Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா, சீனா, இந்தியாவுடனான புவிசார் அரசியல் விளையாட்டில் சிறிலங்கா – அமெரிக்க இராஜதந்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, சீனா, இந்தியாவுடனான புவிசார் அரசியல் விளையாட்டில் சிறிலங்கா – அமெரிக்க இராஜதந்திரி [ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 06:17 GMT ] [ கார்வண்ணன் ] Professor%20Patrick%20Mendis.jpgமூலோபாய ரீதியாக சிறிலங்கா எப்போதுமே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்து சமுத்திரத்தின் தற்போதைய நிலைமைகள் இந்தியாவை கவலை கொள்ள வைத்துள்ளது என்றும் பேராசிரியர் பற்றிக் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியும், நேட்டோ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பசுபிக் கட்டளைப் பீடம் ஆகியவற்றின் [size=3]இராணுவப் பேராசிரியருமான பற்றிக் மென்டிஸ், சிறிலங்கா[/size]வைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில், “இந்து சமுத்திரத்தின் புவிசார் அரசியல் மற்றும் சீனா, இந்தியா, அமெரிக்காவுடனான சிறிலங்காவின் உறவுகள்” என்ற தொனிப்பொருளில் பேராசிரியர் மென்டிஸ், உரையாற்றியுள்ளார்.

“சிறிலங்கா எப்போதுமே ஒரு தீவாக இருந்ததில்லை.

அது ஆசியாவில் உள்ள பண்டைய அரசுகளுடனும் ஐரோப்பிய பேரரசுகளுடனும் எப்போதுமே, வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளை கொண்டிருந்தது.

இந்து சமுத்திரத்துக்கான பாதையில், மூலோபாய அமைவிடத்தில் சிறிலங்கா அமைந்திருப்பதால், இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.

யார் எவர் இந்து சமுத்திரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரோ, அவரே ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று அமெரிக்க மூலோபாய வகுப்பாளரான அட்மிரல் அல்பிரெட் மகான் சொல்லியுள்ளார்.

சீன [முஸ்லிம்] அட்மிரல் செங் கி 1405ம் ஆண்டில் இருந்து பலமுறை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு,சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னராகும்.

வர்த்தகம் மூலம் நாடுகளை இணைத்து அமைதியை உருவாக்குவது இப்போது முக்கியமானதொரு கருப்பொருளாகியுள்ளது.

பொருளாதார ரீதியாக பலம்வாய்ந்த சீனா தற்போது, இந்து சமுத்திரத்திலும், தென்சீனக் கடலிலும் அமைதியான முறையில் மூலோபாய ரீதியாக எழுச்சியை கண்டு வருகிறது.

ஒவ்வொரு நாடுமே, தமது தேசிய நலனைக் கருத்தில் கொண்டு செயற்படுகின்றன.

சொந்தப் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட- பல்வேறு தேசிய நலன்கள் குறித்த இருதிசைப் பயன் விளைவு அனைத்துலக உறவுகளின் இயங்குசக்தியின் ஒரு பகுதியாகியுள்ளது.

இந்தச் சூத்திரம் இந்து சமுத்திரத்தில் நடக்கும் புவிசார் அரசியல் நாடகத்தில், அண்டை நாடான இந்தியாவின் முக்கியத்துவத்தை இலகுவாக விளங்கிக் கொள்ள உதவும்.

ஈழப்போருக்குப் பின்னர், சிறிலங்கா அரசாங்கம் தனது தேசிய நலன் சார்ந்து செயற்பட்டதா அல்லது ஆளும் வர்க்கத்தின் சொந்த நலனுக்காக செயற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் சீனா முத்துமாலை மூலோபாயத்தை வகுத்து வருவதால், பெய்ஜிங்குடன் இணைந்த சிறிலங்காவின் புதிய மூலோபாயம் குறித்து புதுடெல்லியில் உள்ள இந்தியத் தலைவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

சீனாவின் இந்த கடற்படைத் திட்டத்தின் கிரீடமாக சிறிலங்கா இருப்பதாகப் புதுடெல்லி் பார்க்கக் கூடும்.

அமெரிக்க - இந்திய குடியியல் அணுசக்தி பிரகடனம் கையெழுத்திடப்பட்டதில் இருந்து இரு நாடுகளும் பரஸ்பர உறவுகளை விருத்தி செய்து வருகின்றன.

அதேவேளை, புதுடெல்லித் தலைவர்கள், இந்தியாவை சுற்றிவளைப்பதற்கு சிறிலங்காவையும் ஏனைய தென்னாசிய நாடுகளையும் சீனா பயன்படுத்தி வருவது குறித்துக் கவலையடைந்துள்ளனர்.

சிறிலங்காவில் சீனத் தலையீடுகளை சமநிலைப்படுத்துவதற்காக இந்தியா இரண்டு அடிப்படை மூலோபாயத் திட்டங்களை கையாண்டது.

அதில் ஒன்று சேது சமுத்திரத் திட்டம். மற்றது திருகோணமலைத் துறைமுகத் திட்டம்.

அதேவேளை அமெரிக்காகவும் சிறிலங்காவும் கையகப்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான சேவைகள் உடன்பாட்டை செய்து கொண்டன.

கோத்தாபய ராஜபக்சவும், றொபேட் ஓ பிளேக்கும் கையெழுத்திட்ட இந்த உடன்பாட்டுக்குப் புறம்பாக, வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு, இருநாடுகளும் வர்த்தக மற்றும் முதலீட்டு வரைபு உடன்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றன.

ஈழப்போருக்குப் பின்னர், சிறிலங்கா தலைவர்கள், தமது அபிவிருத்தி மூலோபாயம் குறித்து மட்டுமன்றி, எல்லோருக்குமான ஜனநாயக சுதந்திரம், மனிதஉரிமைகள் விவகாரங்கள், மக்கள் மயப்படுத்திய தேசிய பொருளாதார வளர்ச்சிக் கொள்கை குறித்தும் மீளச் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.” என்றும் அவர் தனது உரையில் மேலும் கூறியுள்ளார்.

நன்றி - புதினப்பலகை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.