Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் / ஈனத் தமிழர்கள்

Featured Replies

ஈழம் - தமிழ்நாட்டினில் இந்த வார்த்தையை தற்போது பயன்படுத்தாத கட்சிகளே இல்லை என்று சொல்லலாம். கட்சிகள் மட்டுமல்ல, நம்மை போன்ற வலைப்பூவும், வலைத்தளங்களும், நாளேடுகளும், தொலைகாட்சி களும் இதனை பயன்படுத்திக் கொண்டுதான் வருகின்றது.

ஆனால் சாதாரண மனிதர்களால் ஈழத்தினில் நடந்த கொடுமைகளை கண்டு பரிதாபப் பட முடியும், அல்லது கண்டனம் தெரிவிக்க முடியும். அதைத் தாண்டி நம்மால் எதையும் சாதிக்க முடியாத நிலைதான் தற்போது உருவாக்கி இருக்கின்றது. தமிழ் நாடு மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த வார்த்தையை ப்பற்றி தினமும் அவர்கள், அவர்கள் பாணியில் அலசிக் கொண்டுதான் வருகின்றார்கள். ஆனால் என்ன பிரயோசனம்? வெறும் பேச்சுக்களால் மட்டுமே, இன்னும் சொல்லப் போனால் என்னையும் சேர்த்து வெறும் எழுத்துக்களால் மட்டுமே அதனை விவரித்துக் கொண்டிருக்கின்றோம். இதுதான் நிசம். தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டத்தின் அளவே கொண்ட "கொலை"லங்கா ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை சீண்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

சரி, இந்த ஈழத் தமிழர்கள் தற்போது என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள்? யாராவது ஒருவர் எங்களை காப்பாற்றுங்களேன் என்று நம்மை நோக்கி கெஞ்சி, ஏங்கி, பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் அது அவங்க நாட்டு பிரச்சினை, அதில் நாம் ஏன் தலையிட வேண்டும்? என்று ஒதுங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் அவர்கள் வரலாறு தெரிந்து கொண்டு பேசுகின்றார்களா? இல்லை தெரியாமல் பேசுகின்றார்களா? என்ற சந்தேகம் வருகின்றது. பிரபாகரன் என்ற மாவீரன் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு காரணமாகி விட்டான் என்ற ஒரே காரணம்தான் அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஈழத் தமிழர்களை மட்டும் அழிக்கவில்லை, இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டு மனிதர்களின் உணர்வுகளையும் குழி தோண்டி புதைத்து கொண்டிருக்கின்றார்கள். அந்த செயலுக்கு இன்று நம்மிடையே இருக்கும் ஒரு சில ஈனத் தமிழர்களும் உடந்தை என்பதை நினைக்கும் போது நெஞ்சு பதறுகின்றது.

