Jump to content

புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாரதர்

நான் இந்த நண்பனைத் தாக்கிப் பேசவேண்டும் என்று எழுதவில்லை. ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் மக்களை எழுச்சி பெறச் செய்வதற்கு வழிகளைத் தேடாமல் தங்கள் பக்கத்தின் நியாயங்களை கற்பித்தலுக்காகத் தான் நிற்கின்றார்கள்.

பேராசிரியர் சொன்ன பிரச்சனைகளை மூடி மறைக்கின்றார்களே தவிர, அக் காயத்தை ஆற்றுவதற்கு என்ன செய்யப் போகின்றோம் என்று சிந்திக்கவில்லை. ஆக சிந்திப்பது எல்லாம் சட்டத்தின் பின்னால் மறைந்து தங்களை நியாயப்படுத்துவது தான்.

இளையோர் அமைப்பு தொடர்பாக விழிப்பு வரவேண்டும். மீண்டும் ஒரு மக்கள் எழுச்சிக்கு அது வழி சமைக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகம் எப்படி தமிழ்மக்களுக்கு வழி காட்டியாக இருந்ததோ அது போல இதுவும் வெற்றி பெற வேண்டும். அப்போது பொங்குதமிழ் நடத்தும் போது தமிழ் உணர்வு வேண்டும் என்பதற்காக எல்லோரும் வேட்டி, சேலையோடு தான் வர வேண்டும் என்று யாரும் புலம்பியிருக்கவில்லை. ஏனென்றால் அப்போது தமிழ்மக்களின் வாழ்வாதாமே பிரச்சனையாக இருந்தது

இதைத் தான் இளையோர் அமைப்பு மீது சேறு புூசுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று மிகப்பெரிய பிரச்சனை நடக்கும்போது இப்பவும் சின்னச்சின்ன விடயத்தை தூக்கிப் பிடித்து, பிரச்சனைகளின் திசைகளை மாற்றமடையச் செய்ய வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

ம்ம்ம்ம்ம்ம் ... குட்டுப்பட வேன்டியவர்களை குட்டாமல் உண்மையை சொன்னவர்களை குட்டப் பார்க்கிறார்கள்!

ஒரு சிறிய உதாரணம்...

ஈழத்தமிழ் மக்களின் போராட்டமோ அன்றி அடக்கு முறைகளோ எப்போதோ தோன்றி விட்டாலும், சிங்கள இனவெறியின் கோரமுகமும், தமிழர் போராட்டமும் உலகிற்கு தெரியத் தொடங்கியது 1983 யூலைக் கலவரத்திற்குப் பின் தான்!! அந்த கறுப்பு யூலையின் அதிர்வலைகளை நாம் மறப்போமாயின் எம் போராட்டத்தை மறந்ததற்குச் சமமானது! அந்த 83 யூலையின் பின் வருடா வருடம் "கறுப்பு யூலையை" நினைவூட்டி பாரிய ஆர்ப்பாட்டம், லண்டன் பிரபலமான வீதிகளினூடே நடைபெற்று, புகழ்பெற்ற "ரவல்கார் சதுக்கத்தில்" ஒன்று கூடல் நிகழ்ச்சியுடன் நிறைவுறும். அந்திகழ்வில் பிரித்தானிய பாரளுமன்ற பல உருப்பினர்கள் கூட பங்கு பற்றுவார்கள். அந்த "கறுப்பு யூலை நிகழ்வு" லண்டனில் ஈழத்தமிழர்களின் ஓர் அடையாள நிகழ்வாக நடைபெற்று வந்தது. உணர்வு பொங்க ஆயிரக்கணக்கான எம்மக்கள் லண்டன் வீதிகளில் பதாதைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பரித்து, உலகின் மனச்சாட்சியை தட்டியெழுப்பும் நிகழ்வாக நடைபெறும். ஆனால் இன்றோ ....??? பல ஆண்டுகளாக ...????

... என்ன நடந்தது!!!!! அந்த "கறுப்பு யூலை நிகழ்வு நிறுத்தப் பட்டதற்கு?????

யாராவது எந்த ஊடகத்திலாவது வந்து பதில் சொல்வார்களா??????...

கருப்பு யூலை நிகழ்வு, லண்டனில் தமிழ்த் தேசியத்திற்கு தடை விதிக்கப்படும் முன்பே கைவிடப் பட்டிருந்தது!!!!

