Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணி சேராமல் இருப்பதே இலங்கைக்கு நன்மை

Featured Replies

[size=4]நேற்று சண்டே ரைம்ஸ் எழுதியிருந்த ஆசிரிய தலையங்கம் தமிழில் தரப்படுகின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாவில் கலந்துகொண்டு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனுக்குச் சென்றிருந்தார். அதையடுத்து அவர் முகத்தில் அறைந்தது போல் பிரிட்டிஷ் பிரஜைகளை இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று அந்த அரசு ஆலோசனை வழங்கும் அறிவித்தல் வந்தது.[/size]

[size=2]

[size=4]அணி சேரா நாடுகள் (நாம்) அமைப்பானது உச்சி மாநாடுகள் நடக்கும் காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் எதுவித சலசலப்பையும் காட்டிக் கொள்வதைக் காணமுடிவதில்லை. [/size][/size]

[size=2]

[size=4]அவ்வாறுதான் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இப்பொழுது அதன் பிந்திய உச்சிமாநாடு நடந்து முடிந்துள்ளது. ஐ.நா. நிறுவனத்துக்கு அடுத்த இரண்டாவது பெரிய நிறுவனமான இது உச்சி மாநாடுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் என்னதான் செய்கிறதோ யாருக்கும் தெரியாது. இந்த முறை "நாம்' உச்சி மாநாட்டை ஈரான் தலைமை தாங்கி நடத்தியுள்ள நிலையில் வழமைபோல் அதிக உலக கவனத்தை ஈர்த்திருந்தது. [/size][/size]

[size=2]

[size=4]இந்த முறை என்னவென்றால் ஈரானை பிசாசின் மறுபிறவியாக அமெரிக்கா பார்ப்பதே முக்கிய காரணம் எனலாம். பனிப்போர் காலத்தில் செயற்பட்டு இன்றும் நிலைத்து நிற்கும் வல்லாதிக்க நாடாகும் அமெரிக்கா. 1950 களின் பிற்பகுதியில் முதலில் ஆபிரிக்க ஆஸிய ஒருமைப்பாட்டு அமைப்பும் பின்னர் அணிசேரா நாடுகள் அமைப்பும் உருவாகவும் காரணமாகஇருந்தது. [/size][/size]

[size=2]

[size=4]அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான்கிமூனுக்கு கடிதம் எழுதி தெஹ்ரானில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்க்கும்படி கேட்குமளவுக்கு சென்றிருந்தார். இஸ்ரேலும் வழமைப்படி தனது எதிர்ப்புக்களை பதிவு செய்திருந்தது. அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் வருடம் என்பதால் பலமிக்க யூதர்களின் ஆதரவை முன் எப்போதையும் விட அரசியல் வாதிகள் நாடி நிற்பது மட்டுமல்ல ஈரானின் அணு உற்பத்தி திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்புவதெல்லாம் எதிர்பார்க்கக் கூடியவைதான். [/size][/size]

[size=2]

[size=4]அமெரிக்காவின் கோரிக்கையை மறுதலித்துவிட்டு பான்கிமூன் தெஹ்ரானுக்கு பயணம் மேற்கொண்டதானது ஐ.நா.செயலாளர் நாயகத்தின் பதவியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதாய் இருக்கின்றது. 170 நாடுகள் மாநாட்டுக்கு செல்வதை தவிர்க்கும் படியாக அமெரிக்காவின் உயர் மட்ட நிலையில் இருந்து வந்த கட்டளை போன்ற கோரிக்கையை மறுத்திருக்காது போகாமல் இருந்திருந்தால் இலங்கை போன்ற நாடுகளில் செயலாளர் நாயகம் அமெரிக்காவின் கைப்பொம்மையாக செயல்படுகின்றார் என்ற நம்பிக்கையை உறுதிசெய்வதாக இருந்திருக்கும் உச்சிமாநாட்டில் அவர் நிகழ்த்திய உரையில் அணிசேராத அல்லது பக்கம் சாராத ஒரு நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார் தெஹ்ரானுக்கு சென்றார். பின்னர் விருந்தாளி நாட்டை இரட்டை விடயங்கள் தொடர்பாக சாடினார்.[/size][/size]

[size=2]

