Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடி பழக்கம் விளைவுகளும் புனர்வாழ்வும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

German_Beer_0002.jpg

கிழமைக்கு ஒரு முறை பியர் குடித்தால்.... வேலை அலுப்பு எடுபடும் :lol: .

ஜேர்மனில் இருந்து கொண்டு, பியரும் குடிக்காவிட்டால்.... ஒரு மாதிரி பார்ப்பார்கள். :D

  • தொடங்கியவர்

இது மொடா குடியர்களுக்கு சிறீ அண்ணா குடிக்கு அடிமையானவர்களுக்கு..

[size=5]அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே![/size]

  • கருத்துக்கள உறவுகள்

russia4.jpg

animal+drinking+beer.jpg

இணைப்பிற்கு நன்றி அபராஜிதன் அண்ணா. நான் முழுமையாக பார்க்கவில்லை. கொஞ்சம் பார்த்தேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------

(கீழே நான் கூறுவது என் கருத்து. வீடியோவில் உள்ளதல்ல)

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதற்கு கூறும் காரணங்கள்.

  • காதல் தோல்வி.
  • குடும்பத்தில் பிரச்சினை.
  • வேலையின்மை.
  • குடிப்பது ஓர் நாகரீகம்.
  • வெளிநாட்டு வாழ்க்கையில் தோன்றும் மன அழுத்தம்...............(இன்னும் பல)

ஆனால் இவை எதுவும் உண்மை காரணமல்ல. தன்னை நியாயப்படுத்தி அடுத்தவர் தன்னில் பரிதாபப்ப்படும்படி கதைத்துக்கொண்டு குடியை தொடர்வதற்காக கூறப்படும் ஒரு காரணம் இது.

மேலுள்ள பிரச்சனைகளை கொண்ட ஒரு நபர் குடிப்பதை விடுத்து தன் புலனை வேறெங்காவது செலுத்தலாம் அல்லது வேறு நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளலாம்.

உதாரணமாக,

  • இசையில் தம் புலனை செலுத்தலாம். (பாடல்களை கேட்கலாம்)
  • வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
  • அல்லது புதிதாக ஏதும் இடத்திற்கு சென்று வரலாம்.
  • இவை அனைத்தையும் விட தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டு மனம் துவண்டு விடாமல் அதற்கு எதிராக போராடும் படி மனதை திடப்படுத்தி கொள்ளலாம். etc..

குடிப்பழக்கத்தால் வேதனையை மறக்க முடியும் என்பது தவறு. வேதனை உள்ளவர்கள் குடித்த பின்னும் அதனை நினைத்து புலம்பிக்கொண்டு தான் இருப்பார்கள். குடித்தால் நல்ல தூக்கம் வரும் என்று சொல்வதும் தவறு. அவர்கள் இரவில் தூங்கினாலும் விடிய எழும்பும் போது தூங்கிய உணர்வு இருக்காது.

பார்ட்டிகளில் குடித்தல் நாகரீகம் என்று சொல்லி குடிக்காதவர்களையும் குடிக்க வைப்பது, பின்னர் அவர்களில் பலருக்கு அதுவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது.

சிலர் alcohol இல் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் குடிப்பார்கள். பின்னர் அடிமையாகி விடுவார்கள்.

எனவே அடுத்தவர் பேச்சை கேட்டு குடிக்காதீர்கள், குடிப்பவராக இருந்தால் இனியாவது குடியை நிறுத்துங்கள்.

சிறிதளவில் குடிப்பவர் தனது குடியை உடனடியாக நிறுத்த முடியும். ஆனால் குடிக்கு அடிமையானவர் அப்படி ஒரு நாளில் நிறுத்துவது ஆபத்து. சிலருக்கு பாதிப்பை தராவிட்டாலும் பலருக்கு பாதிப்பை தரும். எனவே குறைத்து குறைத்து கொண்டு வந்து நிறுத்துவது நலம்.

குடிப்பவர்களே உங்களால் குடியை நிறுத்த முடியாவிட்டாலும் மற்றவர்களை குடிக்குமாறு தூண்டாதீர்கள்.

பி.கு:- யாழ் களத்தில் பலர் குடிப்பதனால் சந்தோசம் கிடைப்பது போல் கதைத்ததை அவதானித்துள்ளேன்.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.