Jump to content

புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம்

[சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2006, 05:55 ஈழம்] [ச.விமலராஜா]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடைகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய பரப்புரையின் பலவீனம்தான் காரணம் - Lobby எனப்படுன்கிற கருத்தாதரவு தேடுதலை செய்யவில்லை என்று ஓய்வுநிலைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மனம் திறந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று வெள்ளிக்கிழமை (21.04.06) ஒலிபரப்பாகிய "செய்திக்குவியல்" நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேராசியர் கா.சிவத்தம்பி இக்கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் வாழ் தமிழர்களின் பாரிய ஒத்துழைப்பை எவருமே மறுப்பதற்கில்லை. புலம்பெயர் வாழ் தமிழர்கள் மீதான தமிழீழத் தேசியத் தலைமையினது மதிப்பை புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் அனைவருமே அறிந்த ஒன்றாகும்.

இருப்பினும் தனிநபர்களினது பங்களிப்புகளாக இருப்பதனூடே மட்டும் விடுதலைப் போராட்டத்தை நகர்த்திவிட முடியாது.

தமிழீழத் தேச விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளது.

சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும் உள்ளாகி உள்ளது.

சிங்களவர்களோடு மட்டுமே நாம் போராடிக் கொண்டிருந்தால் போதுமெனில் எந்த ஒரு தமிழீழக் குடிமகனும் அந்நிய தேசத்தில் அகதியாக இத்தனை காலம் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை- நம் காணிகள் செழித்திருக்க- நம் முன்னையர் காலம் மீண்டும் பூத்திருக்க சுதந்திரத் தமிழனாய் திருமலை கோணேஸ்வரர் ஆலயத்துக்கும் நல்லூர் கந்தன் கோவிலுக்கும் பங்குனி உத்திர பாதயாத்திரையும் போய்க்கொண்டிருப்போம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமாதானம், அமைதிப் பேச்சுக்கள் என்ற அழுத்தங்களினூடே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிற வேளையில் தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை சர்வதேச தளத்திலும் இருக்க வேண்டும்.

அதை புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே செய்ய முடியும்.

உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு உயிரைக் கொடுக்க உள்ள போராளிகளுக்கு உந்துசக்தியாக- உயிரோட்டமாக புலம்பெயர் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்.

கொட்டும் பனியிலும் உறங்கா இரவுகளிலும் கடன்பட்டு செந்நீரைப் போல் உடல் உழைப்பைச் சிந்தி அள்ளி அள்ளி கொடுத்து அரும்பாடுபட்டு வளர்த்த விடுதலைப் பயிரின் அறுவடைக்கு முன்னராக புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை இருக்கிறதுதான் என்பது புலம்பெயர் தமிழரது மனசாட்சிக்குத் தெரியும்.

இந்தக் களைக்கு யார் காரணம் என்பது விவாதிக்கப்பட வேண்டியது அல்ல.

களையைக் களைந்து கதிர் முற்ற மகிழ்வோடு அதனை அறுத்து ஒன்றாய் நின்று விடுதலைப் பொங்கலிடுவதற்கான வழி என்ன என்பதைத்தான் புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தும் விதமாக புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டிய கடமையின் அவசியம் உணர்ந்து பேராசிரியர் கா.சிவதம்பி தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பைத் தருகின்றோம்:lol:

ஐரோப்பிய பயணத் தடையையும் கனேடியத் தடையையும் ஒன்றொன்றுக்கொன்று தொடர்புடையதாக கருதமாட்டேன்.

ஐரோப்பிய பயணத் தடைக்கான காரணம் பேச்சுவார்த்தை தொடர்பிலானதும், சிறிலங்கா அரசாங்கத்தினது பரப்புரைகள் அல்லது எடுத்துரைப்புகளுக்கான சந்தர்ப்பங்களாலும் ஏற்பட்டது எனக் கருதலாம். அதிலும் நோர்வே போன்றவற்றில் இது விடயத்தில் ஒரு தளர்ச்சி உள்ளது. அதனால் நோர்வேத் தரப்பை சிங்களத் தரப்பு கடுமையாகத் தாக்குகிறார்கள்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது-

நோர்வே அல்லது மூன்றாவது நாடாக ஒரு மேற்கத்தைய நாட்டின் தலையீடு இல்லாமல், அனுசரணை இல்லாமல் சமாதானம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்கிற உண்மையும்

அப்படியான நேரத்தில் நோர்வேயை வேண்டாம் என்று சொல்வது எப்படிப் புத்திசாலித்தனதமாகும் என்று சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்கிற ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கிறேன்.

இலங்கையில் தமிழரது நிலைப்பாடு பற்றி வெளிநாடுகளில் எடுத்துச் சொல்லப்பட்டு வந்த சில பரப்புரைகள்தான் கனேடியத் தடைக்குக் காரணம்.

குறிப்பாக சர்வதேச நிறுவனங்களிடத்தில் தமிழர் தரப்பானது நன்மதிப்பைப் பெறுவதற்கான பரப்புரைகளைப் புகலிடத் தமிழர்கள் வேண்டிய அளவு செய்யவில்லை. அதற்கு மாறான செயற்பாடுகளையே செய்து வந்துள்ளதாக எமக்குப்படுகிறது.

கனேடியத் தடையை விதித்தது ஒரு கன்சர்வேட்டிவ் கட்சி. அரசாங்கத்துக்கு வந்தும் சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கிறது. கனேடியப் பண்பை பாதுகாப்பாகச் சொல்கிறார்கள்.

தமிழ் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தாதரவு தேடும் கூடம்- கருத்தாதரவு தேடுகிற ஒரு தொழில்முறையாளர்களை- மருத்துவர்கள்-பொறியியலாளர்கள்-வல்லுநர்களைக் கொண்ட குழுமம் கனடாவில் இயங்கவில்லை.

தமிழ் மக்களால் சிங்கள மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய அரசாங்கத்திடம் சொல்வதற்கான வலுவான சிங்களக் குழு கனடாவில் உண்டு.

கனடாவில் Lobby எனச் சொல்லப்படுகிற கருத்தாதரவு தேடும் குழுமம் ஒன்று உள்ளதா?

இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இருந்தது- இப்போது அங்கும் குறைந்து விட்டது. அவுஸ்திரேலியாவிலும் கூட இல்லை என்றுதான் நம்புகிறேன்.

தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் தங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுதலில் காணப்படுகிற பலவீனங்களின் வெளிப்பாடாகவும் குறைபாடுகளின் வெளிப்பாடாகவுமே கனேடியத் தடையை நான் பார்க்கின்றேன்.

புலம்பெயர் வாழ் நாடுகளில் உள்ளவர்கள் சரியான வகையில் இந்தப் பரப்புரையை அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அரசாங்கங்களிலும் நியாயப்பாடுகளை வெளிக்கொணரத் தவறிவிட்டார்கள் என்று அடித்துச் சொல்கின்றேன்.

நீங்கள் நேர்காணல் எடுக்கும் அவுஸ்திரேலியாவில் நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள பிரதான தேசிய நாளிதமிழில் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றி எத்தனை அங்குலச் செய்தி கடந்த 6 மாத காலத்தில் வெளியாகியிருக்கின்றது?

ஒன்றுகூட வரவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியானால் நீங்கள் என்னுடன் பேசவேண்டியதும் இல்லை. என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?

இங்கிலாந்து- கனடா-ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை விட அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் ஆங்கிலம் படித்தவர்கள்- அடி நிலை ஊழியராக இருந்தாலும் அரச உத்தியோகத்தில் இருப்பவர்கள். உங்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை? அவர்களைப் போல் நீங்கள் உடல் உழைப்பாளர்கள் அல்ல என்பதை நான் நன்கறிவேன்.

உங்களுக்குள் குழு மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இங்கு வந்துவிட்டு மகிழ்கின்றீர்கள்.

கோவில்களுக்குச் செலவிடுவது போன்ற உங்களது சொந்த ஆத்மார்த்த திருப்திக்கான செயற்பாடுகளைப் போல் இந்த கருத்தாதரவு தேடுதல் எனப்படுகிற Lobby யை ஏன் நீங்கள் செய்யவில்லை?

யார் தலைவர்-செயலாளர் என்கிற வகையிலும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்கிற வகையிலும் அங்கு நிலைமைகள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள்.

நீங்கள் மாநாடுகள்-பட்டிமன்றங்கள்- கருத்தரங்குகள்- குத்துவிளக்கேற்றுதல்களை செய்வதற்குத்தான் இவை தேவை.

அதைவிட எல்லா விடயமும் நன்கு அறிந்த 4 பேர் இணைந்து இந்த Lobby யைச் செய்யலாமே.

உண்மையில் Lobby செய்வதற்கான ஒழுங்குமுறைகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பது துரதிர்ஸ்டம்.

Lobby யை அறிந்தவர்களும் அதைச் செய்யவில்லை என்பதும் உன்மை.

அப்படியான நிலையில் தடைவிதித்து விட்டார்கள் என்று வயிற்றலடித்துக் கொண்டால் எப்படி?

இங்குள்ள தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது. நிலைமை அப்படி உள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை கால வரிசைப்படியாக நீங்கள் வெளியீட்டுள்ளீர்களா? அப்படி இருந்தால் அது எவ்வளவு தூரம் சென்றடைந்திருக்கின்றது? வீடுகளில் எழுதிவைத்துக் கொண்டால் போதுமா?

இந்த விடயங்களைச் செய்வதற்கு எல்லோரும் இணைய வேண்டும் என்பதில்லை.

சிறிது பேர் இந்த விடயங்களைச் செய்ய முன்வருவார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்கள் மறுதலிக்கக் கூடாது.

கனடாவில் அப்படித்தான் நடந்தது என்று கேள்விப்படுகிறேன். கனடாவில் உள்ள சிலர் அவர் அப்படிச் சொல்லிவிடுவார்-இவர் எப்படிச் சொல்லிவிடுவார் என்று சொல்லிக் கொண்டு பேச விரும்புகிறவர்களையும் பேசவிடாமல் செய்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றீர்கள். பக்கத்து கிராமத்துக்காரன் சண்டை போட்டால் அங்கேயும் நீங்கள் ஒன்றாக இணைந்து கொண்டு சண்டை போடுகின்றீர்கள். அந்த ஒற்றுமை எல்லாம் உங்களிடம் இருக்கிறது.

ஆனால் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்ட விடயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதுதான் பிரச்சனையே.

இன்றுள்ள சிறிலங்கா யாப்பு நிலையில் ஒரு தேசத்தின் அலகு என்கிற வகையில் தேசக் குழுமம் என்கிற வகையில் ஆட்சியில் தமிழர்களினது பங்கு என்ன? என்பது வரைவிலகணக்கப்படுத்தப்படவில

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகராவெண்டானாம் .....