[size=4] அவை இரண்டும் அமெரிக்காவின் கரிசனையில் உள்ளவை. அவை ஈரானின் அணு பரிசோதனைத் திட்டம் மற்றும் இஸ்ரேலை அழித்தொழிப்பதற்கான அதன் அறைகூவல் றியோடி ஜெனிரோவில் அண்மையில் நடந்து முடிந்த உலகத்தலைவர்கள் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதி மகமூத் அஹ்மதி நிஜாத்தை சந்தித்த பொழுது புதியதோர் உலக ஒழுங்கு முறை உருவாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தார். [/size][/size]

[size=2]

[size=4]ஆனால் அந்த புதிய ஒழுங்கு முறை என்னவென்பதைப் பற்றி அவர் விளக்கியிருக்கவில்லை. ஆனால் அது மேற்குலகத்துக்கு எதிரான அல்லது மேற்கு நாடுகளால் குறிப்பாக அமெரிக்காவால் கட்டளையிடப்படும் ஒழுங்குமுறையாக அமையக் கூடாது என்பதாகவே இருந்திருக்கும். ஜனாதிபதி நாடுதிரும்பு முன்னரே விளைவுகள் நாட்டில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.[/size][/size]

[size=2]

[size=4]ஈரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத்தடையின் காரணமாக ஜனாதிபதியின் நெருக்கமான நட்பு நாடான ஈரானுடன் வர்த்தகம் செய்வது தடுக்கப்பட்டது. [/size][/size][size=2]

[size=4]குறிப்பிட்ட அளவில் மட்டுமே ஈரானிலிருந்து எண்ணெய்கொள்முதல் செய்ய சலுகை அளிக்கப்பட்டது. [/size][/size]

[size=2]

[size=4]அதுவும் நல்ல நடத்தைக்காக (வேறு இடங்களில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கைத் தரப்பில் நடவடிக்கை எடுத்தமைக்காக) இலங்கை அரசானது மேற்கு நாடுகளின் அனுமதியில்லாமல் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு துணிச்சல் பெற்றிருந்தது குறித்து மேற்கு நாடுகள் சில பேராச்சரியம் அடைந்திருந்ததைத் தொடர்ந்து இலங்கையின் வெளிநாட்டு கொள்கையில் மேற்கு நாடுகளுக்கு எதிரான குறிப்பிடக் கூடிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டது. [/size][/size]

[size=2]

[size=4]இருந்தாலும் அது கையாளப்பட்ட விதம் நாளுக்கு நாள் மோசமானதால் நிலைமைகள் சீர்குலையத் தொடங்கின. பலதடவைகளிலும் அதன் தவறுகள் வெளிப்படலாயின. வெளியுறவு அமைச்சின் கொள்கை முரண்பாடுகளுக்கு உதாரணமாக, ஐ.நா.தருஸ்மன் அறிக்கையை அது முதலில் நிராகரித்ததும் பின்னர் இரகசியமாகச் சென்று அறிக்கையின் ஆசிரியர்களை சந்தித்ததும் இந்த முரண்பாட்டை வெளிப்படுத்திய நிகழ்வுகளாகும். [/size][/size]

[size=2]

[size=4]மேற்கு நாடுகளுடன் சுமுக நிலைமையை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி எடுப்பதற்குப் பதிலாக அது நேராகச் சென்று பாறையில் தலையை முட்டிக் கொண்டது போல் நடந்து கொண்டன. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாட்டுக்கு பெரும் நன்மை தரும் வகையில் செயல்படுத்தாமல் போனமையால் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் மனித உரிமைகள் சபையில் நிறைவேறும் நிலைக்கு கொண்டு சென்றது.[/size][/size]

[size=2]

[size=4]பின்னர் அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டம் ஒன்றைத் தயாரிக்கும் நிலைக்குச் சென்றது. இப்போது நாட்டின் வெளியுறவுக் கொள்கையானது பசு பிக்குக்கு அப்பால் ஆபிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் நண்பர்களைத் தேடும் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4] இந்த நாட்டுடன் சம்பந்தமே இல்லாத நாடுகளில் இருந்து மன்னர்களையும் ஜனாதிபதிகளையும் அழைத்துவரத் தொடங்கியுள்ளது. இவ்வாறு இலங்கையில் நிலைப்பாட்டை மீள் நிர்ணயம் செய்திருப்பதானது இந்தப் புதிய உலகில் இலங்கைக்கு அல்லது அதன் மக்களுக்கு என்ன பயன்பாட்டை கொண்டு வரப் போகின்றது என்ற கேள்வியைத் தோற்றுவிக்கின்றது. கொழும்பிலுள்ள அதிகாரப் மட்டங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய விரக்தி நிலைப்பாடு ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக் கூடியதாகவே உள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாவில் கலந்துகொண்டு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனுக்குச் சென்றிருந்தார்.[/size][/size]

