Jump to content

வரப்போவது போரா சமாதானமா?


Recommended Posts

வரப்போவது போரா சமாதானமா?

[07 - May - 2006] [Font Size - A - A - A]

-கலாநிதி குமார் ரூபசிங்க-

சர்வதேச பின்னணி உலகம் முழுவதிலுமான பிரதானமான ஆயுத முரண்பாடுகள் தொடர்பாக அண்மையில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு முன்னரிலிருந்து இந்த முரண்பாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. கடந்த இரண்டு தசாப்த காலங்களாக உலகம் முழுவதிலும் 32 ஆயுத முரண்பாடுகளை கண்காணித்து வருகின்ற எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. என்ற வருடாந்த புத்தகத்தின் பிரகாரம், 2004 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ அரைவாசியாக குறைவடைந்திருக்கிறது. 17 முரண்பாடுகளே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதியன்று அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் உலகம் குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்திருக்கிறது என்ற யதார்த்தமும் இங்கு முக்கியமான முற்றொரு காரணி. செப்டெம்பர் 11 இற்குப் பின்னர் ஏற்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான சர்வதேச கூட்டணியானது, அரசியல் பிணக்குகளை தீர்ப்பதற்கு பயங்கரவாத வழிமுறைகளை மேற்கொள்கின்ற கெரில்லா அமைப்புகளுக்கெதிராக கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற நிபந்தனைகளை தோற்றுவித்திருக்கிறது. மற்றைய காரணம் என்னவென்றால், தமது சொந்த நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக மயமாதல் ஆகியவை ஆயுத போராட்ட உபாயங்கள் தொடர்பில் மறு பரிசீலனை செய்வதற்கு அமைப்புக்களை கட்டாயப்படுத்தியிருக்கிறது.

இலங்கைப் பின்னணி 2010 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முரண்பாடு தொடருமா என்பதையே மேலே விபரிக்கப்பட்ட பின்னணியின் அடிப்படையில் நாம் ஆராய வேண்டியிருக்கிறது. 2010 ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரச்சினை தொடர்ந்தால், இன்னும் சில வருடங்களில் 10-12 சதவீத வளர்ச்சியை அடைய விரும்புகின்ற ஏனைய ஆசிய நாடுகளுக்கு பின்னே இலங்கை தொடர்ந்தும் 5 சதவீதத்துடன் பின்தங்கிவிடும். இலங்கையின் முரண்பாடு 2010 ஆம் ஆண்டையும் தாண்டிச் செல்லுமா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் கூர்ப்படையக்கூடிய மூன்று `எதிர்கால விளக்கங்களை' இக்கட்டுரை ஆராய்கிறது. உண்மையில், எதிர்காலத்திற்குரிய போக்குகளை எதிர்வு கூறுவதற்கு, `விளக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுவது" சிறப்பானதொரு கருவியாக இல்லை என்ற போதிலும், என்ன நடைபெறக் கூடும் என்ற சாத்தியமான பரிமாணங்களை உய்த்தறிந்து கொள்வதற்கு அவை உதவ முடியும். இரண்டாம் கட்ட ஜெனீவா பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாலு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.