட்டு பின்னர் விற்க்கப்படும் கொத்துரொட்டியையும், பருப்பு வடையையும் நன்றாக உண்டுவிட்டுச் செல்லவா முள்ளிவாய்க்கால் தினம் நடத்தப்படவிருக்கிறது ?

ரவல்கர் சதுகத்துக்கு மக்கள் ஏன் செல்லவேண்டும் ?

முதலில் ரவல்கர் சதுக்கம் என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டாமா ? பிரித்தானிய கடற்படை 1805 ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் திகதி ஸ்பெயின் நாட்டில் உள்ள கேப் ரவல்கர் என்னும் இடத்தை தாக்கினர். ஸ்பெயின் - பிரான்ஸ் நாட்டுக் கப்பல் படையினர் இணைந்து, பிரித்தானிய கப்பல் படையை தாக்கினர். சுமார் 6 பிரித்தானியக் கப்பலை 33 ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் கடற்படைக் கப்பல்கள் இணைந்து தாக்கியது. இக்கூட்டுப்படையின் 22 போர்க் கப்பல்களை பிரித்தானியாவின் கடற்படை மூழ்கடித்தது. இதில் பிரித்தானிய கப்பல் படைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை. ஒரு போராட்டத்தின் மாபெரும் வெற்றியாக இது கருதப்பட்டது. அதுமட்டும் அல்ல எதிரிகளின் 33 கப்பல்களை பிரித்தானியாவின் 6 கப்பல்கள் எதிர்கொண்டது ஒரு பெரும் வீரச்செயலாகக் கருதப்பட்டது. எதிரி எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் மனவலிமை வெல்லும்.. என்பதனை இப் போர் உலகிற்கு உணர்த்திய நாட்கள் அது ! வன்னி மண்ணைப் போல அவ்வீரர்களும் யாரும் தலைவணங்கவில்லை !

இதன் நினைவாகவே ரவல்கர் சதுக்கம் என, இவ்விடத்தை பெயரிடுமாறு ஜோர்ஜ் லெட்வெயில் டெய்லர் என்னும், மிக மிகப் பிரபல்யமான சிற்பி ஒருவர் பரிந்துரைத்தார். இதனை பிரித்தானிய இராச குடும்பம் ஏற்றுக்கொண்டது. லண்டன் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ரவல்கர் சதுக்கத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 15 மில்லியன் வேற்றின மக்கள் வந்துசெல்வது வழக்கம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது 1 மாதத்திற்கு 1 மில்லியனுக்கு மேல் மக்கள் வருவது வழக்கம். அப்படி என்றால் சனிக்கிழமை போன்ற வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான வேற்றின மக்கள் அங்கே வந்துபோவது உண்டு. இவ்வாறான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் ஒரு போராட்ட வெற்றியை நினைவு கூரும் இடமான ரவல்கர் சதுக்கம் விளங்குகிறது.

இவ்வாறனதொரு இடத்திலேயே, முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடத்தப்படவேண்டும் ! அப்படி என்றால் தான் எமது மக்கள் பட்ட சோகங்கள், அவர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட செய்திகள் வேற்றின மக்களுக்குச் சென்றடையும் ! அங்கே வரும் ஆயிரக்கணக்கான வேற்றின மக்கள் தாம் பார்த்த மற்றும் அறிந்த செய்திகளை தமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்லுவார்கள், பத்து நூறாகும்... நூறு ஆயிரமாகும்... ஆயிரம் பத்தாயிரமாகும்.... முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படும். இந்தப் பத்தாயிரம் பேரில் ஒருவர், ஐ.நாவில் வேலைபார்க்கலாம், இல்லையேல் மனித உரிமை அமைப்பில் இருக்கலாம், இல்லாவிட்டால் பிற நாட்டு தூதரங்களில் வேலைசெய்யலாம். இதனூடாக அவர்கள் மனதிலும் மாற்றங்கள் ஏற்படும் ! தமிழ் மக்கள் ஒன்று திரண்டால் ஒரு செயல்திட்டம் இருக்கவேண்டும் !

வெறுமனவே ஒரு மைதானத்துக்குச் சென்று, அங்கே விளக்கை ஏற்றிவிட்டு, கொத்துரொட்டியும் டீ யும் குடித்துவிட்டுக் வருவது என்றால் ஏன் நாம் அதனை வீட்டில் இருந்தே செய்துவிடலாமே ? கிறீன்பேட் மைதானத்தில் ஏன் செய்யவேண்டும் ? போதாக்குறைக்கு அதனை முருகதாஸ் திடல் என்று அழைக்கிறார்கள். அதுவும் அரசியல் லாபம் கருதித்தான் என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது. மே 19ம் திகதி(சனிக்கிழமை) ரவல்கர் சதுக்கத்துக்கு தமிழர்கள் அணிதிரண்டு வரவேண்டும் ! பொங்கி எழும் தமிழர் கூட்டம் கண்டு வேற்றின மக்கள் மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினச் செய்தி காட்டுத் தீ போலப் பரவேண்டும் !

இதனூடாக சர்வதேச சுயாதீன விசாரணைகள் ஆரம்பமாகவேண்டும். குற்றம் இழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் !

tprotest1.jpg

tprotest2.jpg

tprotest3.jpg

tprotest4.jpg

tprotest5.jpg2ndyearmul.jpg

நடுநிலையான ஊடகம் என்ற வகையில் உயர்வு இணையம் உங்கள் கருத்துக்களை இதன் கீளே இணைக்க சந்தர்ப்பம் வழங்குகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.