Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசுக்கு எதிராக பிரச்சனைகள் வரும் பொழுது புதிதாகவொன்றை கையிலெடுக்கும் மத்திய அரசு.

Featured Replies

மத்திய அரசுக்கு எதிராக பிரச்சனைகள் வரும் பொழுது புதிதாகவொன்றை கையிலெடுக்கும் மத்திய அரசு.இப்படியே முழு இந்தியாவையும் ஏய்க்கும் ஆட்சியாளர்கள்.சில வேளைகளில் குண்டு வெடிப்புகள் கூட மத்திய அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு

தமீம் அன்சாரியின் கூட்டாளிகளை பிடிக்க கியூ பிரிவு போலீஸ் தீவிரம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (35). இவர் இலங்கை வழியாக இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டுக்கு கடத்த முயன்றபோது திருச்சியில் கடந்த 17-ம் தேதி கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தமீம் அன்சாரியிடம் இருந்து, 8 பென்டிரைவுகள், சி.டி.க்கள், வரைபடங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தமீம் அன்சாரி இலங்கையில் உள்ள ஏஜெண்டுகள் மூலமாக பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிற்கு இந்த தகவல்களை அனுப்பியது தெரிய வந்தது. இதற்காக தமிம் அன்சாரிக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி உள்ளதும் தெரிந்தது.

ஊட்டி குன்னூரில் உள்ள ராணுவ அலுவலகங்கள், பயிற்சி மையங்கள், விமானப்படை பயிற்சி மைய வரைபடங்களை தமீம் அன்சாரியிடம் இருந்து சி.டி.யாக பெற்று, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஏதாவது சதித்திட்டத்தை தென் இந்தியாவில் செயல்படுத்த திட்டமிட்டு இருக்கலாம் என கியூ பிரிவு போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

இந்த சதி செயலுக்கு தமீம் அன்சாரி தனி ஒருவராக மட்டும் செய்திருக்க முடியாது. கூட்டாளிகள் சிலரும் உதவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே தமீம் அன்சாரி இலங்கை மற்றும் தஞ்சை பகுதிகளில் வாங்கி பயன்படுத்திய சிம் கார்டுகள் சிக்கியது. இதன் மூலம் தமிழ் அன்சாரி யார் யாருடன் பேசினார் என துப்பு துலங்கியது.

அப்போது, முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், ரோட்டரி முக்கிய பிரமுகர்கள் பெண்கள் பலருடன் தமீம் அன்சாரி தொடர்பு கொண்டது தெரியவந்தது.

முன்னாள் ராணுவ அதிகா ரிகளிடம் தமீம் அன்சாரி பற்றி விசாரித்தபோது, சினிமா படம் எடுப்பதற்கு தகவல் சேகரிப்பதாக கூறினார் என்று தெரிவித்து ள்ளனர்.

அதே நேரத்தில் திருச்சி தஞ்சை, விசாகப்பட்டினம், ஊட்டி, பகுதிகளில் உள்ள நபர்களிடமும், தமீம் அன் சாரிக்கு உதவியது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதேபோன்று இலங்கை ஹாஜி, பாஸ் ஆகியோரிடம் தமீம் அன்சாரி குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக தமிம் அன்சாரியை அங்கு அழைத்துச்சென்று விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தேசிய விசாரணை ஆணையமும் இறங்குகிறது. இண்டர்போல் போலீஸ் உதவியும் நாடப்படுகிறது. ராணுவ அலுலகங்களை சுற்றி படம் எடுத்தது யார்? இதற்கு உதவியது யார் என்பது மர்மமாக உள்ளது. ஏற்கனவே ஏஜென்டுகள் மூலம் தமீம் அன்சாரி 2 முறை இலங்கை வழியாக பாகிஸ்தானுக்கு சி.டி. படங்களை அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார். இப்போது 17-ந்தேதி 3-வது முறை அனுப்பும்போது சிக்கி உள்ளார்.

நீண்ட காலமாக நடந்த இவ்விவகாரத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் திருச்சி, தஞ்சை, ஊட்டி பகுதிகளில் நடமாட்டம், இலங்கை ஏஜென்டுகள் நடமாட்டம் தீவிரவாத அமைப்புகளுடன் தமீம் அன்சாரிக்கு உள்ள தொடர்பு தெரிந்தோ, தெரியாமலோ பணத்திற்காக தமீம் அன்சாரிக்கு உதவிய தமிழக பிரமுகர்கள் ஆகியோர் குறித்து தீவிர விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மத்திய சிறையில் உள்ள தமீம் அன்சாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி கோர்ட்டில் மனு செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்திய ராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற வழக்கு :

இலங்கை செல்ல கியூ பிரிவு போலீசார் முடிவு

தஞ்சையை சேர்ந்த தமீம் அன்சாரி பாகிஸ்தான் நாட்டின் உளவாளியாக செயல்பட்டு வருவதாகவும், இந்திய ராணுவ ரகசியங்களை பணத்திற்காக விற்க இருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் கியூ பிரிவு போலீசார் அவரை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற தமீம் அன்சாரியை டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சி.டி.க்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய ராணுவ பயிற்சி மையங்கள், அணுமின் நிலையங்கள், கடற்படை தளங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை படம் பிடித்து அவற்றை இலங்கையில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்பின் பொறுப்பாளர் பாஸ் என்கிற அமீர் மூலமாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து தமீம் அன்சாரியின் பாஸ்போர்ட்டு, வீடியோ போட்டோக்கள், பென் டிரைவ் ஆகியவற் றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தமீம்அன்சாரி முதல் குற்றவாளி யாகவும், ஷாஜி 2-வது குற்றவாளியாகவும், தூதரக அதிகாரி 3-வது குற்றவாளியாகவும் சேர்க்கப் பட்டுள்ளனர்.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்த மத்திய உளவுப்பிரிவு போலீசார் உதவியுடன் கியூ பிரிவு போலீசார் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமீம் அன்சாரியை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=82922

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் ஆயிரம் ஆயிரம் தமீம் அன்சாரிகள் தோன்ற என்னுடைய வாழ்த்துக்கள். வங்கக் கடலில் எந்தவித செய்கூலியோ சேதாரமோ இல்லாது தனது இந்தியாவுக்கான பாதுகாப்பை ஈழதேசத்தவன் செய்துவந்தான். என்று முள்ளிவாய்க்கால் முடிவுரை எழுதப்பட்டதோ, அன்றே இந்தியாவுகான முடிவிரையை எழுத ஆரம்பிச்சாச்சு. நாராயணனும், சோணியாவும், அம்மணாமூஞ்சி மன்மோகனும், சிவகங்கைச் சின்னப்பொடியன் சிதம்பரமும் இப்போது தென்னிந்தியாவை மும்பாய் ஆகிவிட்டார்கள் இனிமேல் என்ன காசாப்கள் வந்து கசாப்புக் கடை வைப்பதுதான் மிச்சம்,எந்தொப்புள்கொடியுறவே தமிழ்நாட்டுத் தமிழுறவே தப்பிறவழியைப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.