Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச விசுவாசம் இருந்தும் விளங்கிக்கொள்ள முடியாத இடமாற்றம்! - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

யாழ்.அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், என்ற செய்தி குடாநாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. ஆனாலும் அது வெறுமனே ஒரு செய்தி என்ற வகையில் மட்டும்தான் குடாநாட்டு மக்களால் பார்க்கப்பட்டதே தவிரவும் அதற்கப்பால் எமது மாவட்டத்தின் அரசாங்க அதிபர், மாவட்டத்தின் முதல் பெண் அரசாங்க அதிபர் என்ற உணர்வு நிலைகளுடன் அடுத்த கட்டத்தைப் பற்றி எமது மக்கள் சிந்தித்திருக்கவில்லை.

முதலில் குடாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கக்கூடாதென்ற கட்டளை ஆளுநர் மட்டத்திலிருந்து விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் அரசாங்க அதிபரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது. இந்த இட

மாற்றத்தின் பின்னால் நிறையவே அரசியலும், அது சார்ந்த பழிவாங்கல்களும் நிறைந்து கிடப்பது தமிழ் மக்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம்.

எனவே நீர்த்துப்போன அந்த விடயங்களைப் பற்றிப்பேசிக் கொண்டிருப்பதில் பலன் ஒன்றும் இருக்கப்போவதில்லை என்பதும் எமக்குப் புரியும். ஆனாலும் இந்த இடமாற்றம் சிலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அல்லது மிகச்சிறந்த உதாரணமாக அமையும் என எண்ணத்தோன்றுகின்றது. அரசாங்கத்திற்கும், அதுசார்ந்த சக்திகளுக்கும் பின்னால் நிற்பதுவும், அவற்றுக்காகப் பேசுவதும், எப்போதும் கரடியைப் பிடித்தவன் கதை என்பதே அந்த உதாரணம்.

இந்த அரசாங்க அதிபர் யாழில் தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், யாழில் மிக நீண்டகாலம் உயர்பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டிருந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் இன்று மக்கள் சென்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் அரசாங்க அதிபரே காரணம் என சிலர் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு குறிப்பிடமுடியாது. போர் முடிவடைந்துவிட்டது என சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு ஒரு சில இடங்களில் உயர்பாதுகாப்பு வலயம் அகற்றப்பட்டது. சர்வதேசத்தை ஏமாற்ற மேற்கொண்ட ஒரு நடவடிக்கைதான் அது. மற்றும்படி தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணில் வாழவேண்டும் என்பதற்காக அவை அகற்றப்படவில்லை.

மேலும் இதே அரசாங்க அதிபர்தான் குடநாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்கள் கிடையாது. கண்ணிவெடியகற்றப்படாத பகுதிகள்தான் இருக்கின்றன என்ற புது வார்த்தை வடிவங்களை அறிமுகப்படுத்தி அதனை வெளிநாட்டு இராஜதந்திர சக்திகளுக்கும் தெரியப்படுத்தினார். அப்படி

யென்றால் கண்ணிவெடியகற்றப்படாத பகுதிகளில் இன்றுவரை இராணுவம் எதற்காக இருக்கின்றது? அந்தப்பகுதிகளில் கண்ணிவெடியகற்றலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எதுவுமில்லை. இந்த நிலையில் யாழ்.அரசாங்க அதிபர் யாழ்.மாவட்டத்தில் இராணுவ இயந்திரத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பாகவும் ஒத்தாசையாளராகவும் இருந்தார் என்பதே உண்மை.

அதுபோக நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகளில் கலந்துகொண்டு இதே அரசாங்க அதிபர் சாட்சியமளித்திருந்தார். அந்த அமர்வுகளில் அவர் குறிப்பிட்டது வேறு, ஆனால் அவர் கண்டது, கேட்டது, வேறு என்பது யுத்தத்தோடு வாழ்ந்த மக்கள் சொன்ன உண்மைக்கதை. எனவே அது உண்மையாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அந்த வலிகளோடு திரும்பியிருந்த மக்களின் மனங்களில் விசத்தை விதைத்து விட்டது என்பதை யாரும் மறுத்துரைப்பதற்கில்லை.

