Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மக்களின் பலம் அடிப்படையானது

Featured Replies

சர்வதேச சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ள தமிழக மக்களின் பலம் அடிப்படையானது: மு.திருநாவுக்கரசு

[செவ்வாய்க்கிழமை, 9 மே 2006, 09:21 ஈழம்] [ம.சேரமான்]

சர்வதேச அரசியல் சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ளவதற்கு தமிழக மக்களின பலம் மிகவும் அடிப்படையானது என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (07.05.06) ஒளிபரப்பாகிய நிலவரம் பகுதியில் அவர் கூறியதாவது:

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.

மேற்குலத்தைப் பொறுத்தவரை இலங்கைக்குள் தங்களது அரசியல், பொருளாதார நலன்களைப் பேணுவதற்கு பேச்சுவார்த்தை என்பது ஒரு கருவி.

சீனா, பாகிஸ்தான் நாடுகளோ இலங்கையில் அரசியல் குழப்பம் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. இந்தக் குழப்பங்கள் அதிகரித்து முதிர்வடையும் போது இலங்கைத் தீவில் தாங்கள் எப்படி கால் பதிக்கலாம் என்று அவை எண்ணுகின்றன.

இலங்கையில் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடக் கூடாது. மாறாக பிரச்சனையானது படிப்படியாக முதிர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் விருப்பம்.

இலங்கையில் பிரச்சனைகள் வேகமாக வளர்ந்தால் இந்தியா தனது நலன்களை இலங்கையில் நிலைநிறுத்த முயற்சித்துவிடும் என்பதால் சீனாவும் பாகிஸ்தானும் அத்தகைய ஒரு நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

இந்தியாவோ இப்போது உள்ள நிலை தொடரட்டும் என்றும் தங்களுக்கு ஒரு வாய்ப்பான சூழலுக்காகவும் காத்திருக்கிறது.

மேற்குலக நாடுகள் விரும்புகிற பேச்சுவார்த்தையும் இந்தியாவின் இந்த நிலைப்பாடும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரை எமது பிராந்திய சூழலில் எமக்கு சர்வதேசம் என்பது முதலில் அமெரிக்காவும் இந்தியாதான்.

இந்தியாவானது

- சிறிலங்கா அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்

- மேற்குலக நலன்கள் தனக்குப் பாதகமற்ற வகையில் வரையறை செய்து கொள்ள வேண்டும்

- சீனா, பாகிஸ்தான் நாடுகளானது சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகள் செய்வதனூடாக நிகழ்த்துகிற ஊடுருவலைத் தடுக்க வேண்டும்

- அரசியல் ரீதியாக இராஜதந்திரிகள் ஒன்றைப் புரிந்து வைத்துள்ளார்கள். அதாவது தமிழகத்தின் பலம்தான் தமிழீழத்தின் உறுதிப்பலம். ஆகவே தமிழகத்தையும் தமிழீழப் போராட்டத்தையும் ஒருங்கு சேர கையாள வேண்டும்

என்கிற நான்கு சக்திகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட சர்வதேச சூழ்நிலையில் இப்போது சண்டை இல்லை என்பதுதான்.

அதாவது இலங்கை நிலைமைகள் உடனே மோசமடைந்து விடக் கூடாது என்று சீனாவும் பாகிஸ்தானும் எண்ணுகின்றன.

இலங்கை நிலைமை மோசமடைந்து விட்டால் இந்தியாவின் பின்னால் நிற்க நேரிடும் என்று மேற்குலகம் கருதுகிறது.

இந்தியாவோ சரியான வாய்ப்புக்கு காத்திருக்கிறது.

ஆகையால் இப்போது யுத்தம் இல்லை.

ஆகையால்தான் சிறிலங்கா அரசாங்கத்தால் யுத்தத்துக்குப் போக முடியவில்லை.

மகிந்த ராஜபக்சவினது வழிமுறை யுத்தம்தான்.

ஆனால் சர்வதேச சூழலில் அவரால் யுத்தத்துக்குச் செல்ல முடியாது.

அப்படியானால் இராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கொண்டு சிலர் கருதலாம் மகிந்த ராஜபக்ச யுத்தத்துக்குத் தயார் என்று. நிச்சயமாக இல்லை. மகிந்தவின் வழிமுறையானது யுத்தத்தை ஆங்காங்கே பொறிதட்ட விடுவது- வெளிக்கிளம்ப விடுவது. ஆனால் முழு அளவில் யுத்தம் செய்ய முடியாது.

இத்தகைய சர்வதேசச் சூழலை ஈழத் தமிழர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்?