இல்லை தடைதான் இருப்பினும், இப்படியான ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு லண்டனில் தடையுள்ளதா??????

...............

ஆயிரம் கேள்விகள் !!!!! ... விடைகள் ??????

இப்போ புரிகிறதா எங்கு பிழை என்று????????????

எம்மினத்திற்க்கான என்ன சாபமோ தெரியவில்லை!!!!! ... பலத்தில் தற்போதும் இதைப்போல பல பல தொடர்கதைகளாகத் தொடர்கின்றன ....

அரோ.....

Link to comment
Share on other sites

தாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ளுவான் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானியாவில் காட்டப்பட்ட ஆதரவுக்கும் இப்போது காட்டுகின்ற ஆதரவுக்கும் எவ்வவோ வித்தியாசமாக உள்ளது. மனதில் ஆதரவு நிலை இருந்தாலும் வெளியே காட்ட பலர் பின்நிற்கின்றனர்.  

கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட பின்பு எந்தெந்த தமிழ் அமைப்புக்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. யாவரும் மௌனமாக இருப்பின் அரசாங்கங்கள், தடையை ஆமோதிப்பதாகத் தான் கருதுவார்கள்.  

நல்ல ஒரு கேள்வி தூயவன். இதற்குப் பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கும் உண்டு.

கனடாவினிலே தடைசெய்யப்பட்டபோது எந்தவொரு முன்னணி அமைப்புக்களையும் தடைசெய்யவில்லை. மற்றும் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பில் ஓர் தெளிவில்லாத ஒரு நிலைமை காணப்பட்டது. அதனால் கனடியத் தமிழராகிய நாம் சட்டஉதவி பெறவேண்டிய நிலையில் இருக்கின்றோம். சட்ட உதவி என்பது உடனே கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. அது சட்டத்தினை நுணுக்கமாக ஆராய்ந்து எவை செய்யக்கூடாது எவை செய்யக்கூடியது என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டியது. கனடாவில் நாம் கனடியச் சட்டதிட்டங்களிற்கு மதிப்பளித்து செயற்படுவதன் மூலமே எதிர்காலச் செயற்பாடுகளைக் கொண்டு நடத்தக்கூடியதாக இருக்கும். இவ்வாறு தெளிவில்லாது காணப்படும் சட்டத்தின் முன்னால் நாம் ஏதாவது செய்யப்போய் அது பாரிய தாக்கங்களை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது.

மற்றும் புலிகள் அமைப்பின் மீது தடை கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னணி அமைப்புக்களை தடைசெய்திராதிருந்தும் உலகத்தமிழர் இயக்க அலுவலகங்கள் சோதனை இடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். இதுவும் தமிழர்கள் இதுவரை வாய்மூடி மெளனித்திருப்பதன் ஒரு காரணம். நிச்சயமாக இத்தடைக்கு எதிராக கனடியத்தமிழ் சமூகம் தனது உச்ச எதிர்ப்பினைப் பதிவுசெய்யும். ஆயினும் அதற்கு முன் எடுக்கவேண்டிய சில நடவடிக்கைகளையும் மிகவும் நிதானமாகச் செய்து வருகின்றது. ஆர்பாட்டங்கள் செய்யவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பு. ஆயினும் அதனைச் செய்வதற்கும் பாதுகாப்புத்தரப்பினரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது நடைமுறை.

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் புலிகள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர்கள் என்று நினைக்கிறேன். அதாவது favourable court ruling கிடைத்தது என்று நினைக்கிறன். ஆனால் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. முழுமையான விபரம் தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்.

மற்றைய நாடுகளில் இப்படியான முயற்சிகள் நடக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் புலிகள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர்கள் என்று நினைக்கிறேன். அதாவது favourable court ruling கிடைத்தது என்று நினைக்கிறன். ஆனால் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. முழுமையான விபரம் தெரிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்.

மற்றைய நாடுகளில் இப்படியான முயற்சிகள் நடக்கவில்லை.

அதிலே சட்டத்தரணி உருத்திரகுமாருக்கும் பங்கு இருக்கின்றது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அருவி!!