இதன் மற்றொரு பக்கம், நிச்சயமாக அவர் யுத்த சூழலில் வாழ்ந்தமையினால் அவ்வாறு பேசுவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கலாம். இருந்தாலும் கூட மக்களுக்கு அந்த உண்மைகள் அல்லது அந்த மறைபக்கங்கள் ஒருபோதும் விளங்கப்போவதில்லை. இதேபோன்று அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஜ.நா.மனிதவுரிமைகள் அமர்வுகளில் கூட அரசாங்க அதிபர் சிறீலங்கா அரசின் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.

ஆனால், தான் வேறொரு விடயத்திற்காகவே அங்கு சென்றிருந்ததாக அவர் கூறிக்கொண்டாலும், உண்மை இதுவாகத்தான் இருக்கமுடியும். ஆனாலும், அவரின் இடமாற்றத்திற்கு மற்றொருபக்க காரணமாக இது இருக்கலாம். இதில் குறிப்பாக அரச திணைக்களங்களிலும், சமுகத்திலும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும், துஸ்பிரயோகங்கள் மற்றும், வன்முறைகளுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்துவந்தார்.

இது மாவட்டத்தில் பெண்களிடமும், சமுகத்திலும் மிகக்கூடியளவு பெறுமானத்தை கொடுத்திருந்தது. ஆனாலும் கூட அந்தச் சமூகங்களும், பெண்களும், இந்த அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கத்தயாரக இருக்கவில்லை. இதற்குக் காரணம் அரசாங்க அதிபர் தொடர்பாக நாம் மேற்சொன்ன காரணங்களால் மக்கள் மனதில் விதைந்து கிடக்கும் கசப்புணர்வுகளே என்றால் மிகையாகாது. எனவே அரச நிர்வாகியின் எல்லைக்கு அப்பாற்சென்று,

அரசாங்கத்திற்கும், அதன் சக்திகளுக்கும், உறுதுணையாக நிற்பது எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படாத விடயம். இதைத்தான் அரசாங்க அதிபரின் திடீர் இடமாற்றத்தின் பின்னர் பொதுமக்களும், சமுக அமைப்புக்களும் காட்டிவரும் மௌனம் உணர்த்தி நிற்கின்றது. இதுபோக அரசாங்க அதிபர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணம் இன்னமும் மர்மமான முறையிலேயே இருக்கின்றது.