[size=2]

[size=4] அதையடுத்து அவர் முகத்தில் அறைந்தது போல் பிரிட்டிஷ் பிரஜைகளை இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று அந்த அரசு ஆலோசனை வழங்கும் அறிவித்தல் வந்தது. அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்குவர ஆயத்தம் செய்து கொண்டிருக்கையில் அத்துடன் கொமன்வெல்த் நாடாளுமன்ற மகாநாட்டில் கலந்துகொள் வருவதற்கு பிரிட்டிஷ் எம்.பிக்கள் இங்குவர ஆயத்தம் செய்து கொண்டிருக்கையில் பிரிட்டன் இவ்வாறு செய்திருப்பது வேடிக்கையாகவிருக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4] ஒருவேளை அடுத்த வருடம் இங்கு நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டுக்கு உலை வைப்பதாகவும் இது இருக்கலாம். இது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற வேளையில் பிரிட்டனுக்குச் செல்ல வேண்டாம் என்று ஏனைய நாடுகள் தமது மக்களுக்கு ஆலோசனை வழங்கியது போன்றிருக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]எதுவானாலும் இது ஒன்றும் இலங்கையில் கொள்கை வகுப்பாளர்களை ஆத்திரம் கொள்ளச் செய்துவிடாது. இந்த நாட்டின் வர்த்தகம், பிரயாணம், உல்லாசப் பயணம், உயர்கல்வி மற்றும் தொழில் போன்ற விடயங்கள் மேற்கு நாடுகளுடன்தான் சம்பந்தப்பட்டுள்ளன. ஈரான், வெனிசுவலா மற்றும் கியூபா அல்லது சீனாவுடன் அல்ல.[/size][/size]

[size=2]

[size=4]கொமன்வெல்த் உச்சி மகாநாட்டுக்காக ஏற்படும் செலவுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வரியிறுப்பாளர்களையே மிகப் பெரிய அளவில் பாதிக்கப் போகின்றது. எனவே அது நடைபெறாவிட்டால் நாட்டுக்கு பெரிய நட்டம் எதுவும் இல்லை.[/size][/size]

[size=2]

[size=4]அணிசேராமை என்பதன் பொருள் மேற்கு நாடுகளுக்கு எதிராக இயங்குவது என்பது அன்று மேற்குலகை பேராசைபிடித்த மேற்கு என்று வர்ணித்துக் கொண்டு சிறிமா பண்டார நாயக்க எடுத்த நிலைப்பாடானது (1970-77) நாட்டை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. [/size][/size]

[size=2]

[size=4]மாறாக ஜே.ஆர்.ஜயவர்தனவின் மேற்குலகம் சார்ந்த அணுகுமுறைக் கொள்கையில் சில பல குறைபாடுகள் காணப்பட்ட போதிலும் அணிசேராமை கடைப்பிடிக்கப்பட்டது. இப்பொழுது புதியதோர் குளிர் போர் தோன்றத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவும் சீனாவும் ஒரு பக்கத்திலும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மறுபக்கத்திலும் நிற்கின்றன. [/size][/size]

[size=2]

[size=4]சிரியா விவகாரத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீனாவும் ரஷ்யாவும் மூன்று முறை அவர்களின் "இரத்து' அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றன. எனவே மீண்டும் பனிப்போர் காலம் வந்துவிட்டதா என்று அங்கலாய்க்க வேண்டியுள்ளது. அதுதான் நடக்கப்போகிறது என்றால் யார் என்ன செய்வது? அணிசேரா நாடுகள் அமைப்பு பயன்படுவதாக இருக்கும் என்று கருதலாம்.[/size][/size]

[size=2]

[size=4]எனவே இலங்கை தனது தெரிவுகளை திறந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் மூடி விடக் கூடாது. [/size][/size]

[size=2]

[size=4]-[size=5] [/size][/size][size=5]தொகுப்பு : கோகுலன்[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3923935503677496[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.