Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு!

Featured Replies

[size=1]karunanidhi_with_wives_20090608.jpg[/size]

[size=1][size=4]பெருந்தன்மையானவன்… மரியாதை கொடுப்பவன்… சுய மரியாதைக்காரன், எளிமையானவன்… பழிவாங்கும் சிந்தனை இல்லாதவன்… ஏழைகளுக்கு போராடுபவன், கம்யூனிச சிந்தனையாளன்…- இப்படியெல்லாம் தன்னை விளித்துக் கொள்ளும் ஒரு தலைவர் கருணாநிதி. ஆனால், இந்த பண்புகளுக்கு எல்லாம் இவர் சொந்தக்காரர் இல்லை என்பதை [/size][size=4]பல்வேறு கட்டங்களில் நிருபித்தவர்[/size] [size=4]என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய தேசமே உணர்ந்த உண்மை.

தனது இறுதிக்காலத்தில், தமிழ்நாடே கொண்டாட வேண்டிய தலைவராக வலம் வர வேண்டிய இந்த கருணாநிதி, பழிச் சொல்லுக்கும் இழி சொல்லுக்கும் இன்னலாகி இருக்கும் வேளையில், கடந்த வியாழக்கிழமை ஓர் அறிக்கை விட்டு இருக்கிறார். அது வெள்ளிக்கிழமையன்று பத்திரிகைகளில் விவரமாக வெளிவந்திருக்கிறது.

பணம், பதவி, அதிகாரம் ஆகிய அனைத்தும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் மட்டுமே சொந்தம் என்று நினைத்ததன் விளைவால், சரித்திர நாயகர் என்று பெயர் எடுக்காமல் தரித்திர நாயகராக இருப்பது வேதனையை தருகிறது.

சிறந்த நிர்வாகி, ராஜ தந்திரி என்று மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்டவர். அப்படிப்பட்ட மதி நுட்பத்தையும் திறமையும் பெற்றிருந்த கருணாநிதியால், அதை தக்க வைக்க முடியவில்லையே. ஏன்?

நல்ல திறமை… நல்ல அறிவு… நல்ல புத்திக் கூர்மை… நல்ல புலமை என்ற பண்புகளுடன் வன்மம்… பொறாமை… பழிவாங்கும் சிந்தனை… அடுத்தவனை முன்னேற்றவே விடக்கூடாது, குடும்ப பாசம் போன்ற நல்(!?) எண்ணங்களே அவருக்கு மேலோங்கி இருந்தது என்றால், அது மிகையில்லை.

இல்லையென்றால், கடந்த 23ம் தேதி இப்படி ஒரு கேள்வி-பதில் அறிக்கையை விட்டிருப்பாரா? அந்த அறிக்கையில், பழ.நெடுமாறனை செத்து தொலை என்று வசைப்பாடி இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜாவை, உபதேசிக்காதே என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

89 வயது நிரம்பிய ஒரு முதியவர், அதுவும் பொது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்களை சந்தித்தவர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டியவர், தரம் தாழ்ந்து தன்னையும் தான் சார்ந்த கட்சியையும் தினந்தோறும் இழிவு படுத்திக் கொண்டிருக்கிறார்.[/size]

pala_nedumaran_11.jpg[/size]

[size=1][size=4]2009ம் ஆண்டு இலங்கையில் போர் உச்சகட்டமாக நடந்த போது, கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். அப்போது, போர் நிறுத்தம் செய்யக் கோரி, சில மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, ‘இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்” என்று அறிவித்துவிட்டு, உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

அன்று தான் ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்னும் குண்டுகள் அங்கே வீசப்படுவதாக செய்திகள் வருகிறதே என்று மறுநாள் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, “மழைவிட்டும் துவானம் விடவில்லை” என்று சொன்ன போது அவர் தரம் தாழ்ந்தவர் என்று நிருபித்தவர்.

இதைத்தான், பழ.நெடுமாறன் சாடியிருந்தார். ‘கருணாநிதியின் உண்ணாவிரதம் ஒரு கபட நாடகம்” என்று சொல்லி இருந்தார்.