அய்யோ! உந்தச் சீரளிவை பேராசிரியர் சிவந்தம்பி சொன்னால் மட்டும்தான் உந்த புதினத்தார்கள் போடுவினம் போல???? மற்றும்படி இவர்களுக்கு உந்த உண்மைகள் தெரியவராது!!! ... ம்ம்ம்ம்ம்ம் ....

மற்றும் பேராசிரியர் சும்மா எல்லா புலத்தமிழர்களையும் குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை!!! இவற்றிற்கான தார்மீகப் பொறுப்பை புலத்தில் தேசியத்திற்காக தொழிற்பட்ட/தொழில்படும் "பூசாரிகளே" ஏற்க வேண்டும்!! புலத்தில் தேசியத்திற்கான செயற்பாடுகள் முடக்கப்பட்டதில் பூசாரிகளின் "பதவிப்போட்டிகள்/ குழிபறிப்புகள்/தேசியத்திற்கான செயற்பட்ட நிறுவனங்களை தங்களது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயன்றது/ ..... யாருக்குச் சொல்லி உதுகள் புரியப் போகின்றது!!! ... இந்தப் பூசாரிகள் எம்மினத்தின் சாபக்கேடுகள்!!!

அரோகரா!!!!

Link to comment
Share on other sites

இல்லை எல்லாருமே அது புலிகள் பார்ப்பார்கள் என்று சொல்லிவிட்டு தங்கள் பணப்பையை நிரப்ப அலைந்தவர்கள் தான் நாங்கள் முழுபேரும். .

அதை விட்டுவிட்டு இப்போ மாத்திரம் செய்கிறவனை குறை சொல்வது எந்த வகையில் சரி...

.

ஒரு ஊர்வலத்திற்கு வா என்றால் ஒளிச்சோடுகிற தன்மானம் கெட்ட தமிழன் 80% வீதம் இருக்கிறார்கள்.

ஆக ஏதோ எங்களால் இயன்ற மட்டும் அவர்களுக்கு செய்வோம் என்று சொல்கின்ற தமிழர்கள் தான் இந்த தேரை வடம் பிடித்து இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டவர்கள்

Link to comment
Share on other sites

வெளிநாட்டில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளை சாடி வெப்ஈழத்தில் வெளிவந்த கட்டுரை

ஐரோப்பிய ஒன்றியத்தை எழுப்பாத "எழுக தமிழ்"(பாகம் 1)

(25.10.2005)

எழுக தமிழ் எழுச்சிப்பேரணி பெல்யியம் நாட்டில் நடைபெற்றது. பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் பல நாடுகளிலும் இருந்து பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வந்திருந்தார்கள். குழந்தைகள் தொடக்கும் பெரியவர்கள் வரை ஆறு மணித்தியாலங்கள் கொட்டும் மழையிலும் குளிரிலும் கால் கடுக்க நின்றார்கள். அவர்களெல்லாம் ஒரு நோக்கத்தோடும் நம்பிக்கையோடும் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாது நின்றார்கள். அவர்களுக்கெல்லாம் சாதிக்க வந்திருக்கும் உணர்வு. இவ்வளவு பேர் வந்திருக்கின்றோமே, எப்படியும் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை ஐரோப்பிய ஒன்றியம் புரிந்துகொள்ளும் என்கின்ற நம்பிக்கை அவர்களின் முகங்களில். நிகழ்ச்சியை உணர்ச்சி பொங்க தொகுத்து வழங்கியவரும் ஒரு பதிலோடுதான் இன்று வீடு செல்வோம் என்று கூறி மக்களை உசுப்பேற்றிக்கொண்டிருந்தார

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-குற்றச்சாட்டு நேரடியாக புலம்பெயர்வாழ் தமிழர்களாகிய எம்மைச் சுட்டி நிற்கிறது. முதற்கட்டமாக தவறை ஏற்றுக்கொள்வோம். மாற்று வழிகளைக் காண்போம்.

தனிப்பட்ட வாழ்க்கையின் இருப்பில் மட்டும் தீவிரமாகச் செயற்படும் நாம் நம் பொதுவாழ்வின் இருப்பிரலும் மிகத் தீவரமாகச் செயற்படவேண்டிய காலகட்டமிது.

1. சென்ற தினக்குரல் வார இதழிலும் " கனடாவில் நடந்ததென்ன? -பீஷ்மர்- கட்டுரையும் தெளிவாக ஆராய்துள்ளது.

2. நாம் வாழும் தேசங்களிலுள்ள மொழிகளில் ஈழப்பிரச்சினை தொடர்பான உண்மைத் தகவல்களை அறியச்செய்தல் -அதாவது தொடர் பிரச்சாரம்- இதற்கு இணையங்களை இலகுவில் பயன்படுத்தலாம்.

இவ்வகை முயற்சிகள் இனிவரும்காலங்களில் தமிழில் மட்டுமானதாக குறுக முடியாது. தமிழர்கள் மியெங்கும் பரவி வாழும் இந்தப் புதுவுலகு யதார்த்ததிற்கேற்ப உலகின் முக்கிய மொழிகளனைத்திலும் வெளிவர வேண்டும். செய்திகளும், செய்தி ஆய்வுகளும் உடனுக்குடன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலி, ஸ்பானிஸ், அரபு, ஹிந்தி, சிங்களம்..... எனப் பாகுபாடற்றவகையில் உடனுக்குடன் வெளிவருதல் வேண்டும்.

இதில் புலம்பெயர்வு வாழ்வில் இருக்கும் பல்மொழி ஆற்றலாளர்கள் பெரும் பங்காற்ற வேண்டிய முக்கிய காலகட்டம் இது.

ஊடகத்துறையின் பெரும் புரட்சிக்காலத்தில் வாழும் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20 04.2006 வவுனியாவில் இனம் காணப்படாத இரு நபர்கள் கொலை செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்களது கொலைக்கு தமிழத் தேசியப் படை உரிமை கோரியிருந்தது .அதற்கான உரிமை கோரும் கடிதம் இச் சடலங்கள் அருகில் இருந்துள்ளது. இந்த தமிழ்த்தேசியப் படை என்றால் என்ன என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியவில்லை. இந்த தமிழ்த் தேசிய படை கருணா மற்றும் சில ஒட்டுப்படைகளின் கூட்டு இதில் பிரதான பங்கு கருணா ஒட்டுகுழு தான்.

இவர்கள் அப்பாவி பொதுமக்களை தொடர்ச்சியாக கொலை செய்து வருகின்றார்கள். இவர்களின் இவ் நடவடிக்கை தமிழர் தாயகத்தில் மட்டும் இல்லை தமிழர் புலம்பெயர்ந்த

நாடுகளிலும் உள்ளது.

தமிழத்தேசிய படையின் இணைய தளம் இயக்கப்படுவது டென்மார்க்கில் இருந்துதான். இதன் தொடர்பாளர்கள் குமாரதுரை குடும்பத்தை சேர்ந்த மதிஇ வதனன்இ குமாரதுரை ஆகியோரே. இதற்கான ஆதார தகவல்கள் கீழ் தரப்பட்டுள்ளது.

இந்த தமிழத்தேசியப் படையினர் ஜரோப்பாவி்லும் அப்பாவி மக்களை கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குழுக்கள் இடையிலான மோதல்கள் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு ஓர் காரணம். இவ்வாறான நிலமையினை உருவாக்கியது சிறிலங்கா புலனாய்வுத்துறையும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுப்படைகளும் ஆகும். அதே போன்ற ஒரு நிலமையினை ஜரோப்பாவில் உருவாக்க தீவிரமான முயற்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜரோப்பாவில் உள்ள ஒட்டுப்படைகளின் விபரங்களை தமிழ் மக்கள் விளங்கிக் கொண்டு இந்த ஒட்டுக் குழுக்களுக்கு எதிரான பரப்புரையினையும் சட்ட நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்

http://www.webeelam.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான செய்திகளை வெளிக் கொண்டுவர தமிழ்தேசியத்திர்கு ஆதரவான ஊடகங்கள் பின்னிர்ப்பது பின் இந்ததுரோகிகளினால் பாதிப்பு ஏர்ப்பட்டதின் பின் புலம்புவதில் என்ன பயன்?????

டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்!

சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பியஇ கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன.

விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இருந்தது. அப்பொழுது புலம்பெயர் தமிழர்களுக்குள் ஊடுருவுவதற்கு சிறிலங்கா அரசு பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது. இதற்கு தமிழர்களால் நடத்தப்படுகின்ற விழாக்களையும் பயன்படுத்த முற்பட்டது. சிறிலங்காவின் தூதரகங்களின் ஊடாக இதற்கான முயற்சிகள் நடைபெற்றன. கொள்கைப் பிடிப்பின்றி வெறும் பொழுது போக்குக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் விழாக்களை நடத்துகின்றவர்களை அணுகிய சிறிலங்கா தூதரக அதிகாரிகள் விழாக்களுக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாக தூண்டில் போட்டனர். ஒரு சில விழாக்கள் சிறிலங்கா தூதரகத்தின் நிதி உதவியுடன் நடந்தன. இது பல பேர் அறியாத ஒரு உண்மை. ஆனால் விழாக்களின் காலம் முடிவடைகின்ற நேரத்திலேயே சிறிலங்கா தூதரகங்கள் இது போன்ற முயற்சிகளில் இறங்கியதால்இ அவர்களால் இந்த ஊடுருவல் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

இன்று சிறிலங்கா அரசின் ஊடுருவல்கள் ரிபிசி வானொலியிலும் சில இணையத் தளங்களிலும் இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

ஆனால் இந்த ஊடகங்கள் மூலமும் சிறிலங்கா அரசு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்ல. முக்கியமாக இளம் தலைமுறை மீது இந்த ஊடகங்களால் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு எதையும் செலுத்த முடியவில்லை. ஆகவே இளம்தலைமுறையினர் மீது ஊடுருவும் வகையில் மீண்டும் விழாக்களை பயன்படுத்து முடிவெடுத்திருக்கிறார்களோ என்கின்ற சந்தேகம் வலுக்கின்ற மாதிரியான சம்பவங்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன.

டென்மார்க்கில் வரும் 29.04.06 அன்று ஒரு திரையிசை நடன விழா நடைபெற உள்ளது. "கலக்கப் போவது யாரு" என்னும் பெயரில் திரையிசை நடனப் போட்டியோடு வேறு சில நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களைக் கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களோடு இந்த நிகழ்ச்சி விளம்பரம் செய்யப் படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சில நடனக் குழுக்கள் இதில் பங்கு பற்ற உள்ளன. மிகவும் ஆராவரமாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த விழா தீய சக்திகள் வேறொரு வடிவில் தமிழர்கள் மத்தியில் ஊடுருவுவதற்கான தொடக்க விழா என்பதே உண்மை. இந்த விழாவை நடத்துபவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியுலகத்தை பொறுத்தவரை அப்பாவிகள். ஆனால் இந்த "அப்பாவிகளை" இயக்குகின்ற பாவிகள் பலரும் அறிந்தவர்கள். "டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா மற்றவர்களை நம்பியிருக்காமல் நீங்களாகவே எம்நாட்டில் நடப்பவற்றை மற்றவர்களுக்கு எடுத்து கூறுங்கள்.

