Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாக்கு நீரிணை சிவக்கின்றது!!

Featured Replies

[size=3][size=4]TN%2BFISH.jpg[/size]

[size=4]“உயிர்கள் மிக உன்னதமானது ஆனால் தமிழர்களின் உயிர்களுக்கு அல்ல”..என்ற கோட்பாட்டை ஐ.நாவும், இந்தியாவும் அமைதியாகவும், வெளிப்படையாகவும் எப்போதோ சொல்லியாச்சு![/size]

[size=4]தமிழனாக பிறந்ததே தப்பா என்று இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே கேட்டுக்கொள்ளும் கட்டங்கள் தாண்டி இன்று மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.[/size]

[size=4]என் சகோதரன் இறப்பு கண்டு இன்னுமொரு சகோதரன் குரல் கொடுப்பதும், ரௌத்திரம் கொள்வதும்கூட சிலருக்கு இங்கே கேலியாகவும், விளையாட்டாகவும் தெரிகின்றது. என்ன! பேயனுக்கு பெயர்தான் தமிழன் என்று நண்பன் சமுத்திரன் அடிக்கடி எழுதிக்கொள்ளும் வசனங்கள்தான் சாட்டையாக இப்போது எங்களை அடிக்கின்றது.[/size]

[size=4]என் சகோதரன் குருதியில் கடல் நனைந்துகொண்டிருக்கின்றது, மனம் துடித்தாலும், கண்ணீர் வந்தாலும், எழுதுவதற்கு கைகள் துடித்தாலும், எனக்குள் இருக்கின்றது பயம். (நான் இருக்கும் இடம் யாழ்ப்பாணம்).[/size]

[size=4]அதிகமாக ரௌத்திரம் கொண்டதும், தேவையான நேரம் ரௌத்திரம் கொள்ளாமையும்தான் இன்று தமிழனுக்கு கிடைத்திருக்கும் சாபங்களுக்கான காரணங்கள்.[/size]

[size=4]உணர்வுகள் இழப்புக்களைக்கூட அரசியலாக்க முண்டியடிக்கும் கூட்டங்களை, உயிர் பலிபோகும் அந்தக்கடற்பகுதிக்கே கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்.[/size]

[size=4]உங்கள் அரசியல் முறையாக இருந்தால் என் சகோதரன் ஏன் நடுக்கடலில் பலியாகின்றான். உன் குரலில் சக்தியிருந்தால் ஏன் டில்லியின் இருப்பவன் குதவாயால் சிரிக்கின்றான். அரசியலுக்காய் உன்னை அடகுவை.. அதுவும் அரசியல்தான்..ஆனால் ஆறரைககோடி சமுதாயத்தை அடைவுவைக்க யார் உனக்கு அனுமதி தந்தது?[/size]

[size=4]அரபிக்கடல் பக்கம் வேற்றுமானில மீனவர்கள் மீன்பிடிக்கசென்று பாகிஸ்தான் சுட்டிருந்தால் வெறும்வாய்களுக்கு அல்வாவே கிடைத்திருக்கும், சண்டைக்குக்கூட முண்டியிருப்பார்கள். இங்கே போவது தமிழன் உயிரல்லவா! அவ்வளவு கேவலம்தான்!![/size]

[size=4]இதோ ஒரு சம்பவம்.. இடம் வடபழனி. ஒரு சைவ சாப்பாட்டுக்கடை.[/size]

[size=4]ஈழத்ழர்கள் நால்வர் (நான் உட்பட) சென்னை நண்பர்கள் இருவர் என ஆறுபேர் அந்த கடையில் சாப்பாட்டிற்கு ஆடர் கொடுத்துவிட்டு காத்திருந்தோம்.[/size]

[size=4]எமக்கு முன்னமே வந்ததனால் அப்பளம், பாயசம் என்பவற்றையும் வைத்திருந்தார்கள். இரண்டு ஹிந்தி வாலாக்கள் எமக்கு அருகில் வந்திருந்து, தமக்கு ஹிந்தியிலேயே ஆடர் பண்ணி சாப்பாடு கேட்டார்கள்.[/size]

[size=4]அப்பளம் முடிந்திருக்கவேண்டும் அவர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. எம்மையும் எங்கள் சாப்பாட்டையும் பார்த்த அவர்கள், ஏதோ ஹிந்தியால் கத்திவிட்டு, F.....தமிழ் பிளடி என்று அந்த சர்வரை அடிக்கப்போனார்கள்.[/size]

[size=4]எங்களுக்கு சுர்… என்று ஏறிவிட்டது. திடீர் என நாங்கள் எழுந்து சர்வரை விலக்கிவிட்டு, எம்முடன் வந்த நண்பன் அவர்களுடன் ஆங்கிலத்தில் காரசாரமாக ஏசினான்…[/size]

[size=4]“எப்படி நீ..சொல்வாய் F..... தமிழ் பிளடி என்று! உன்ட மாநிலத்தில வந்து ஒரு தமிழன் குரல் உயர்த்தி கதைக்கவே முடியாது இங்க வந்து அந்தளவுக்கு உனக்கு தைரியமா! தமிழ் பிளடிதானே! எங்கே இப்போ கையை வை.. என்றான்.[/size]

[size=4]நாங்கள் அங்கே காரசாரமாக வாதிட்டோம்.[/size]

[size=4]அந்த சர்வரிடம் மன்னிப்பு கேட்காமல் நீங்கள் இங்கிருந்து போகமுடியாது என்றோம். இறுதியில் அவர்கள் பணிந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றனர்.[/size]

[size=4]என்ன கொடுமை என்றால் எங்களுக்கு வந்த வந்தரோசம், ரௌத்திரம் சுற்றிவர இருந்து சாப்பாட்டை கட்டிக்கொண்டிருந்த எந்த தமிழனுக்கு வரவில்லை. ஏன் என்றுகூட கேட்கவில்லை.[/size]

[size=4]இதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் அந்த கடையின் முதலாளி..அவர்கள் சென்றவுடன்… ஏன் சார்..கேவலம் ஒரு சர்வருக்காக அவங்களுடன் சண்டைபோடுறீங்க என்றார்![/size]

[size=4]ரௌத்திரம் கொள்!!! என்று ஒருவர் இப்படி எல்லாம் எம் தமிழ்சமுகம் கண்டவன் வந்தவன் எல்லாம் அடித்துவிட்டப்போகும் கோவில் மணி ஆகிவிடுவான் என்று எண்ணித்தான் சொல்லிவச்சாரோ என்னமோ![/size]

[size=4]எனவே இன்றுவரை தொடர்கதையாக 500 மேலான எம் சகோதர்கள் பிழைப்புக்காக கடலேறி, சட்டவிரோதமான முறையில் உயிர் பலியெடுக்கப்படுகின்றார்கள். இந்த சம்பவம் இத்துடன் முடிவுக்கு வரவேண்டும்.[/size]

[size=4]இன்னும் கடந்து இது ஒரு தொடர்கதையாக செல்லக்கூடாது.[/size]

[size=4]தமிழ்நாட்டு மீனவர்கள் தங்கள் வலையங்களில் சுதந்திரமான தொழில்களுக்கான உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், அது வழங்கப்படமாட்டாது!! எனவே வழங்கப்படபண்ணவேண்டும்.[/size]

[size=4]ஆம்..ரௌத்திரம் கொள்!!![/size]

http://janavin.blogs...og-post_29.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.