Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரபுலக வசந்தத்தின் அதிர்வுகள் கிழக்கு தேர்தலிலும் தெரிய வேண்டும்: ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரபுலக வசந்தத்தின் அதிர்வுகள் கிழக்கு தேர்தலிலும் தெரிய வேண்டும்: ஹக்கீம்

[size=1]வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012 22:09 [/size]

[size=2]

slmc1(14).jpg

(ரி.லோஹித், ஸரீபா)

"எகிப்து, டியூனிசியா, யேமன் ஆகிய நாடுகளில் ஆரம்பித்திருக்கும் அரபுலகின் வசந்தம் என்கிற எழுச்சி முஸ்லிம் உலகின் பார்வையை திருப்பி விட்டிருக்கிறது. அதன் தாக்கம் முஸ்லிம் உலகம் முழுவதும் அதிர தொடங்;கியுள்ளது.

அந்த அதிர்வுகள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தெரிய வேண்டும்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை பகல் ஏறாவூரில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்டுத்தும் மற்றும் பிரச்சார கூட்டம் ஏறாவூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில், பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், தலைமை வேட்பாளர் நசீர் அகமட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

"அரசு, சர்வதேசம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவற்றிற்கு இதன் எழுச்சியை காண்பிக்க வேண்டும். அந்த செய்தியை சொல்ல வேண்டும். அதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் சிறப்பாக செயற்பட வேண்டும்.

மக்களது முடிவே வெளிப்படையாக தெரிகின்றதாக அமைந்திருந்தது. அரசுடன் இணைந்து போட்டியிடுவது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்ற நிலையிலிருந்து தான் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. கடந்த தேர்தலிலும் இப்படியானதொரு அதிரடி முடிவே எடுக்கப்பட்டிருந்தது. இப்படியானதொரு முடிவை நான் கூட எதிர்பார்க்கவில்லை. ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை செய்வதன் ஊடாக பல விடயங்களை வெளிக்காட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் இறங்கி போராடினோம். இந்த தடவை மக்கள் இறங்கிப் போராட இருக்கிறார்கள். நாங்கள் யாரும் இப்போது களத்தில் இல்லையானாலும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் குழப்பக்காரர்கள் மக்களைக் குழப்புவதற்காக பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள.; பிரச்சாரங்களை செய்கிறார்கள். இவற்றையெல்லாம் முறியடித்து கிழக்கு மண்ணின் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியை பிரித்து விட முடியும் என்ற எண்ணத்தில் செய்யப்படும் பிழையான செயற்பாடுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதனை மக்கள் செய்ய வேண்டும்.

அதற்கான ஆளணியை முஸ்லிம் காங்கிரஸ் என்கிற இயக்கம் சரியான முறையில் செயன்முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தி இந்த காலத்தினைச் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும். மர சின்னத்துக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கின்ற விசித்திரத்தினை இந்த தேர்தலில் காண்பிக்கவுள்ளோம். அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிங்கள மக்களிடமிரந்து முஸ்லிம் காங்கிரஸ் அணியை உருவாக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறோம்.

எங்களுடைய தேர்தல் மேடைகளில் இப்போதும் பிரச்சாரம் செய்கின்றவராக பௌத்த பீடங்களில் ஒன்றான அமரபுர நிக்காயாவின் இரண்டாம் நிலை பௌத்த மதகுரு விளங்குகிறார். அவ்வாறான பௌத்த மதகுருமாரை கொண்டே இந்தப்பள்ளிவாசல்களினுள் பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விளக்கங்களை கொடுக்கவிருக்கிறோம்.

நாங்கள் அரபுலகின் வசந்தத்தின் பலத்தை எங்களுக்கு எதிரான சக்திகளு எதிராகப் பிரயோகிக்க இருக்கிறோம். மிகவும் உறுதியாகவும் இருக்கிறோம். நாங்கள் ஆட்சியை பலவீனப்படுத்துகிற ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தவும் எங்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இத்தேர்தலை பயன்படுத்தவிருக்கிறோம்.