தமிழீழப் போராட்டத்தின் முதலாவது அடிப்படை அரசியல் பலமானது தமிழீழத்துக்கு வெளியே தமிழகம்தான்.

எதிர்காலத்திலும் தமிழகத்தின் அனுசரணையானது எமக்கு 100 வீதம் அத்தியாவசியமானது.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழகத்தின் ஏகோபித்த ஆதரவைப் பெற வேண்டும் என்பதுதான் தமிழீழத்தின் அடிப்படை அரசியல் நிபந்தனை.

தமிழகத்தின் ஆதரவு இருக்குமேயானால் நாம் இந்திய அரசை எதிர்கொள்ள முடியும். மேற்குலகத்தையும் எதிர்கொள்ள முடியும். சீனா, பாகிஸ்தானையும் எதிர்கொள்ள முடியும்.

இந்திய மத்திய அரசானது எப்போதுமே தந்திரோபயமான வகையில் தீர்மானங்களை எடுக்க வல்லது. தனது தீர்மானங்களை இந்தியா நடைமுறைப்படுத்துகிறபோது வேறு வேறு வகையான செயல்களுக்குப் போக முடியும். தீர்மானங்களை எடுக்கிற தளத்தில் அவர்களுக்கு தேர்ச்சி உண்டு.

உதாரணமாக நேபாளப் பிரச்சனையைப் பார்க்கலாம்.

நேபாளத்தில் பிரச்சனையை எரியவிட்டிருந்தார்கள்.

எந்த நேரத்திலும் மன்னர் கைது செய்யப்படலாம்- கொல்லப்படலாம் என்கிற வகையில் மன்னரது அரண்மனை முற்றுகையிடப்பட்டது.

இப்படியெல்லாம்

மக்களின் போராட்டத்தை நன்கு வளர்ச்சியடையவிட்டு-

மாவோயிசப் போராளிகளையும் நன்கு வளரவிட்டு-

இறுதி நிலைமையில் சிறப்புத் தூதுவர் மூலம் நேபாளப் பிரச்சனையின் முழுக் கட்டுப்பாட்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொண்டுவந்துவிட்டார்.

கடந்த கால் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் இந்தியா முக்கியமான இராஜதந்திர வெற்றியை அடைந்திருக்கிறது.

இதனை நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்.?

நம்முடைய அரசியல் தலைவிதியில் மிகவும் நெருக்கமாகப் பிண்ணி பிணையப்பட்டிருக்கிற இந்தியா, ஒரு பிரச்சனையை எப்படி கையாண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலம் நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள உதவும்.

இந்திய அரசு என்பதானது தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தவிர்க்க இயலாத ஒரு பகுதி. ஆகையால்தான் எரிக் சொல்ஹெய்மாக இருந்தாலும் யாராக இருந்தாலும் இந்தியாவுக்கு விளக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு மகிந்த ராஜபக்ச சென்றபோதும்கூட தனது அமைச்சரை அவர் புதுடில்லிக்கு விளக்கம் அளிக்க அனுப்பியிருந்தார்.

இந்திய மத்திய அரசை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு தமிழகம்தான் அடிப்படையானது.

திருகோணமலையில் இராணுவத்தால் விமானக் குண்டு வீச்சு நிகழ்த்தப்பட்டபோது-

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கண்டமானது சிங்களத்தைப் பாதித்துள்ளது.

பழைய தீட்சித் பாணிக்கு இந்தியா போய்விட்டதா? எங்களை வெருட்டப் போகிறதா? என்று சொல்லும் நிலை உருவாகியுள்ளது.

அப்படியென்றால் இந்த யுத்தத்தில் அவர்கள் ஒரு பாத்திரம் வகிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

இதில் யாருக்கு சாதகம் பாதகம் என்பது அதனைக் கையாளும் விதத்தைப் பொறுத்தது.

தமிழீழ மக்களைப் பொறுத்தவரை சர்வதேச தளம் என்று கருதுவது தமிழக மக்களைத் தான். அதை நம் பக்கம் நாம் வைத்திருப்போமேயானால் இந்திய மத்திய அரசை கையாள முடியும். இந்திய மத்திய அரசை நாம் கையாளக் கூடியதாக இருந்தால் அமெரிக்காவை கையாள முடியும்.

இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு சேருமாக இருந்தால் சீனாவும் பாகிஸ்தானும் தலையெடுக்க முடியாது.

நாம் அரசியல் கட்சிகளை நம்புவதை விட மக்களை நம்புவது முக்கியமானது என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=26108

தமிழகமக்கள் என்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுப்பார்க்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.