புலத்தழிழர்கள் முதலில் விழிப்படைய வேண்டியது பூசாரிளிடமிருந்து தான். எனவே புலத்திலுள்ள பூசாரிகளை ஒதுக்கிவிட்டு எமது பிரச்சனைகளை தீர்க்க முயலுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சிவத்தம்பி. எங்களால் முடிந்தவரை இங்கே செய்யவேண்டிய lobbying செய்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தின் கை ஓங்கியிருக்கிறதே ஐயா. காரணங்களை சொல்கிறேன் கேளுங்கள்

1. அவர்கள் Embassy அலுவலகங்களை நாட்டுக்கு நாடு திறந்து நாளும் பொழுதும் இதே குறியாக, வேலை¦ºöகிறார்கள். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு முழுநேரம் வேலைசெய்யும் இவர்கள் எங்கே? அன்றாடம் எங்கள் குடும்பங்களின் சுமையை சுமந்துகொண்டு பகுதிநேரம் மட்டும் ¦¸¡ïºõ ¿¡ð¨¼ì¸ÅÉ¢ìÌõ நாங்கள் எங்கே?

2. அவ்வப்போது ஒவ்வொருத்தன் "இந்த மந்திரி" "அந்த மந்திரி" என்று சொல்லிக்கொண்டு, அரச செலவில் அங்கிருந்து ÌÎõÀò§¾¡Î பறந்துÅ¡È¡ý. þí¸ ÅóÐ மந்திரி பதவியை ¸¡ðÊ, இலகுவாக þí¸ò¨¾ «Ãº À¢Ã¾¢¿¢¾¢¸Ç¢¼õ appointment Å¡í¸¢È¡ý. À¢ÈÌ §ÅðÎ ¨ÅòÐÅ¢ðÎô §À¡¸¢È¡ý. ¿¡í¸û appointment §¸ð¼¡ø ¡÷ ¾Õ¸¢È¡÷¸û?

¦º¡øÅÐ ±Ç¢Ð ¬É¡ø ¬Â¢Ãõ º¢ì¸ø þÕį̀¾Â¡!!!

Link to comment
Share on other sites

தமிழ்மகான் கூறிய கருதுக்கள் கவனிகத்தக்கவை,

நாங்களும் இதை அமைப்பு ரீதியாகச் செய்ய வேண்டி உள்ளது.தமிழ் ஈழத்தில் உள்ளதைப் போல் முழு நேரமாக இயங்குபவர்கள் வேண்டும்.இவர்களின் குடும்பங்களைக் கவனிப்பதற்கு இவர்களுக்கு முழு நேர ஊதியமும் வழங்க்கப் பட வேண்டும்.தமிழ் ஈழ வெளி உறவுச் சேவை ஒன்று அமைக்கப் பட வேண்டிய அவசியத்தயே இது சுட்டிக் காட்டுகிறது.வெறும் நிதி சேகரிப்புக்கு மட்டுமே புலத்தில் அமைப்பு செயற்படுவது இதற்கு ஒரு காரணம்.

பல்வேறு தகமை உடயவர்கள் உள்வாங்கப் பட்டு இதற்கென முழு நேர ஒருங்கமைப்பாளர்கள் அவசியம் தேவை.அனைவரையும் அரவணைதுச் செயற்படக் கூடியவர்கள் பொறுப்பான பதவிகளில் நியமிக்கப் பட வேண்டும்.புலத்தில் உணர்வோடு இயங்கும் இளயவர்கள் ஒருங்கிணைக்கப் பட வேண்டும்.

தலமையகத்தில் பொறுப்பானவர்கள் இது பற்றிச் சிந்தித்து அமைப்பு ரீதியான நிர்வாகக் கட்டமைப்புக்களை பொருதமானவர்களைக் கொண்டு அமைக்க வேணும்.எதிரியிடம் இருந்தும் நாம் இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.சுயாதீனமாக ஒரு வெறியுடன் புலத்தில் இயங்கிய காலம் இப்போது இல்லை.புலத்தவர்கள் தமது சொந்தத் தேவைகளையே தற்போது முன் நிறுத்திச் செயல் ஆற்றி வருகின்றனர்.ஒரு சிலரே உணர்வோடு வேலை செய்கின்றனர் என்பதே இங்குள்ள யதார்த்தம்.ஆகவே அந்த ஒரு சிலரையும் இணைத்து அமைப்பு ரீதியாக இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றியத்தை எழுப்பாத எழுக தமிழ் (பாகம் 2)

நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளிற்கு வருகின்ற பொழுது சில துணிமணிகளோடும் காலில் வெறும் செருப்போடும் இந்த குளிர்நாடுகளிற்குள் வந்திறங்கினோம். ஆனால் இன்று எங்களின் வளர்ச்சியை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஐரோப்பாவில் வாழும் மற்றைய இனங்களை விட நாங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நன்றாகவே முன்னேறிவிட்டோம். சொந்த வீடுகள், நிறுவனங்கள், பல்கலைக்கழக படிப்பு என்று எவ்வளவோ முன்னேற்றம்.

ஆயினும் இந்த 20 வருடங்களுக்குள் எங்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இங்கே உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தினோமா என்றால் இல்லை என்பதே பதில். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எமது போராட்டம் குறித்து பரப்புரையில் ஈடுபட்டு சில ஐரோப்பிய மக்களை எம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் 20 வருடமாக வாழுகின்ற மூன்னூறாயிரம் தமிழர்கள் எவ்வளவு ஐரோப்பிய மக்களுக்கு எங்கள் போராட்டம் பற்றிய செய்தியை சென்றடைய செய்திருக்கின்றார்கள் என்பதே என்னுடைய கேள்வி. ஐம்பது சிங்களவர்கள் வந்து சாதித்துவிட்டு போவதை எங்களால் ஏன் சாதிக்க முடியவில்லை?

நான் முதலில் கூறியதைப் போல் பணக்கார நாடுகள் தங்களின் நலனுக்காகவே தடை போடுவதால் தமிழர்கள் இங்கே எதற்காக பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்று கேட்கலாம். ஐரோப்பிய நாடுகள் முடிந்தவரை தங்கள் பக்கமே நிற்கும் என்று தெரிந்தும் சிங்கள அரசு கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி எமக்கு எதிராக பரப்புரை செய்கிறது. காரணம் முடிந்தவரை அதிக அழுத்தங்களை தமிழர்களுக்கு வழங்குவதே. வருகின்ற தடைகளே முன்கூட்டியே வரச்செய்வதற்கே. அதே போன்று குறைவான அழுத்தங்கள் வரச்செய்வதற்கும், தடைகளை பிற்போடுவதற்கும், தடைகள் வரும் போது அது நெகிழ்ச்சியாக இருப்பதற்கும் எங்களின் பரப்புரை உதவும்.

வீதியில் சென்று கோசம் போடுவது எந்தவிதத்திலும் நல்ல பரப்புரை ஆகாது. எங்களின் ஊர்வலங்களும் கோசங்களும் பலருக்கு புரிவதேயில்லை. ஆகவே நாங்கள் பேரணிகளை நடத்துமுன் சில வேலைத்திட்டங்களை செயற்படுத்துவோம். எங்கள் வேலைத்திட்டங்களை உயர்மட்டங்களை சென்றடைவது போல் இருக்கவேண்டும். முதலில் நாங்கள் ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும் கட்சிகளின் பொறுப்பாளர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவோம். அந்தந்த நகரத்தந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்துவோம். அவ்வாறே பத்திரிகையாளர்களோடு பேசுவோம். இதில் நாங்கள் வாழும் நாடுகளின் மொழியை அறிந்தவர்கள் முழு மூச்சோடு ஈடுபடவேண்டும். இப்படியே நாங்கள் படிப்படியாக மேல்மட்டத்தை சென்றடைய வேண்டும். இதில் பாதி வெற்றியை நாங்கள் அடைந்தால்கூட அது பேரணிகளை விட மிகப் பெரிய பலனை அளிக்கும். தடை வந்தால்கூட அப்பொழுது எமக்கிருக்கும் தொடர்புகள் எமது வேலைகளைச் செய்ய உதவியாகவிருக்கும். அத்தோடு ஆசிரியர்கள்> மாணவர்கள்> பொதுமக்கள்> இடதுசாரிக்குழுக்கள் என்று எங்கள் பரப்புரை விரிவடைய வேண்டும். அவர்கள் மூலமும் நாம் பல உபயோகமான தொடர்புகளை பெறலாம். இவைகளை செய்துகொண்டே நாங்கள் ஊர்வலங்கள்> பேரணிகளை நடத்தவேண்டும். ஐரோப்பிய மக்களையும் எங்கள் பேரணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் ஓரளவாவது பலன் பெற முடியும.

அன்பர்களே! நான் பேரணிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஊர்வலம் போகாதீர்கள் என்று சொல்லவில்லை. செய்வதை சரியாக செய்யுங்கள் என்றே சொல்கின்றேன்.

உதாரணத்திற்கு நாங்கள் எழுக தமிழ் பேரணியில் செய்யத் தவறியவற்றை பார்ப்போம். ஜேர்மனியை எடுத்துக்கொள்வோம். ஜேர்மனியிலிருந்து ஏழாயிரம் மக்கள் ஒரு பேரணியிலிருந்து கலந்துகொள்ளச் செல்கிறார்கள். ஒவ்வொரு நகரங்களிலிருந்து நூறு> இருநூறு என பேருந்துகளில் புறப்படுகிறார்கள். இது ஜேர்மனியப் பத்திரிகளை பொறுத்துவரை ஒரு செய்தி. ஆனால் நாங்கள் யாருமே பத்திரிகைகளுக்கு அதை அறிவிக்கவில்லை. அறிவித்திருந்தால் அவர்கள் காலையில் வந்து எங்களை பேட்டி எடுத்து தங்கள் பத்திரிகைகளில் ஒரு சிறு பத்தியாவது போட்டிருப்பார்கள். ஒரு நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கில் இன்னொரு நாட்டிற்கு பயணம் போவதென்பது நி;ச்சயமாக பத்திரிகைகளுக்கு ஒரு செய்தி. ஆகக் குறைந்தது நாங்கள் இங்கிருந்து புறப்பட்ட நகரங்களின் பத்திரிகைகளிலாவது இந்த செய்தியை வரச் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அது மட்டுமா? பெல்ஜியத்தின் புருஸ்ஸில் நகரிலும் பேரணியில் எந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களையும் காணவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையென்பது எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட ஒரு தோல்வி. ஐரோப்பிய நாட்டு மொழியை அறி;ந்த என் போன்றவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி. நாட்டு விடுதலைக்காக அல்லும் பகலும் உழைக்கும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட தோல்வி.