உங்கள் வாதத்துக்கு என்ன பதில் என்று யோசித்துக் கொண்டிருந்த போது பழ.நெடுமாறன் ஜயா தமிழீழத்தில் சிங்களப் படைகள் செய்து கொண்டிருக்கும் கொலைகளுக்கும், விமானக் குண்டுத் தாக்குதலுக்கும் எதிராக போராட்டம் செய்ய இருப்பதாகச் செய்தி வந்திருக்கின்றது.

இந்தியாவிலும் புலித் தடை இருக்கின்றது.நீர் கனடாவில் சொல்லப் போகின்ற சட்டங்களை விட, ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தும் இந்தியாவின் சட்டங்கள் வன்மையானவை. வயது முதிர்ந்த நெடுமாறன் ஜயாவை ஒரு நாள் முழுக்க வாகனத்தில் ஓட்டிச் சென்று துன்புறுத்திக் கூட இருக்கின்றார்கள்.

அனால் நெடுமாறன் ஜயா வெளியிடப்போவது, மக்களுக்காக! அந்த உணர்வாவது எம்மிடம் இல்லையா??

எனவே நீர் சொல்வது போல நிதானம் பாவிக்கப்படவில்லை. ஏனென்றால் நிதாரனமாகச் செய்யப் போகின்றோம் என்பது வெறுமனே எதிர்ப்புக்களை சமாளிக்கும் ஒரு வித திருட்டுத்தனம்.

இலங்கையில் விசாரணைக் குழு அமைப்பார்களே அது போன்றது. பிரச்சனைக்காலத்தில் அமைக்கப்பட்டு, அது பின் மறந்து போய் விடும்.

எனவே உங்களின் நிதானமான சட்டத் தீர்வு இப்படியாகத் தான் போகும் என்பதே எனது கருத்து. ஆனால் கவலைப்படாதீர்கள். இப்போது நான் கேட்ட கேள்வியை என்னும் ஆறு மாதத்தில் கட்டாயம் ஞாபகப்படுத்துவேன். அப்போது பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்.

உண்மையில் ஈழத்துக்காக, எங்களை விட தமிழகத்தமிழ் உணர்வாளர்கள் ஆவலோடு இருக்கின்றார்கள். அது ஒவ்வொரு ஈழத்தவனிடமும் உயிர் பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இலங்கைத் தீவின் சமாதானத்தை வலியுறுத்தி "ஒற்றுமை வாரம்"

கனடாவில் இலங்கைத் தீவின் சமாதானத்தை வலியுறுத்தி மே 8 ஆம் நாள் முதல் 14 ஆம் நாள் வரை "ஒற்றுமை வாரம்" கடைபிடிக்கப்பட உள்ளது.

கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது.

இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறது. சிங்கள பேரினவாதிகளையும், இனவெறியாளர்களையும், இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு போரை ஆரம்பிக்க அனுமதித்துள்ளது.

போரை நோக்கிய சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் தடையின் பின்னான காலத்தில் தீவிரப்பட்டுள்ளது.

கனடா தடையின் பின்னான காலத்தில் தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்கள், படுகொலைகள் பெருமளவில் இலங்கைத்தீவில் அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தொடரும் தமிழர் இனப்படுகொலை, புத்தூர் படுகொலை, தற்போது கொழும்பில் நடைபெறும் படுகொலை என பட்டியல் நீள்கிறது.

தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு எங்கும் தமிழ் மக்கள் நாளாந்தம் கொல்லப்படுவது, கனடிய தமிழ் மக்களுக்கு தமது உறவினர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பெரிதும் அதிகரித்துள்ளது.

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து, கனடிய குடிமக்களான கனடிய தமிழ் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் நெருக்கு வாரங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும், அவர்களிற்கு உரிமை மறுப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரு தலைப்பட்சமாக தமிழர் என்ற சொற்பதத்துடன் வெளியிடப்படும், செய்திகள் தமிழர் குறித்த தப்பபிப்பிராயத்தை ஏனையவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதால், தொழிலிடங்கள் மற்றும் பயிலிடங்களில் கனடிய தமிழர் நெருக்குவாரங்களை எதிர்கொள்கின்றனர்.

வழமையான தமிழர் செயற்பாடுகள் மீதும் திடீரென தேவையற்ற கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் அஞ்சப்படுகின்றது.

தனிநபர் உரிமைகளை அரசியல் சாசனம் கொண்டே உறுதிசெய்யும் முதல்தர நாடான கனடாவில், இவ்வாறு தவறான முனைப்புக்கள் ஏற்புடையவையல்ல, உடன் தடுக்கப்பட்டாக வேண்டும்.

