Jump to content

விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் (பாகம் 1-2)


Recommended Posts

விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் - 01

மார்கழிப் பனிக்குளிரின் சில்லிட்ட இளங்காலைத் தென்றல் உடலைத் தழுவிய போதும், ஜெயந்தாவின் மனதைப் போலவே அவளின் உடலும் உஷ்ணமாகவே இருந்தது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயந்தா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினாள்.

உடல் தன்போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடி இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. காலைத் தாமரை மலர் போல எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும் ஜெயந்தாவின் முகம் மாலைத் தாமரையாய் வெம்பி வாடி இருந்தது. இவள் கண்களிலும், இதழ்களிலும் எப்போதும் விளையாடும் குறும்புச் சிரிப்பு சென்ற இடம் தெரியவில்லை.

அந்த வாட்டத்திலும் அவள் பேரழகு கண்ணைப் பறித்தது. சுற்றுப் புறத்தை மறந்து உதட்டை அரிசிப் பற்களால் அழுத்தியபடி கொடி இடை அசைய அவள் வேகமாக நடந்து செல்வதை நின்று பார்த்துச் சென்றவர் பலபேர். எதிர்ப்பட்ட சிலர் நின்று தன்னை விசித்திரமாகப் பார்ப்பதைக் கண்டு முகத்தைச் சரிப்படுத்திக் கொண்டாள். முகத்தைச் சுலபமாக மாற்றிக் கொள்ள முடிந்தது. ஆனால் மனதை… அது மதயானை போல் தறிகெட்டு செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் செக்குமாடு சுற்றுவதைப் போல், அவள் நினைவு அவளது அப்பாவையே சுற்றிச் சுற்றி வந்தது.

வியாபரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், கடன் தொல்லை ஏற்படுத்திய பணநெருக்கடி காரணமாகவும் ஜெயந்தாவின் நீண்ட நாள் ஆசையில், இடி விழுந்தது. அவளின் உயர்கல்வியைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு இன்று அலுவலகம் ஒன்றில் நேர்முகப் பரீட்சையை நேர் கொள்வதற்காக அவளை இன்று அனுப்புகின்றார் சிவநேசச்செல்வன்.

“கிரீச்…”

சற்று நேரம் ஜெயந்தாவிற்கு ஒன்றுமே புரியவில்லை மூளைக்குள் மின்னல் வெட்டியது காது “நொய்” என்றது.

படகு போன்ற நீளமான கார் ஒன்று திடீரென பிரேக் போட்டு அவளை உராய்ந்து கொண்டு நின்றது.

“முட்டாள்”… என்று அவளுக்கு அர்ச்சனை செய்தபடி காரில் இருந்து இறங்கி வந்தான் ஓர் உயரமான இளைஞன். அவன் முகத்தையே பார்த்தபடி பிரமை பிடித்தாற்போல நின்றாள் ஜெயந்தா.

மாநிறம்;;, கறுத்து அடர்ந்த கிராப் முடி, அகன்ற நெற்றி, கூரான நாசியும், பார்வையும், அழுத்தமான உதடுகள், உறுதியான முகவாய், ஆறடி உயரம் விநாடிக்குள் கண்கள் வழியாக ஜெயந்தாவின் உள்ளம் அவனை அளவெடுத்தது.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஜெயந்தாவின் பேரழகு அவனைக் கூட ஒரு நிமிடம் தடுமாற வைத்தது. “ஸாரி சார் அவசரமாக பஸ் பிடித்து போக வேண்டிய கட்டாய நிலையை அப்பா ஏற்படுத்தி விட்டார். அந்தக் கோபத்துடனேயே புறப்பட்டேனா, உங்கள் காரைக் கவனிக்காமல் ரோட்டைக் கடக்கப் பார்த்தேனா இப்படியாயிற்று” என்று மிகவும் பணிவாக மன்னிப்புக் கோரினாள். உதடுகளின் அசைவுடன் சேர்ந்து, அவளது கண்களும் கதை பேசின.

அவளை ஒரு முறை கூர்ந்து பார்த்தான் அந்தப் புதியவன். பிறகு பதிலெதுவும் கூறாமல் காரில் ஏறி அமர்ந்தான். தலையை மட்டும் வெளியே நீட்டி சொன்னான் “பிரமாதம்” என்று. “என்ன?” என்று ஜெயந்தா கேட்பதற்குள் கார் அவளைக் கடந்து கொண்டு பறந்துவிட்டது.

ஜெயந்தா பஸ் பிடித்து நேர்முகப் பரீட்சை நடைபெறும் அலுவலகம் போய்ச் சேர பத்து மணி ஆகிவிட்டது. அரை மணி நேரம் முன்னாடியே வந்து விட்டாள். ரிசப்ஷன் முன்னாடி இருந்த பெண்ணிடம் தன் வரவைத் தெரிவித்து விட்டு அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள் ஜெயந்தா.

