Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை சனநாயக நாடக கொள்ள முடியுமா..? அந்நாட்டுக்கு போய்வரலாமா..?

Featured Replies

[size=4]சட்டமும் சனநாயகமும் [/size]

[size=3][size=4]August 24, 2012[/size][/size]

[size=2][size=4]சனநாயகத்தின் உண்மை வெளிப்பாடு சுதந்திரம் உரிமை சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது நாடுகள்தோறும் அப்படி இருக்கையில் சனநாயகம் உள்ளதாக சொல்லப்படுவதை முழுதாக நம்ப முடியுமா?[/size][/size]

[size=2][size=4]தமக்கு வேண்டாதவற்றை சட்டம் போட்டு தடை செய்துவிட்டு மிகுதி உள்ளதே சனநாயகம் என்று சொல்லுவது சனநாயகத்தின் பெயரில் நடத்தும் சர்வாதிகாரமே என்றால்மறுப்பவர் உண்டா?[/size][/size]

[size=2][size=4]பாதிக்கப்படுவோரின் போராட்டங்களை சனநாயக வழியில் சந்திக்காது படைகளை ஏவி பாதிக்கப்பட்டோரை விரட்டுவது அடிப்பது சிறையிலடைப்பது கொலைசெய்வது போன்ற சர்வாதிகார வழியில் அரசு நடந்து கொண்டுவிட்டு நமது அரசு சனநாயக அரசு என்று சொல்லுவது எங்ஙனம் ?[/size][/size]

[size=2][size=4]இனங்களை அடக்கியொடுக்கி பிறிதோரினம் ஆட்சிசெய்வது சனநாயகமாகுமா ?[/size][/size]

[size=2][size=4]அரசியல் நாகரிகம் கல்வியறிவு பண்பாடு கற்றுத் தேறிய ஆட்சிப்பீடத்தின் பெரும் புள்ளிகள் அறிவியல் நோக்கோடு சமதர்ம கண்ணோட்டத்தோடு கண்ணோடாது தமது சுயநலம் சார்பான வெற்றிக்கு பொய் பேசுவது…[/size][/size]

[size=2][size=4]அதிகாரம் இல்லாத இனக்குழுக்களை அழிப்பது…[/size][/size]

[size=2][size=4]அவர்கள் தம் மண்ணை அபகரிப்பது..[/size][/size]

[size=2][size=4]அடாவடிகள் செய்வது அறிவியலும் பொருளியலும் முன்னேறிவிட்டதாக சொல்லும் இக்காலத்தே முறைதானா ?[/size][/size]

[size=2][size=4]அரசியல் என்பது வெறும் சூழ்ச்சிகள் மட்டும் செய்து நாடு முன்னேறுவதுதானா அப்படியாயின் தர்மம்

என்ற ஒன்று ஆள்வோர் நடவடிக்கைகளில் இருக்கக்கூடாதா..?[/size][/size]

[size=2][size=4]பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உரிமைகளை வேண்டுவது கொலைக் குற்றமாகுமா..?[/size][/size]

[size=2][size=4]கைகூப்பி அமைதியாய் உரிமையினை கேட்டார்கள் பயனில்லாது போனது´…[/size][/size]

[size=2][size=4]ஆயுதத்தால் அப்பாவிகளை சுட்டு கொன்ற பொழுதும் சனநாயகம் கொண்ட நாடாகவே இருந்தது..[/size][/size]

[size=2][size=4]பிறகு ஆயுதப்போராட்டம் அடக்கப்படுகையில் பல்லாயிரம் அப்பாவிகளை கொன்று வீரநடை போட்ட பின்பும் சனநாயக நாடு என்றே உரைக்கப்படுகின்றது..[/size][/size]

[size=2][size=4]ஆனால் பாதிக்கப்பட்டோர் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பாளர்களினால் நிறைந்து காணப்படுகின்றது..[/size][/size]

[size=2][size=4]நிலங்கள் அத்துமீறி பகல் கொள்ளையடிக்கப்படுகின்றது சனநாயகம் என்று சொல்லப்படுகின்றது..[/size][/size]

[size=2][size=4]உலகும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.[/size][/size]

[size=2][size=4]பாதிக்கப்பட்டோரின் பூமிக்கு காலகாலமாய் அழைக்கப்படும் பெயரும் சட்டம் போட்டு தடை செய்யப்படவுள்ளது என செய்திகள் கசிகின்றது.[/size][/size]

[size=2][size=4]அப்பொழுதும் சனநாயக நாடே ..[/size][/size]

[size=2][size=4]மூச்சுவிடும் காற்றும் படைகளின் உடைகளில் பட்டே போய்வரவேண்டும் என்று சட்டம் வந்தாலும் அதிசயமிருக்காது அந்தளவுக்கு இறைக்கப்பட்டிருக்கின்றது பட்டாளம்..[/size][/size]

[size=2][size=4]பாதிக்கப்பட்டோர் பூமியெங்கும் எத்தனை அடக்குதல்கள் சட்டத்தின் பெயரால் தன்னிச்சைப்படி[/size][/size]

மேற்கொண்டாலூம் சனநாயக அரசே..

[size=2][size=4]சமத்துவமும் நீதியும் மறுக்கப்படும் பொழுது பிரிவினை ஏற்படும் வலிமை குன்றிய இனத்தின்

போராட்டங்கள் நசுக்கப்படும் சனநாயகம் சாகடிக்கப்படும்..[/size][/size]

[size=2][size=4]ஆனால் அப்பொழுதும் சனநாயக நாடென்றே வழங்கப்படும்..[/size][/size]

[size=2][size=4]சூழ்ச்சிக்காரர்கள் வாழும் நாடு – கடத்தல் சித்திரவதை பாலியல் வல்லுறவு கொலை அத்தனையும் அரச படைகளினால் மேற்கொள்ளப்படும்.[/size][/size]

[size=2][size=4]நாட்டை சனநாயக நாடக கொள்ள முடியுமா..? அந்நாட்டுக்கு போய்வரலாமா..?[/size][/size]

[size=2][size=4]பெரும் திட்டத்துடனே இம்முறை வெளிநாடுவாழ் மக்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டது சிரித்தபடியே கூனிக்குறுகி போய்வந்திருக்கிரார்கள் மக்கள்… இன்னும் போய்க்கொண்டுமிருக்கின்றார்கள்..[/size][/size]

[size=2][size=4]கொலைகாரர்கள் உலக நீதிமன்றினால் குற்றவாளியாக காணும் பொழுது போய்வந்தோரை

காட்டி அங்கு சனநாயகம் இருக்கின்றது என்று சொல்லி தப்பித்துக்கொள்ள வழியுண்டாகும் என்பதனை [/size][/size]

[size=2][size=4]அறிவார்களா ..?[/size][/size]

[size=2][size=4]சனநாயகம் என்னும் நேர்மையான பொது நெறி சூழ்ச்சிக்காரர்களிடம் சிக்கி குற்றுயிருடன் சுவாசிக்கின்றது.[/size][/size]

[size=2]----------------------------[/size]

[size=2][size=4]எண்ணம்

எழுத்து

ம.இரமேசு[/size][/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.