அப்படிப்பட்ட வார்த்தைக்கு, இத்தனை நாள் பொதுவாழ்க்கையிலும் அரசியலிலும் இருந்த கருணாநிதிக்கு வார்த்தையாலோ, வாதத்திறமையாலோ பதிலடி தர முடியாமல் அடி வயிற்றில் இருந்து எழுந்த எரிச்சலையும், மனதில் இருந்த ஆற்றாமையும் காரணமாக அவர் எழுதி… மன்னிக்க கண்டதையும் பேனா மூலமாக கக்கி இருக்கிறார்.

அவர் வெளியிட்ட அறிக்கை இதுதான்…

“மாநில அரசுப் பொறுப்பிலிருந்து தி.மு.க. ஏன் விலகவில்லை என்று சிலர் கேட்கவில்லை. நாங்கள் அப்போதே பதவி விலகி இருந்தால், இலங்கை அரசு போரை நிறுத்தி கொண்டிருக்குமா? ஏற்கனவே இரண்டு முறை ஆட்சிக் கவிழ்ப்பே, இலங்கை தமிழர்களுக்கு நாங்கள் உதவியாக இருந்தோம் என்பதற்காக நடைபெற்றதே, அப்போது என்ன நடைபெற்றுவிட்டது. நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோமே, என்ன நடந்துவிட்டது. எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் எங்களால் என்னென்ன முடியுமோ அவற்றையெல்லாம் செய்தோம் என்பதுதான் உண்மை.

ஆனால், போர் நடைபெற்ற நேரத்தில் நான் எதுவுமே செய்யவில்லை என்று என் மீது புகார் காண்டம் படிக்கும் அந்தக் கூட்டத்திலே உள்ளவர்களை நான் கேட்கிறேன். உங்கள் வாதப்படி நான் தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள். சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே? நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?”

-இப்படி தனது வயிற்றெரிச்சலை கக்கிக் இருக்கிறார்.

அதாவது பழ.நெடுமாறனை செத்து தொலை என்று சாடியிருக்கிறார். சபித்திருக்கிறார்.

பழ.நெடுமாறனை சாடியதைவிட, கொடிய செயலை செய்திருக்கிறார் கருணாநிதி.

அது என்ன தெரியுமா?[/size]

d.raja.jpg[/size]

[size=1][size=4]அந்த அறிக்கையை இன்னொரு முறை கவனமாக படியுங்கள். “ஏற்கனவே இரண்டு முறை ஆட்சி கவிழ்ப்பே; இலங்கைத் தமிழர்களுக்கு நாங்கள் உதவியாக இருந்தோம் என்பதற்காக நடைபெற்றதே” என்று அளந்திருக்கிறார்.

அண்டப்புளுகு, ஆகாச புளுகு, உலக மகா புளுகு என்றால் இதுதான்.

தி.மு.க. ஆட்சி இரண்டு முறை கவிழ்க்கப்பட்டது உண்மைதான். ஒருமுறை 1975ம் ஆண்டு. அது இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது எமர்ஜென்சி காலத்தில் நடந்தது. அடுத்த [/size]ஆட்சி கவிழ்ப்பு 1991ம் ஆண்டு. [size=4]தமிழ்நாட்டில் போராளிக் குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து, பத்மநாபா சுட்டுக் கொன்ற விஷயம் பெரிதாகப் பேசப்பட்டது. ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக நடந்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு. இது ஓரளவு உண்மையும் கூட.

ஆனால், தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு கவிழ்த்ததன் காரணமே வேறு. அந்த நேரத்தில் பிரதமராக இருந்த சந்திரசேகரின் ஆட்சி எப்போது கவிழும் என்ற நிலையில் இருந்தது. அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருமா… விலக்கிக் கொள்ளுமா என்ற நிலையில், காங்கிரஸின் பேச்சை, குறிப்பாக ராஜிவ் காந்தியின் பேச்சை கேட்க ஆரம்பித்தார்.

