Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

9/11 : அமெரிக்கா முதல் பரமக்குடி வரை

Featured Replies

[size=2]

[size=4]செப்டெம்பர் 11, 1973 அன்று சல்வடார் அலண்டேயின் ஆட்சி அமெரிக்க அரசாங்கத்தின் துணையுடன் தூக்கியெறியப்பட்டது. அலண்டே ‘மர்மமான முறையில்’ கொல்லப்பட்டார்.[/size][/size][size=2]

[size=4]2001ம் ஆண்டு, செப்டெம்பர் 11 அன்று நியூ யார்க், வாஷிங்டன் டிசி ஆகிய நகரங்களின்மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர். [/size][/size]

[size=2]

[size=4]இரண்டுமே ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகள். ஒன்று அமெரிக்காவின் துணையுடன் நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது, அமெரிக்காவின்மீதே.[/size][/size]

[size=2]

[size=4]பரமக்குடியில் சென்ற ஆண்டு செப்டெம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை மற்ற இரு செப்டெம்பர் 11 சம்பவங்களின் வரிசையில் நிறுத்தமுடியும்.[/size][/size][size=2]

[size=4]துப்பாக்கிச் சூட்டில் பலியான காக்கனேந்தல் ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் சகோதரரின் மனைவி அளித்த வாக்குமூலம் இது.போலீஸ் அநியாயமாக என் தம்பியைச் சுட்டுக் கொன்றுவிட்டது. மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல்; இரவு நேரங்களில் போலீஸ் எங்களை கைது செய்கிறது. இரவு நேரங்களில் ஆண்கள் வீடுகளில் இல்லை. பாத்திர வியாபாரிகள் போல முள்ளுக்காட்டில் நின்று வேவு பார்க்கிறது. நாங்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறோம். என்னுடைய வீடு பரமக்குடி பொன்னையாபுரத்தில் இருக்கிறது. ஒரு சிறுவனை பிடித்து வைத்துக் கொண்டு பல போலீசார் சுற்றி நின்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். உங்க ஆட்களை இப்ப வர சொல்லு என்று தாக்கியது. நான் மாடியில் இருந்து பார்த்தேன். தெருவில் இருந்த இருசக்கர வாகனங்கள் டாக்டருக்கு சொந்தமான கார் இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். [/size][/size]

[size=2]

[size=4]தேவர்குருபூஜையை பாதுகாப்பாக நடத்துவதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது. எங்கள் தலைவர் விழாவை நடத்தவிடாமல் தடுக்கிறது செய்தால் எல்லா குருபூஜையும் தடை செய்யட்டும் இல்லை என்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி நடத்த ஆவண செய்ய வேண்டும். இந்த அம்மா ஆட்சிக்கு வந்து இப்பவே மக்கள் மீது துப்பாக்கிச் சூடு என்றால் இவர்களுக்கு ஓட்டுப் போட்டது எவ்வளவு தவறு என்று தெரிகிறது.’ (மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவின்அறிக்கையில் இருந்து.)[/size][/size]

[size=2]

[size=4]சிலியில் அலண்டேயின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்குக் காரணம், அவர் ஆட்சிமுறை அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களுக்கு எதிரானது என்பதுதான். அமெரிக்காவின் மேலாதிக்கத்தின்மீது போர் தொடுப்பதாகப் பாவித்துக்கொண்டு அமெரிக்க மக்கள்மீது பயங்கரவாதிகள் தொடுத்த போர், இரண்டாவது செப்டெம்பர் 11ஆக உருபெற்றது. பரமக்குடியில் தலித் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கக் காரணம் ஆதிக்க சாதி வெறியோடு ஒன்றிணைந்த காவல் துறையின் அடக்குமுறை.[/size][/size]

[size=2]

[size=4]சிலியில் அலண்டேயின் மரணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் ஆசிர்வாதத்துடன் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அமெரிக்கா, 2001 தாக்குதலை முன்வைத்து ‘தீவிரவாதத்துக்கு எதிரான’ பெரும்போரைத் தொடங்கி இன்றுவரை நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், 1973, 2001 இரண்டையுமே அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]பரமக்குடியில், ஆதிக்கச் சாதியினர் தங்களது இருப்பையும் பெருமிதத்தையும் அதிகார பலத்தையும் தக்கவைத்துக்கொள்ள பரமக்குடி படுகொலையைப் பயன்படுத்திக்கொண்டனர். இன்றுவரை பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் சிலையும் அம்பேத்கரின் சிலையும் அவமதிக்கப்பட்டு வருவதை இங்கே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.[/size][/size]

[size=2]

[size=4]இன்று காலை விநோத் அம்பேத்கர் என்னும் நண்பர் தொலைபேசியில் அளித்த தகவலின்படி, துப்பாக்கிச் சூடு நடைபெற்ற ஐந்து முனை சாலை காவல்துறையினரால் சூழப்பட்டு கிடக்கிறது. செம்டெம்பர் 11ஐ முன்வைத்து ஊர்வலமோ போராட்டமோ வன்முறையோ வெடிக்கலாம் என்பதால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]வன்முறையைக் கொண்டு ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வழக்கம் வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கிறது. பரமக்குடி அதில் ஓர் அத்தியாயம் மட்டுமே. வெறுப்பு அரசியல் தொடரும்வரை வன்முறைகள் தொடரத்தான் செய்யும். வன்முறைகள் தொடரும்வரை பரமக்குடிகள் நிகழத்தான் செய்யும்.[/size][/size][size=2]

[size=4]செப்டெம்பர் 11, 1973 அன்று சிலியின் அரசு வானொலியில் பிரதமர் அலண்டேயின் குரல் கடைசியாக இப்படி ஒலித்தது. ‘சிலியின் பாட்டாளிகளே, சிலியின் எதிர்காலம் குறித்து எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. தேசத் துரோகிகள் வெற்றியுடன் உலா வரும் இந்நேரத்தில், வேறு யாராக இருந்திருந்தால் பணிந்து பிழைத்துப் போயிருப்பார்கள். ஆனால், நான் எங்கும் ஓடப்போவதில்லை. நீங்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள். விரைவில் இந்தச் சூழல் மாறும். ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். சிலி வாழ்க. மக்கள் வாழ்க. பாட்டாளி வர்க்கம் வாழ்க!’[/size][/size]

[size=2]

[size=4]அலண்டே அளித்த இந்த நம்பிக்கை மட்டும்தான் இன்னமும் மிச்சமிருக்கிறது.[/size][/size]

[size=2]

http://www.tamilpaper.net/?p=6723&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilpaper%2FQQvv+%28TamilPaper%29[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.