உண்மை நிலைமைகளை மறைத்து, உலகத்தை பொய்மைக்குள் தள்ள சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டிக்கிறோம்.

இதன் ஒரு அங்கமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் சமாதான காலத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த எந்தவொரு கைதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மேற்கத்திய ஊடகவியலாளர்கள் மீதும், உண்மையை வெளியிடுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்கான பாய்ச்சலும், நெருக்குவாரங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், உண்மையின் குரலாக, உரிமையின் குரலாக, சமாதானத்தின் குரலாக, கனடியத் தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக சமாதானத்தை வேண்டிய கனடியத் தமிழர் ஒற்றுமை வாரம் அமையும்.

இந்த வாரத்தில் தமிழர் இல்லங்கள், வியாபாரத்தலங்கள், வாகனங்கள் தோறும், கறுப்புக் கொடிகளை பறக்க விடுவது என்றும், தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், சமாதானத்தை வேண்டியும், உரிமைகளின் காப்பை வலியுறுத்தியும், தமிழர் ஒன்றுகூடல்கள் பல நடைபெற உள்ளன.

கனடாவில் இலங்கைத் தீவின் சமாதானத்தை வலியுறுத்தி "ஒற்றுமை வாரம்"

[செவ்வாய்க்கிழமை, 2 மே 2006, 05:31 ஈழம்] [புதினம் நிருபர்]

கனடாவில் இலங்கைத் தீவின் சமாதானத்தை வலியுறுத்தி மே 8 ஆம் நாள் முதல் 14 ஆம் நாள் வரை "ஒற்றுமை வாரம்" கடைபிடிக்கப்பட உள்ளது.

கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது.

இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறது. சிங்கள பேரினவாதிகளையும், இனவெறியாளர்களையும், இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு போரை ஆரம்பிக்க அனுமதித்துள்ளது.

போரை நோக்கிய சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் தடையின் பின்னான காலத்தில் தீவிரப்பட்டுள்ளது.

கனடா தடையின் பின்னான காலத்தில் தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்கள், படுகொலைகள் பெருமளவில் இலங்கைத்தீவில் அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தொடரும் தமிழர் இனப்படுகொலை, புத்தூர் படுகொலை, தற்போது கொழும்பில் நடைபெறும் படுகொலை என பட்டியல் நீள்கிறது.

தமிழர் வாழும் வடக்கு-கிழக்கு எங்கும் தமிழ் மக்கள் நாளாந்தம் கொல்லப்படுவது, கனடிய தமிழ் மக்களுக்கு தமது உறவினர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பெரிதும் அதிகரித்துள்ளது.

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து, கனடிய குடிமக்களான கனடிய தமிழ் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் நெருக்கு வாரங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும், அவர்களிற்கு உரிமை மறுப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஒரு தலைப்பட்சமாக தமிழர் என்ற சொற்பதத்துடன் வெளியிடப்படும், செய்திகள் தமிழர் குறித்த தப்பபிப்பிராயத்தை ஏனையவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதால், தொழிலிடங்கள் மற்றும் பயிலிடங்களில் கனடிய தமிழர் நெருக்குவாரங்களை எதிர்கொள்கின்றனர்.

வழமையான தமிழர் செயற்பாடுகள் மீதும் திடீரென தேவையற்ற கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் அஞ்சப்படுகின்றது.

தனிநபர் உரிமைகளை அரசியல் சாசனம் கொண்டே உறுதிசெய்யும் முதல்தர நாடான கனடாவில், இவ்வாறு தவறான முனைப்புக்கள் ஏற்புடையவையல்ல, உடன் தடுக்கப்பட்டாக வேண்டும்.

உண்மை நிலைமைகளை மறைத்து, உலகத்தை பொய்மைக்குள் தள்ள சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டிக்கிறோம்.

இதன் ஒரு அங்கமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் சமாதான காலத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த எந்தவொரு கைதும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

மேற்கத்திய ஊடகவியலாளர்கள் மீதும், உண்மையை வெளியிடுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்கான பாய்ச்சலும், நெருக்குவாரங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், உண்மையின் குரலாக, உரிமையின் குரலாக, சமாதானத்தின் குரலாக, கனடியத் தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக சமாதானத்தை வேண்டிய கனடியத் தமிழர் ஒற்றுமை வாரம் அமையும்.

