Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீளக்குடியமர்த்துமாறு நீதிமன்றத்தில் வழக்குதயாராகுகின்றனர் மயிலிட்டி மக்கள்


Recommended Posts

[size=4]எம்மை மீளக்குடியமர்த்துமாறு பலரிடம் மனுக்கள் கையளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே எங்களை மீளக்குடியமர்த்துமாறு கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு வலி.வடக்கு பிரதேச சபையும் எமக்கு உதவி வழங்க வேண்டும் என மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.[/size]

[size=2][size=4]பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழும் மக்களின் மீளக்குடியமர்வினை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக மாநாட்டு மண்டபத்தில் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.[/size][/size]

[size=2][size=4]இதன்போதே மேற்படி உறுதிமொழி மக்களால் வலி. வடக்கு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது. மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த உங்களை சொந்த இடத்தில் குடியமர்த்தாது, வலி.கிழக்கு பிரதேசத்தில் உள்ள "அக்கரை' என்னும் இடத்தில் குடியமர்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. [/size][/size]

[size=2][size=4]எனவே இந்த விடயம் தொடர்பில் உங்கள் அபிப்பிராயங்கள் எமக்குத் தேவையாக உள்ளது என மக்களிடம் வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் தமது தலைமையுரையில் கேட்டுக்கொண்டார்.[/size][/size]

[size=2][size=4]இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் மயிலிட்டி பிரதேசமானது மண்வளமும், கடல்வளமும், கைத்தொழில் வளமும் கொண்ட பிரதேசமாக இருந்தது. சொந்தத் தொழில் செய்தே நாங்கள் வருமானம் ஈட்டினோம். நாங்கள் யாரிடமும் கையேந்தும் தேவை எழவில்லை.[/size][/size]

[size=2][size=4]ஆனால் தற்போது நாங்கள் படுகின்ற துன்பங்கள் ஏராளம். இடம்பெயர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வருகின்ற நாங்கள் வீடுகள் மாறிமாறி தொடர்ந்தும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வீட்டு உரிமையாளர்கள் எங்களை வீடுகளை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். இதனால் நாம் நிர்கதியான நிலையில் உள்ளோம்.[/size][/size]

[size=2][size=4]கடற்றொழில் தவிர மாற்றுத் தொழில் தெரியாத நிலையில் வேறு எவ்விடத்திலும் தொழில் செய்ய முடியாத நெருக்கடிக்குள் நாம் வசித்து வருகின்றோம். இலங்கையின் இரண்டாவது பெரிய மீன்பிடித்துறைமுகமாக மயிலிட்டித் துறைமுகம் இருந்தது. [/size][/size]

[size=2][size=4]மயிலிட்டித் துறையில் கடற்றொழில் செய்பவர்களைத் தவிர அந்தத் தொழிலை அண் டித் தொழில் செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுடை நலன்புரி முகாமில் 23 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். நாம் இங்கிருந்தும் இடம்பெயர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.[/size][/size]

[size=2][size=4]மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் வைத்தியசாலை மிகப்பெரிய வைத்தியசாலையாகும். இந்தப் பிரதேசமே வைத்தியசாலைக்கு ஏற்ற காலநிலையினைக் கொண்டதாகும்.[/size][/size]

[size=2][size=4]வளம் நிறைந்த இந்தப் பூமியினை நாம் ஒரு போதும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராகவில்லை. மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை, ஊறணி பிரதேச இடம்பெயர் மக்கள் சார்பில் சமாசம் ஒன்று உள்ளது. இதன் சார்பில் எம்மை மீளக்குடியமர்த்துமாறு மனுக்களை நாம் அனைவரிடமும் வழங்கியுள்ளோம்.[/size][/size]

[size=2][size=4]ஆனால் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை இல்லை. எனவே எம்மை மீளக்குடியமர்த்துமாறு இடம்பெயர் மக்கள் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை உரிமையைக் கேட்டுப் பெறுவதற்குரிய வழியாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்தார். இதற்கமைவாக நீதிமன்ற நடவடிக்கைக்குரிய குழு ஒன்று நேற்று தேர்வு செய்யப்பட்டது. [/size][/size]

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]இவ்வாறான விடயங்களை கூட்டமைப்பு ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புக்கள் முன்னிலையில் கொண்டுவர முடியுமா?[/size][/size]

[size=1]

[size=4]இவ்வாறான சட்ட முயற்சிகளுக்கு எமது மக்களுக்கு நாம் உதவ முடியுமா? எவ்வாறு உதவலாம்? [/size][/size]

[size=1]

[size=4]ஓரிடத்தில் வெற்றிபெற்றால் மற்றைய இடங்களிலும் மக்கள் தமது இடங்களுக்கு செல்ல வழி சமைக்கும். [/size][/size]

Link to comment
Share on other sites

வழக்குப் போடுவது எதோ ஒரு நன்மையை நிச்சயம் தரும்! ஆனால் முடிவுவரை வழக்கை உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும்!

சாதகமாக தீர்ப்பு கிடைத்தால் நன்மை!

சார்பாக இல்லை என்றால் சிங்கள நீதித்துறையின் இனப் பாகுபாட்டை உலகறியச் செய்யலாம்!

ஆனால் வழக்கு போட்டபின் இடையில் கைவிடவே கூடாது! சமரசம் என்றாலும் நீதிமன்றில் வைத்தே எழுத்து மூலம், நீதிபதிகளின் கையொப்பங்களுடன் சமரசம் செய்யவேண்டும்!