ராஜிவ் காந்தியால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதிப்படை, தாயகம் திரும்பிய போது, முதல்வர் என்ற முறையில் கருணாநிதி, இந்திய ராணுவத்தினரை விமான நிலையத்திற்கோ, துறைமுகத்திற்கோ சென்று வரவேற்கவில்லை. இது ராஜிவுக்கும் காங்கிரஸூக்கும் பெருத்த அவமானமாக கருதப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் தலைவர் ஜெயலலிதாவும் ராஜிவ் காந்திக்கு கடும் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார். தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதில் இந்தப் பின்னணிகளும் அடக்கம்.

ஆக, இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி நூறு சதவிகிதம் ஆட்சி இழந்தார் என்றால், அவருடைய மனசாட்சியே ஏற்றுக்கொள்ளாது.

இப்படி வரலாற்றை திசைத்திருப்பி, தனக்கு சாதகமாக எழுதிக் கொண்டும் நெஞ்சுக்கு நீதி என்று சொல்லி நீதியை கொலை செய்வதையும் தான் பழ.நெடுமாறன் போன்றவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தனது வரலாற்றை இவர்கள் தகராறுக்கு இழுக்கிறார்களே என்ற ஆத்திரத்தில், அவசரத்தில், கோபத்தில், தாங்கமுடியாத எரிச்சலில் பழ.நெடுமாறனை “நீ சாக வேண்டியதுதானே” என்று சபிக்கிறார். சாடுகிறார். எல்லாரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தானே. வயதான காலத்தில் ஓய்வெடுங்கள் என்று எழுத்தாளர் ஞானி சொன்னாலும், பேச்சாளர் தமிழருவி மணியன் சொன்னாலும் தாங்க முடியாமல் எரிந்து விழுகிறார். ஓய்வு எடுக்கச் சொல்வதை கண்டிக்கும் மனம் படைத்த இவர், இன்னொருவரைப் பார்த்து ’சாவு’ என்று பழிக்கிறார் என்றால், இதை இழிவான செயல் என்று தானே சொல்ல முடியும்.

அடுத்து, “மீனவர் தாக்குதலை கண்டிக்கும் தி.மு.க.,வினர் மத்திய ஆட்சியில் தொடர்வது ஏன்?’ ராஜ்ய சபா எம்.பி.யான் டி.ராஜா கேட்டிருந்தார்.[/size]

tha-pandian-1300.jpg[/size]

[size=1][size=4]இதிலென்ன தவறு. இது மாதிரி கருணாநிதி கேட்டதே இல்லையா? தி.மு.க.வின் மூலமாக எம்.பி.யானவர் ராஜா என்பதால், அவர் தி.மு.க.வை எதிர்த்தே பேசக்கூடாதா?

உடனே, “உலகில் மலிவான ஒன்று உபதேசம்தானே” என்று முழங்கி, “தா.பாண்டியனுக்கு போய் முதலில் உங்கள் ஆலோசனை சொல்லுங்கள். அ.தி.மு.க. ஆட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்த்த போதிலும், ஜெயலலிதா வைத்த இப்தார் விருந்தில் முதல் ஆளாக போய் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாரே தா.பாண்டியன்” என்று சொல்லிவிட்டு, “மத்திய ஆட்சியில் தி.மு.க. தொடர்வதா… இல்லையா என்பதை பற்றி இந்த ராஜாவின் யோசனையை நாங்கள் யாரும் கேட்கவில்லை” என்று பாய்ந்து பிராண்டி இருக்கிறார்.

இதுதான் பெருந்தன்மையா? இதுதான் மரியாதையா? புளுகுவது... புலம்புவது… குடும்பத்தை கட்டிக்காப்பது… இந்த மூன்றில் உங்களை மிஞ்ச ஆளேயில்லை.

பெரியாருடன் பழகி, அவரை விட புகழ் பெற்றார் அண்ணா.

பெரியார், அண்ணாவுடன் பழகிய இவர் அவர்களை விட புகழ் பெற வேண்டும் என்று நினைத்திருந்தால், குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டு வந்து ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கி சின்னாபின்னாமாகி இருப்பாரா?

தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச புகழையும் மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டு செல்வதுதான் அவரது லட்சியம் என்றால், அதை யாரால் தடுக்க முடியும்?[/size][/size]

[size=1][size=2]நன்றி - தமிழ்லீடர்[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.