இந்த வாரத்தில் தமிழர் இல்லங்கள், வியாபாரத்தலங்கள், வாகனங்கள் தோறும், கறுப்புக் கொடிகளை பறக்க விடுவது என்றும், தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், சமாதானத்தை வேண்டியும், உரிமைகளின் காப்பை வலியுறுத்தியும், தமிழர் ஒன்றுகூடல்கள் பல நடைபெற உள்ளன.

-புதினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 MAY, 2024 | 01:18 PM இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் தெரிவித்தார். 2009 மே 18 ஆம் திகதியன்று இலங்கையின் உள்ளகப் போர் நிறைவடைந்து, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பெருமளவான பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த நினைவுதினத்தை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலிசெலுத்திவிட்டு அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நிலவிய ஆயுதம் தாங்கிய உள்ளகப் போரில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு தவறிய இலங்கைய அதிகாரத் தரப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் இணைந்த கவனயீனமான செயற்பாட்டை இன்றைய வருடபூர்த்தி நினைவூட்டுகின்றது. 15 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தின் இறுதி நாட்களில் உயிரிழந்த பெருமளவான அப்பாவி பொது மக்கள் உயிர் நீத்த பகுதியில் இன்று நாம் மிகவும் துயரத்துடன் நிற்கின்றோம். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, யுத்தத்தின் போது தாம் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் சமூகத்தார் முன்னெடுத்திருந்த முயற்சிகளை தடுக்கும் வகையில் கைதுகள், பலவந்தமாக தடுத்து வைப்புகள் மற்றும் வேண்டுமென்றே தவறான கருத்துகளை பரப்பியிருந்தமை போன்ற நினைவுகூரலை தடுக்கும் வகையிலான சம்பவங்களை நாம் அவதானித்திருந்தோம். உயிர்நீத்தவர்களை நினைவுகூரவும், தமது அன்புக்குரியவர்களுக்காக அமைதியான முறையில் ஒன்றுகூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைக்கு அதிகாரத்தரப்பினர் மதிப்பளிக்க வேண்டும். யுத்தத்தில் இரு தரப்புகளிலிருந்தும் சர்வதேச சட்டங்களுக்கமையவும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறும் வகையிலான குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் காணப்படுகின்றமையை ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் இனங் கண்டுள்ள போதிலும், அவ்வாறான பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற அல்லது சுயாதீனமான தேசிய விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், யுத்தத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் எஞ்சியுள்ள அங்கத்தவர்கள், தமது அன்புக்குரியவர்களை தொடர்ந்தும் தேடிய வண்ணமுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியை நீண்ட காலமாக தேடுவதை அவர்களிடமிருந்து அறிந்து கொள்வது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் சிறந்த தீர்வாக அமைந்திருந்த போதிலும், கடந்த 15 வருட காலப்பகுதியில் பொறுப்புக்கூரலுக்காக உள்ளகக் கட்டமைப்பை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் வெறும் கண்துடைப்புகளாகவே அமைந்திருந்தன. இந்த வாரத்தின் முற்பகுதியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், இலங்கையின் பொறுப்புக்கூரல் செயற்பாடுகளில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக, இந்த விடயம் தொடர்பான கறைகள் மாறாமல் காணப்படுவதை வலியுறுத்தியிருந்தது. உண்மை, நீதி மற்றும் இழப்பீடு போன்றவற்றுக்காக இன்றும் ஆயிரக் கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். இன்று முள்ளிவாய்க்காலில் நாம் அவர்களுடன் உறுதியாக கைகோர்த்துள்ளோம் என்றார். இதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தின் போது குறிப்பாக 2009 மே மாத காலப்பகுதியில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறல்கள் போன்றன பெருமளவில் அதிகரித்திருந்தது. குறிப்பாக போர் நடைபெற்ற பகுதிகளில் சுமார் இடம்பெயர்ந்த சுமார் 300,000 பொது மக்கள் மனிதக் கேடயங்களாக அடைபட்டிருந்தனர். இலங்கையின் வட மாகாணத்தின், முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறிய கிராமமான முள்ளிவாய்க்கால் பகுதியில், இலங்கை படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்டப் போர் நடந்ததுடன், ஐக்கிய நாடுகளின் மதிப்பீடுகளின் பிரகாரம் சுமார் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வில், போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி, போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதுடன், நீதியையும் பொறுப்புக்கூரலையும் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்த வாரம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183864
