Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபாசப்படம் பார்த்தன் மூலம் மகிந்தவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது!

Featured Replies

ஶ்ரீலங்கா மிரர், ஶ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளங்களின் ஊடகவியலாளர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெரும் குழம்பத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

”ஜனாதிபதியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தினர், அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டனர்” என்ற குற்றச்சாட்டிலேயே இணையத்தள அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த ஊடகவியலாளர்களைக் கைதுசெய்து, அங்கிருந்த கணனிகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அள்ளிச் சென்றனர்.

இந்த வழக்கு விசாரணை (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோது, குறித்த அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கணனிகளில் ஆபாசத் தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

எனினும், இதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, இந்த ஊடகவியலாளர்கள், ”ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தினர், அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டனர்” என்றே குற்றஞ்சுமத்தியிருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும், வழக்கு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை விடயத்திற்கும் எவ்விதத் தொடர்பும் காணப்படவில்லையென சுட்டிக்காட்டப்படுகிறது.

அத்துடன், இந்தத் தரவுகள் கணனிகளின் அழிக்கப்பட்டத் தரவு நினைவகத்திலிருந்து மீட்கப்பட்டதாகவே நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையிட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதற்கு எதிராக ஶ்ரீலங்கா மிரர், ஶ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் ஊடகவியலாளர்கள் அண்மையில் அடிப்படை மனித உரிமை மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர். இதனால் குழம்பிப்போயுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏதாவது ஒரு வகையில் ஊடகவியலாளர்களை சிக்கவைத்து, தம்மை நியாயப்படுத்த முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.

எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் புதிய முயற்சியால் அவர்கள் மேலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஊடகவியலாளர்கள் கணனிகளில் ஆபாசப் படங்களை வைத்திருந்ததன், அல்லது பார்த்தன் மூலம் எவ்வாறு ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது என்பதை இனிவரும் காலங்களில் நீதிமன்றில் தெளிவுபடுத்த வேண்டியிருக்கும் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

http://thaaitamil.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2/

எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் புதிய முயற்சியால் அவர்கள் மேலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஊடகவியலாளர்கள் கணனிகளில் ஆபாசப் படங்களை வைத்திருந்ததன், அல்லது பார்த்தன் மூலம் எவ்வாறு ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது என்பதை இனிவரும் காலங்களில் நீதிமன்றில் தெளிவுபடுத்த வேண்டியிருக்கும் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

அது சிம்பிள். அரசன் எவ்வழி. குடிகள் அவ்வழி. எனவே அரசர் மகிந்தாவும் ஆபாசப்படம் பார்த்திருந்தாலேதான் வரின் வழியில் சென்று அவரின் குடிகளும் பார்த்திருப்பார்கள்.

பி.கு:சில தடுக்கப்பட்ட தரவுகள் (ஆபாசபடங்கள் போன்றவை) ஊடகவியலாரின் கையிருப்பிலிருந்தாலும் அவர்களை நேரே கைது செய்ய முடியாது என்று நினக்கிறேன்.

மகிந்த, கோத்தபாய, மேர்வின் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை கைப்பற்றியிருக்கலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.