அதைவிட்டு விட்டு அரவேக்காடு சுமந்திரன் சில வழக்குகளைப் போட்டுவிட்டு பின்னர் சிங்கள அரச பயங்கரவாதிகளின் மேல் உள்ள விசுவாசத்தால் அவற்றை பின்னர் வாபஸ் பெறுவது தமிழர்களின் அடிப்படை உரிமைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்! அண்மையிலும் காணிப் பதிவு தொடர்பாக கூட்டமைப்பு தாக்கல் செய்த வழக்கை, சிங்கள அரச பயங்கரவாதிகள் மீதுள்ள விசுவாசம் காரணமாக, சுமந்திரன் தான் தோன்றித்தனமாக நீதிமன்ற உத்தரவாதம் பெறாமல் எதையும் பெறாமல் வாபஸ் பெற்று இருந்தான்!

முன்னர் மாவை ஒரு வழக்கு போடு, சிங்கள பயங்கரவாத நீதிபதிகளால் அது நீண்டகாலம் இழுத்தடிக்கப்படது! பின்னர் இந்த இழுத்தடிப்பு சர்வதேசத்தாலும் கேள்விக்குட்படுத்தப் பட்டிருந்தது! அது சிங்கள நீதித்துறையின் பக்கச்சார்பை வெளிக்கொண்டுவர உதவியது!

Link to comment
Share on other sites

[size=4][size=5]பொதுச் சட்டங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்[/size]

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-28 10:33:46| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1]

[size=4]ஐயா! எனக்கு இந்தச் சட்டம் தெரியாது. இப்படி நீதிமன்றில் கூறி யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பது பொது நியதி. சட்டத்தை சகலரும் அறிந்திருக்க வேண் டும் என்பதே இதன் உள்ளார்ந்தம். எனினும் எங்கள் நாட்டில் பலருக்கு சட்டம் தெரிவதில்லை. சட்டத்தைத் தெரிந்து கொள்ள முற்படுவதும் இல்லை. மாறாக பொதுச் சட்டங்கள் பற்றி பொது மக் களுக்கு எடுத்துக் கூறுவதற்கு பொது அமைப் புகளும் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல. பொதுச்சட்ட விதிமுறைகள் சகலருக்கும் தெரி விக்கப்படும். சட்டங்கள் மட்டுமல்ல குழந்தை யைப் பெற்றெடுப்பதற்கு முன்னதாக குழந்தை வளர்ப்புப் பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். திருமணம் செய்தவுடன் திருமண பந்தம் - கர்ப்ப காலப் பராமரிப்பு இவை எல்லாம் எடுத்தி யம்பப்படும். இப்படியே வாழ்க்கைக்குத் தேவையான கல்வி அங்கு உடனுக்குடன் வழங்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் வாழ்க்கைக்காகக் கற்கிறார்கள். அதனால் அவர்களால் எந்தச் சவால்களையும் எதிர் கொள்ள முடிகின்றது. ஆனால் எங்கள் நாட் டில் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் கிடை யாது. இப்போதெல்லாம் பட்டதாரிகளுக்கு நிய மனம் வழங்கி அவர்களை பிரதேச செயலகங் களில் குவித்து வைத்திருக்கிறார்கள். இதனால் மனித மூலதனம் பயன்பாடு இன்றி அல்லது உச்சப் பயன்பாடு இன்றி வீணடிக்கப்படுகின்றது. பொதுச் சட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய அரச அமைப்புகளை உருவாக்கி, அதற்குரிய பயிற்சிகளை பட்ட தாரிகளுக்கு வழங்கி அவர்களை பொது மக்களிடம் அனுப்பும் போது, பொதுச்சட்டங்களை மக்கள் அறிவதற் கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இதன் மூலம் அரச பொதுச் சொத்துக் களை பாதுகாக்கும் நடைமுறைகளும் பொதுச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் மனோநிலையும் உருவாகும்.

இல்லையேல் தனிமனிதர்களாக அல்லது குழுமங்களாக எதனையும் செய்யலாம் என்ற அறியாமை மேலாடும். இத்தகைய அறியாமைகள் இருக்கும் போது அத்தகைய மக்களை உயர்ந்த இடங் களில் இருக்கக் கூடியவர்கள் தங்கள் சுய நலனுக்காக பயன்படுத்திக் கொள்வர். இந்த மோசமான செயல்களால் அழிந்து போன அல்லது சட்டத்தின் பிடியில் அகப்பட்டுப் போய் தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர் கள் ஏராளம். எனவே எதுவும் செய்வோம் என்று நினைக் கின்ற அறியாமையை இல்லாமற் செய்வ தற்கு பொதுச் சட்டங்கள் பொது நியமங்கள், பொது நியதிகளை மக்கள் அறிந்து கொள் வதற்கான ஏற்பாடுகளை செய்தாக வேண்டும்.[/size]

[/size]

[size=1]

[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தவறவிட்டு விட்டோம் என சொல்லவரவில்லை. யாராகினும் தமக்கு பிடித்தவர்களை,நண்பர்களை,கலைஞர்களை பாராட்டலாம்.. அல்லது எமக்கு கல்வி தந்த ஆசான்களின் பெருமைகளை சொல்லியும் பாராட்டலாம்.  
    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.