அரசாங்கத்துக்குள் இருக்கின்ற முஸ்லிம்களின் மனச்சாட்சி என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் அவாவுகின்றவைகளாக இருக்கிறோம். அதேநேரம் இது முஸ்லிம் காங்கிரஸுக்கு மட்டுமான தேர்தலல்ல. முழு சமூகத்துக்குமான தேர்தல் என்பதனையும் மறந்துவிட கூடாது" என்றார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் எந்த முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறமாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி, மாவடிச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார காரியாலயம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"கடந்த மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வியூகம் அமைத்து தேர்தல் செய்து மூன்று உறுப்பினர்களை பெற்றது போல் இம்முறை பெறமுடியாது.

அதேபோன்று ஆளும் தரப்புடன் இணைந்து போட்டியிட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான ரீ.எம்.வி.பி கட்சி சார்ந்த மூன்று உறுப்பினர்களை வெள்ள வைப்பதற்கான திட்டத்தினை இம்முறை வகுத்து தேர்தல் பணிகளை செய்கின்றது.

அத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் எந்த முஸ்லிம் வேட்பாளரும் நிச்சயம் பெற முடியாது" என்றார்.

slmc2(13).jpg

slmc5(7).jpg

slmc3(9).jpg

slmc4(7).jpg

slmc6(6).jpg[/size]

நன்றி - தமிழ்மிரர் இணையம்

[size=4]அரபுவசந்தம் அரக்க ஆட்சிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. அந்த அரக்க ஆட்சியில் அங்கம் வகித்துக்கொண்டே தனது மக்களை பேயன் ஆக்குகின்றார்கள் இந்த தலைவர்கள்.[/size]

கக்கீம் இப்படி பேசினால் வடக்கிற்கு வசந்தத்தை [size=4]அன்பளிப்பு செய்த்திருக்கும் காக்கீமின் மகிந்த சித்தாந்த குருவான மகிந்தாவும்[/size][size=4], அதை வடக்கிற்கு [/size]எடுத்து சென்றிருக்கும் [size=4]கக்கீமின் தோழனான பதியுதீனும் கக்கீம் மீது [/size][size=4]கோபித்து கொள்ளபோகிறார்கள்.[/size]

இந்த கூட்டம் முஸ்லீம் மக்களை முட்டாள்களாக்க என்றே கூட்டப்பட்டது.

[size=2]கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் இறங்கி போராடினோம். .......நாங்கள் யாரும் இப்போது களத்தில் இல்லையானாலும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்[/size]

இவர்கள் இப்போ மகிந்தவீட்டில் துடைப்பத்துடன் நிற்கிறார்களா?

[size=2]"எகிப்து, டியூனிசியா, யேமன் ஆகிய நாடுகளில் ஆரம்பித்திருக்கும் அரபுலகின் வசந்தம் என்கிற எழுச்சி முஸ்லிம் உலகின் பார்வையை திருப்பி விட்டிருக்கிறது. அதன் தாக்கம் முஸ்லிம் உலகம் முழுவதும் அதிர தொடங்;கியுள்ளது"[/size]
இது சர்வாதிகாரிகளை வீழ்த்த தோன்றிய அலை. மகிந்தாவை பாதுகாப்பதற்க்காக இல்லை.

[size=2]இதேவேளை, கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் எந்த முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறமாட்டார்கள்[/size]........[size=2]அரசாங்கத்துக்குள் இருக்கின்ற முஸ்லிம்களின் மனச்சாட்சி என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் அவாவுகின்றவைகளாக இருக்கிறோம்.[/size]
இவர்கள் எந்த கட்சியில் இணைந்திருக்கிறார்கள் என்பதை முஸ்லீம் மக்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லையா?

[size=2]"கடந்த மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வியூகம் அமைத்து தேர்தல் செய்து மூன்று உறுப்பினர்களை பெற்றது போல் இம்முறை பெறமுடியாது.