ஆகவே இளம் சமுதாயமே! புதிய சிந்தனையோடு வாருங்கள். நிச்சயமாக உங்களிடம் மேலும் சிறந்து யோசனைகள் இருக்கும். இந்த ஐரோப்பிய சமூகத்தை நன்கு அறிந்தவர்கள் நீங்கள். உங்களால் முடியும். நெல்சன் மண்டெலாவை விட பிரபாகரன் உயர்ந்தவர் என்று எமக்கு நாமே சொல்வதில் அர்த்தமில்லை. அந்த ஒப்பற்ற தலைவனை வீதியில் செல்லும் ஐரோப்பியன் வரை அறிமுகப்படுத்துங்கள். ஆனால் நாங்கள் மொழியறியாது இலக்கணப்பிழைகளோடு போட்ட கோசங்களை மொழியறிந்த நீங்களும் அதே இலக்கணப்பிழைகளோடு கோசிப்பதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. தோற்றுப்போன நாங்கள் செய்ததையே நீங்களும் செய்யாதீர்கள். கிளிப்பிள்ளைகளாக இருக்காதீர்கள். வழி காட்டுபவர்களாக இருங்கள். கிளம்புங்கள்.

-சபேசன் (27.10.2005)

நன்றி www.webeelam.com

Link to comment
Share on other sites

சொன்னலும் சொன்னார் அடித்து சொல்லியுள்ளார். புலம் பெயர் நாட்டில் தேசிய விடுதலைக்குகாக பாடும் பரல் இருக்கிறார்கள். நான் அவர்ககைள குறை சொல்ல முயலவில்லை. இவர்களில் அநேகமானவர்கள் மிகவும் விசுவாசத்துடன் வேலை செய்பவர்கள். ஆனால் இவர்களில் சுயநல விருப்பிகளும் இல்லாமல் இல்லை. இதற்கு மிகவும் முன்னுதாரணம் உண்டியலான் ஜெயதேவன். லண்டனில் புலிகளை இயக்கம் தடை செய்த போது இயக்கத்தில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்தவர். ஆனால் இன்று?

உண்டியலான் ஜெயதேவன் போல இன்னும் எத்தினை பேரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சானும் மச்சானும் நடத்துற கூத்துக்குள்ள எதுக்கையா போயத் தலைய விட்டு மூக்கை உடைக்கவேணும். உந்தக் கோயில் காறரைப்பார்த்து வயிறெரியிறத விட்டுப்போட்டு உருப்படியா ஏதாச்சும் செய்யிறதப் பாருங்க. அவையளக் கடவுள் பார்க்கட்டும்.

Link to comment
Share on other sites

ஒரு வருடத்துக்கு முதல் விடுதலைப்புலிகள் ஐ.நா. சபையாலும் உலக வங்கியாலும் ஆசிய அபிவிருத்தி வங்கியாலும் ஒரு ஆட்சி நிருவாகமாக கருதப்பட்டு நன்கு மதிக்கப்பட்டு இருந்ததற்கு கீழ்வரும் செய்தி உதாரணமாக இருக்கிறது.

[*] அன்றைய நிலையில் இருந்து இன்றைய நிலை உருவாக காரணமான மாற்றங்கள் என்ன?

[*] இவை ஏன் சாதகமான விளைவை தரும் வகையில் கையாளப்படவில்லை?

[*] இனிமேலும் இந்த பாதகமான நிலை தொடராமல், மாறாக முன்னர் போன்ற சாதகமான நிலை உருவாக என்ன செய்ய வேண்டும்?

இதோ அந்த உதாரணமான செய்தி.

posted February 08, 2005 08:33 PM

UN's Annan Condemns Killing of Senior Tamil Tiger in Sri Lanka

Feb. 9 (Bloomberg) -- United Nations Secretary General Kofi Annan condemned the killing of a senior member of the Liberation Tigers of Tamil Eelam in Sri Lanka, according to the international body's news service.

E. Kousalyan, head of the Tigers' political division in the Batticaloa-Amparai district of the South Asian island, and three Tamil Tigers members were killed late on Feb. 7, the group said on its Web site. He was the most senior rebel leader to be killed since the government and the Tigers signed a truce three years ago.

The Tigers have been fighting for two decades for a separate homeland in the northeast of the country, the second-worst hit nation in the December Indian Ocean tsunami disaster. Peace talks broke down in 2003. The Sri Lankan army called the killing a violation of the truce and said a breakaway rebel faction may have been responsible.

Annan ``urges all parties to exercise calm and restraint so as to avoid actions that could disrupt the ceasefire agreement,'' the New York-based UN news service said on its Web site yesterday.

The Tigers yesterday canceled a meeting with the World Bank and the Asian Development Bank to discuss tsunami reconstruction, the group's Web site said. Tamil flags flew at half-mast in the northeast of the country to mark the killing.

The group blamed ``paramilitary operatives working with the Sri Lankan armed forces'' for the deaths

தமிழாக்கம்

பதியப்பட்ட நாள் பெப்ருவரி 08 2005

ஐ.நா.வின் அன்னான் உயர்தர விடுதலைப்புலிகளின் தலைவர் சிறிலங்காவில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

பெப்ருவரி 9 (புழும்பெர்க்) ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கோபி அன்னான் உயர்தர விடுதலைப்புலிகளின் தலைவர் சிறிலங்காவில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இ. கௌசல்யன் மட்டக்களப்பு அம்பாறை பகுதியின் அரசியல் பிரிவு தலைவர் இந்த தென்னாசிய தீவில் மற்றும் மூன்று விடுதலைப்புலிகளுடன் சேர்த்து பெப்ருவரி 7ல் கொல்லப்பட்டதாக அவர்களது இணையத்தளம் தெரிவித்துள்ளது. இவரே போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்ட பின் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் அதியுயர் தலைவராவார்.

............................

...........................

அன்னான் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொறுமையாக இருக்குமாறும் போர்நிறுத்தத்தை பாதிக்கும் செயல்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபை இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் நேற்று உலகவங்கியுடனும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் ஆழிப்பேரலையால் உண்டான பாதிப்புகள் மீள்கட்டுமானம் பற்றி நடத்தவிருந்த கலந்துரையாடலை இரத்து செய்துள்ளனர்.

.................................

.................................

சிறிலங்கா அரசின் இராணுவத்துடன் இயங்கும் ஒட்டுப்படை குழுக்களே இந்த கொலைக்கு காரணம் என விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

பேராசிரியர் சொன்னதைதான் நானும் பல இடத்திலை எழுதியும் சொல்லியும் கத்திகொண்டும் இருக்கிறன் ஆனால் ஆர் இங்கை கேக்கினம் பலருக்கு பதவியை விட்டாலே உயிர்போன மாதிரி இங்கு ஒரு மாற்றம் தேவை ஒரு ஆளுமை மற்றும் கண்டிப்பான தலைமை தேவை அப்படி ஒரு தலைமை கி;டுவின் அய்ரோப்பிய வருகையின் போது இருந்தது அதற்காகவும் சேத்துதான் இந்திய அதிகார வர்க்கம் கிட்டுவை அழித்துவிட்டதுஅதற்கு பின்னர் இன்னமும் அய்ரோப்பாவில் சரியான ஒரு தலைமை கிடைக்கவில்லை என்னபதே உண்மை ஆனாலும் இதற்கெல்லாம் யுூட்எல்லாம் கருத்து சொல்ல வேண்டிய நிலைமையை பாத்தாலே எமது நிலைமை எவ்வளவுகேவலமா போயிட்டுது எண்று எல்லாருக்கும் விழங்கும்

Link to comment
Share on other sites

புலத்திலுள்ள மற்றைய நாடுகளில் நடைபெற்றுவரும் தமிழ்த்தேசியத்திற்க்கான செயற்பாடுகள் அவ்வளவாக தெரியாவிடினும், லண்டனில் நடந்தவைகள்/நடப்பவைகள் மூலம் புலத்திலுள்ள மற்றைய நாடுகளிலும் என்ன நடைபெற்றவைகளையும்/நடப்பவைகளையும் ஊகிக்க முடிகிறது.

லண்டனில் தேசியத்திற்கான செயற்பாடுகளின் சிலவற்றை உதாரணத்திற்கு இங்கு தொடராக தர முயல்கிறேன்:

போராட்ட ஆரம்ப காலத்தில் லண்டனில் "புளொட்.ரெலோ.ஈபி.ஆர்.எல்.எப்" கும்பல்களின் செயற்பாடே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை விட ஓங்கி இருந்தது. அந்நிலைமையை வெற்றிகரமாக சில இளையர்கள் உடைத்தெறிந்தார்கள். அக்கால கட்டத்தில்தான் கிட்டண்ணாவும் லண்டன் வந்து சேர்ந்தார். சிதறிக் கிடந்த தேசியத்திற்கான செயற்பாட்டாளர்களை ஒன்று சேர்த்து தேசியத்திற்கான செயற்பாடுகளுக்கு புத்துணர்ச்சியூட்டினார். கிட்டண்ணாவின் ஆளுமை லண்டனிலிருந்து ஐரோப்பிய தேசமெங்கும் பரந்தது. என்ன சாபமோ தெரியவில்லை கிட்டண்ணா ஐரோப்பாவில் இருந்து மட்டுமல்ல எம்மைவிட்டே நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார். கிட்டண்ணா லண்டனில் இருந்த காலம் "புலத்தில் தமிழ்த் தேசியத்திற்க்கான பொற்காலம்"!!!

கிட்டண்ணா சென்றதன் பின் லண்டனில் தமிழ்த் தேசியத்திற்கான செயற்பாடுகளுக்கு சில இடையூறுகள் வந்த போதிலும் "கிட்டண்ணா பாச்சிய இரத்தத்தில்" இருந்த இளையர் படை உறுதியுடன் முகம் கொடுத்தது.

மீண்டும் சிங்களப்படைகள் யாழ்நகரைக் கைப்பற்றியபோது, மீண்டும் சில கூலிகள் ஒரு வானொலியின் துணையுடன் களமிறங்கியது. அக்கூலிக் கும்பல்களின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு உறுதியாகப் பதிலளிப்பதற்காக தமிழ்த்தேசியச் செயற்பாடுகள் லண்டனில் தொடங்கியது. வரலாறு காணாத லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம், தொப்புள் கொடிகளுக்கு உதவ பாரிய நிதி சேகரிப்புக்கள், தேசியத்திற்க்கான பிரச்சாரங்கள், லண்டனில் தேசிய செயற்பாடுகளை ஒருங்கமைக்கவும்/மக்கள் தொடர்பகமாகவும் "ஈழம் இல்லம்" அமைக்கப்பட்டது. இவ்வாறு செயற்பாடுகள் என்று உச்சத்தை அடைந்தது.

