Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.சுந்தர்ராஜன் - முடிந்ததா பயணங்கள்?

Featured Replies

அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன் பல ஆண்டுகளுக்குப் பின்பு லாரன்ஸ் ராகவேந்திரா நடிப்பில் „உயிரெழுத்து' என்று படத்தை இயக்கி இருப்பதாகவும், படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவித்திருத்தது.

லாரன்ஸ் ராகவேந்திரா ஒரு சிறந்த நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர். கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிக அதிக அளவிலான விகித இலாபம் இவர் நடித்து, இயக்கியிருந்த „காஞ்சனா' (முனி 2) படத்திற்கே கிடைத்திருந்தது. இந்த வெற்றி இவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது.

இந்த நிலையில் „உயிரெழுத்து' படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகியது. இதை அடுத்து மிக அவசரமாக லாரன்ஸ் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் „படம் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாவும், அந்த நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தது போன்று கதாநாயகனின் நண்பனாகவும், ஒரு பாடலுக்கு ஆடியும் நடித்துக் கொடுத்ததாகவும் லாரான்ஸ் தெரிவித்திருந்தார்.

„உயிரெழுத்து' திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. பாரதிராஜா இயக்கிய „கண்களால் கைது செய்' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த வசீகரன்தான் „உயிரெழுத்து' படத்திலும் கதாநாயகன். லாரன்ஸ் கதாநாயகனனின் நண்பனாக ஒரிரு காட்சிகளில் வருகின்ற சிறிய வேடத்தில்தான் நடித்திருக்கிறார்.

பல காரணங்களால் வெளிவராமல் போன அந்தப் படத்தை தற்பொழுது லாரன்ஸுக்கு உள்ள வியாபார மதிப்பை கணக்குப் போட்டு மயக்கம் தரக் கூடிய விளம்பரத்தோடு வெளியிடத் திட்டமிடுகிறார்கள். மிகப் பெரும் வெற்றி இயக்குனராக வலம் வந்த ஆர்.சுந்தர்ராஜனின் இந்த நிலையை நினைக்கின்ற பொழுது வருத்தமாக இருக்கின்றது.

80களில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய படங்கள் நிகழ்த்தி சாதனைகள் இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்காது. இசைஞானி இளையராஜாவின் இசையில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்குகின்றார் என்று சொன்னாலே போதும் படம் விற்றுத் தீர்ந்து விடும்.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய முதல் படம் „பயணங்கள் முடிவதில்லை'. அப்பொழுது ஓரிரு படங்களில் நடித்திருந்த, பெரிய அறிமுகம் இல்லாத மோகன்தான் படத்தின் கதாநாயகன். படம் வெளியான நேரத்தில் கமல்ஹாசன், சிறிதேவி நடித்திருந்த „வாழ்வே மாயம்' திரைப்படமும் வெளியாகி இருந்தது. இரண்டு படங்களும் ஏறக்குறைய ஓரே கதையை கொண்டிருந்தன. ஆனால் இரண்டுமே வெற்றி பெற்றன.

ஆர்.சுந்தர்ராஜனின் „பயணங்கள் முடிவதில்லை' மிகப் பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது. பல திரையரங்குகளில் 500 நாட்கள் வரை படம் ஓடியது. பாடல்களும் பட்டி, தொட்டி எல்லாம் ஒலித்தன. படத்தின் கதாநாயகன் மோகனுக்கு பெரிய திருப்புமுனையும் கிடைத்தது.

ஆர்.சுந்தர்ராஜன் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர். „வைதேகி காத்திருந்தாள்' என்ற படத்தை விஜயகாந்தை வைத்து இயக்கிக் கொண்டிருந்தார். சண்டைப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்தை கோயிலில் அமர்ந்தபடி இரவில் பாடல் பாடுகின்ற வேடத்தில் நடிகக வைத்திருப்பார்.

பலர் இந்த வேடத்திற்கு விஜயகாந்த் பொருத்தமில்லாதவர், மோகனை நடிக்க வைக்கலாம் என்று கூறிய போதும், அதை ஏற்காது விஜயகாந்தை நடிக்க வைத்தார். படத்தின் கடைசிக் காட்சி விஜயகாந்தின் பாத்திரப் பொருத்தத்தையும் விஸ்வரூபத்தையும் வெளிப்படுத்தியது. படமும் மிகப் பெரிய வெற்றி. விஜயகாந்தாலும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்தது.

„பயணங்கள் முடிவதில்லை' போன்று இந்தப் படத்திற்கு இளையராஜா போட்ட பாடல்களும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

„வைதேகி காத்திருந்தாள்' படத்தில் இன்னும் ஒரு விசேசம் இருந்தது. அதுவரை தனித் தனியாக நடித்துக் கொண்டிருந்த கவுண்டமணியும் செந்திலும் இணைந்து நடித்திருந்தார்கள். இருவரின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு, தொடர்ந்து அவர்களை இருபது ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து நடிக்க வைத்தது. அந்தப் படத்தில் கவுண்டமணியின் வேடமான „ஆல்இன்ஆல அழகுராஜா' இன்று வரை பிரபலமாக இருக்கிறது. இந்தப் பெயரில் தற்பொழுது நடிகர் கார்த்தி நடிக்கின்ற படம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.

ஆர்.சுந்தர்ராஜன் நடிகர் சிவகுமாரை வைத்து இயக்கிய „நான் பாடும் பாடல்' படமும் பெரும் வெற்றியை பெற்றது. இசைஞானியின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. கவுண்டமணியின் நகைச்சுவையும் பாராட்டை பெற்றது.

