Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித வாழ்வை திசைமாற்றும் ஆரோக்கியமின்மை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித வாழ்வை திசைமாற்றும் ஆரோக்கியமின்மை

வீட்டிற்கு அஸ்திவாரம் போல், மனிதனுக்கு ஆரோக்கியம் முக்கியமானது. அந்த ஆரோக்கியத்தை வழங்குவது அவன் சாப்பிடும் உணவு. மனிதனுக்கு தேவைப்படும் ஆரோக்கியமான உணவை, குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாக வழங்கிவரவேண்டும்.

பிறந்த குழந்தைக்கு மிகச் சிறந்த உணவான தாய்ப்பாலை ஒரு வருடம் வரை கொடுப்பது அவசியம். அதன் மூலம் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு கிடைக்கும். தாய்ப்பால் போதுமான அளவில் இல்லை என்றால், பசும்பால் கொடுக்கவேண்டும். அரைத்த பாதம்தூளை கால் தேக்கரண்டி எடுத்து பாலில் கரைத்து குழந்தைகளின் எடைக்கு பொருந்தும் அளவில் மருத்துவர் ஆலோசனைப்படி கொடுத்துவந்தால் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் உயரமாக வளர்வார்கள்.

ஐந்தாவது மாதத்தில் இருந்து நன்றாக வேக வைத்த சாதம், நெய், துவரம் பருப்புடன் 1/4 சிட்டிகை சீரகத்தூள் கலந்து ஒரு டீஸ்பூன் அளவு ஆரம்பித்து கைப்பிடி அளவிற்கு உணவின் அளவை அதிகரிக்கவேண்டும். அத்துடன் படிப்படியாக பழங்கள், காய்கறிகள், முட்டை மற்றும் கீரை போன்றவற்றை புதிதாக சமைத்துக் கொடுக்க வேண்டும். ஒரு வயது ஆகும் போது பெரியவர்கள் சாப்பிடும் உணவை, குறைந்த அளவில் குழந்தைகளுக்கு கொடுக்க முன்வரவேண்டும். செயற்கை மணம், நிறம், சுவை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், திடீர் உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

‘என் குழந்தை இதை சாப்பிடாது. அதை சாப்பிடாது” என்று பெருமை அடித்தே தங்கள் குழந்தைக்கு சமச்சீரான சத்துணவைக் கொடுக்காமல், அவைகளின் உடல் நலத்தைக் கெடுத்துவிடக்கூடாது. தினமும் ஒரு கீரையென முருங்கை, பொண்ணாங்கண்ணி, சிறுகீரை, அரைக்கீரையை வரிசைப்படுத்திக் கொடுக்கவேண்டும்.

தினமும் 3 விதமான காய்கறிகள், வாழைப்பழம், திராட்சை, மாதுளம்பழம், பேரிச்சம்பழம் போன்றவைகளையும் உணவில் சேர்க்க வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை குழந்தைப் பருவம் முதலே சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் அப்படியே அதை பின்பற்றுவார்கள்.

சமையலில் சீரகம், மல்லி, இஞ்சி, பூண்டு, மிளகு, புதினா, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை, சிறிய வெங்காயம் போன்றவைகளை தினமும் சேர்க்க வேண்டும். கீரைகளில் அவ்வப்போது வல்லாரை, தூதுவளை போன்ற மூலிகைகளையும் சேர்க்க வேண்டும். இதனால் சளி குறையும். ஞாபக சக்தி மேம்படும்.

வாயில் நுழையாத புதுப்புது பெயர்களைக் கொண்ட திடீர் உணவுகளை வாங்கி சாப்பிட அனுமதித்தால் சிறு வயதிலேயே அவர்கள் உடல் பருமனாகி விடுகிறது. இது அவர்கள் உடல் நலத்தைக் கெடுத்து தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்.

முன்பெல்லாம் கும்பலாக பத்து இளம் பெண்கள் நின்று கொண்டிருந்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் குள்ளமாக குண்டாகத் தெரிவார்கள். இப்பொழுதோ, கும்பலாக நிற்கும் பெண்களில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே உயரத்திற்கு ஏற்ற எடையுடன் தெரிகிறார்கள். பெரும்பாலோனோர் குள்ளமாகவும், குண்டாகவும் உள்ளனர்.

மாணவர்கள் கையில் முன்பெல்லாம் அம்மா தயாரித்துக்கொடுத்த சாப்பாடு அடங்கிய ‘டிபன் பொக்ஸ்’ இருக்கும். இப்போது மாணவர்கள் கையில் டிபன் பொக்சே இருப்பதில்லை. ‘பேர்ஸ்’ தான் இருக்கிறது. அவரவர் வசதிக்கேற்ப நடைபாதை கடை முதல் பெரிய ஹோட்டல் வரை ஏறி இறங்கி, திடீர் உணவுகளை வாங்கித் தின்று மகிழ்கிறார்கள்.

இதனால் பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங்கின்மை, சினைப்பையில் நீர்க்கட்டிகள், உடல் பருமன் போன்ற குறைபாடுகள் தோன்றுகின்றன. கறிவேப்பிலை தூளுடன் முருங்கை கீரை, முட்டை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து உடலில் அதிகரிக்கும்.

முன்பு இளம் பருவத்தினர் உடல் நன்றாக களைத்துப்போகும் அளவிற்கு, மரபுரீதியான விளையாட்டுக்களை விளையாடுவார்கள். இப்போது கம்ப்யூட்டரிலே அவர்கள் அதிக நேரத்தை செலவிடுவதால் கண்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி உடல் எடையும் கூடிவிடுகிறது.

சிறுவயதில் உடல் எடையை அதிகரிக்கவைத்துவிட்டு, இளம் வயதில் ‘ஜிம்’முக்கு அழைத்துச் செல்வது தற்போது பேஷன் ஆகி விட்டது. ஏன் தேவையற்ற உணவுகளை உடலுக்கு கொடுத்துவிட்டு பின்பு ஜிம்முக்கு சென்று பணத்தையும் கொடுக்கவேண்டும்?

உடல் நலத்திற்கும், மனநிலைக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. உடல் நலம் பாதிக்கப்படும்போது மன நலமும் பாதிக்கப்படும். அப்போது அவர்களால் தெளிவாக சிந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் நல்ல உணவுகளை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் மட்டுமே நல்ல மனநிலை யோடு நிம்மதியாக வாழ முடியும்.

நீரிழிவு நோயாளிகள் உலக அளவில் கிந்தியாவில் தான் அதிகம் இருப்ப தாக ஆய்வு கூறுகிறது.

http://www.thinakaran.lk/2009/09/15/_art.asp?fn=f0909152

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.