Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினரிடம் கையேந்தும் அரசு

Featured Replies

[size=6]சிறுபான்மையினரிடம் கையேந்தும் அரசு [/size]

[size=4]கிழக்கு மாகாண சபையை இலகுவாகக் கைப்பற்றுவது என்ற அரசின் கனவு இம்முறை அங்கு பலிக்கவில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் கிழக்கில் ஆட்சியை நிறுவுவோம் எனக் கங்கணம் கட்டிய ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசுக்கு இந்தத் தேர்தல் ஒரு நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறது.[/size]

[size=4]தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை என்ற கனவு கை நழுவிப் போனதால் ஆட்சியமைக்க சிறுபான்மைக் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களைத் தவிர்த்துக் கொண்டு எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ளப் பெரும்பான்மைச் சமூகத்தினால் முடியாது என்ற பாடத்தைக் கிழக்குத் தேர்தல் அரசுக்குக் கற்பித்திருக்கிறது.[/size]

[size=4]கிழக்கில் ஆட்சியைப் பிடிப்பதிலேயே குறியாக இருக்கும் அரசு தனது கௌரவம், அந்தஸ்து என்ற எல்லாவற்றையும் கைவிட்டு அந்தத் தேர்தலில் அரசுக்கு அடுத்தபடியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் தயவை நாடி ஓடும் நிலைமை வந்திருக்கிறது. [/size]

[size=4]தேர்தல் நடைபெறுவதற்கு முதல் நாள்வரை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக்கைப் பற்றுவோம் என முழக்கமிட்ட அரச தரப்புப் பிரதிநிதிகளின் கொக்கரிப்பு எல்லாம் தேர்தல் முடிவுகளுடன் அடங்கிப் போனது. கிழக்கு மாகாண சபையில் அரச தரப்பு 14 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. இதில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.[/size]

[size=4]இதனால் கிழக்கில் இலகுவாக ஆட்சியமைப்போம் என்ற வெற்றிக் களிப்பில் இருந்த அரசுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தன. அதே நேரத்தில் அரச தரப்பில் கிழக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாகப் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டுமே வெற்றிபெற்றார்.[/size]

[size=4]அறுதிப் பெரும்பான்மை அற்ற இந்தத் தேர்தல் முடிவுகளால் கிழக்கில் ஆட்சியைப் பிடிப்பதற்குச் சிறுபான்மைச் சமூகத்திடம் கையேந்த வேண்டிய நிலை அரசுக்கு வந்துள்ளது. இந்த விடயத்தில் வெட்கப்படாமல் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் தயவை நாடும் நடவடிக்கைகளை அரசு பகிரங்கமாகவே முடுக்கி விட்டிருக்கிறது. [/size]

[size=4]தேர்தல் முடிந்த கையோடு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கிழக்கில் ஆட்சியை அமைக்க ஒன்றிணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசு பகிரங்க அழைப்பு விடுகிறது எனத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கிழக்கில் ஆட்சிக் கதிரையில் அமர அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை நாடியுள்ளமை பகிரங்கமாகியது. இதற்குப் பின் நடந்த சில சம்பவங்களும் கூட்டமைப்பின் தயவு அரசுக்குத் தேவைப்படுகிறது என்பதை வெளிக்காட்டின. [/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்குத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை சலுகைகளைக் காட்டி வளைத்துப் போடும் முயற்சிலும் அரசு இறங்கியது. இதற்காக அரசின் விசேட குழுவொன்று களமிறக்கப்பட்டது. [/size]

[size=4]அந்தக் குழு வெற்றிபெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் நேரடியாகச் சென்று சலுகைகளைக் கூறி அவர்களைத் தம் பக்கம் இழுக்க முயன்றது. கொழும்பில் வீடு, ஐந்து கோடி ரூபா பணம், வாகனம் என்பன உட்பட பல வசதிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆயினும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மசிந்துவிடவில்லை.[/size]

[size=4]சலுகைகளுக்காக அல்ல உரிமைகளுக்காகவே நாம் போராடுகிறோம். அதற்காகத்தான் இந்தக் கிழக்குத் தேர்தலில் வெற்றிபெற்று மாகாண சபைக்கு வந்திருக்கிறோம். கூட்டமைப்பின் ஒத்துழைப்பு அரசுக்குத் தேவையாயின் அது பற்றி நீங்கள் எமது தலைவர் சம்பந்தனுடனேயே பேசிக் கொள்ளுங்கள். அவரை மீறி நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என உறுதிபடக் கூறிவிட்டனர். [/size]

[size=4]இதனால் கூட்டமைப்பினரை வளைத்துப் போடும் அரசின் முயற்சி தோல்வியில் முடிந்து போனது. இதனையடுத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் தனது ஆழமான பார்வையை திருப்பியது அரசு. அரசிடமிருந்து எவ்வளவு பெற முடியுமோ அவற்றைப் பெறுவதற்காகக் காத்திருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இது நல்ல சந்தர்ப்பம்.[/size]

[size=4]தேர்தலுக்கு முன்னரே கிழக்கில் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க முன்வருமாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமிடம் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அப்போதெல்லாம் தேர்தல் முடிந்த பின்னர் இது பற்றித் தீர்மானிப்போம் என பதிலளித்திருந்தார் ஹக்கீம். [/size]

[size=4]இப்போது தேர்தல் முடிவடைந்து கிழக்கில் ஆட்சியமைக்கும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. யார் ஆட்சியமைப்பார்? மு.காவின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பதை அது இன்னும் பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை. [/size]