ஆனால் .... தொடரும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

ம்ம்ம்.. கணொன், நீங்கள் எழுதி ஒண்டையும் கிளிக்கப் போறதில்லை! உதை பூசாரிகள் பார்த்து மாறவா போகிறார்கள்???? ம்ம்ம்...

உது கிடக்க ... கடந்த வருடம் ஜனவரி மாதம் லண்டனில், சுனாமி அழிவுகளுக்குப் பிறகு வடக்கு/கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்கள் சிங்கள ஆட்சியாளர்களினால் புறக்கணிக்கப்படுவதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் ஓர் ஒன்றுகூடல் "ரவல்கார் சதுக்கத்தில்" ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. நானும் குளிரையும் பொருட்படுத்தாது மனுசி, பிள்ளையையும் இழுத்துக் கொண்டு போயிருந்தேன். நூற்றுக்கணக்கான உணர்வுள்ள எம்மவர்கள் வந்திருந்தார்கள்!! ஒன்றுகூடல் ஆரம்பமாகியது ... அன்றுதான் தமிழின் மேன்மையை பூசாரிகள் உலகிற்கு அறிமுகப்படுத்த முயன்றதை பார்த்துப் புல்லரித்துப் போனேன்!! மேடையில் பேச வந்ததுகள் தமிழில்!!! பாடவந்ததுகள் தமிழில்!!! கவிதை பொழிய வந்ததுகள் தமிழில்!!! .... அய்யோ!!!!!! ...

'உதைத்தானே "ரி.ரி,என், ஐ.பி.சி" இல் கேட்டுக் கொண்டிருக்கிறோமே, உங்கு நடப்பைவைகளை ஆங்கிலத்தில் நடாத்தினால்தானே, எதிர்பார்ப்பது வெளியுலகத்திற்கு தெரியும்! என சிலர் போய் பூசாரிகளைக் கேட்டார்களாம்!! ... வந்ததாம் பூசாரிகளுக்குக் கோபம்""" ... கேட்டவர்கள் வழிய வந்தார்களாம்!!!!' ....

"ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதமாம்" ... இதொன்றே ....

அரோகராவெண்டானாம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ காவல்துறை, நிதித்துறை, மருத்துவத்துறை, உளவுத்துறை, அரசியல்துறை எல்லாம் இருக்கும் போது, ஏன் ஒரு வெளியுறவுத்துறையை அமைத்து புலத்தில் செய்யவேண்டிய வெளியுறவு வேலைகளைச் செய்யக்கூடாது?

பாலா அண்ணையை மட்டும் எல்லாவேலையையும் செய்யச்சொல்லாமல், உலகெங்கும் உள்ள தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்களை ஒன்றுதிரட்டி இயங்கக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனும், அமைப்புகள் செய்வினம் என்று இல்லாமல், எங்களுக்கும் சில கடமைகள் உண்டு. எங்களால் முடிந்தவரை சிலவற்றினை செய்யலாம். எமது வேலைத்தளங்களில், பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், அயலவர்களில் உள்ள தமிழர் அல்லாத இனத்தவர்களுக்கு எமது போராட்டத்தின் உண்மையினைச் சொல்லலாம். புலத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாகச் சென்றோ,மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதமூலமாகவோ எமது போராட்டத்தினத் தெரியப்படுத்தலாம்.எமது போராட்டத்திற்கு எதிரான பொய்ச் செய்திகள் தீய சக்திகளினால் பிரச்சாரங்களினால் தமிழர் அல்லாத உடகங்களில் வருமானால் அந்த ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தலாம். முன்பு பி.பிஸி ரெல்ரெக்ஸில் மடுத்தேவலாயத்தில் விடுதலைப்புலிகள் தாக்கி மக்கள் இறந்தார்கள் என்ற செய்தி வந்தது. பிறகு லண்டன் வாழ் தமிழர்கள் சிலர் தொலைபேசியில் பி.பி.ஸிக்கு தெரியப்படுத்த ரெல்ரெக்ஸில் மடுத்தேவலாயத்தில் விடுதலைப்புலிகள் தாக்கி மக்கள் இறந்த செய்திக்குப்பின் இச்செய்திக்கு பல நேயர்கள் தவறானது என்று தெரிவித்தார்கள் என்ற செய்தியினையும் வெளியிட்டார்கள். தமிழர் அல்லாத ஊடகங்களில் எமக்கு ஆதாரவான செய்திகள் வரும் போது சிங்களவர்களும், எட்டப்பர்களும் அவ்வூடகங்களுக்கு செய்திகள் பிழை என்று தெரியப்படுத்துவது வழக்கம். ஆனால் நாங்கள் இச்செய்திகளுக்கு நன்றி சொல்லுவது குறைவு. எமக்கு ஆதாரவான செய்திகள் வரும்போதும் கட்டாயம் அவ்வூடகங்களுக்கு நன்றியினை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்

Link to comment
Share on other sites

ஓய்வு நிலைப் பேராசிரியர் க.சிவதம்பி அவர்களிற்கு!

கடந்த வாரம் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியில் நீங்கள் புலம் பெயர்ந்த தமிழர் மீது தொடுத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், உங்களது விமர்சனத்தில் உள்ள யதார்த்தங்களை ஆரோக்கியமாக நாம் உள்வாங்குகின்ற அதே வேளை, உங்களது சில வார்த்தைப் பிரயோகங்கள் பற்றியும் அவை கூறும் தவறான செய்தி பற்றியும் உங்களிற்கு உணர்த்தும் நோக்கில் இம்மடல் வரையப்படுகின்றது.

அண்மைக்காலமாக புலம் பெயர்நத தமிழர் பற்றிய இகழ்ச்சிகள் உங்களால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

உங்களது பீஷ்மர் அவதாரம் வாயிலாக தினக்குரலிலும் இதர ஊடகங்களில் இதர அவதாரங்களிலும் நீங்கள் புலம்பெயர்ந்த உங்களின் உறவுகளைக் காய்ந்து வருகின்றீர்கள். சரி உறவுகள் நாம் நமக்குள் மனந்திறந்து கருத்தாடல்கள் மற்றும் விமர்சனங்களை மேற்கொள்வதில் தவறில்லை.

அத்தோடு உரிமை உள்ளவர் தான் உறைக்கும் படி உண்மை கூற முடியும். அந்த வகையில் உங்களது விமர்சனங்களை நாம் மதிப்போடு ஏற்றுக் கொண்டு எமது செயற்பாடுகள் பற்றிய சுய பரிசோதனையில் ஈடுபடுகின்றோம், தேவை ஏற்படுமிடத்து எமது செயற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். எனினும் கருத்துப் பரிமாற்றமானது எப்போதும் ஒரு திசையில் இருப்பது ஆரோக்கியமற்றது என்ற அடிப்படையில் அக்குறையினை நிவர்த்தி செய்ய இதோ எங்களிடம் இருந்து உங்களிற்கு.

....

......

...........

முடிக்கு முன்னர், எனது கருத்துக்களை சீனி பூசாது நேரடியாகக் கூறியுள்ளேன். தங்களைத் தாக்குவதோ புண்படுத்துவதோ எனது நோக்கம் அன்று. தாயகம் உதயமாகும் இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் போறுப்போடு நடந்து கொள்ளல் அவசியம் என்பதனாலும் எமது கருத்துக்கள் செயற்பாடுகள் என்பன எமது தரவுகளைப் பொறுத்தே அமைகின்றன என்பதனாலும் உங்களின் தரவுகளைச் சரி செய்ய இம்மடலினை எழுதியுள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி.

http://www.sooriyan.com/index.php?option=c...id=3067&Itemid=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தவர்களுக்கு (முக்கிய்மாக அவுஸ்ரெலியா) இதைவிட வெறு முக்கியமான வேலை இருக்கப்பா....

ஒன்றூ கிரிக்கட்போட்டி .....இதில் விளையாட்டு வெறு அரசியல் வெறூ என்று எம்மவரும் சிங்களவறும் எவ்வளவு அழகாக ஒற்றூமையாக கூத்தடிப்பார்கள்.ஆகா அது அல்லொ அழ்கு.இருவரும் செர்ந்து தாம் வாழும் நாட்டுக்கு எதிராக துவசம் செய்வார்கள் ஆகா..இதை பார்க்கும் அன்னியர் என்னநினைப்பர்க்ள் அங்கு ஒரு குழுவினர் மட்டும் தான் சன்டை பிடிக்கிறர்கள் என்றூ எனையொர் ஒற்றூமையாக வாழ்வதாக...

இரன்டாவ்து சாய் பஜனை இங்கு சிலசிங்கள்வர் ஆங்கிலத்தில் பேசுவாவர்கள்...

கோவில்கள்,(சன்டைகள்)

Link to comment
Share on other sites

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மின்னஞ்சல்: sg@un.org

உதவியாளரின் மின்னஞ்சல் : eckhard@un.org

உதவியாளாரின் தொலைபேசி: (+1 212) 963 7160

மின்னஞ்சல்: (+1 212) 963-7055, (+1 212) 963-4879,

(+1 212 ) 371-4360

Secretary-General Kofi Annan

United Nations (UN Plazza)

New York, NY 10017

கீழே இருப்பவை ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் மின்னஞ்சல் மற்றும் முகவரிகள்.

Ms. Louise Arbour பிரஞ்சு மொழி பேசுபவர். அந்த மொழியை விரும்புவார். பெரும்பாலான கியுூபெக் மாகாணத்தவர் போல தனிநாட்டு கோரிக்கையை விளங்கிக்கொள்ள கூடியவர். கியுபெக் மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாக விரும்பி வருகிறது. காரணம் பிரஞ்சு மக்களின் உரிமைகள் மதிக்கப்படாமை.

Ms. Louise Arbour

United Nations High Commissioner for Human Rights

ngochr@ohchr.org

LArbour@ohchr.org

Fax: + 41 (0)22 917 9012

Office of the United Nations

High Commissioner for Human Rights

UNOG-OHCHR

1211 Geneva 10, Switzerland

Graham Fox

Independent Expert on minority issues

United Nations High Commission for Human Rights

GFox@ohchr.org

Erik Friberg

Independent Expert on minority issues

United Nations High Commission for Human Rights

efriberg@ohchr.org

Ms. Gay McDougall

Independent Expert on minority issues

Office of the High Commissioner for Human Rights

Palais des Nations

CH-1211 Geneva 10

Fax: + 41 22 917 9006

Switzerland

GMcDougall@ohchr.org

அமெரிக்க அரசின் இலங்கைக்கு பொறுப்பானவரின் மின்னஞ்சல். இவர் கொழும்பு குண்டுவெடிப்புக்கு அறிக்கை விட்டுவிட்டு திரிகோணமலை மக்கள் கொலையை அறியாதவர் போல இருக்கிறார்.

Richard Boucher

Assistant Secretary of State for South and Central Asian Affairs

United States of America

Ninthnet@mail.house.gov

ஐரொப்பிய யுூனியன் இலங்கை பொறுப்பாளர்.

