Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியமில்லை எனில்...

Featured Replies

எமது சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியமில்லை எனில் சிங்களப் படைகளுக்கும் சாத்தியமில்லை: சு.ப.தமிழ்ச்செல்வன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்குவரத்துக்கள் சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியப்படும் வரை சிறிலங்காப் படைகளின் சுதந்திரமான நடமாட்டங்களையும், போக்குவரத்துக்களையும் அனுமதிக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இலங்கைப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனுடனான சந்திப்பின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உடனிருந்தார்.

நன்றி: புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

எமது போக்குவரத்தை தடுத்துக் கொண்டு சிறிலங்காப் படைகள் பயணிக்க முடியாது: புலிகள் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்குவரத்துக்கள் மற்றும் சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியப்படும் வரை சிறிலங்கா படைகளின் சுதந்திரமான நடமாட்டங்களையும், போக்குவரத்துக்களையும் அனுமதிக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.

கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனை இன்று வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினால் நேற்று மே 11 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக கண்காணிப்புக்குழுத் தலைவரை அழைத்து எமது தலைமைப்பீடத்தின் மிகக் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறோம்.

கண்காணிப்புக் குழுவினர் நேற்று எங்கள் கட்டுப்பாட்டுக்குட்பட்ட கடற்பிராந்தியம் மற்றும் வான்பரப்பு எங்களுக்கு உரித்தது இல்லை என்று அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இப்படியான அறிக்கையை வெளியிடுவதற்கு கண்காணிப்புக் குழுவுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

அமைதி முயற்சி மற்றும் சமாதான முயற்சிகள் அனைத்துமே இரு சமதரப்பு என்கிற அடிப்படையில் இரண்டு தரப்பினரது படை வலுச்சமநிலை என்ற அடிப்படையில்தான் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்துதான் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

சமநிலையைத் தகர்க்கும் கண்காணிப்புக் குழு அறிக்கை

எங்களை ஒரு அரச சார்பற்ற சக்தியாகப் பார்ப்பதற்கு இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்படவில்லை.

சிறிலங்காப் படைகளும் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இராணுவ ரீதியாக வெற்றி கொள்ள முடியாது என்கிற யதார்த்தத்தின் அடிப்படையில் இவர்கள் அமைதிப் பேச்சுக்கு வந்தனர். இரண்டு தரப்பையும் இருதரப்பாக நோர்வே அனுசரணையாளர்கள் அங்கீகரித்துதான் இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. சமாதான முயற்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்தது.

இதைத் தகர்க்கும் வகையில் பலவீனப்படுத்தும் வகையில் கண்காணிப்புக் குழுவினர் நேற்று வெளியிட்ட அறிக்கையை மிகவும் பாரதூரமான விடயமாகத்தான் எமது தலைமைப்பீடம் கருதுகிறது.

எங்கள் மக்கள்கூட கொதித்துப் போய் உள்ளனர். எங்கள் மக்கள் பாரிய தியாகங்கள் செய்துதான் எமது விடுதலைப் போராட்டம் இந்த உயர்நிலையை அடைந்திருக்கிறோம். அப்படியான எங்களது உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கண்காணிப்புக் குழு அறிக்கை பாரதூரமானது என்றும் உடனடியாக அவர்கள் பதில்தர வேண்டும் என்றும் அவர்களிடம் நாம் கேட்டிருக்கிறோம்.

தமிழர் தாயகத்தை சிறிலங்காப் படைகள் முற்றாக ஆக்கிரமித்து எமது தாயகத்தை அழிக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டது. அந்தநிலையில் எங்களுடைய மக்களும் விடுதலை அமைப்பும் எமது தலைவரின் தலைமைக்குப் பின்னால் அணிதிரண்டு போராடி பல்லாயிரக்கணக்கான படைகள் நிலைகொண்ட நிலையிலும் 70 விழுக்காடு அளவிலான எமது நிலப்பிரதேசத்தை மீட்டெடுத்தோம்.

நாங்கள் இராணுவ வெற்றிகளைப் பெற்று, ஒரு நடைமுறை அரசையே இயக்குகிற வலிமையைப் பெற்ற பின்னர்தான் சிறிலங்கா அரசாங்கமே இருதரப்பு என்றும் படைவலுச் சமநிலை என்றும் அங்கீகரித்துக் கொண்டும்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இதனது அடிப்படையில்தான் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவானது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கூட எங்கேயும் அரசு என்றும் எம்மை ஒரு ஆயுதக்குழு என்றோ அல்லது வேறு சொற்பதங்களிலோ குறிப்பிடப்படவில்லை. இருதரப்புக்கள் என்பதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. இந்த நடைமுறையின் கீழ்தான் பேச்சுவார்த்தைகளும் பல கட்டங்களாக நடைபெற்றன. இதைச் சீர்குலைக்கும் வகையிலும்- கொச்சைப்படுத்தும் வகையிலும்- பலவீனப்படுத்தும் வகையிலும் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடுவதற்கு கண்காணிப்புக் குழுவுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்பதை நாங்கள் இன்று கண்காணிப்புக் குழுத் தலைவருக்குச் சுட்டிக்காட்டினோம்.