தமிழ் நாட்டில் இருக்கும் தனிப்பட்ட மனிதர்களாகிய நீங்களோ அல்லது நாமோ மட்டும் அவர்களுக்கு பாதுகாப்பு உறுதியை கொடுக்க முடியாது. அதற்கு தமிழ் நாட்டை ஆளும் அல்லது அந்த ஆளுகின்ற கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் எதிர்கட்சிகளும் நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்குத்தான் அவர்களை நாம் தேர்ந்தெடுக்கின்றோம். நாம் என்ன விசயத்திற்கு அவர்களை அங்கே உட்கார வைத்தோமே அதை தவிர அனைத்து பண முதலீடுகளிலும் அவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றார்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்சி புரிந்தவர்களுக்கு மத்தியிலும் செல்வாக்கு இருந்தது. அப்போது எதுவும் பேச முடியாதவர்கள் தற்போது ஈழத் தமிழர்களுக்காக பாடுபடுகின்றார்களாம், கட்சத் தீவை மீட்க போராட்டம் செய்யப் போகின்றார்களாம், தற்போது ஆளும் கட்சி எதையுமே செய்ய வில்லையாம். அதற்கும் சேர்த்து போராட்டம் செய்யப் போகின்றார்களாம். என்னடா கதை இது? உங்களிடம் அதிகாரம் இருந்தும் அதை பயன்படுத்தாமல் பணம் சேர்ப்பதில் குறியாய் இருந்துவிட்டு தற்போது குதிப்பதை பார்த்தால் வேடிக்கையாய் இருக்கின்றது. இப்போது கூட தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப் பட்டதற்கு இவர் மத்திய அரசிடம் கோரிக்கைதான் வைக்கின்றார். அந்த கோரிக்கையைத்தான் நாங்கள் பல ஆண்டுகளாக செய்துகொண்டுதானே இருக்கின்றோம். இதை சொல்வதற்கு அவர்கள் வெட்கப் பட வேண்டும். என் இன மக்கள் சாகடிக்கப் படுகின்றார்கள், துன்புறுத்தப் படுகின்றார்கள், நாங்கள் எங்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்கின்றோம் என்று ஒரு வார்த்தை சொல்ல நாதியில்லை. அதை விட்டு விட்டு டெத் மாநாடு, டெத் மாநாடு விளக்க கூட்டம் என்று புதுசு புதுசாக கதை விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அங்கே போய் என்ன பேசப் போகின்றார்கள் தெரியாதா? இந்த அம்மையார் அதை செய்தார், கோட நாடு போய் விட்டார், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, இன்னும் தமிழ்நாடு இருக்கும் வரை நாங்கள் உங்களோடு இருந்து அனைத்தையும், அனைத்து தமிழர்களையும் முடித்து விட்டுத்தான் கிளம்புவோம் என்று மட்டுமே சொல்ல அவரால் முடியும். முதலில் அடுத்த திமுக தலைவர் யார் என்று அவரால் சொல்ல முடியுமா?

உங்கள் ஆட்சியில் ஈழத் தமிழர்களின் நல்வாழ்விற்க்காக, தமிழக மீனவர்களுக்காக என்ன உதவி எல்லாம் செய்தீர்கள், எப்படி எல்லாம் பாதுகாப்பு கொடுத்தீர்கள் என்று பட்டியலிட முடியுமா? அந்த பட்டியலை வெளியிடுங்கள் பார்க்கலாம்? இப்போது வந்து கொண்டு கட்சத்தீவினைப் பற்றி பக்கம் பக்கமாக உரை நிகழ்த்துவது வேடிக்கையாய் இருக்கின்றது. அதை எல்லாம் விட தற்போது கிரானைட் ஊழல் பெரும் பூதமாய் கிளம்பி இருக்கின்றது. இதற்க்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்? இதுவும் அவரது ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து இருக்கின்றதே?

ஒரு வீடியோ காட்சியினைப் பார்த்தேன்..அதில் இறுதியில் திமுக சட்டமன்றத் தலைவரின் பேச்சினை பாருங்கள். உண்மை அவர்களுக்கு எப்படி கசக்கின்றது என்பதை பார்க்கலாம்.

http://minsaaram.blogspot.fr/

[size=4]இனப்பற்றும் உணர்வும் மிக்க தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதை சுட்டி[/size]க்காடும் வரிகள்:

[size=4]

உண்மையில் அவர்கள் வரலாறு தெரிந்து கொண்டு பேசுகின்றார்களா? இல்லை தெரியாமல் பேசுகின்றார்களா? என்ற சந்தேகம் வருகின்றது. பிரபாகரன் என்ற மாவீரன் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு காரணமாகி விட்டான் என்ற ஒரே காரணம்தான் அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். [size=5]அவர்கள் ஈழத் தமிழர்களை மட்டும் அழிக்கவில்லை, இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டு மனிதர்களின் உணர்வுகளையும் குழி தோண்டி புதைத்து கொண்டிருக்கின்றார்கள். [/size]அந்த செயலுக்கு இன்று நம்மிடையே இருக்கும் ஒரு சில ஈனத் தமிழர்களும் உடந்தை என்பதை நினைக்கும் போது நெஞ்சு பதறுகின்றது.[/size]

[size=4][size=5]நாம் என்ன விசயத்திற்கு அவர்களை அங்கே உட்கார வைத்தோமே அதை தவிர அனைத்து பண முதலீடுகளிலும் அவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றார்கள்.[/size]

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.