[size=4]ஆயினும் அரசுடன் மு.காவின் பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மு.காவின் ஆதரவைப் பெறுவதற்கு ஹக்கீமை அழைத்துப் பேசியிருக்கிறார். ஆயினும் இதுவரை வெளிப்படையாக எதையும் கூறாமல் இருந்து வருகிறார் ஹக்கீம். மு.கா வைப் பொறுத்தமட்டில் அது இப்போது இரு தலைக் கொள்ளி எறும்பு போன்று உள்ளது. ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பகைக்க முடியாத நிலை. [/size]

[size=4]சிறுபான்மைச் சமூகம் என்ற வகையில் முஸ்லிம் சமூகத்துக்கு தமிழர்களின் ஆதரவும் பலமும் எப்போதும் தேவை. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ள முடியாத நிலை. ஏற்கனவே கூட்டமைப்பு விடுத்திருக்கும் கிழக்கில் இணைந்து ஆட்சியமைப்பது என்ற கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலை. மறுபக்கத்தில் மத்திய அரசில் மிக முக்கியமான அமைச்சுப் பதவியான நீதி அமைச்சுப் பதவியை தன் பக்கம் வைத்துள்ள ஹக்கீம் அரசையும் புறக்கணித்துவிட முடியாத நிலை. [/size]

[size=4]மத்திய அமைச்சில் பதவி வகித்துக் கொண்டு மாகாண அமைச்சில் வேறு ஒரு கட்சிக்கு எப்படி ஆதரவு வழங்குவது என்ற இடியப்பச் சிக்கல். இவ்வாறு இரண்டு பக்கத்தையும் பகைக்க முடியாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளமையால் அதன் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை. [/size]

[size=4]கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு விரோதமாக நாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஏற்கனவே கூறியிருந்தார். அவர் கூறிய இந்த வாக்கையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. [/size]

[size=4]இதனைவிட கிழக்கில் தேசிய அரசு ஒன்றை அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரசில் இருக்கும் இடதுசாரி அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண ஆகியோர் இதற்கான முன் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். [/size]

[size=4]இந்த நேரத்தில் இன்னுமொரு விடயத்தையும் முஸ்லிம் சமூகம் கருத்தில் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த முயற்சிகள் இடம்பெறும் போதெல்லாம் முஸ்லிம்களுக்கும் அவற்றில் பங்கு தரப்பட வேண்டும், முஸ்லிம் பிரதிநிதிகளும் இந்தத் தீர்வு முயற்சிகளில் பங்குபற்ற வேண்டும் என்று முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். [/size]

[size=4]கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுக்களின் போது முஸ்லிம் தலைவர்களினால் இந்தக் கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த மட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் விடயத்தில் முஸ்லிம் சமூகத்தையும் இணைத்துக் கொண்டே அந்தத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் அது தெளிவாகவும் உறுதிப்பாட்டுடனும் உள்ளது. [/size]

[size=4]ஐக்கிய இலங்கைக்குள் நீதியான நியாயமான அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வு தமிழர்களுக்குத் தேவை. அந்தத் தீர்வு முஸ்லிம் சமூகத்தையும் அரவணைத்துக் கொண்டு எட்டப்படும் தீர்வாகவே நிச்சயம் இருக்கும். அவர்களது உரிமைகளையும் மதித்துக் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுக்கான பேச்சுக்களில் ஈடுபடுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பல தடவைகளில் கூறியிருக்கிறார்.[/size]

[size=4]தம்மைச் சந்திக்கும் சர்வதேச தலைவர்களிடமும் அவர் இதனை தெளிவாகவும் உறுதியாகவும் கூறியிருக்கிறார். கிழக்குத் தேர்தலின் போதும், ஆட்சியமைக்க வருமாறு ஹக்கீமுக்கு கூட்டமைப்பு விடுத்த பகிரங்க அழைப்பின் போதும் சம்பந்தன் இதனை சுட்டிக்காட்டியிருக்கிறார்.[/size]

[size=4]முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் புறம்தள்ளிவிட்டு தனியே தமிழர்களுக்கு மட்டும் தீர்வை எட்டும் எண்ணம் எம்மிடம் அறவே இல்லை எனவும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் அங்குள்ள முஸ்லிம் மக்களுடனும் இணைந்து வாழவே விரும்புகிறார்கள் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. [/size]

[size=4]இப்படியாக முஸ்லிம் சமூகத்துக்கும் சம அந்தஸ்து கொடுத்து அதனுடன் இணைந்து அரசியல் அபிலாஷைகளை தீர்வை எட்டவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணுகிறது. எனவே கிழக்கில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து அரசுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவு வழங்கி அவர்கள் வழங்கும் சலுகைகளைப் பெற்றுவிட்டு பின்னர் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் வரும்போது மட்டும் அதில் எம்மையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கோஷம் போடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. [/size]

[size=4]எனவே நிதானமாகச் சிந்தித்து இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டியது முஸ்லிம் காங்கிரஸினதும், அதன் தலைவர் ஹக்கீமினதும் கடமை. இந்த விடயத்தில் அரசும் விடாப்பிடியாக மு.காவைத் துரத்துவதால் அதன் ஆதரவு யாருக்கு கிடைக்கப் போகிறது? யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள்? என்பதே இப்போதுள்ள எதிர்பார்ப்பு. இதற்கு விரைவில் விடை கிடைக்கும்.[/size]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8778436616130933

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.