தன்னைப் போல் பலபேர் நேர்முகப் பரீட்சைக்கு வந்திருப்பார்கள் என்று எண்ணி வந்திருந்த ஜெயந்தாவிற்கு படு ஏமாற்றம். அவளைத் தவிர வேறு யாரும் அந்த நேர்முகப் பரீட்சைக்கு வந்ததாகத் தெரியவில்லை.

ரிசப்ஷனில் இருந்த பெண்ணைத் தவிர யாருமே அவள் கண்ணில் படவில்லை. அவளது பார்வையைக் கவனித்த ரிசப்ஷன் பெண் சிநேகமாகப் புன்னகைத்தாள். அதற்குள் அலுவலகப் பையன் வந்து ஜெயந்தாவை டைரக்டரின் அறையைக் காட்டி, டைரக்டர் அழைப்பதாகத் தெரிவித்தான். படபடக்கும் இதயத்தை, டைரக்டரின்; அறைக் கதவின் முன் நின்று இழுத்து விட்டுக்கொண்டாள் ஜெயந்தா. குனிந்த தலை நிமிராமல் புதுப் பெண் போல டைரக்டரின் அறைக்குள் நுழைந்தாள். “குட் மோர்ணிங் ” என்ற குரலைக் கேட்ட ஜெயந்தா பளிச்சென்று தலை நிமிர்ந்து பார்த்தாள். வியப்போடு வாயைப் பிளந்தாள்!.....

மலரும்…………

-சுப்ரா

http://tamilleader.c...4576-vkp01.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

[size=4]விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் - 02

ஜெயந்தாவின் வியப்புக்குக் காரணம் அங்கு அவளை நேர்முகத்தேர்வு செய்யத் தயாராயிருந்த ரகுராமனே. ரகுராமன் வேறு யாருமல்ல! அவளின் ஆருயிர்த் தோழி சுகர்ணாவின் அண்ணனே! “ ரகு அண்ணா நீங்களா? என்று தன்னையறியாமல் கூவியவள், சடாரென தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு “குட்மோர்ணிங் ‘சார்” என்றாள். “சாட்சாத் ரகுராமன் நானே தான்” என்று புன்னகையுடன் கூறியவாறே அவளை இருக்கையில் அமருமாறு சாடையில் பணித்தான்.

நேர்முகப் பரீட்சைக்குத் தயாராய் வந்திருந்த ஜெயந்தா, தனது சான்றிதழ்கள் அடங்கிய பைலை அவனிடம் நீட்டினாள். அதை ஜாடையினாலேயே மறுத்த ரகு, டைப் பண்ணித் தயாராய் வைத்திருந்த வேலையில் சேர்வதற்கான ஆடரை எடுத்து நீட்டினான். வியப்புடன் விழியுயர்த்திப் பார்த்த ஜெயந்தாவைப் பார்த்து புன்னகைத்தான் ரகுராமன். மேலும் தொடர்ந்து தனது செயலுக்கான விளக்கத்தைக் கொடுத்ததும், ஜெயந்தாவிற்கு என்ன சொல்லதென்றே தெரியவில்லை.

அவளது வேலைக்கான விண்ணப்பத்தைப் பார்த்தவுடனேயே ரகுவிற்குத் தெரிந்து விட்டதாம். அது ஜெயந்தாவின் விண்ணப்பம் என்று. அதனால் தான் அவன் நேர்முகத்தேர்வுக்கு அவளை தவிர யாரையும் அழைக்கவில்லையாம். அவளையே தனக்கு ஆபிஸில் P.A (Personal Assistant) வாக நியமித்து விட்டானாம். அதற்குரிய பயிற்சியை அவள் இருவார காலத்திற்கு ஆபிஸில் இருக்கும் ஒருவரிடம் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டுமாம். அதுமட்டுமல்லாது அவளது உயர்கல்வியைத் தொடர்ந்து கற்பதற்கும் ஏற்பாடு செய்திருப்பதாகவும், வாரத்தில் இரு நாட்கள் அவள் பல்கலைக்கழகம் சென்று பகுதிநேரக் (Part time) கல்வியாக உயர்கல்வியை முடித்துக் கொள்ளலாம் என்றும் அதற்குரிய செலவையும் அலுவலகமே ஏற்றுக்கொள்ளும் என்றும் தொடர்ந்து கூறினான். இவற்றையெல்லாம் கேட்ட ஜெயந்தாவிற்கு வந்த ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை தன் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள்.