Julian WILSON

DELEGATION OF THE EUROPEAN COMMISSION

mailto@dellka.cec.eu.int

(94-11) 267 88 60

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வு நிலைப் பேராசிரியர் க.சிவதம்பி அவர்களிற்கு!

கடந்த வாரம் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியில் நீங்கள் புலம் பெயர்ந்த தமிழர் மீது தொடுத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், உங்களது விமர்சனத்தில் உள்ள யதார்த்தங்களை ஆரோக்கியமாக நாம் உள்வாங்குகின்ற அதே வேளை, உங்களது சில வார்த்தைப் பிரயோகங்கள் பற்றியும் அவை கூறும் தவறான செய்தி பற்றியும் உங்களிற்கு உணர்த்தும் நோக்கில் இம்மடல் வரையப்படுகின்றது.

அண்மைக்காலமாக புலம் பெயர்நத தமிழர் பற்றிய இகழ்ச்சிகள் உங்களால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

உங்களது பீஷ்மர் அவதாரம் வாயிலாக தினக்குரலிலும் இதர ஊடகங்களில் இதர அவதாரங்களிலும் நீங்கள் புலம்பெயர்ந்த உங்களின் உறவுகளைக் காய்ந்து வருகின்றீர்கள். சரி உறவுகள் நாம் நமக்குள் மனந்திறந்து கருத்தாடல்கள் மற்றும் விமர்சனங்களை மேற்கொள்வதில் தவறில்லை.

அத்தோடு உரிமை உள்ளவர் தான் உறைக்கும் படி உண்மை கூற முடியும். அந்த வகையில் உங்களது விமர்சனங்களை நாம் மதிப்போடு ஏற்றுக் கொண்டு எமது செயற்பாடுகள் பற்றிய சுய பரிசோதனையில் ஈடுபடுகின்றோம், தேவை ஏற்படுமிடத்து எமது செயற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். எனினும் கருத்துப் பரிமாற்றமானது எப்போதும் ஒரு திசையில் இருப்பது ஆரோக்கியமற்றது என்ற அடிப்படையில் அக்குறையினை நிவர்த்தி செய்ய இதோ எங்களிடம் இருந்து உங்களிற்கு.

புலம் பெயர் தமிழரின் தாயக மேம்பாடு பற்றிய செயற்பாடுகள் தொடர்பில் நீங்கள் முன்வைத்த விமர்சனங்களில் பின்வரும் விடயங்களை உங்களது வாதத்திற்கு ஆதாரமாக நீங்கள் வரியிட்டுக் காட்டியுள்ளீர்கள்:

கனடா, இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் வாழ் தமிழரைப் பார்க்கிலும் அவுஸ்திரேலியா வாழ் தமிழர் ஆங்கிலப் புலமையில் மிளிர்கின்றார்கள். கனடா இங்கிலாந்து வாழ் தமிழர் போலல்லாது அவுஸ்திரேலியாவில் உடல் வருத்தி தமிழர் வேலை செய்வதில்லை.

அவுஸ்திரேலியா வாழ் தமிழர்கள் "அடிநிலை வேலை எனினும்" அரச வேலை புரிகின்றார்கள்.

புலம் பெயர்ந்த உறவுகள் கடனெடுத்து ஊரிற்கு உதவுகிறார்கள்.

எத்தனை நல்ல விடயங்களைச் சொன்னோம், இவன் யாரடா பன்னாடை போன்று வெறும் மூன்று விடயங்களை மட்டும் பிடித்துக் கொண்டு நம்மோடு மல்லுக்கட்டுகிறான் என எண்ணாதீர்கள். நான் ஏற்கனவே கூறியது போன்று உங்களது 90 விழுக்காடுகளிற்கு மேற்பட்ட யதார்த்தங்களை நாம் ஆரோக்கியமாக உள்வாங்கியுள்ளோம். அவற்றில் எமக்கு கருத்தொற்றுமை உள்ளமையால் அவை பற்றி விவாதிக்க ஏதுமில்லை. ஆனால் மேற்கூறிய மூன்று விடயங்களும் உங்களது உள்ளார்ந்த மனோநிலையைக் கண்ணாடி போன்று காட்டுவதற்கு உதவுவதாலும் இம்மடலின் நோக்கம் உங்களது உள்ளார்ந்த மனோநிலை பற்றி ஆலசுவது என்பதனாலும் இம்மூன்று விடயங்களையும் இங்கு எடுத்துக் கொள்கின்றேன். தற்போது மேலுள்ள மூன்று கருத்துக்களையும் ஒவ்வொன்றாய் ஆராய்வோம்.

உங்களது கருத்து இலக்கம் ஒன்று பற்றி

முதற்கண், எவ்வித ஆதாரமுமின்றி, கேள்வி ஞானத்தில் இத்தகையதொரு பிரதேசவாதச் சிந்தனையை முன்வைப்பது ஆரோக்கியமற்றது. முதற்கண் தமிழ் துறைப் பேராசிரியராகிய நீங்கள் கொண்டுள்ள ஆங்கில மோகமானது காலனித்துவ காலம் உங்கள் மீது விட்டுச்சென்ற எச்சமாக நாம் கருதவேண்டி உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர் எல்லாம் அறிஞர் என்ற பத்தாம் பசலிக்கருத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தினால் தமது நலன்களிற்காக அவர்களது குடியேற்ற நாடுகளில் அத்து மீறி விதைக்கப்பட்ட ஒன்று. மேற்கு எப்போதுமே தனது கலாச்சார சமூகப் பெறுமதிகளை உலகத்தோர் அனைவரும் ஏற்று அடிபணியச் செய்யும் குள்ளநரி வேலையில் ஈடுபடுவது என்பது நாடு அடிபட்டவர்கள் நன்கு அறியும் ஓரு விடயம். உதாரணத்திற்கு, மாமனிதர் தராக்கி போன்ற உலக பட்டறிவு பெற்ற அறிஞர்கள் இதனை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே முதலில் ஆங்கில மோகத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டு உங்களது கருத்தின் பொய்மையை இங்கு புலப்படுத்துவோம்.

நான் கனடாவாசி என்பதனால் எனது வாதத்திற்குக் கனடாவை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கின்றேன்.

கனடாவின் உத்தியோக மொழிகள் இரண்டு: ஆங்கிலம், பிரஞ்சு. ஒருவர் கனடாவின் எந்தப் பாகத்தில் வாழ்கின்றார் என்பதனைப் பொறுத்து இந்த இரண்டில் ஒரு மொழியில் சம்பாசிக்கும் ஆற்றல், அது பல்கலைக்களக தரத்திலான சம்பாசனையாக இல்லாது போயினும் கூட அம்மொழியிலான சம்பாசனை, அற்றவராக இருப்பின் அவரால் கனடாவில் தொழில் புரிய முடியாது. நம்மவர்கள் இங்கு வேலைசெய்யாத துறையே இல்லை எனலாம். அந்தந்தத் துறையின் நடைமுறைகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஆங்கில புலமை தேவையில்லை எனினும் மொழிப் பரீட்சயம் அவசியம். பத்து மணிநேரம் வேற்று இனத்தவரோடு வேலை செய்யும் நம்மவர்கள் வாய் பொத்தி வேலை செய்வதில்லை. ஏதோ தமக்குத் தெரிந்த வரையில் பொது மொழி ஆங்கிலத்தில் பேசித் தான் தமது வேலைப் பொழுதினை மகிழ்ச்சியாகக் கழிக்கின்றனர். மொழி என்பதன் அடிப்படை நோக்கம் என்ன? கருத்துப் பரிமாற்றம். எனவே இரு மனிதர்கள் தமக்கிடையே கருத்துக்களைப் பரிமாற முடிகின்றது என்றால் அதற்கு மேல் அங்கு புலமையினை ஆராய்வது அனைத்துச் சந்தர்ப்பங்களிற்கும் பொருத்தமாகாது. வேண்டுமாயின் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியர்கள் கூடும் கொக்ரெயில் பாட்டிகளிலும் மொழிப் புலமை எடைபோடப்படலாம். ஆனால் சாதாரண வாழ்விற்கு புலமை என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய்.

தற்போது நீங்கள் நினைக்கலாம். யார் அதை மறுத்தது அது அல்லவே எனது கருத்து. நான் சொன்னதெல்லாம் வெறும் பரீட்சயத்தை மட்டும் ஒரு மொழியில் கொண்டுள்ள ஒருவரால் அம்மொழியில் கருத்தாடலினை மேற்கொள்ள அதாவது Lobby பண்ண முடியாது என்பது தானே என்று. சற்றுப் பொறுங்கள் அங்கு தான் வருகின்றேன்.

மேற்குலக நடப்பு புரிந்தவர்களிற்குத் தெரியும் இங்கு கொள்கை வகுப்பானது மூன்று பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ளது. இம்மூன்று பிரிவினரும் முறையே: அரச அலுவலர் (Bureaucrats), ஊடகத்துறை (Media) மற்றும் அரசியல் வாதிகள் (Politicians) ஆவர். இம்மூன்று பிரிவினரது ஆசீர்வாத்தோடு தான் இங்கு சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஆனால் இம்மூன்று பிரிவினர் மீதும் மிகப்பெரும் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள மிகப்பெரும் பிரிவு பொது மக்கள் (grass roots). எவ்வாறெனின் அரசியல் வாதிகள் வாக்கு என்ற வடிவத்தில் பொது மக்களால் கடிவாளமிடப்படுகின்றனர். அலுவலர்கள் பொது மக்களாக பொதுமக்களோடு வாழ்பவர்கள். ஊடகங்கள் பணம் பண்ணுவது பொதுமக்களிடம். எனவே பொது மக்கள் மேற்கில் பாரிய பலமுள்ள ஒரு பிரிவு. இந்த அடிப்படையில் வெறும் மொழிப் பரீட்சயம் மட்டுமே உள்ள ஓருவரால் கூட இங்கு மிகச் சிறந்த Lobbying செய்ய முடியும்.

