Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெசோ மாநாடும் - தி.மு.க.,வின் மூன்றாவது அணியும் ..! தேறுமா - தேறாதா..? ஈழதேசம் பார்வையில்...!

Featured Replies

டெசோ மாநாடும் - தி.மு.க.,வின் மூன்றாவது அணியும் ..! தேறுமா - தேறாதா..? ஈழதேசம் பார்வையில்...!

தன் மீது உள்ள தமிழக துரோகி என்ற களங்கத்தை துடைத்துக் கொள்ளவே மு.கருணாநிதி அவர்கள் டெசோ மாநாடு நடத்துகிறார் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நேற்று பாலிமர் தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவித்திருந்தார். உண்மைதான் திரு.தமிழருவி மணியன் சொல்வது. கருணாநிதியின் டெசோ மாநாடு பல காரணங்களுக்காகவே நடத்தப்படுகிறது என்று அறியலாம். முதலில் பதவியில் இல்லை தி.மு.க.கழகம். பதவியில் இல்லாத பொழுது தன் இருப்பை எப்படியாவது நிறுத்திக் கொள்ள பெரும்பாலும் தமிழ் மொழிகளை கையில் எடுத்து விளையாடுவது வழக்கம். தொடர் திராவிடக் கட்சிகளின் ஆட்சியால்,ஆட்சியின் பயனாக அட போங்கப்பா..! நீங்களும் உங்கள் தமிளும், டமில் காரர்களும் என்று வெறுத்து ஒதுங்கிப் போய் விட்டார்கள் திராவிட மக்கள். பார்ப்பனியம் என்று சொன்னார், திராவிடக்கார மக்களோ நாங்கள் என்றோ திராவிடத்தை புறந்தள்ளி பார்ப்பனிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். பிறகு, திராவிடன் வழியே தமிழ்க்காரன் அப்படியே கடைசியில் இந்தியாக்காரன் என்று சொல்லிப்பார்த்தார். அதற்கும் இந்த திராவிட மக்கள் அசைந்து கொடுக்கவில்லை.

ஊழலின் மெகா ஊழலான அலைக்கற்றை விவகாரத்தில் தன் புதல்வி கனிமொழி மற்றும் தனது கழக உடன்பிறப்பு அ.ராசா கைது விவகாரம், முதியவர் மு.க.வை பெரிதும் பாதித்து விட்டன. இந்த முறை கழக ஆட்சியை நிறுவி விடலாம் என்ற நினைப்பில் மண்ணும் விழுந்து விட்டது. போதாக்குறைக்கு திராவிட தலைவி ஜெ.அம்மையார் கழக நிர்வாகிகள் அனைவரையும் நில மோசடி வழக்கில் கைது செய்து சிறையை நிரப்பியுள்ளார். மோசடி என்றால் வழக்கு போட வேண்டியது தானே. சிறையில் அடைப்பதா..? என்று சட்ட பாயிண்டுகளை அள்ளி வீசினார். ஜெ அம்மையாருக்குத் தான் தெரியுமே..? சட்ட பாயிண்டுகள். இல்லையென்றால் மல்லிகா அர்ஜுனா அவர்கள் மீதே வழக்கு போடுவார்களா என்ன..?

இந்திய அரசியலிலே முதன் முறையாக நில மோசடி வழக்கில் கைது செய்யப்படும் கழக உடன் பிறப்புகளுக்காக ஆதரவாக சிறையை நிரப்பும் போராட்டத்தையும் ஆரம்பித்து விட்டாயிற்று. எங்கும் கதை ஆகவில்லை. சுற்றிமுற்றி பார்த்தார். தனது ஆட்சியில் சோறு தண்ணி இல்லாமல், தொழுவங்களில் அடைத்த ஈழத் தமிழர்கள் நினைவுக்கு வர, இவர்களை வைத்து எவ்வாறு அரசியல் செய்யலாம் என்று ஒரு மூன்று நான்கு நாள் நன்றாக யோசித்து, முதல் டெசோ மாநாட்டை நடத்தி எம்.ஜி.ஆர்.அவர்களின் ஈழ அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையைப் போட்டார்.பிறகு அந்த டெசோ மாநாட்டை வைத்தே இந்திய அரசியல் செய்தார். அறுவடை கண்டார். இந்த ஈழ மக்களின் அதாவது தொழுவங்களில் அடைபட்டு கிடக்கும் ஈழத் தமிழர்களை வைத்து இந்திய அரசியலும் திராவிட அரசியலும் ஒரு சேர செய்தால் என்ன என்ற யோசனையின் விளைவே, இந்த இரண்டாவது டெசோ மாநாடு என்று கருதலாமா..?

