Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் ரிசாட்டுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு போராட்டத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த உள்ளனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் நடைபெறவுள்ள ஜூம்மா தொழுகையின் பின்னர் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

வடக்கு முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்தப் போராட்டத்தில் கோரப்பட உள்ளது.

அமைச்சர் பதியூதின் முஸ்லிம் மக்கைள மீள் குடியேற்ற முயற்சி எடுத்து வருவதாகவும்,

அதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் என்ற ரீதியில் ஆதரவளிக்கப்படும் எனவும் சில முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

http://www.globaltam...IN/article.aspx

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸாரைப் பணித்தார் : ஜம்இயத்துல் உலமா சபை _

மன்னாரில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மன்னர் நீதிபதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட உப்புக்குளம் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸாரைப் பணித்தார் என்று அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் மன்னார் மாவட்டக் கிளை குற்றம் சுமத்தியுள்ளது .

அது வெளியிட்டுள்ள அதன் ஊடக அறிக்கை ஒன்றில் நீதிமன்றிலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியே வந்த மன்னார் நீதிபதி அவர்கள் எமது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு பொலிஸாரைப் பணித்ததன் பின்னர் மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் சில அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர் என்று தெரிவித்துள்ளது .

இது குறித்து குறித்த உலாமா சபை கடந்த 24-07-2012 திகதியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த எமது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்டு 23 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மீள்குடியேற வருகின்றனர். இந்த நிலையில் எமது மக்கள் பல்தேவைப்பாடுகள் உடையவர்களாக இருந்துவருகின்றனர். குறிப்பாக கடற்றொழிலைப் பிரதான தொழிலாகக் கொண்டவர்களாக மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையிலும்,விடத்தல்தீவிலிருந்து வந்த தமிழ் கத்தோலிக்க மீனவர்களுக்கு எமது முஸ்லிம்களின் மீனவ துறையினை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தொழில் புரிவதற்கு சந்தர்ப்பம் வழங்கினோம்.

எமது முஸ்லிம்கள் மீண்டும் மீள்குடியேறும் போது இவர்கள் இவ்விடத்திலிருந்து செல்ல வேண்டும் என்று அன்று புலிகளின் மன்னார் பொறுப்பாளராக இருந்த அமுதன் என்பவரால் உடன்படிக்கையும் செய்யப்பட்டது.

இருந்த போதும் இன்று வரை இந்த விடத்தில் தீவு கத்தோலிக்க மீனவர்கள் எமது முஸ்லிம் மீனவ சமூகத்திற்கு சொந்தமான உப்புக்குளம் துறையினைக் கொடுக்காமல் இருக்கின்றனர். அரச அதிகாரிகள் உட்பட தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து இவர்களிடம் கூறியும் அது நடைபெறவில்லை;.

எமது உரிமைகள் பறிக்கப்படும் போது இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் நியாயம் கோரி பல தரப்பினரிடம் வேண்டுகோள்விடுத்த போதும் ,அது காத்திரமான பதிலை கொடுக்கவில்லை. அதனால் வேதனையடைந்த எமது மக்கள் வீதியில் இறங்கி மிகவும் அமைதியாக எவ்வித வன்முறைகளுமின்றி தமது கோரிக்கையினை முன்வைத்தனர் .இதன்போது நீதிமன்றிலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியே வந்த மன்னார் நீதிபதி அவர்கள், எமது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு பொலிஸாரைப் பணித்ததன் பின்னர்,மக்கள் அல்லோலகல்லோலப்பட்ட நிலையில் சில அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர். இது எமது மக்களால் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டதொன்றல்ல. அப்போது நீதிமன்ற கட்டிடத்துக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிந்தது. இந்த சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தவறு செய்தவர்களுக்கு சட்டம் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாம் மாற்றுக் கருத்துடன் இல்லை.

அதே போன்று மன்னாரில் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி இந்த சம்பவத்தின் பின்னணியில் எமது வன்னி மாவட்டத்தில் வாழும், தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களுக்கு எவ்வித பேதமுமின்றி பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை சம்பந்தப்படுத்தியுள்ளதை நாம் முற்றாக மறுக்கின்றோம்.நடந்ததை சரியாக அறிந்து கொள்ளாமல் பிழையான தகவலின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படுவது எமது வடபுல முஸ்லிம்களுக்கு செய்யும் இழப்பாகும்.