இப்படி ஆர்.சுந்தர்ராஜனின் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. இசைஞானி இளையராஜாவும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் இணைந்து இசை அமைத்திருந்த „மெல்லத் திறந்தது கதவு' படத்தையும் இவரே இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் வெற்றியையும் சொல்லத் தேவையில்லை.

விஜயகாந்தை வைத்து „அம்மன் கோவில் கிழக்காலே' என்கின்ற இன்னும் ஒரு வெற்றிப் படத்தை இயக்கினார். அப்பொழுது ஒரு சம்பவம் நடந்ததாம். படப்பிடிப்புக்கு நாள் குறித்து எல்லோரும் வந்த பின்பு தயாரிப்பாளரை பார்த்து „உங்களுக்கு என்ன மாதிரி கதை வேண்டும்' என்று கேட்டாராம். துயாரிப்பாளர் ஆடிப் போய் விட்டார். இதன் உண்மை, பொய் தெரியவில்லை. படப்பிடிப்புக்கு வந்து அங்கு வைத்தே கதையையும், திரைக்கதையையும் செய்து படத்தை வெற்றிப் படமாக்குவதில் வல்லவர் என்பதற்காக இந்தச் சம்பவத்தை கூறுவார்கள்.

மனித உணர்வுகளையும் உறவுகளையும் தன்னுடைய படங்களில் சொல்லி வந்த ஆர்.சுந்தர்ராஜன் ரஜினிகாந்தை வைத்து „ராஜாதிராஜா' என்கின்ற மசாலாப் படத்தையும் தந்தார். இந்தப் படத்தை இசைஞானி இளையராஜாவே தயாரித்திருந்தார். „ராஜாதிராஜா' படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இப்படி பல வெற்றிகளையும் சாதனைகளையும் தந்த ஆர்.சுந்தர்ராஜன் படங்கள் இயக்குவதைக் குறைத்துக் கொண்டு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடைய ஓரிரு படங்கள் தோல்வி கண்டதும் இதற்கு ஒரு காரணம்.

ஆயினும் மீண்டும் விஜயகாந்தை வைத்து „என் ஆசை மச்சான்' என்கின்ற படத்தை தந்தார். படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார். பாடல்கள் வரவேற்றை பெற்றன. ஆர்.சுந்தர்ராஜனின் மற்றப் படங்கள் அளவிற்கு இல்லாது விட்டாலும் இந்தப் படமும் வெற்றியைப் பெற்றது.

ஆனால் அதன் பின்பு அவர் இயக்கிய படங்கள் வெற்றியை பெறவில்லை. இசைஞானியின் இசை அவருடைய படத்திற்கு இல்லாமல் போனதும் ஒரு குறையாகி விட்டது. அப்பொழுது தொடர் வெற்றிகளை தந்து வளர்ந்து வந்த நடிகர் விஜயை வைத்து 1997இல் „காலம் எல்லாம் காத்திருப்பேன்' என்ற படத்தையும் இயக்கினார். அந்தப் படமும் தோல்விப் படமாகிப் போனது.

கால மாற்றத்திற்கு பல வெற்றிப்பட இயக்குனர்களால் ஈடு கொடுக்க முடியாமல் போவது திரையுலகில் சகயமான ஒன்றுதான். பெரும் ஜாம்பவான்களாக கருதப்படுகின்ற பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்களாலேயே இன்றைக்கு ஒரு வெற்றப் படத்தை கொடுக்க முடியவில்லை.

ஒரு நேரத்தில் வெற்றிகரமான மாசாலப் பட இயக்குனராக விளங்கிய எஸ்.பி. முத்துராமன் போன்றவர்களால் இன்றைய பேரரசு, ஹரி போன்ற இயக்குனர்களோடு போட்டி போட முடியாது. இந்த யதார்த்தத்தை உணந்து பல இயக்குனர்கள் தாங்களாவே படம் இயக்குவதில் இருந்து விலகி தமக்கு உள்ள பெயரை காத்துக் கொள்வார்கள்.

மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்திய ஆர்.சுந்தர்ராஜனும் நடிப்பில் மட்டும் இனி கவனத்தை செலுத்தலாம். காலம் பிந்தி வருகின்ற படங்கள் வெற்றி பெறுவது இல்லை. அதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிப் பட இயக்குனராக இருந்தவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய „உயிரெழுத்து' படம் வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை.

இது அகரம் சஞ்சிகைக்காக எழுதப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இது அகரம் சஞ்சிகைக்காக நீங்கள் எழுதியதோ?உங்களது அரசியல் பயணம் எப்படி?(முடிந்ததா முடியவில்லையா?

  • தொடங்கியவர்

என்னுடைய அரசியல் பயணம் முடியவில்லை. அது தொடரும்.

இந்தக் கட்டுரையை அகரம் சஞ்சிகைக்காக எழுதினேன். மதாந்த சஞ்சிகையான அகரத்தில் கடந்த ஒரு ஆண்டாக சினிமாக் கட்டுரைகளை எழுதி வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர். சுந்தர்ராஜன் வேறு எந்த இயக்குநர்களிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேசன் அண்ணா பகிர்விற்க்கு..அகரம் சஞ்சிகை இங்கு பிரான்சில் கிடைக்கிறது....தொடர்ந்து படிப்பேன்....நன்றாக இருக்கிறது..அவர்களின் விடாமுயற்சிக்குப் பாராட்டுக்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.