Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நக்கீரன்" கோபாலிடம் பத்து கேள்விகள்..

Featured Replies

nakkeeran_gopal_1.jpg

01. ஜெயலலிதா, உங்களை வீரப்பன் விவகாரத்தில் சம்மந்தப்படுத்தி தூக்கி ஜெயிலில் போட்டதாலும், உங்கள் மீதும் உங்கள் பத்திரிகை ஊழியர்கள் மீதும் பல பொய் வழக்குகளை போட்டதாலும் அன்றில் இருந்து இன்று வரை ஜெயலலிதா கெட்டது நல்லது எது செய்தாலும் அவரை எதிர்கிறீர்களே, பத்திரிகை தர்மத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமே பகைமை பாராட்டாததுதான் என்பது பத்திரிகை உலகின் புலனாய்வு புலி என பாராட்டுப்பெற்ற உங்களுக்கு தெரியாதா..? அல்லது தெரிந்தும் உங்கள் சுய கோவத்துக்கு அடிமைப்பட்டு இருக்குறிர்களா..?

02. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சரமாரியாக உங்கள் மேல் வழக்குகள் பாய்ந்த போது, அப்போது எதிரிகட்சியாக இருந்த கருணாநிதி உங்களை அரவணைத்து காப்பாற்றினார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை கருணாநிதியின் குள்ள நரி வேலைகளை கூடுமானவரை மறைத்தும் அவரை விமர்சிக்காமலும் மறைமுகமாக ஆதரித்தும்(அப்படி நீங்க நம்பும்) உங்களை நம்பும் உங்கள் வாசகர்களை ஏமாத்துறிர்களே இது தப்புண்ணு எப்பவாச்சு உங்களுக்கு தோனி இருக்கா..? அல்லது இதுக்காக எப்பவாது சின்ன வருத்தமாவது பட்டதுண்டா..?

3) நக்கீரனில் உங்களால் எழுதப்பட்டு வரும் " யுத்தம் " தொடரில் சில உண்மைகளும் சில பாராட்ட தக்க விடையங்களும் இருந்தாலும் பெரும்பாலும் அதிகப்படுத்தலும் தனி நபர் விரோதமும் சுய தம்பட்டமும் பெரிதாக தெரிகிறதே ஊருக்கு உபதேசம் செய்யும் உங்களுக்கு இது தெரிய வில்லையா..? மெகா சீரியல் போல் எங்கேங்கோ சுத்தும் தொடர் சமீபத்தில் முடிந்த சட்டமன்ற தேர்தல் நேரம் பாத்து ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தும் அவரை ஒரு அரக்கி போல் சித்தரித்தும் எழுதி தி.மு.க வுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்தீர்களே இதர்க்கு பதில் வடிவேல் மாதிரி ரோட்டு ரோட்டாக சென்று கருணாநிதியை ஆதரிது ஓட்டு கேட்டு இருக்கலாம் இல்லையா.. ஏன் இந்த " நடு நிலையான பத்திரிகையாலன் " என்ற போலி வேசம்..?

04. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று உங்கள் பத்திரிகையில் போடுகிறீர்கள், ஆனால் பத்திரிகையை பார்த்தால் "வேண்டப்பட்டவர் செய்யின் குற்றம் குற்றமில்லை" என்ற எண்ண்ம் அல்லவா வருகிறது, ஒன்றை சொல்லி இன்னொன்றை ஏன் செய்வான் பேசாமல் அதை விடுத்து "வேண்டப்பட்டவர் செய்யின் குற்றம் குற்றமில்லை" என்றே உங்கள் பத்திரிகையில் போடலாமே..?

05. தமிழ் நாட்டில் அத்தனை பத்திரிகைகளும் சத்திய சாயி பாபாவை ஆதரித்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்த வேளையில் திடீரென பாபாவிடம் உண்மை இல்லை எனவும் அவர் விபூதி வரவளைப்பதும் லிங்கம் எடுப்பதும் எல்லாமே பித்தலாட்டம் என்று முன் பக்கத்தில் கவர் ஸ்டோரி வெளியிட்டு திடீர் பரபரப்பை கிளப்பி உங்கள் பத்திரிகையின் விற்பனையை கூட்டினீர்கள், நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும் என்று நான் உட்பட நம்பிய வாசகர்கள் ஏராளம். ஆனால் இப்போது, பாபா இறந்ததும் இப்போது உள்ள நிலமையில் அவரை விமர்சித்து எழுதினால் கல்லா கட்ட முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு அவரை போற்றியிம் புகழ்ந்தும் எழுதுகிறிர்களே.. உண்மையை சொல்லுங்கள் உங்கள் வாசகர்களை பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறிர்கள்..?

06. ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய குற்றவாழியே கருணாநிதியும் அவர் குடும்பமும் தான் இதர்க்கு சாட்சியாக இருக்கு கலைஞர் தொலைக்காட்சி, ஆனால் நீங்கள், உங்களை நடு நிலைவாதி(!)யாகவும் காட்டிகொள்ள வேண்டும் கலைஞரையும் பகைக்க கூடாது இதற்காக ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று ஒன்று நடக்காதது போல் காட்டிவந்து இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதகரமானதை தொடந்து அதர்க்கும் கலைஞர் குடும்பத்துக்கும் சம்மந்தம் இல்லாதது போலவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் எல்லத்தையும் சுருட்டியது ராசா தான் என்பதைப்போல மனசாட்சியே இல்லாமல் எய்தவன் இருக்க அம்பை புடித்துக் கொண்டு இருக்குறீர்களே இதுதான் உங்கள் பத்திரிகை தர்மமா..?