சட்டத்தை மக்களுக்காக செயற்படுத்தும் சபையின் சட்டத்தரணிகள் அமைப்பு எவ்வித இனத்துக்கும், மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதால், நீங்கள் நியாயத்தினையும், உண்மையின் தகவல்களின் அடிப்படையில் செயற்படுவதினாலும், ஒரு தரப்பின் கருத்துக்களுக்கு முன்னுரியைமளித்து எமது முஸ்லிம்களுக்கும், எமது மக்களினது விமோசனத்திற்கும் அயராது பாடுபடும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக எடுக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதுடன்,உண்மையினைக் கண்டறிய உங்களது உயர் சபையின் பிரதி நிதிகள் மன்னாருக்கு விஜயம் செய்து எமது மக்களிடமும் கலந்துரையாட வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இதே வேளை கொடிய யுத்தம் அகன்று பயங்கரவாதம் அழிக்கப்பட்டு இன்று இனங்களுக்கிடையில் கசப்புணர்வுகள் நீங்கிச் செல்லும் வேளையில் மீண்டும் ஒரு குழப்பத்தைத் தோற்றுவிக்க திரை மறைவில் எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடித்து ஒரே தேசத்தின் மக்களாக நாம் அனைவரும் வாழ தங்களது சட்டத்தரணிகளின் சங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இதன் மூலம் வேண்டிக் கொள்கின்றேன். __

http://www.virakesar...asp?key_c=39677

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதி முஸ்லிம்கள் மீள் குடியேற திரைமறைவில் சதித்திட்டங்கள்

[size=2]

ஜும் ஆ தொழுகையின் பின் அமைதிப் பேரணி நடத்தி பிரார்த்திக்குமாறு உலமா சபை, முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள்

[/size]

இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களை மீண்டும் தாயக மண்ணில் மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளை முன்னெடுக்கும் அரசியல் நிலைமைகளின் பணிகளுக்கு திட்டமிட்ட வகையில் போடப்பட்டு வரும் தடைகளைக் கண்டிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் மன்னார்க் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

n2.jpgஇது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் 22 வருடங்களின் பின்னர் தமது தாயக மண்ணில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்குகெதிராக பல்வேறுபட்ட இன்னல்களும், தடைகளும் தொடர்ந்த வண்ணம் இருப்பதை இந்த நாட்டு மக்களாகிய யாவரும் அறிவர்.

இலங்கையில் வாழும் சமூகங்களுடன் முஸ்லிம்கள் மிகவும் அந்நியோன்னியமாக வாழ்ந்து வருவதுடன் அவர்களின் மதக் கலாசார விழுமியங்களை மதித்து வாழும் ஒரு சமூகமாக முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்.

வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயம் கோரி பல்வேறுபட்ட முயற்சிகள் எமது அரசியல் தலைமைகளால் எடுக்கப்பட்டு வந்தபோதும், அதற்கெதிராக சில சக்திகள் செயற்பட்டு எமது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வேலையினை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டு முஸ்லிம்கள், வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதிகளுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது அவர்களது கடமையென நாம் கருதுகிறோம்.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள வேக்கந்த் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பாரிய அமைதிப் பேரணியொன்றை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைமையிலான அமைப்புகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு ள்ளதுடன், இதேபோன்று நாடு தழுவிய முறையில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பேரணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எமது வடபுல முஸ்லிம்களின் மீள்குடி யேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் இந்த பேரணியில் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்குமாறும், எமது முஸ்லிம் சகோதரர்களுக்காக துஆப் பிரார்த்தனைகளை செய்யுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

இவ்வாறு ஜம்இயதுல் உலமாவின் மன்னார்க் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம் கவுன்ஸில் அறிக்கை

இதேவேளை, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவும் மேற்படி சம்பவம் தொடர்பாக முஸ்லிம்களை தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ள முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பாடுபடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இலக்கு வைத்து சில நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆயுதமுனையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக புலிகள் செய்த சதியை இன்று சிலர் இன, மத வாதத்தை தூண்டி செய்ய முற்படுகின்றனர்.

22 வருடங்களுக்கு முன் வெளியேற் றப்பட்ட வட புல முஸ்லிம்களை அரசா ங்கம் உடனடியாக மீள் குடியேற்ற வேண்டும் என்றும் கோரியுள்ள முஸ்லிம் கவுன்ஸில் இதற்காக அனைத்து பேதங்க ளையும் மறந்து முஸ்லிம்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.

வடபுல முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்கவும் அதற்கு ஒத்தாசை வழங்க வும் நாடு பூராவுமுள்ள முஸ்லிம் சமூகத் தினர் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் நலன்களுக்காக பிரார்த்திக்கு மாறும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒன்றுதிரளுமாறும் தெரிவித்துள்ள முஸ்லிம் கவுன்ஸில் எமது சமூகத்தின் ஒன்றுமையையும் ஆதரவையும் இன்று ஜும் ஆ தொழு கையின் பின் முழு உலகிற்கும் வெளிப்ப டுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

http://www.thinakaran.lk/2012/07/27/?fn=n1207272

வட கிழக்கில் காணிகளை விற்றுவிட்டு வெளியேறிய முஸ்லிம்கள் தமது இனத்துக்கான குணத்துடன் அக்காணிகளை ஆக்கிரமிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது!

முதலில் கிழக்கில் முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தபின்னர் ஏனைய மீள் குடியேற்றம் பற்றி பேசலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.