Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வரூபம் சமஸ்கிருதப் பெயர், மாற்றுங்கள்.. கமலுக்குக் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24-vishwaroopam-23-300.jpg

[size=4]விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.[/size]

[size=3][size=4]கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.[/size][/size]

[size=3][size=4]தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]இந்து மக்கள் கட்சதியின் தலைவரான கண்ணன் இதுதொடர்பாக சர்ச்சையை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,[/size][/size]

[size=3][size=4]நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்?[/size][/size]

[size=3][size=4]

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.[/size][/size]

[size=3][size=4]எங்களது எண்ணங்களை

கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.[/size][/size]

[size=3][size=4]

http://tamil.oneindi...pam-156327.html[/size][/size]

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

-----

---

[size=3][size=4]

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.[/size][/size]

கோயில்களில் மந்திரங்களே சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகிறது... :o அதை தமிழுக்கு மாற்றும்படி எப்ப கேட்க போகிறார்கள்? :o

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் மந்திரங்களே சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகிறது... அதை தமிழுக்கு மாற்றும்படி எப்ப கேட்க போகிறார்கள்?

யம்மாடியோவ்...! தமிழக கோயில்களில், "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என அறிவிப்புப் பலகை வைத்தும் யாரும் தமிழில் ஆராதிக்க, தமிழ் மக்கள் பெரும்பாலும் கோயில் பூசகரை கோருவதில்லை..

ஒன்று, அசிரத்தை..!

மற்றொன்று, தமிழிலா? என்ற தாழ்வு மனப்பான்மை...!

கோயில்களில் காலங்காலமாக அடிமை பட்டுக்கிடந்த தமிழை, தமிழர்கள் விழிப்புரிமையோடு தட்டிக்கேட்டால்தான் தமிழுக்கு கோயில்களில் இனி விமோசனம்..!

அரசு தெளிவாக அறிவுறுத்தியும், மக்கள் தெளிவு பெற்று அதை முறையாக பயன்படுத்த ஆர்வமில்லையெனில் யாரை நோவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி

விஸ்வரூபம், தமிழ்படுத்தினால் இப்படி வருமோ- "விசு உருவம்" என்று.

யம்மாடியோவ்...! தமிழக கோயில்களில், "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என அறிவிப்புப் பலகை வைத்தும் யாரும் தமிழில் ஆராதிக்க, தமிழ் மக்கள் பெரும்பாலும் கோயில் பூசகரை கோருவதில்லை..

தமிழிலும் என்பதை தமிழில் மட்டும் என்று மாற்றினால் மக்கள் வேறு வழியில்லாமல் வருவார்கள் என்று நினைக்கிறன். வராவிட்டால் கடவுளை அவர்கள் வீட்டில் கும்பிடுவார்கள். எப்படியோ சம்ஸ்கிருத மொழி இங்கு புறக்கணிக்கப்படும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிலும் என்பதை தமிழில் மட்டும் என்று மாற்றினால் மக்கள் வேறு வழியில்லாமல் வருவார்கள் என்று நினைக்கிறன். வராவிட்டால் கடவுளை அவர்கள் வீட்டில் கும்பிடுவார்கள். எப்படியோ சம்ஸ்கிருத மொழி இங்கு புறக்கணிக்கப்படும் தானே.

அப்படி ஒரேயடியாக நினைத்த மாத்திரத்தில் சஸ்கிருதத்தை கோயிகளில் ஒழித்துவிட முடியாது. முதலில் மக்கள் தமிழை சரளமாக கோயிகளில் உபயோகப்படுத்த வேண்டும்..ஏனெனில் அம்மொழியை நம்பி சில குழுக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. சமஸ்கிருதத்தை கோயிகளில் மக்கள் யாரும் உபயோகிக்க விரும்பவில்லை என அரசுக்கும், நீதி மன்றத்திற்கும் இறுதியாக தெரிந்த பின்னரே அம்மொழியின் பயன்பாட்டை நிறுத்த முடியும்..

ஏனெனில், இது சனநாயக நாடு!

அப்படி ஒரேயடியாக நினைத்த மாத்திரத்தில் சஸ்கிருதத்தை கோயிகளில் ஒழித்துவிட முடியாது. முதலில் மக்கள் தமிழை சரளமாக கோயிகளில் உபயோகப்படுத்த வேண்டும்..ஏனெனில் அம்மொழியை நம்பி சில குழுக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. சமஸ்கிருதத்தை கோயிகளில் மக்கள் யாரும் உபயோகிக்க விரும்பவில்லை என அரசுக்கும், நீதி மன்றத்திற்கும் இறுதியாக தெரிந்த பின்னரே அம்மொழியின் பயன்பாட்டை நிறுத்த முடியும்..

ஏனெனில், இது சனநாயக நாடு!

ஆம் அண்ணா. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.