Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வெளியேறு, வெளியேறு இராணுவமே வெளியேறு"

Featured Replies

[size=5]"வெளியேறு, வெளியேறு இராணுவமே வெளியேறு"[/size]

[size=4]வடக்கு கிழக்கில் காணி சுவீகரிப்பில் இராணுவமும் அரசாங்கமும் ஈடுபடுவதாக தெரிவித்து அவ்வாறான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முறிகண்டி பிள்ளையார் ஆலத்தின் முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் இடம்பெற்றது.

எமது இடங்களையும் பொது நிலங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’, எங்களுடைய வீட்டுக்கு செல்லவிடு, வெளியெறு, வெளியேறு இராணுவமே வெளியேறு, முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம், ஆடாதே, ஆடாதே, இராணுவ ஆக்கிரமிப்பு நிலைக்காது போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்றனர்.

இதன்போது ஏராளமான பொலிஸார் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை முறிகண்டி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் கடந்த சில தினங்களாக திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்கவைக்கப்ட்டிருந்த நிலையில் இம் மக்களை மீண்டும் இராணுவத்தினர் நேற்று இரவு வாகனங்களில் ஏற்றி மெனிக்பாம் நலன்பரி நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக இன்று ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிறு பதற்ற நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், சிறிதரன், சரவணபவன், சுமந்திரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோகணேசன், கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் அக்கட்சியின் ஊடக செயலாளருமான பாஸ்கரா, இடதுசாரிக்கட்சி பிரதிநிதி சிறிதுங்க ஜெயசூரிய, தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி, வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம். ரதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.[/size]

http://www.virakesar...asp?key_c=38997

Pro01(1).jpg

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]எமது நிலம் எமக்கு வேண்டும் திருமுறிகண்டியில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் வெள்ளம் ஆர்ப்பரிப்பு[/size]

[size=4]இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயச் சூழலில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழர் நிலம் வன்பறிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பரித்து வருகின்றனர்.

[size=5]"நாம் கேட்பது எமது உரிமை அது கிடைக்கும் வரை ஓய மாட்டோம்"

"எமது பூர்வீகத்தை அசிங்கப்படுத்தாதே"

"போர் முடிந்து மூன்றாடுகள் ஆகிவிட்டது.இன்னும் எம் நிலத்தில் இராணுவமா?"

"சொந்த மண்ணில் அகதிகளாக நாம்"

"நிறுத்து நிறுத்து ஆக்கிரமிப்பை நிறுத்து"[/size]

எனப் பலகோஷங்கள் எழுப்பியவாறு கவனயீர்ப்பில் பங்கு கொண்டோர் ஆர்ப்பரித்தனர்.

பொதுமக்கள் எவரும் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என அச்சுறுத்தும் வகையில் இன்று காலை முதல் ஆலயச் சுற்றாடலில் படையினர், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். அதனையும் மீறியே பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

அத்துடன், பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரிடம் படையினரும் காவற்றுறையினரும் அவர்களுடன் புலனாய்வாளர்களும் சென்று அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. போராட்டம் ஆலய முன்றலில் நடைபெற்றால் ஆலய நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்பள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.[/size]

http://onlineuthayan...271166026626152

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:
  • தொடங்கியவர்

[size=5]மக்கள் நாகரிகமான முறையில் கோரிக்கை விடுத்துள்ளனர்[/size]

[size=4]எமது நிலத்தை தந்து அந்த நிலத்தில் எம்மை வாழ விடுங்கள் என அரசாங்கத்திற்கு மிகவும் நாகரிகமான முறையில் தமிழ் மக்கள் சொல்லியிருக்கின்றனர். இதனைப் புரிந்துகொண்டு எம் மக்களின் காணிகளிலிருந்து படையினரை விலக்கி, மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=2][size=4]இன்று திருமுறிகண்டியில் நடைபெற்ற, காணி அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.[/size][/size]

[size=2][size=4]அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், [/size][/size]

[size=2][size=4]இந்த நிலம் எமக்குச் சொந்தம். எமது கடல் எமக்குச் சொந்தம். இராணுவமே எமது பகுதியிலிருந்து வெளியேறு என்ற செய்தியை சிங்கள அரசங்கத்திற்கு எடுத்துச் செல்லொயிருக்கின்றது இன்றைய இந்தப் போராட்டம். இந்தக் கடலையும் எமது நிலத்தினையும் எமக்கு தந்து விடுங்கள் என்று தமிழ் மக்கள் நாகரரீகமான முறையில் அரசாங்கத்திற்கு முறையில் சொல்லி இருக்கின்றார்கள்.[/size][/size]

[size=2][size=4]பிரிவுபடாத இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக் கொள்ள தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லி இருகின்றனர். இதனை ஆட்சியிலுள்ள அரசாங்கம் சரியாக புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும்.[/size][/size]

[size=2][size=4]ஐக்கியம் என்றால் பெருன்பான்மை இனத்தின் கீழ் அடங்கி வாழ்வதல்ல. ஐக்கியம் என்பதன் முதல் நிபந்தனையானது நில உரிமை, மண்ணுரிமையில் தங்கியிருக்கின்றது. தங்களுடைய நிலங்களை இழந்துவிட்டு எந்தவொரு இனமும் சுய மரியாதையுடனும் சுய உரிமையுடனும் வாழ மாட்டார்கள். என்பதை தமிழ் மக்கள் இன்று அரசாங்கத்திற்கு சொல்லி இருக்கின்றார்கள். என்றார்.[/size][/size]

[size=2][size=4]அத்துடன், இன்று முறிகண்டியில் நடைபெற்ற போராட்டமானது வடக்கு கிழக்கு எங்கும் விஸ்தரிக்க வேண்டும். பின்பு மலையகப் பகுதிகளிலும் செல்ல வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மனோகணேசன்.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=108922[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=6]

"நாம் கேட்பது எமது உரிமை

[/size]

[size=6]

அது கிடைக்கும் வரை ஓய மாட்டோம்"

[/size]

539490_4192623862742_597812560_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.