உதாரணத்திற்கு ஒரு கொள்கை வகுப்பாளர், ஊடகவியலாளர், அலுவலர், இவர்களிற்கும் நாளாந்த தேவைகள் உள்ளன. உதாரணமாக சாப்பிடுவதற்கு உணவு விடுதிகளிற்குச் செல்வார்கள், துணி சலவை செய்ய Dry Cleaners இடம் செல்வார்கள், எரிபொருள் நிரப்ப அந்நிலையங்களிற்குச் செல்வார்கள். இப்படிப்பல இடங்களில் இன்று நம்மவர்கள் உரிமையாளர்களாக அல்லது முகாமையாளர்களாக அல்லது தொழிலாளர்களாக தினமும் கடமையாற்றுகின்றார்கள். அந்த வகையில் இத்தகைய உயர்மட்டச் சந்திப்புக்கள் நம்மில் பலரிற்கு தினமும் ஏற்படுகின்றது. இதன் வாயிலாக பரீட்சயமும் சில சமயங்களில்

நட்பும் ஏற்படுகின்றன. அத்தகைய ஒரு பரீட்சயத்தின் பின்னர் அத்தகைய ஒரு தமிழர் மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கிலத்திலேனும் எமது தாயக நிலை பற்றிய உண்மை கூறும் போது ஆங்கில புலமை பெற்ற ஆனால் அறிமுகமில்லாத சிங்களத்தின் முகவர்களைக் காட்டிலும் அத்தமிழரின் கருத்து அவ்வலுவலரின் மனதில் பதிகின்றது. இந்நடை முறைக்கு மிகச் சிறந்த உதாரணம் சுனாமி ஏற்பட்ட வேளையில் கனடாவில் நிகழ்ந்த சில பிரமிப்பூட்டும் சம்பவங்கள். அவற்றிற் சில உதாரணங்கள்.

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தை அடுத்துள்ள யோர்க் பிரதேசத்தின் நகரசமை மண்டபம் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கும் உணவு விடுதியில் ஒரு தமிழர் தலை சிறந்த உணவு தயாரிப்பாளராகக் கடைமையாற்றுகின்றார். இவ்விடுதிக்கு உணவருந்த அடிக்கடி செல்லும் யோர்க் பிரதேச நகரபிதா (மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதி) உட்பட்ட பல நகரசபை அலுவலர்கள (Bureaucarats) இத்தமிழரோடு பரீட்சயம் பெற்றுள்ளார்கள். சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த உடனே, அது சிறீலங்காவைத் தாக்கியது என்று அறிந்த உடனே, நகரபிதா உட்பட்ட யோர்க் பிரதேச நகரசபை ஊளியர்கள் அனைவரதும் நினைவில் உடன் வந்தது இந்த தமிழ் உணவு தயாரிப்பாளரது ஞாபகமே.

அந்த வகையில் உடனே அவர்கள் அவரோடு தொடர்பு கொண்டார்கள், அவர் வாயிலாக உண்மை நிலவரத்தை அறிந்தார்கள், அவரது சோகத்தில் பங்கேற்றார்கள் அத்தோடு நிற்காது மிகப் பெரிய ஒரு நிதி சேகரிப்பினை இத்தமிழரது உணவோடு ஏற்பாடு செய்து சுனாமி அனர்த்த நிவாரணத்திற்கு நிதி சேகரித்தார்கள். இந்நிகழ்வானது 'மார்ககம் எக்கனோமிக் அன்ட் சன்' என்ற யோர்க் பிரதேச பத்திரிகையில் முற்பக்கச் செய்தியாக மேற்படி தமிழரது அரைப்பக்க புகைப்படத்தோடு வெளியானது. இங்கே நீங்கள் பார்க்கலாம் எவ்வாறு கொள்கை வகுப்பை மேற்கொளளும் மூன்று பிரிவினரும்(அரசியல் வாதி, அரச அலுவலர், ஊடகம்) ஒரு உணவு தயாரிக்கும் சாதாரண தமிழரால் கருத்தூட்டப்பட்டுள்ளார்கள் என்பதனை.

இது போன்று எத்தனையோ வெள்ளை இனத்தவரது நிறுவனங்கள் அங்கு தொழில் புரியும் தமிழர்களுடைய சோகத்தில் பங்கேற்று சுனாமி நிவாரணத்திற்காய் நிதி சேகரித்தன ஊடகங்களில் தமிழரிற்குச் சாதகமாகப் பேட்டி கொடுத்தன. இது கனேடியத் தமிழரின் தாயக மேம்பாடு தொடர்பான நாளாந்த செயற்பாடு.. சுனாமி மட்டுமல்ல தமிழர் தாயக நிலவரங்களும் இவ்வாறு நமது சக கனேடியர் மத்தியில் அறிவிக்கப்பட்டவண்ணமே உள்ளன.

சரி அதை விட்டு விடுங்கள். உங்களது வகைக்கு வருவோம். தற்போது, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் 15,000 ற்கு மேற்பட்ட தமிழர் மாணவர்கள் கனடாவின் பல்கலைக்களகங்களில் இன்னோரன்ன துறைகளில் கல்வி கற்று வருகின்றார்கள். தாயகத்தின்பால் தீராத காதல் கொண்டுள்ள (இங்கு பிறந்து வளர்ந்த மாணவர்கள் தாயக தாகம் கொண்டுள்ளார்கள் என்றால் அதில் பெற்றோரிற்கும் ஏதோ பங்குண்டு என்பதனை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்) இத்தனை ஆயிரம் தமிழ் மாணவர்களால் உந்தப்பட்டு கனடாவின் பல்கலைக்களக மாணவர் பேரவை (Canadian Federation of Students) என்ற மாபெரும் அமைப்பு எமது தாயகத்தில் தமிழ் மக்கள் மீது அத்து மீறல்கள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் கண்டன அறிக்கை வெளியிட்டு வருகின்றது. அண்மையில் யாழ் பல்கலைக்களக ஆசிரியர் மாணவர்கள் தாக்கப்பட்ட போதும் புங்குடு தீவில் தர்சினி படுகொலை செய்யப்பட்ட போதும் கூட இவ்வமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டது. இது கனேடியத் தமிழரின் தாயக மேம்பாட்டிற்கான செயற்பாடு.

இது மட்டுமல்ல, பொறியியலாளர்களாக, வைத்தியர்களாக, சட்ட வல்லுனர்களாக, கணக்காளர்களாக, பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக, விஞ்ஞானிகளாக, நிறுவனங்களின் அதியுயர் முகாமையாளர்களாக பல்லாயிரந் தமிழர்கள் தொழில் புரிகின்றார்கள். இவர்களது வேலையிடங்களிலும் எமது தாயக நிலவரம் தொடர்பான சரளமான கருத்தாடல்கள் நாளாந்தம் நிகழ்கின்றன. இது கனேடியத் தமிழரின் தாயக மேம்பாடு பற்றிய செயற்பாடு.

எனவே, முதலில் கனடாவாழ் தமிழர்கள் உடலை வருத்தி வேலை செய்யும் பத்தாம் பசலிகள் என்ற உங்களின் காலாவதியான கணிப்பினை மாற்றிக் கொள்ளுங்கள். தரவுகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இத்தனை கருத்தாடல் நிகழ்ந்தும் ஏன் இங்கு தமிழர் தரப்பு தடை செய்யப்பட்டது என்கிறீர்களா?

இதற்கு இரண்டு பதில்கள். ஒன்று இத்தனை காலம் எவ்வாறு இங்கு தடை செய்யப்படாது இருந்தது என உங்களைக் கேட்டுப்பாருங்கள். அதாவது இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பின்னரும், கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் பலத்த பிணைப்பு உள்ள போதிலும், சிங்களம் மில்லியன்களை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்து "சாச்சி அன்ட் சாச்சி" போன்ற உலகப் புகழ்வாய்ந்த வல்லுனர்கள் வாயிலான Lobbying இனைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து கனடாவில் செய்து வருகின்ற போதிலும், லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோர் இங்கு வந்து பொய்யுரைத்துச் சென்ற போதிலும், ஆனந்த சங்கரி அடிக்கடி இங்கு வந்து செல்கின்ற போதிலும், இந்தியாவின் இந்து பத்திரிகை ஆசிரியர் றாம் மற்றும் இலங்கையின் றாதிகா குமாரசாமி மற்றும் நீலன் திருச் செல்வம் போன்றோர் தமிழ் எதிர்ப்புப் பிரச்சாரத்தினை உயர்மட்டங்களில் செய்து வந்திருந்த போதிலும் எவ்வாறு கனடாவில் இத்தனை ஆண்டுகள் தடை வராது இருந்தது என்ற கேள்வியில் உங்களது சிந்தனையைக் குவியுங்கள்...பல விடயங்கள் உங்களிற்குப் புரியத் தொடங்கும்.

இரண்டாவது, உலகம் தெரிந்தவர்களிற்குத் தெரியும், மேற்கின் வெளியுறவுக் கொள்கைகள் தம்மகத்தே கொண்டுள்ள சில சூட்சுமங்கள். ஒரு வரியில் சொல்வதானால் நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம் பாசாங்கு செய்பவரை?

விவாதத்திற்காக ஒரு கேள்வி: நீங்கள் படித்தவர், கொழும்பைத் தளமாகக் கொண்டவர் ஓரளவிற்கு சிங்கள மொழிப் பரீட்சயம் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன், அவ்வாறாயின் ஏன் உங்களால் சிங்கள பேரின வாதத்தினை கருத்தாடல் செய்து தமிழரைத் தாக்காது செய்ய முடியவில்லை? கொழும்பிலே உங்கள் பணி எவ்வாறு உள்ளது. அறிய ஆவலாய் உள்ளோம். 83 கலவரத்தில் கொழும்பில தமிழர்கள் கொழுத்தப்பட்டது தமிழர் கருத்தாடல் செய்யத் தவறியதால் தான் என்றா கூறுகின்றீர்கள்?

தமிழர் தரப்பிற்கு இங்கு வந்த தடையால் நொந்து போயுள்ளோம். எழுந்த மானத்தில் ஆதாரமின்றி வேல் பாய்ச்சாதீர்கள்.

உங்களது இரண்டாவது கருத்துப் பற்றி

அவுஸ்திரேலியா வாழ் புலம் பெயர் தமிழரை பாராட்டுவது போல் ஆங்கிலப் புலமை உடையவர்கள் என்று பாராட்டி விட்டு மறுகணம் எங்கே அவர்கள் உங்களது பாராட்டால் பேர் பெற்று விடுவார்களோ என்பது போல், அவர்கள் அடிநிலை என்றாலும் அரச அலுவலில் இருப்பதாகக் கூறி அவர்களை அடிநிலை ஊழியர்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் நையாண்டி செய்துள்ளீர்கள். மீண்டும் இது உங்களது காலாவலியான தரவுகளைக் காட்டுகின்றது. முதலில் தரவுகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களது மூன்றாவது கருத்துப் பற்றி

இது அப்பட்டமாக புலம் பெயர் உறவுகள் மீது நீங்கள் மேற்கொண்ட Character Assassination.