எந்த அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன என்ற வரலாற்றையும் கூட விரிவாக இன்று கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு விளக்கினோம்.

படுகொலைப் படைக்கு வழித்துணையா?

சிறிலங்கா இராணுவத்தினரது போக்குவரத்துக்கு கண்காணிப்புக் குழு வழித்துணை வழங்குவது பாரதூரமான தவறு என்று இன்றைய சந்திப்பில் தெரிவித்தோம். மேலும் எமது போராளிகளுக்கும் எமது போராளிகளின் போக்குவரவுத்துக்களுக்கும் கண்காணிப்புக் குழு வழித்துணை வழங்கியதா என்றும் நாம் கேள்வி எழுப்பியபோது பதில்கூற இயலாமல் அவர் இருந்தார்.

கண்காணிப்புக் குழு என்பது இருதரப்பையும் சமதரப்பாக ஏற்றுக்கொண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்ககளின் அடிப்படையில் செயற்படுவதற்குத்தான் கண்காணிப்புக் குழுவுக்கு அங்கீகாரம் உள்ளது. இதை மீறி கண்காணிப்புக் குழு செயற்படமுடியாது. அதை விடுத்து சிறிலங்கா கடற்படையினரது படகில் ஏறி விடுமுறையில் செல்கிற படையினருக்கு பாதுகாப்பும் வழித்துணையும் வழங்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மறுக்கப்பட்ட நிலையில் சிறிலங்காப் படைத்தரப்புக்கு அப்படியான ஒரு பாதுகாப்பை கண்காணிப்புக் குழு வழங்குவதை ஏற்கமுடியாது என்று தெரிவித்தோம்.

எங்களுடைய போராளிகள், தளபதிகள் தென் தமிழீழத்திலிருந்து வட தமிழீழத்துக்கு எங்களுடைய கடற்கலங்களில் போக்குவரத்து மேற்கொள்கின்றனர். ஆகையால் உங்களது கடற்கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக வழித்துணை வழங்கவும் பாதுகாப்பு வழங்கவும் அனுப்புங்கள். இதை உடனே செய்ய வேண்டும். சிறிலங்கா அரச தரப்பினருக்கு இத்தகைய ஏற்பாட்டைச் செய்யும் நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் செய்தாக வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் இருதரப்பினரையும் சமமாகப் பாவித்துத்தான் கண்காணிப்புக் குழுவினரது பணிகள் அமைய வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் கூறினோம்.

மேலும் தீர்ப்பு வழங்குதல் அல்லது வழித்துணை வழங்குவதல் என்பவற்றில் இருதரப்பினரையும் சமமாக நீங்கள் பார்க்க வேண்டும். இதில் ஒருதலைப்பட்சமாக- பக்கச்சார்பாக நடந்து கொண்டதை எமது விடுதலை அமைப்பு பாரதூரமாகக் கருதுகிறது. நீங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை மிகத் தவறானது. ஆகவே இதற்கு உடனடியாக பதில் தரவேண்டும் என்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் தெரிவித்தோம்.

இதுபற்றி நோர்வே அனுசரணையாளர்களுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாகக் கூறிவிட்டுச் சென்றனர். இதுதான் அவர்களிடமிருந்து எங்களுக்குத் தரப்பட்ட பதிலாகும்.

அதேபோல், எமது மக்களைப் படுகொலை செய்கிற படையினருக்குப் பாதுகாப்பையும் வழித்துணையையும் நீங்கள் வழங்குகின்றீர்கள். வான்பரப்பிலிருந்து எமது மக்கள் மீது குண்டுவீச்சு பொழிகிறது. ஆர்ட்டிலறித் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். கடற்படைக் கப்பல்களிலிருந்து பீரங்கித் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இதைத் தடுக்க ஏன் கண்காணிப்புக் குழு முயலவில்லை என்றும் அவரிடம் கேட்டோம்.

ஜெனீவாப் பேச்சுக்குப் பின்னர் வீதி வீதியாக 160 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாளாந்தம் காணாமல் போகின்றனர். கடத்தப்பட்டுள்ளனர்- கொல்லப்பட்டுள்ளனர். நாளாந்தம் எமது மக்களுக்கு அச்சுறுத்தல்களும் அவலங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

திருகோணமலையில் முப்படைகளும் பார்த்துக் கொண்டிருக்க எங்களுடைய மக்களை வன்முறையாளர்கள் வெட்டுகிறார்கள்-படுகொலை செய்கிறார்கள். சொத்துக்களை அழிக்கின்றனர். ஆனால் கண்காணிப்புக் குழுவோ பாதுகாப்பு கருதி வெளியேவராமல் இருக்கின்றனர் என்று எங்களுக்குச் சொல்கிறீர்கள்- எங்கள் மக்களுக்குச் சொல்லுகிறீர்கள்.