ஆனால் தனது முதுமையின் காரணமாக, முன்பு போல ஐந்து மணி நேரம் ஆறு மணி நேரம் உழைக்க முடியவில்லை, தனது வாரிசுகள் கட்சியைப் பார்த்து கொள்வார்கள் என்ற திடமான நம்பிக்கையுடன், திரு.மு.க.அவர்களின் பெயரால் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன தினசரி, பிறகு தனது தொலைக்காட்சியில் பொக்கை வாய் கருத்துக்களை கூறிக் கொண்டு இருக்கிறார். மூன்றாவது அணியை உருவாக்குவது என்ற முயற்சியில், காங்கிரஸ் பேரியக்க கட்சியோ, வேக வேகமாக 2 G வழக்கை எடுத்து, வாரம் ஒரு முறை வைத்து, ஆதாரப்பூர்வமான சாட்சியங்களை முன் வைக்கிறது. இந்த மாத இரண்டாவது வாரத்தில் நடைபெற இருக்கும் டெசோ மாநாடு எவ்வாறாக இருக்கும்..? டெசோ மாநாடு நடந்து கொண்டிருக்கும் பொழுது தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்படலாம். இதன் மூலம் இந்த டெசோ மாநாட்டை கண்ணீர் கடலில் மூழ்க வைக்க திட்டம் தீட்டுமா.. காங்கிரஸ் பேரியக்க கட்சி என்றும் கருதலாமா..?

நிலைமை இவ்வாறு இருக்க, டெசோ மாநாடு நடக்க இருக்கும் நேரத்தில், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் முனைவர் குணதாச அமரசேகர இந்தியாவுடன் நட்பை துண்டித்து பாக்குடன் உறவை பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய அரசு இலங்கையை பொருளாதார ரீதியில் கபளீகரம் செய்யப் போவதாகவும், இதை தடுப்பதற்கு இலங்கை அரசு சீனாவுடன் பாக்குடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவை விட இலங்கை அரசு சீனாவுடன் தான் மிக நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என்பதை மறைத்து அறிக்கை வெளியிடுகிறார்.

டெசோ மாநாடு நடக்க இருக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில், இலங்கையின் அட்டைக் கத்தி அமைச்சரோ, தமிழக முதல்வரும் கருணாநிதியும் தென் இந்தியாவில் வாழும் தமிழர்களின் நலன்களை முன்னேற்ற பாடுபட வேண்டும், அதைவிடுத்து இலங்கை தமிழர்கள் குறித்து எல்லாம் கவலைப் பட தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளார் விமல் வீரவன்சே.

டெசோ மாநாடு நடந்து விடுமோ என்று கருதி, வழக்கம் போல ஹெஹலிய ரம்புக்கவெல டெசோ மாநாட்டிற்கு செல்லும் இலங்கை அரசியல்வாதிகளை தேசத் துரோக வழக்கில் கைது செய்து கொடும் சிறையில் அடைக்க வேண்டும் என்கிறார். பிரிவினை மாநாடான டெசோவிற்கு இலங்கையில் இருந்து செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்கிறார்.

வரும் ஆகஸ்ட் 12 - ம் தேதியில் நடைபெறும் இரண்டாவது டெசோ மாநாட்டில், திரு.மு.கருணாநிதி அவர்கள் சொன்ன வட இந்திய தலைவர்கள் மற்றும் உலக மனித உரிமை மற்றும் சிவில் உரிமையாளர்கள், இலங்கை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்று கூடும் பொழுது, இந்த டெசோ மாநாட்டை எப்படி தடுத்து நிறுத்துவது என்று காங்கிரஸ் கட்சி யோசனை செய்வார்களா மாட்டார்களா..? யோசனை செய்யவில்லை என்றால் நாமும் நமது பங்குக்கு ஒரு யோசனையை சொல்லி வைப்போம்.

மாநாடு நடைபெறும் சமயத்தில் இந்தியாவின் மிகப் பெரும் ஊழல் கட்சி இந்த தி.மு.கழகமும், இந்த கழகத்தின் தலைவரும் வாரிசுகளும் தான் என்று கூறி, திகார் சிறையில் சம்பந்தப்பட்டவர்களை அடைத்து விட்டால், வட இந்திய தலைவர்களும், மேற்சொன்ன உலக மனித உரிமை ஆர்வலர்களும் 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்று ஓடி விட மாட்டார்களா என்ன..?

மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்யும் ஒரு மெகா ஊழல் கட்சியுடன் அல்லது அந்த அணியில் அதாவது தி.மு.கழக கூட்டணியில் சேருவார்களா என்ன..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மாயாண்டிக்கருப்பு

டெசோ மாநாடு: விருப்பமே இல்லாமல் ஏற்பாடு செய்யும் திமுக நிர்வாகிகள் - கடுப்பாகிப் போன கருணாநிதி

சென்னை: தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தாலும் எப்போது தமிழீழத் தீர்வை வலியுறுத்தமாட்டோம் என்று அவர் அறிவித்தாரோ அப்போதே திமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதான் டெசோ மாநாட்டுப் பணிகளிலும் தொய்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டெசோ மாநாடு வரும் 12-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. டெசோ தொடர்பான பணிகளை செய்து முடிக்க மாநில நிர்வாகி ஒருவரிடம் கருணாநிதி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். ஆனால் அந்த நிர்வாகியோ, தமிழீழமே தீர்வு இல்லை என்று சொல்கிற தமிழீழ ஆதரவாளர் மாநாட்டுக்கு என்னத்த செய்றது? இந்த கட்சியில்தான் இருக்கனுமா? பேசாம ஊரு பக்கம் போய்விடலாமா? என்ற ரீதியில் குமுற இதே பாணியில் தொலைக்காட்சியில் எட்டிப் பார்க்கும் மற்றொரு மாநில நிர்வாகியும் புலம்பிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

இந்த புலம்பல்களுக்கு இடையே கருணாநிதி கொடுத்த பொறுப்பான சில காரியங்கள் சில அடிகள் நகர்ந்த நிலையில் அப்படியே தொய்வடைந்து போனது. யதேச்சையாக அறிவாலயத்தில் கூப்பிட்டு என்னய்யா எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க... அந்த நிர்வாகியோ பட்டும் படாமல் பதில் சொல்ல கருணாநிதி இதை எதிர்பார்க்கவில்லை... செம கடுப்படைந்தவராக நீ ஒன்னும் அந்த வேலையை செய்ய வேண்டாம்.. நானே பார்க்கிறேன் என்று டோஸ் விட்டிருக்கிறார். பதறிப் போன நிர்வாகியோ, அய்யா.. நானே செய்து முடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் கருணாநிதியின் மனம் ஒப்பவில்லை. இன்னும் என்ன என்ன சொதப்பல் வைட்திருக்கிறார்களோ என்று எண்ணியவாறுதான் இன்று காலை அவரே நேரே மாநாட்டு பந்தலுக்குப் போய் பார்த்துவிட்டு சில ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார். விரக்தி அடைந்த மனிதராக...

http://tamil.oneindia.in/news/2012/08/06/tamilnadu-karunanidhi-upset-with-partymen-on-teso-works-159119.html

  • கருத்துக்கள உறவுகள்

டெசோ மாநாடு வரும் 12-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. டெசோ தொடர்பான பணிகளை செய்து முடிக்க மாநில நிர்வாகி ஒருவரிடம் கருணாநிதி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். ஆனால் அந்த நிர்வாகியோ, தமிழீழமே தீர்வு இல்லை என்று சொல்கிற தமிழீழ ஆதரவாளர் மாநாட்டுக்கு என்னத்த செய்றது? இந்த கட்சியில்தான் இருக்கனுமா? பேசாம ஊரு பக்கம் போய்விடலாமா? என்ற ரீதியில் குமுற இதே பாணியில் தொலைக்காட்சியில் எட்டிப் பார்க்கும் மற்றொரு மாநில நிர்வாகியும் புலம்பிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

இந்த புலம்பல்களுக்கு இடையே கருணாநிதி கொடுத்த பொறுப்பான சில காரியங்கள் சில அடிகள் நகர்ந்த நிலையில் அப்படியே தொய்வடைந்து போனது. யதேச்சையாக அறிவாலயத்தில் கூப்பிட்டு என்னய்யா எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்க... அந்த நிர்வாகியோ பட்டும் படாமல் பதில் சொல்ல கருணாநிதி இதை எதிர்பார்க்கவில்லை... செம கடுப்படைந்தவராக நீ ஒன்னும் அந்த வேலையை செய்ய வேண்டாம்.. நானே பார்க்கிறேன் என்று டோஸ் விட்டிருக்கிறார். பதறிப் போன நிர்வாகியோ, அய்யா.. நானே செய்து முடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் கருணாநிதியின் மனம் ஒப்பவில்லை. இன்னும் என்ன என்ன சொதப்பல் வைட்திருக்கிறார்களோ என்று எண்ணியவாறுதான் இன்று காலை அவரே நேரே மாநாட்டு பந்தலுக்குப் போய் பார்த்துவிட்டு சில ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார். விரக்தி அடைந்த மனிதராக...

பொன்முடி கொஞ்சம் இனத்திற்கு விசுவாசமான மனிதர் தான்... ^_^ ^_^ தமிழில் Phd முடித்திருக்கார் ..( பிளட்டு ஓடும். நம்ம நம்பிக்கைதான்)..கல்லூரி பேராசிரியர் அல்லவோ.. ஆனால் சேர்க்கை சரியில்லையே..? எட்டாங்கிளாஸ் முடித்து இருப்பவரிடம் போய் சேர்ந்தால்..? சேராத இடம் சேர்ந்தால் இப்பிடித்தான் ஆகும் :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.