07. ஸ்பெக்ட்ரம் ஊழலில் நீங்கள் அடக்கி வாசிப்பதற்க்கு, சிபிஜ அதிகாரிகளின் அதிரடி சோதனையில் உங்கள் இதழின் இணையாசிரியர் "காமராஜ்" ம் சிக்கியதுதான் காரணமா..? உண்னமையில் நீங்கள் நேர்மையான சிகாமணிதான் என்றால் இதற்க்கு உங்கள் வாசகர்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கலாம் இல்லையா..?

08. ஜெகத் கஸ்பரை புலிகளின் ஆதரவு மீடியாக்களே போட்டுதாக்கின்றது, ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா என்று ஈழத்தமிழர்களே பட்டிமன்றம் நடத்துகிறார்கள். ஆனால் நீங்கள் அவரை வைத்து மறக்க முடியுமா.. தொடர் எழுதி, ஈழ பிரச்சனையை வைத்து எவ்ளோக்கு எவ்ளோ கல்லா கட்ட முடியுமோ கட்டினிர்கள், ஆனால் கஸ்பரோ மறக்க முடியுமா.. தொடரில் ஈழத்துக்காக சிறைச்சாலை சென்று வந்த நெடுமாறன் வைகோ சீமான் போன்றவர்களை "விவச்சாரம்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்ததும் இல்லாமல் இவர்கள்தான் பிரபாகரனை ஆட்டிவெக்கிறார்கள் என்றும், பிரபாகரன் தவறு செய்து இருக்கிறார் என்றும் இவர் எழுதியதை, பிராபாகரனின் தீவிர விசுவாசியான நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்..? ஈழப்போர் நடக்கும் போது பிராபாகரனுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்வு இருப்பதை போல் ஈழம் பற்றி பொய்யான தகவல்களை அவர் வெளியிடும் போது ஈழ ஆதரவு இணையங்கள் எல்லாம் கொதித்து எழுந்தபோதெல்லாம் என்னிடம் ஆதரங்கள் இருக்கிறது இதோ வெளியிடுகிறேன் அதோ வெளியிடுகிறேன் என்று சொல்லி சொல்லி அதை கடைசி வரை வெளியிடவே இல்லையே அந்த ஆதாரங்களை! ஜெகத் கஸ்பர் உங்களிடமாவது காட்டியுள்ளாரா..?

09.பத்திரிகை உலகின் இன்றைய நிலவரப்படி புலனாய்வு இதழ்களிலேயே அதிக பிரதிகள் விற்பனையாவது உங்கள் நக்கீரந்தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, ஆனால் இந்த உயர்வு எப்படி வந்தது உங்கள் தி மு கா வுக்கு ஆதரவான் ஜால்ரா அரசியல் கட்டுரைகளாலா..! இல்லையே, ஒரு மஞ்சள் பத்திரிகைகே உரிய ஆபாசமான எழுத்துக்களுடன் தாங்கி வந்த சினிமா கிசு கிசுக்களும், நடிகைகளின் வாழ்க்கை வரலாறுகளும், நாட்டில் நடக்கும் கள்ள தொடர்வுகளும் உதாரணமாக, சூர்யா-ஜோதிகா- விக்ரமின் முக்கோண காதல், த்ரிஷா -த்ரிஷா அம்மா- விக்ரமின் முக்கோண நட்பு, அண்ணாச்சி-ஜீவஜோதியின்

கள்ளத்தொடர்பு , பிரவுதேவா- நயன்தாராவின் கள்ளக்காதல், நித்தியானந்தா-ரஞ்சிதா கள்ள உறவு போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் வெளியிட்ட ஆபாச செய்திகளால் தானே, உங்கள் மனச்சாட்சிக்கு தெரிந்த இந்த உண்மையை வெளியே யாரும் கேட்டால் ஒத்துக்கொள்ளும் தைரியம் இருக்கா உங்களுக்கு..?

10.இறுதியாக ஒரு கேள்வி..

ஈழத்தின் இறுதி போர் தொடங்கி இன்று வரை ஈழச்செய்திகளை உங்களைப்போல் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகைகளும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது இல்லை, ஈழத்தின் மேல் அக்கறை உள்ள தமிழ் நாட்டு பத்திரிகைகளில் முதன்மையானது நக்கீரன் என்பது உலக தமிழர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆனால் ஈழபடுகொலைக்கு துணைபோன தி மு க மேல் உள்ள உங்கள் பாசம், புலித்தலைவர்களை நம்ப வைத்து நெருக்கடியான கடைசி நேரத்தில் கைவிட்டு துரோகம் செய்த கனிமொழியை என் சினேகிதி என சொல்லிக்கொள்ளும் உங்கள் நட்பு, ஈழ விசயத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசி தமிழ்மக்களால் சந்தேக கண்கலோடு பாக்கப்படும் ஜெகஸ்கஸ்பர் போன்றவர்களை வைத்து தொழில் செய்வது போன்றவை உங்கள் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை வர வைக்க மறுக்கிறது, ஒரு ஈழ தமிழனாக கேக்கிறேன் சொல்லுங்கள்..

உங்களுக்கு எங்கள் மேல் உள்ளது உண்மையான அக்கறையா..? அல்லது இதுவும் உங்கள் பத்திரிகை வியாபார தந்திரங்களில் ஒன்றா..?

http://www.thusyanth.../blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.