இப்படியான படுகொலைப் படைக்குப் பாதுகாப்பை கண்காணிப்புக் குழு வழங்குவது என்ன வகையிலான நியாயம் என்று நாம் கேட்டோம். இதற்குப் பதில் சொல்ல முடியாமல்தான் கண்காணிப்புக் குழுத் தலைவர் இருந்தார். எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் மிகவும் இறுக்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறோம். போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பாக- கண்காணிப்புக் குழுவின் நடுநிலைமையற்ற- பக்கச்சார்பான நிலை குறித்து இதுவரை இல்லாத அளவுக்கு எங்களுடைய மக்கள் மிகவும் கொந்தளிப்பான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எமது தலைமைப்பீடமும் மிகவும் அதிருப்தியடைந்த நிலையில் இருக்கிறது.

இதற்காகத்தான் கண்காணிப்புக் குழுத் தலைவரை அழைத்து எமது வன்மையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரியப்படுத்தியிருந்தோம்.

தற்போது புதிதாக வந்திருக்கும் இக் கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு முன்னைய கண்காணிப்புக் குழுத் தலைவர்கள் பின்பற்றிய நடைமுறைகள் மற்றும் அளித்திருந்த தீர்ப்புக்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் இன்று முன்வைத்தோம்.

முன்னைய கண்காணிப்புக் குழுத் தலைவர் ஒரு கட்டத்தில், விடுதலைப் புலிகளின் கடற்பிரதேசத்தில் பயிற்சி பெறுவதற்கு ஆயுதங்களுடன் நடமாடுவதற்கு உரிமை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அதைச் சுட்டிக்காட்டினோம்.

நடைமுறை யதார்த்தங்களைப் புறந்தள்ளிவிட்டு- நடைமுறைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு- இந்த சமாதான முயற்சிகளுக்கு- அமைதி முயற்சிகளுக்கு- யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு மாறாக- எதிராக- கண்காணிப்புக் குழுவினர் அறிக்கைகளை வெளியிடுவதும் குறிப்புகளை வழங்குவதும் நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மிகக் கடுமையான தொனியில் கூறியுள்ளோம்.

இது தொடர்பில் அனுசரணையாளர்களிடமும் நாங்கள் முறையிட உள்ளோம். கண்காணிப்புக் குழுவினரது இத்தகைய அறிக்கையானது அமைதிக்கான முன்னெடுப்புகள்- யுத்த நிறுத்த ஒப்பந்த விதிகள் அனைத்தையுமே தகர்க்கின்ற ஒரு அறிக்கை. ஆகையால் இதற்கு எங்களுக்கு தீர்க்கமான பதில்தர வேண்டும் என்று அனுசரணையாளர்களிடம் நாம் விரைவில் தெரிவிக்க உள்ளோம்.

குண்டுவீச்சுக்கள் யுத்த நிறுத்த மீறலாகத் தெரியவில்லையா?

கடலில் நடந்த சம்பவத்துக்கு உடனே அறிக்கை வெளியிட்ட கண்காணிப்புக் குழுவுக்கு திருகோணமலையில் எங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் வன்னியிலும் குண்டுவீச்சை நடத்துவது உங்களுக்கு யுத்த நிறுத்த மீறலாகத் தெரியவில்லையா என்று நாம் கேட்டோம்.

எங்களால் அழிக்கப்பட்டு இயங்க முடியாமல் இருந்த குண்டுவீச்சு விமானங்கள் இன்று எங்கள் மக்கள் மீது குண்டு வீசிக்கொண்டிருக்கின்றனர். நான்கு ஆண்டுகால சமாதான காலத்தைப் பயன்படுத்தி தங்களது படைகளைக் கட்டியெழுப்பி எங்களது மக்களைப் படுகொலை செய்வதற்கு முழு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீக்கிரமா ஒரு நல்ல முடிவு வரணும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபாஷ்... சரியா போடு போட்டீங்கள் சுனா பானா.

சு.ப. வுக்கு கோபவேசம் வந்ததை இன்றைக்குத்தான் முதன்முதலில பாக்கிறன்.

சபாஷ்... சரியா போடு போட்டீங்கள் சுனா பானா.

சு.ப. வுக்கு கோபவேசம் வந்ததை இன்றைக்குத்தான் முதன்முதலில பாக்கிறன்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது பாருங்கோ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.