இது தொடர்பாக அரசாங்க அதிபரும் இதுவரைக்கும் வெளியிடவில்லை, இடமாற்றத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும், அவர் வெறும் மௌனங்களையும், தன்னுடைய உள்ளக்குமுறலையும் மட்டும்தான் அறிக்கைக்காக கொடுத்திருக்கின்றார். அதற்கப்பால் சென்று நடந்த உண்மைகள் குறித்து அவர் பேசவில்லை, பேசத் தயாரகவும் இல்லை. இதுபோக அரசாங்க அதிபர் இனிமேலும், வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்க கூடாதென வந்த உத்தரவு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் யாழ்.மாவட்டத்திற்கு வருகைதரும்போது மாவட்டம் தொடர்பான சகல விடயங்களையும் அரசாங்க அதிபரிடமிருந்தே பெற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் அரசாங்க அதிபர் தான் நிதான நிலையில் இருந்து கொண்டு சில விடயங்களை மறைத்துப் பேசி வருவதாக நினைத்துக் கொண்டாலும், இராஜதந்திரிகள் இவரை அறியாமலே சில விடயங்களை இவரிடமிருந்து துருவிக் கொண்டு சென்று விடுகின்றமை ஒவ்வொரு தடவையும் இடம்பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல், அவற்றைக் கொண்டு வெளிநாடுகளில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோன்று, சில இராஜதந்திரிகள் அரசாங்க அதிபருடன் சந்திப்பது, அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வது மட்டுமில்லாமல், அதற்கப்பால் நேரடியாகவே சிவில் சமுகங்களையும், பொதுமக்களையும் சந்தித்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் கூறிய விடயங்களும், சில தரவுகளும், அரசாங்க அதிபர் கூறிய விடயங்களுக்கும், தரவுகளுக்கும் முற்றிலும் முரணாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனாலும் அரசாங்கத்திற்குப் புற அழுத்தங்களையும், அதிகரித்திருக்கின்றது. இதுவே அரசாங்க அதிபர் இடமாற்றத்தின் பின்னாலுள்ள மர்மமாக இருக்க முடியும். மேலும் மாவட்டத்திலுள்ள சில உள்ளூர் அரசியல் சக்திகளுடன் அரசாங்க அதிபர் சில விடயங்களில் ஒத்துப்போகாத தன்மையினையும் கொண்டிருந்துள்ளார். இதுவும் அவரின் இடமாற்றத்தின் பின்னாலுள்ள காரணிகளில் ஒன்றாக இருக்க முடியும்.

எனவே அரசாங்க அதிபர், ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என வாய்க்கு வாய் புகழ்ந்து பேசிக் கொண்டாலும் அவர்கள் அனைவரும் ஈற்றில் கையை விரித்ததுதான் உண்மை. இந்நிலையில் மட்டக்களப்பிலும், வவுனியாவிலும் கூட இடமாற்றம் நடைபெற்றிருக்கின்றது. யாழ்.மாவட்டத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதென்ன என பலர் கேள்வியெழுப்பலாம்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒரு விடயம், வடக்கு மாகாணம் முழுவதையும் பாதிக்கும், அல்லது அதன் தாக்கம் வடக்கு மாகாணம் முழுவதும் பிரதிபலிக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டாகவேண்டும், ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் இடமாற்றமும் இந்த மாவட்டத்தை மையமாக வைத்துக் கொண்டேதான் நடக்கின்றது. இதுவே யாழ்.மாவட்டத்தில் அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யாமல் வவுனியாவில் சிங்கள அரசாங்க அதிபரை நியமித்தால் அதற்கெதிரான குரல் யாழ்ப்பாணத்திலிருந்தே முதலில் எழுப்பப்படும்.

இந்த நாட்டில் எல்லாமே அரசியலால் நிறைந்து கிடக்கின்ற நிலையில், இங்கே அதிகாரமுள்ளவர் எதை நினைத்தாலும், எப்படி நினைத்தாலும் அதை அடுத்தகணமே செய்துவிட முடியும் என்பதே அரசாங்க அதிபரின் இடமாற்றத்தின் பின்னாலுள்ள செய்தி.

www.Tamilkathir.com

  • கருத்துக்கள உறவுகள்

எமது செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்கள், இணையத் தளங்கள் எல்லாம், ஒரு பொதுவான நோக்கத்தைக் கொண்டுள்ளன போல் உள்ளன!

எமது இனத்தின் அழிவை, அத்திவாரமாக்கித் தங்கள் வாழ்வைச் செப்பனிட்டுக் கொண்டவர்கள், அதனால் பயன் பெற்றவர்கள் எல்லாம் திடீர் என்று நல்லவர்களாக மாறுகின்றார்கள்!

அண்மையில் தமரா குணநாயகம்!

இப்போது இமெல்டா சுகுமார்!

புலத்தின் தமிழர்கள் செய்யும் செயல்களையெல்லாம், நீர்த்துப் போகச் செய்வதே இவர்கள் இது வரை செய்தது!

சாதாரண மக்களைக் குழப்புவதுக்காகவே, சில ஊடகங்கள் செயல்படுகின்றன போல உள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.