Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் டெசோ - வுக்கு போட்டியாக ஜெ.அம்மையாரின் புது அமைப்பு..?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

விரைவில் டெசோ - வுக்கு போட்டியாக ஜெ.அம்மையாரின் புது அமைப்பு..?! ஈழதேசம் செய்தி..!

இன்று தமிழக முதல்வர் ஜெ.அம்மையாரை திரு.தா.பாண்டியன் அவர்கள் ஒரு அவசர சந்திப்பை நிகழ்த்தி விட்டு, வெளியே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் இவ்வாறு கூறினார் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள். இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு புதிய அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டியாயிற்று, திரு.தா.பாண்டியன் அவர்கள் சொன்ன செய்தியில், அ.தி.மு.க., தலைமையில் ஒத்த கருத்துகளை உடைய அமைப்புகள்,கட்சிகள் இவற்றை இணைத்து ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து தமிழக முதல்வர் அவர்களிடம் பேசி உள்ளேன், விரைவில் அதற்கான பணிகளை செய்வோம். வெற்றி பெறுவோம் என்றார் தா.பாண்டியன் அவர்கள்.

டெசோ மாநாடு நடத்தி, அதில் பல தீர்மானங்களை நிறைவேற்றி, இன்று பிரதமர் மண் மோகன் சிங் அவர்களை சந்தித்து, தி.மு.க.,எம்.பி.க்கள் டெசோ தீர்மான நகலை கொடுத்துள்ளார்கள். அப்படியே அன்னை சோனியா அவர்களையும் சந்தித்து டெசோ தீர்மானம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து பேசியுள்ளார்கள். இதற்கிடையே, தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக அனைவரும் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்திப்போம் என்று திரு.விஜயகாந்த் அவர்கள் அழைப்பை ஒன்றை விடுத்துள்ளார்.

ஆக, மீண்டும் சூடு பிடிக்கிறது இலங்கை தமிழர்கள் பிரச்சனை.? திரு.மு.கருணாநிதியின் டெசோ வும், புரட்சி தலைவி ஜெ.அம்மையாரின் புது அமைப்பும் களம் இறங்குகிறது தமிழகத்தில் மற்றும் உலக தமிழர்களிடம் என்று கருதலாம்.

இதன் மூலம் முள்ளு வேலிகளில் அடைக்கப்பட்டு, சொல்லொண்ணா கொடுமைகளை அனுபவித்து வரும், உலக மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி பேசிய, எஞ்சி இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்கள் பயன் பெறுவார்களா..? அதாவது தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவார்களா..? தன் முந்தைய வாழ் நிலைகளுக்கு திரும்புவார்களா..?

அல்லது வழக்கம் போலவே, தி.மு.க., வும் அ.தி.மு.க., வும் லாவணி அரசியல் செய்து, முள்ளு வேலிகளில் அடைக்கப்பட்டிருக்கும், எஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச தங்களது உயிரை பறித்து விடுவதற்கு, மகிந்தா ராஜபக்சேவிற்கு உதவி செய்வார்களா.? என்பதை போக போக தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

மாயாண்டிக்கருப்பு

[size=4]தமிழக கட்சிகள் தமக்கு இலாபம் இல்லாமல் ஈழத்தமிழர் நலன்களில் அக்கறைப்படுமா? எனக்கேட்டால், கடந்த காலத்தை வைத்து பார்க்கும்பொழுது 'இல்லை' என்றே கூறலாம். ஆனால் இன்று இந்த நாடகங்களில் இந்திய மத்திய அரசும் உள்ளது. காரணம் அவர்களை ஈழதமிழர்கள் கூறியது போன்று சிங்களம் ஏமாற்றி விட்டது. எனவே எதோ ஒரு வழியில் மீண்டும் தமது இருப்பை இந்தியா தக்க வைக்க பார்க்கின்றது.[/size]

[size=4]எனவே இதில் ஈழ தமிழர்கள் அவதானமாக நடந்தால் ஒரு அரசிய தீர்வை பெறமுடியும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழக கட்சிகள் தமக்கு இலாபம் இல்லாமல் ஈழத்தமிழர் நலன்களில் அக்கறைப்படுமா? எனக்கேட்டால், கடந்த காலத்தை வைத்து பார்க்கும்பொழுது 'இல்லை' என்றே கூறலாம். ஆனால் இன்று இந்த நாடகங்களில் இந்திய மத்திய அரசும் உள்ளது. காரணம் அவர்களை ஈழதமிழர்கள் கூறியது போன்று சிங்களம் ஏமாற்றி விட்டது. எனவே எதோ ஒரு வழியில் மீண்டும் தமது இருப்பை இந்தியா தக்க வைக்க பார்க்கின்றது.[/size]

[size=4]எனவே இதில் ஈழ தமிழர்கள் அவதானமாக நடந்தால் ஒரு அரசிய தீர்வை பெறமுடியும்.[/size]

30 வருடம் என்று வைத்து கொண்டாலும் வேண்டாம் பெரியாரையே தந்தை செல்வாவை மீட் பண்ணிணாரு என்கிறார்கள்.. அப்ப ஏறகுறைய 50 வருடத்திற்கு மேல.. நீங்க தமிழ்நாட்டு அரசியல அதன் சார்ந்த கிந்தய அரசியல் பழகுறீங்க .. ஆனால் என்ன ஏதும் உங்களுக்கு பிடி படல.. தப்பு அவுனுங்க மேல் கிடையாது .. உங்கட மேலதான்... <_< <_<

"விரைவில் டெசோ - வுக்கு போட்டியாக ஜெ.அம்மையாரின் புது அமைப்பு..?! ஈழதேசம் செய்தி..! "

அப்போ மீண்டும் டுசூம் ..டுசூம் ... தமிழ் நாட்டு அரசியலில் ப்ழுதி பறக்கப் போகின்றதா?

அது சரி யார் வெல்லுவார்கள்....?

ஐய்யோ கொல்லுறானே ..சத்தங்கள் கேட்காதுன்னு நம்புரேன்... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டு திராவிடகட்சிக்களுமே தமது அரசியல் இலாபத்திற்காக ஈழ தமிழரின் பிரச்சனையை பாவித்து வருகின்றார்கள் உண்மையான தீர்வொன்று ஈழ தமிழர்களுக்கு கிடைக்கவேண்டுமானால் திராவிடக்கட்சி இல்லாத சீமானின் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் அதற்காக 2016 வரை காத்திருப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.