Jump to content

பயங்கரமான போரை நோக்கி இலங்கை: அன்ரன் பாலசிங்கம்


Recommended Posts

சிறிலங்கா இராணுவத்தாலும் துணை இராணுவக் குழுவினராலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வருவதால் இலங்கை ஒரு பயங்கரமான போரை நோக்கிச் செல்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் எச்சரித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல்:

வடக்கு-கிழக்கின் நிலைமை மிகவும் மோசமடைந்து சீர்குலைந்துள்ளது. கடந்த டிசம்பர் மற்றும் சனவரியைப் போல் நிழல் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டு மிக மோசமான நிலை உருவாகி உள்ளது.

ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலைகள் மீது துணை இராணுவக் குழுவினரது உதவியுடன் தாக்குதல்கள் தொடங்கிவைக்கப்பட்டன.

சிறிலங்கா அரச படைகளால் கருணா குழுவினருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

திருகோணமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வி.விக்னேஸ்வரனை சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து படுகொலை செய்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.

துணை இராணுவக் குழுவினர் இல்லை என்று தொடர்ந்து மகிந்த ராஜபக்ச கூறிவருன்கிறார். இத்தகைய வெட்கக்கேடான அரசாங்க மறுப்புகள் மூலம் ஜெனீவா உடன்பாடு அர்த்தமற்றதாகிவிட்டது. தமிழ் துணை இராணுவக் குழுக்களை அரசாங்கமே பாதுகாக்கிற போது வன்முறைகள் நிறுத்தப்பட்டு முன்னேற்றகரமான அமைதிச் செயற்பாடுகள் எப்படி மேற்கொள்ள முடியும்?

துணை இராணுவக் குழுவினரது வன்முறைகளும் அவர்கள் தொடர்பிலான அரசாங்கத்தினது செயற்பாடுகளும் அமைதி முயற்சிக்கு பாரிய அச்சுறுத்தல் என்றே நாங்கள் கருதுகின்றோம்.

தமிழர் தாயகப் பகுதிகளில் பழிக்குப் பழிவாங்கும் விதமாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிற மோசமான சூழ்நிலையானது ஒரு பயங்கரமான இனப் போருக்குத்தான் இந்த நாட்டை தள்ளும்.

ஜெனீவாவில் அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் எதைப் பற்றி பேசுவது என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய இரு தரப்பினர் ஜெனீவாவில் பேச்சுக்கள் நடத்தி அதை மதித்து நடக்கவும் தொடர்ந்து கடைபிடிக்கவும் ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இருதரப்பு நம்பிக்கையின்மை, சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன. அமைதி முயற்சிகளில் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் உள்ளது என்ற சந்தேகதம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் துணை இராணுவக் குழுக்கள் விடயத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது. கருணா குழுவை தமிழர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச கணக்கிட்டு வருகின்றார். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இராணுவ வழித் தீர்வை விட்டுக் கொடுக்கவில்லை.

கடும்போக்காளர்களை பாதுகாப்பு பொறுப்புகளில் அவர் நியமித்தார். அமைதி வழித் தீர்வில் நாட்டமில்லாத, நோர்வே அனுசரணையாளர்கள் மீது சந்தேகம் கொள்கின்ற விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் பரப்புரை மேற்கொண்டு பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்ற போக்குடைய இத்தகைய நபர்களின் நியமனமானது மகிந்த ராஜபக்சவின் இராணுவ வழித் தீர்வு நாட்டத்தையே வெளிப்படுத்துகின்றது.

அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் வடக்கு-கிழக்கின் பொருண்மிய அபிவிருத்தி தொடர்பாக விவாதிக்கலாம் என்று சில அமைச்சர்கள் கூறியுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் இத்தகைய யோசனைகள் நகைப்பிற்குரியன. போர் அச்சுறுத்தல் உள்ள நிலைத்தன்மையற்ற சூழ்நிலையில் பொருண்மிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது.

வடக்கு கிழக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் என்று கூறப்படுகிற பிரதேசங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு இழந்து வருகிறது. அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியாமல் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது. அவசரகால சட்டத்தின் மூலமாக தமிழர் தாயக ஆக்கிரமிப்புப் பகுதிகளை அரசாங்க படைகள் நிர்வகித்து வருகின்றன. யாழ்ப்பாணத்திலும் இதர தமிழர் பகுதிகளிலும் சரத் பொன்சேகாவின் கொடுங்கோன்மையான நிர்வாகம் இயங்கி வருகின்றது. இதனால் மக்களின் ஆயுத எழுச்சிக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு தொடர்பில்லாதவை குறித்து ஜெனீவாப் பேச்சுக்களில் பேசவும் அரசாங்கத்தரப்பில் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மகிந்தவின் சிந்தனையில் கற்பனை செய்து பார்க்கக் கூடிய செயற்திட்டங்களுக்கோ கொள்கைகளுக்கோ இடமில்லை.

தமிழ் பேசும் மக்களின் தாயகக் கோட்பாடு, பிரதேச தன்னாட்சி அரசாங்கம் ஆகியவற்றை எதிர்த்து ஒற்றையாட்சி யாப்பை வலியுறுத்துகின்றது.

தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை சிக்கலாகி வன்முறைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தினால்தான் நிலைமையைச் சீர்படுத்த முடியும்.

தற்போதைய பயண ஒழுங்கு பிரச்சனையால் ஏப்ரல் 24 ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறாது. பயண ஒழுங்குப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் போது பேச்சுக்கள் மீண்டும் நடைபெறும் என்றார் அன்ரன் பாலசிங்கம்.

http://www.eelampage.com/?cn=25720

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.