Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி ஆட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி ஆட்சி: கருணாநிதி மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார்

சென்னை, மே. 11-

தமிழக சட்டசபைக்கு கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடந்தது.

மொத்தம் உள்ள 4.63 கோடி வாக்காளர்களில் 3 கோடியே 27 லட்சம் பேர் வாக்களித்தனர். இது 70.22 சதவீத ஓட்டுப் பதிவாகும்.

ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாது காப்புடன் தொடங்கியது. 60 நகரங்களில் உள்ள 82 மையங்களில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 5 ஆயிரத்து 888 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

"சீல்'' வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் சரி யாக 8 மணிக்கு அனைத்து கட்சி வேட்பாளர்கள், ஏஜெண் டுகள் முன்னிலையில் திறக் கப்பட்டன. பிறகு ஒவ் வொரு மேஜையிலும் ஒரே சமயத்தில் 14 எந்திரங்கள் வைக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொரு வேட்பா ளருக்கும் எத்தனை ஓட்டுக்கள் கிடைத்துள்ளன என்று எண் ணப்பட்டன.

8.15 மணிக்கு 234 தொகுதி களிலும் முன்னணி யில் இருந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தொடக் கத்திலேயே தி.மு.க. வேட் பாளர்கள் பெரும் பாலான தொகுதிகளில் வெற்றி முகத்துடன் இருந்தனர்.

சேப்பாக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவும் வெற்றி பெற்றனர். விருத்தாச்சலம் தொகுதியில் நடிகர் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

முக்கிய தலைவர்களில் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஜி.கே.மணி, ஆற்காடு வீரா சாமி, பொன்முடி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

9.30 மணி நிலவரப்படி தி.மு.க. கூட்டணி 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது. 11.30 மணிக்கு 159 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி வாய்ப்புடன் இருந்தனர்.

அ.தி.மு.க. கூட்டணி 74 இடங்களில் முன்னிலை பெற்று இருந்தது. இதில் அ.தி.மு.க. 68 இடங்களில் வெற்றி பெறுகிறது.

தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி இருப்பதால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

தி.மு.க. தலைவர் கருணா நிதி 5-வது தடவையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று சாதனை படைக்கி றார். தி.மு.க. கூட்டணிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது என்ற முழு விவரம் இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு வித்தியாசமான தீர்ப்பை தமிழக மக்கள் இந்த தடவை கொடுத்துளனர். தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சி தனிப்பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கும்.

ஆனால் இந்த தடவை, தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ள போதிலும், தி.மு.க.வுக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 118 இடங்கள் வேண்டும். தி.மு.க. 132 இடங்களில் போட்டியிட்டது.

அந்த கட்சிக்கு 100 இடங்களுக்குள் தான் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மதியம் 12.30 மணி நிலவரப்படி தி.மு.க. 92 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. எனவே தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்க இயலாது. என் றாலும் தோழமை கட்சி களான காங்கிரஸ், பா.ம.க. உதவியுடன் தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தமிழக அரசியலில் இந்த தடவை தான் முதன் முதலாக கூட்டணி ஆட்சி அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி மலர்வதற்கு முக்கிய காரணமாக விஜயகாந்த் வருகை கூறப்படுகிறது. தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற கட்சியைத் தொடங்கி புயல் வேகத்தில் அரசியலில் நுழைந்த நடிகர் விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.

விருத்தாச்சலம் தொகுதியில் வென்ற விஜயகாந்துக்கு மற்ற தொகுதியில் குறிப்பிடும் அளவுக்கு ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. அவர் கட்சி வேட்பாளர்கள் ஆயிரக்கணக்கில் பிரித்த ஒட்டுக்கள் அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றி - தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

விஜயகாந்த் கட்சி வேட்பாளர்களின் ஓட்டு பிரிப்பால்தான் தி.மு.க.வுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய் விட்டது என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதே சமயத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் சொற்ப ஓட்டுக்களில் தோல்வி அடைவதற்கும் விஜயகாந்த் கட்சி ஓட்டு பிரிப்பே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயகாந்த் கட்சி முக்கிய அம்சமாக திகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது

malaimalar.com

பெரும்பாலும் திமுக பாமக ஆதரவுடன் தனித்தே ஆட்சியமைக்கும். பாமக மந்திரி சபையில் இடம் பெறாது ஆதரவளிக்கும்.

புதுவையில் ( பாண்டிச்சேரி ) காங்கிரஸ் கட்சி திமுகவுடன் சேர்ந்து அரசு அமைக்கும். அங்குதான் கூட்டணி ஆட்சி அமைகின்றது.

திமுகவுக்கு கடைசியாக 103 இடங்கள் கிடைத்திருக்கிறது.... இது பெரும்பான்மைக்கு 15 இடங்கள் குறைவு....

மதிமுகவின் 5 எம்.எல்.ஏக்களும் திமுகவுக்கு இழுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது...

மதிகாவுடன் கூட்டமைத்தால் மிக்க மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்.

மதிமுக திமுகவிற்கு வருவதை தற்போதைய நிலையில் திமுகவில் எவரும் விரும்ப மாட்டார்கள். பெரும்பாலும். பாமகவின் ஆதரவையே திமுக பெற்று ஆட்சியமைக்கும

ஆனால் அதிமுக வைகோவை கைகழுவி விடுவது உறுதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுகவுக்கு கடைசியாக 103 இடங்கள் கிடைத்திருக்கிறது.... இது பெரும்பான்மைக்கு 15 இடங்கள் குறைவு....

மதிமுகவின் 5 எம்.எல்.ஏக்களும் திமுகவுக்கு இழுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது...

:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.