அவளது நீண்ட நாள் ஆசையைப் பற்றி சுகர்ணா தன்னிடம் கூறியிருப்பதாகவும், அவளது தந்தையின் தொழில் நிலையின் சரிவு தான் அவளை இந்த விண்ணப்பத்தை அனுப்பத் தூண்டியிருக்குமென எண்ணியதாகவும், அதனால் தான் இந்த ஏற்பாடு என்று கூறினான். “உனக்கு இதில் சம்மதம் தானே?” என்று ரகு வினவியதும், “கரும்பு தின்னக் கூலி கேட்பேனா ரகு அண்ணா! ஏன்று கூறி தொடர்ந்து தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். புதனன்று வந்து வேலையில் சேர்ந்து கொள்ளுமாறு ரகு வேண்டுகோள் விடுத்த பிற்பாடு விடை பெற்றுக் கொண்டாள் ஜெயந்தா.

சிறுவயதிலிருந்தே ஆருயிர்த் தோழியான சுகர்ணா சமீபத்தில் தான் கல்யாணமாகி அமெரிக்கா போயிருந்தாள். அவளது வீட்டுக்கு சிறுவயதிலிருந்தே போய்வரும் ஜெயந்தா சுகர்ணாவைப் போலவே, ரகுவை அண்ணா என்றே அழைப்பாள். சமீப காலமாகத் தான் அவள் அங்கு போய் வருவது குறைந்திருந்தது. காரணம் சுகர்ணாவிற்கு கல்யாணமாகி அவள் அமெரிக்கா போய்விட்டிருந்ததே. சுகர்ணாவின் அண்ணி கூட ஜெயந்தாவுடன் மிகவும் பிரியமாகவே இருப்பார்.

புதனன்று வந்து வேலையில் சேர்ந்து கொண்ட ஜெயந்தாவுக்கு மற்றுமொரு ஆச்சிரியம் காத்திருந்தது. டைரக்டரின் அறையை நெருங்கிய ஜெயந்தா கதவைத் தட்டி “ உள்ளே வரலாமா” என அனுமதி கேட்டாள். “யெஸ் கம் இன்” என்ற கம்பீரமான குரல் உள்ளே இருந்து வரவும் உள்ளே சென்றாள் ஜெயந்தா. “இவர் வினோத்” உனக்கு தொழிற் பயிற்சியை இவர் தான் உனக்குக் கற்றுத் தரப்போகிறார் என்றதும் தான் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த வினோத்தைக் கவனித்தாள் ஜெயந்தா. உடனேயே “ஹாய் வினோத்” கௌ ஆர் யூ? என்று கேட்கவும், “ஓ! இருவருமே பரிச்சயமானவர்களா? அப்போ எனக்கு உங்கள் இருவரையும் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று கூறிச் சிரித்தான் ரகுராமன். இருவரும் கல்லூரி நண்பர்கள் என்பதைத் தெரிவித்து ரகுவிடம் விடைபெற்று இருவரும் வினோத்தின் கபினை அடைந்தார்கள். வினோத் விளக்கிய தொழில் பற்றிய விடயங்களை ஜெயந்தாவினால் இலகுவாகவே விளங்கிக் கொள்ளமுடிந்தது.

ஒரு வார தொழிற்பயிற்சி எப்படி கடந்து போனதென்றே தெரியவில்லை ஜெயந்தாவிற்கு. சிநேகமாக வினோத் விளக்கிய தொழில் விடயங்களை இரு வாரங்களுக்கு பதிலாக ஒரு வாரத்திலேயே கற்றுத் தேர்ச்சி பெற்று விட்டாள் ஜெயந்தா. அன்றைய மதியவேளையின் போது கணனியில் இருந்து எழுந்த ஜெயந்தா, கைப்பையை எடுத்துக் கொண்டு canteen ஐ நோக்கி விரைந்தாள் அவசர அவசரமாக தலை குனிந்து நடந்த அவள் திடீரென எதிர்பாராத விதமாக எதிலோ மோதிக் கொண்டு விழப் பார்த்தாள். ஆவளைத் தாங்கிக் கொண்ட வலிய கரங்கள் இரண்டு அவளைப் பிடித்து உலுக்கி “வழி” பார்த்து நடக்கத் தெரியாதா உனக்கெல்லாம் யார் வேலை கொடுத்தது” என்று அடித் தொண்டையில் கத்தினான். விழியுயர்த்திப் பார்த்த ஜெயந்தா அவசரமாக அவனது இரும்புப் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். உக்கிரமான பார்வையுடன் அகன்ற தோளும் உயரமுமாக ஒரு கிரேக்கச் சிலை போல் நின்றிருந்த அவனை மலைப்புடன் பார்த்தாள் ஜெயந்தா.

மலரும்…………

-சுப்ரா

http://tamilleader.c...4654-vkp02.html[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.