அதேபோன்று ஆளும் தரப்புடன் இணைந்து போட்டியிட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான ரீ.எம்.வி.பி கட்சி சார்ந்த மூன்று உறுப்பினர்களை வெள்ள வைப்பதற்கான திட்டத்தினை இம்முறை வகுத்து தேர்தல் பணிகளை செய்கின்றது.

அத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் எந்த முஸ்லிம் வேட்பாளரும் நிச்சயம் பெற முடியாது" என்றார்[/size]

இதில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே ஒரு புதிர்.

Edited by மல்லையூரான்

[size=2] கக்கீம் கட்சிக்குள்ளும் வெளியிலும் சிலர் தனது பெயரை வைத்து கபடநாடகமாடி மந்திரிப்பதவிகள் பெற முயல்வதாக குற்றம் சாட்டுகிறார். ஆனால் தொடரும் பள்ளிவாசல் இடிப்புகள் பற்றி தேர்தல் நேரம் கருத்து கூறாமல் தப்பித்துக்கொள்கிறார்.

இடிக்கப்படும் பள்ளிவாசல்கள் கடைசி யுத்தகாலத்திலும், யுத்தம் நின்ற போதும் ஆரம்பிக்கப்பட்டவையாகத்தான் இருக்கிறது. இவையை சட்டவிரோதமாக ஆரம்பித்தபோது அரசு வேண்டுமென்றே கண்டும் காணாததுமாக இருந்து விட்டு, இவர்களிடம் தேவையான உதவியை வாங்கி தன்னை நன்றாக ஸ்த்திரப்படுத்திக்கொண்டு, பிக்குகளுக்கு இடிப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது. தேர்தல் நேரம் என்பத்தால் கிழக்கு முஸ்லீம் மந்திரிகள் கருத்து கூறாமல் தவிர்க்கிறார்கள். பதியுதின் போன்ற வடக்கு முஸ்லீம்கள் 30 வருடத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட யாழ்ப்பாண முஸ்லீம் கதைகளை திரும்ப திரும்ப சொல்லி வகுப்புவாதத்தை பற்றி எரியவைத்து தெற்கில் இடிக்கப்படும் பள்ளீவாசல் கதைகளுக்கு மூடி போட்டு மூடி வைத்திருக்கிறார்கள்.[/size]

[size=5] ராஜகிரியவில் தொழுகை நடத்தத் தடை! பள்ளிவாசலை மூடுமாறும் உத்தரவு! பிக்கு தலைமையில் அடாவடி[/size]

ராஜகிரிய – ஒபயசேகரபுரவிலுள்ள ஜாவமியு தாரில் ஈமான் பள்ளிவாசலுக்கு பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற குழுவொன்று அங்கு தொழுகை நடாத்துவதற்குத் தடைவிதித்துள்ளதுடன் பள்ளிவாசலை மூடிவிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு பௌத்த பிக்குகளின் தலைமையில் அங்கு வருகை தந்த குழுவினர் பள்ளிவாசல் முன்னால் கதிரைபோட்டு அமர்ந்து கோஷமெழுப்பி ௭திர்ப்புத் தெரிவித்து அங்கு நடைபெறவிருந்த தராவீஹ் தொழுகைக்கும் தடைவிதித்துள்ளது. பீதியினால் குறிப்பிட்ட பகுதி முஸ்லிம்கள் அன்றுமுதல் தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குழுவினர் தினமும் பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுகிறதா ௭ன்பதை கண்காணித்து வருகின்றனர். கோட்டே மாநகர சபைப் பிரதேசத்துக்குட்பட்ட இப்பள்ளிவாசல் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வக்பு சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரம், தம்புள்ளை, குருநாகல், தெஹிவளை ௭ன்று பள்ளிவாசல்களுக்கு ௭திரான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அரசாங்கத்துடன் கைகோர்த்துக் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மௌனமாக இருக்கின்றமை கவலைக்குரியதாகும்

http://www.pathivu.c...ticle_full.aspx

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.