Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொப் டிலானும் கேதாவும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]பொப் டிலானின் “When the Deal Goes Down” என்ற கவிதை. எப்போது கவிதை எழுத போனாலும், இப்படி சில கவிதைகள் ஞாபகத்துக்கு வந்து “ஏன் உனக்கு வேண்டாத வேலை?” என்று ஏசும். படிமம் தான். வாசிக்கும்போது முகத்தில் பளாரெண்டு அடிக்கும் படிமம். நீங்களும் வாங்குங்களேன்.[/size]

[size=3]
lonely%252520%2525281%252529_thumb%25255B4%25255D.jpg?imgmax=800
[/size]

[size=4]
The moon gives light and it shines by night

Well, I scarcely feel the glow

We learn to live and then we forgive

O’er the road we’re bound to go

More frailer than the flowers, these precious hours

That keep us so tightly bound

You come to my eyes like a vision from the skies

And I’ll be with you when the deal goes down
[/size]

[size=4]கேதாவின் கவிதைகளை, குறிப்பாக அவனின் படிமங்களை வாசிக்கும்போது இயல்பாக பொப் டிலான் கவிதைகள் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியாது. குறிப்பாக, அவனுடைய “காற்றில் ஒடிந்த தளிர்கள்” கவிதையை வாசித்தபோது கூட இதே ஞாபகம். ஆனால் சொல்லமாட்டேன். சொன்னால் திட்டு விழும். “ஏன் ஒப்பிடுறீங்க?” என்று “இரு குழல் பீரங்கி” போல ரெண்டு பேரும் கும்மோ கும்முவார்கள். தனியனாக சமாளிக்கமுடியாது.[/size]

[size=4]இன்றைக்கு பேசிக்கொண்டு இருக்கும் போது, மேலே இருந்த கவிதை பற்றியும் வந்தது. இதை தமிழில் வாசித்து பார்க்கும் ஆர்வம்; ஆனால் நம்மால் முடியாது சாமியோவ். வேறு யாரால்? கேதாவை கேட்டேன்; வாசித்தான்; வசமிழந்து; வசப்பட்டு மீண்டு வரும்போது கையில் ஒரு அழகான குழந்தை என்னை பார்த்து சிரித்தது. பெற்றுக்கொடுத்துவிட்டான். கவிஞன்![/size]

[size=4]மொபைலில் வாசிப்பவர்கள் வீடு போகும் மட்டும் வாசிக்கவேண்டாம் ப்ளீஸ். வீட்டிலே இருந்தால், டிவியை நிறுத்திவிட்டு, யாருடனும் சாட் பண்ணாமல், இந்த கவிதையை வாசித்து முடித்து, இரண்டு நிமிடம் கண்மூடி அதனை உள்வாங்கி, மீண்டும் வாசியுங்கள். ஏதோ செய்யும்.[/size]

836454-bigthumbnail_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

[size=5]
இரவெல்லாம் எறிகிறது நிலவு

எனக்கு மட்டும் இருட்டு.

அந்தி நேரத்து பூ

காம்பு தொலைத்து விழும் நேரம்,

கையில் ஏந்திக்கொண்டாய்.

யார் நீ?

யாரோ நீ!

நாம் போகும் பாதை சொல்லித்தருகிறது

புரியாத நம் வாழ்வை.

மன்னிக்க கற்றுக்கொண்டபின்

முட்கள் கூட முத்தமிடுகின்றன.

எப்போதும் எங்கேயும் எல்லாமும்

இனி நீ இன்றி இல்லை

நான் இல்லை!
[/size]

[size=4]பொப் டிலானின் கடைசி இருவரிகளை ஏன் மொழிமாற்றம் செய்யாமல் விட்டாய்? என்று கேட்டபோது வந்த பதில்,[/size]

“சில விஷயங்களை பேசாமல் அப்படியே விட்டுவிடவேண்டும்”

மூலம் :

[size=5]புரியாத நம் வாழ்வை.

மன்னிக்க கற்றுக்கொண்டபின்

முட்கள் கூட முத்தமிடுகின்றன.

எப்போதும் எங்கேயும் எல்லாமும்

இனி நீ இன்றி இல்லை

நான் இல்லை![/size]

சகித்தல் ஒன்றிருந்தால்

சகியும் இன்பமாகி

சுற்று வட்டாரமுமே

அழகாய்த் தான் இருக்கும்

மிக்க நன்றிகள் ஜேகே உங்கள் பகிர்வுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.