    • 18 MAY, 2024 | 01:34 PM (நா.தனுஜா) மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (18 ) கொழும்பில் நடைபெற்றது. மூன்று தசாப்தகாலப்போர் மிகமோசமான மனிதப்பேரழிவுடன் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றறையதினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வுகள் வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வு இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் முற்றத்தில் நடைபெற்றது. அதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் எனவும், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த போராட்டங்களின் தளமாக அமைந்திருந்த காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் 2022 மே 18 ஆம் திகதியன்று எவ்வித இன, மதபேதமுமின்றி சகலரும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுட்டித்து போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர். அதன்படி, கடந்த ஆண்டைப்போன்றே இம்முறையும் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ஷ்ரீன் ஸரூர், சுவஸ்திகா அருலிங்கம், சந்தியா எக்னெலிகொட, ராஜ்குமார் ரஜீவ்காந்த், கௌதமன், ரத்னவேல், நுவன் போபகே உள்ளிட்ட பலரும், கத்தோலிக்க மதகுருமாரும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் 'சிங்கள ராவய' அமைப்பினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறையும் பிற தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவியது. அதன்படி, நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கடற்கரைப்பகுதிக்கு அண்மையில் காலையிலேயே பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனையடுத்து 9.30 மணியளவில் அங்கு கூடியிருந்த அனைவரும் ஈகைச்சுடரேற்றி, அதில் வெண்ணிற மலர்தூவி போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர். இந்நினைவுகூரல் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு குழுவொன்று கொடிகளை ஏந்தி கூச்சலிட்டவாறு கடற்கரைப்பகுதிக்குள் உட்பிரவேசித்து நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரால் அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர். அதனைத்தொடர்ந்து நிகழ்வை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறும், தாமதமேற்படின் அதன் பின்னர் நிகழக்கூடியவற்றுக்குத் தம்மால் பொறுப்புக்கூறமுடியாது எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணி ரத்னவேலிடம் எச்சரித்தார். இக்குழப்பங்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்தியா எக்னெலிகொட, மிலானி மற்றும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் ஆகியோர் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரவேண்டியதன் தேவைப்பாட்டையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிப்பேசினர். அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகிப்பதற்கும், உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கும் தடைவிதிக்கப்பட்டு, இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டமை குறித்து தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். அதன்பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளை மலர்களை கடலில் தூவி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை, நினைவேந்தல் நிகழ்வுக்கு சற்றுத் தாமதமாக வருகைதந்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான மிராக் ரஹீம் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் தண்டவாளத்துக்கு அண்மையிலேயே பொலிஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டனர். நிகழ்வில் குழப்பம் விளைவிப்பதற்கென குழுவொன்று வருகைதந்ததாகவும், எனவே தாமதமாக வந்த செயற்பாட்டாளர்களை தாம் அறிந்திருக்காததன் காரணமாக அவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் பொலிஸார் விளக்கமளித்தனர். பின்னர் அனைவரையும் வெகுவிரைவாக அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதைத்தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.  (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/183867
    • முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு 18 MAY, 2024 | 03:30 PM முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு, தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் (18) பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.  அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.   தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் தொடர்பான நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது.  அடுத்து, மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.  பின்னர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கணவனை இழந்த முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.  அவரை தொடர்ந்து, ஏனையவர்களும் தங்கள் உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினர். அதன் பின்னர், தொடர்ச்சியாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.   https://www.virakesari.lk/article/183876
    • யாழில் பல்வேறு தரப்பினரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் Published By: DIGITAL DESK 3 18 MAY, 2024 | 01:02 PM   யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதனொரு அங்கமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் நயினாதீவு நாகவிகாரைக்கு 16 ஆம் திகதி சென்ற  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், நெடுந்தீவில் கடற்றொழில் அமைப்புக்களையும் சந்தித்து பேசினார். https://www.virakesari.lk/article/183860
    • முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அஞ்சலி  18 MAY, 2024 | 01:41 PM   முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.  இதன்போது பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருப்பதாக உணர்வு மேலிட தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/183866
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.