புலம் பெயர் தமிழரின் வியத்தகு பங்களிப்பால் தாயக உறவுகள் மலைத்துப் போய் மரியாதை செய்யத் தொடங்கிடுவரோ என்று பயந்து அவசரஅவசரமாக அது கடனெடுத்த பணம் என்று சொல்வது போல் உள்ளது உங்களின் பேச்சு. தங்களிற்கு ஒரு சிறிய தரவு. கடன் என்பது மீளளிக்கப்பட வேண்டிய ஒன்று. திருப்பக் கொடுக்கும் தகுதி உடையவனிற்குத் தான் கடன் கிடைக்கும். அத்தகுதியை அடைவதற்கு ஒருவர் சில தகமைகளை வளர்த்துக் கொள்ளல் அவசியம். அது எவ்வளவு அதிக கடன் ஒருவர் பெறலாம் என்பது அவரது தகுதியைப் பொறுத்தது. மேற்கின் பொருளாதாரம் வியத்தகு விந்தைகளைக் கொண்டுள்ளது என்றால் இந்த கடன் பெறும் வசதி அதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

முடிக்கு முன்னர், எனது கருத்துக்களை சீனி பூசாது நேரடியாகக் கூறியுள்ளேன். தங்களைத் தாக்குவதோ புண்படுத்துவதோ எனது நோக்கம் அன்று. தாயகம் உதயமாகும் இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் போறுப்போடு நடந்து கொள்ளல் அவசியம் என்பதனாலும் எமது கருத்துக்கள் செயற்பாடுகள் என்பன எமது தரவுகளைப் பொறுத்தே அமைகின்றன என்பதனாலும் உங்களின் தரவுகளைச் சரி செய்ய இம்மடலினை எழுதியுள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி.

கண்ணன்

மார்க்கம்,

கனடா.

- சூரியன் இணையத்தளம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கண்ணன் அவர்களே!!

ஈழப்போரட்டத்தில் புலத்தமிழரது ஆக்கம் என்பது குறித்தான் சிவத்தம்பி அவர்களின் கரத்துக்கு முழுமையாக உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் சொன்னதில் தப்பிருப்பதாக புலப்படவில்லை.

இன்று அவுஸ்ரேலியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே புலிகள் மீது தடை விடுக்கப்பட்டு எத்தனை வருடம்? இவ்வளவு காலப்பகுதியில் எவராவது அத் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றீர்களா? அல்லது அதற்கு எதிராக எத்தனை பேர் உங்கள் ஆட்சேபனை சொல்லியிருக்கின்றீர்கள்? வெறுமனே தமிழீழ போராட்ட நிதியைக் கொடுத்தால் போதுமானது என்று நினைக்கின்றீர்கள். அதைத் தான் பேராசிரியர் தப்பாகச் சுட்டிக் காட்டுகின்றார்.

அதை நீங்கள் சட்டத்தை காரணம் காட்டி ஒதுக்கிக் கொள்ளவீர்கள். அது தான் உங்களுக்குள்ள இப்போதைய வழி என்பது எமக்குத் தெரியும். அப்படியாயின் இப்போது மோசமாக சிங்கள அரசு வடக்குகிழக்கு பகுதிகளில் தமிழ்மக்களை கொன்று வருகின்றது. இந்த ஒரு மாதத்துக்குள் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை எத்தனை பேர் வெளிநாட்டு தூதரங்களுக்கு சிங்களவரின் அநீதிகளாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். அல்லது அதற்கு எதிரான ஆர்பட்டங்கள் எத்தனை செய்திருக்கின்றீர்கள்? ஒன்றுமே இல்லை. இது அவுஸ்ரேலியா மட்டுமல்ல, எல்லா நாட்டில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

ஆக எம் மக்கள் செய்வது என்னவென்றால், சிங்களவன் வெளிப்படையாக எதுவும் சொன்னால் அதற்கு பதிலாக நமக்குள்ளேயே அடிபட்டுக் கொள்வது தான். உருப்படியானதும் அது மட்டும் தான். சிங்கள அரசாங்கம் பிற்புலத்தில் எத்தனையோ கைங்காரியத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புலிகள் செய்ததாக வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதை எவ்வகையில் நாம் எதிர் கொண்டுள்ளோம்?

நண்பரே, பேராசிரியர் சொன்னதற்கு இவ்வளவு துடிப்புள்ள பதில் வருவது மகிழ்ச்சியே. ஆனால் அந்தத் துடிப்பை ஏன் போராட்டத்துக்கு எழுச்சியாக பயன்படுத்தக் கூடாது. இங்கே புலம்பெயர் தமிழ்மக்களைச் சிறப்புற்ற வகையில் சொன்னவிதம் மகிழ்வைத் தருகின்றது. இத்தனை பெரிய நிலையிலுள்ளவர்கள் கனடாவின் தடை நீக்க எவ்வகையில் பயன்படப் போகின்றார்கள்.

இதற்கு இரண்டு பதில்கள். ஒன்று இத்தனை காலம் எவ்வாறு இங்கு தடை செய்யப்படாது இருந்தது என உங்களைக் கேட்டுப்பாருங்கள். அதாவது இந்தியாஇ ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட பின்னரும்இ கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பில் பலத்த பிணைப்பு உள்ள போதிலும்இ சிங்களம் மில்லியன்களை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்து "சாச்சி அன்ட் சாச்சி" போன்ற உலகப் புகழ்வாய்ந்த வல்லுனர்கள் வாயிலான டுழடிடிலiபெ இனைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து கனடாவில் செய்து வருகின்ற போதிலும்இ லக்ஸ்மன் கதிர்காமர் போன்றோர் இங்கு வந்து பொய்யுரைத்துச் சென்ற போதிலும்இ ஆனந்த சங்கரி அடிக்கடி இங்கு வந்து செல்கின்ற போதிலும்இ இந்தியாவின் இந்து பத்திரிகை ஆசிரியர் றாம் மற்றும் இலங்கையின் றாதிகா குமாரசாமி மற்றும் நீலன் திருச் செல்வம் போன்றோர் தமிழ் எதிர்ப்புப் பிரச்சாரத்தினை உயர்மட்டங்களில் செய்து வந்திருந்த போதிலும் எவ்வாறு கனடாவில் இத்தனை ஆண்டுகள் தடை வராது இருந்தது என்ற கேள்வியில் உங்களது சிந்தனையைக் குவியுங்கள்...பல விடயங்கள் உங்களிற்குப் புரியத் தொடங்கும்.

இந்த வார்த்தைகள் தப்பித்துக் கொள்ளும் விதமாகத் தான் உங்களை அடையாளப்படுத்துகின்றது. எப்போதுமே வெளிவிவகாரக் கொள்கைகள் உடனே மாற்றம் பெறுவதில்லை என்பதை நீங்கள் அறியாது அல்ல. லக்ஸமன் கதிர்காமர், கனடா அரசுடன் கதைத்தவுடன் சடுதியான மாற்றத்தை கனடா அரசு எடுக்கப் போவதில்லை என நீங்கள் தெரிந்திருப்பீர்கள். ஒவ்வொரு எதிராளிகளும் ஒவ்வொரு தடவையும் கொடுக்கும் அழுத்தங்களும், தவறான தகவல்களும் தான் இந்த தடைகளுக்கு தூண்டு கோலக இருக்கும். கனடா இவ்வளவு காலமும் தடையைத் தள்ளிப் போட்டமைக்கு அங்கிருக்கும் தமிழ்மக்கள் காரணமாக இருக்கலாம்.

உலகப் பகழ்பெற்ற வல்லுனர்களை விடுங்கள். பதிலுக்கு நீங்கள் எவ்வகை முயற்சியைச் செய்துள்ளீர்கள்? எங்கள் தரப்பு புூச்சியமாகத் தானே இருக்கின்றது.நான் அறிந்தவரை இன்று வரைக்கும் கனடாவில்.... ஏன் அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமெரிக்க நாடுகளில் விடப்பட்ட தடைகளுக்கு பதிலடியாக எம் மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை முழுமையாகக் காட்டவில்லை. முக்கியமாக போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் தங்களை அவ்வாறு காட்டுவதில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர்.

தாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ளுவான் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானியாவில் காட்டப்பட்ட ஆதரவுக்கும் இப்போது காட்டுகின்ற ஆதரவுக்கும் எவ்வவோ வித்தியாசமாக உள்ளது. மனதில் ஆதரவு நிலை இருந்தாலும் வெளியே காட்ட பலர் பின்நிற்கின்றனர்.

கனடாவில் புலிகள் தடை செய்யப்பட்ட பின்பு எந்தெந்த தமிழ் அமைப்புக்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. யாவரும் மௌனமாக இருப்பின் அரசாங்கங்கள், தடையை ஆமோதிப்பதாகத் தான் கருதுவார்கள்.

உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன். nationalpost உள்ள சிங்களப்பத்திரிகையாளருக்கு

Link to comment
Share on other sites

தூயவன் நல்ல பதில்,

ஆனால் புலத்தில் இப்போது மாறி இருக்கும் நிலமைகள் என்ன?ஏன் இவ்வாறு நடந்தது என்று சற்று ஆளச் சிந்திக்க வேண்டும்.எழுதமாற்றாக ஆளை ,மாறி மாறிக் குற்றம் சாட்டுவதால் ஒரு பயனும் இல்லை.

ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்த உடன் இருந்த கொதிப்பு நிலை இன்று புலத்தவர் மத்தியில் ஆற்றப்பட்டுள்ளது என்பதே இதன் பிரதான காரணம் என்று நினக்கிறேன்.

களத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட விதை இன்று புலத்தில் வித்தாகி செடியாகி மரமாகி விட்டது,இதனால் அது உணர்விளந்து மரத்து விட்டது.செடி மரமாகிய போது நாம் அதை உணர்வுடன் வளர்த்தோமா என்பது முக்கியமான கேள்வி?

உதாரணத்திற்கு புலத்தில் இருக்கும் தமிழ் ஊடகங்களை எடுத்துக் கொள்ளுங்கள் சுனாமி அனர்த்ததின் போது அவை எவ்வாறு நடந்து கொண்டன?அண்மைய நிகழ்வுகளின் போது அவை எவ்வாறு நடந்து கொண்டன?

ஊடகத்தவரைக் கேட்டால் நாம் அவதானிக்கப் படுகிறோம் அதனால் எம்மால் நாம் விரும்புவனவற்றைச் செய்ய முடியாமல் கூற முடியாமல் இருகிறது என்பார்கள்.இந்தக் காரணம் எவ்வளவு தூரத்திற்கு உண்மயானது என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

மேலும் இவன் நான்கு அறைகள் கொண்ட வீட்டை வாங்கி விட்டான் அவன் பி எம் டபுல்யு காரை வாங்கி விட்டான்,எனது மகளின் சாமத்திய வீட்டுக்கு ஆயிரம் பேரைக் கூப்பிட வேணும் என்று மிக முகிய பிரச்சினைகளில் மூழ்கி இருக்கும் புலத் தமிழனுக்கு அங்கு என்ன நடகிறது என்பதை அறியவே நேரம் இல்லை. இதற்கு எதிராகக் குரல் குடுக்க எங்கு நேரம் இருக்கும்?

இளயோர் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை குடுப்பனவாக இருகின்றன,இவர்களையாவது ஊக்கப் படுத்தி செயற்பட முடியும் என்றால் அது குறிப்பிடத்தக்க வெற்றியாக இருக்கும்.ஆனால் விடுவார்களா எங்கள் விமர்சகர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.