Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான இலங்கையின் கரிசனைகளை இந்தியா தணிக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]Kudankulam-Nuclear-Power-Plant-60-60.jpg[/size]

[size=2][size=4]இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையமானது உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது என இந்தியா வலியுறுத்தியுள்ள அதேவேளை, இந்த அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த இலங்கையின் கரிசனைகளை இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய, நட்புறவின் அடிப்படையில் இந்தியா ஆராய்கிறது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கதிரியக்க பாதுகாப்பு குறித்து இந்திய அரசாங்கம் அதிகபட்ச கவனம் செலுத்துவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் (1994), அணுசக்தி விபத்து தொடர்பான உடனடியாக அறிவுறுத்துவது தொடர்பான ஒப்பந்தம் (1986), அணுசக்தி விபத்து அல்லது கதிரியக்க அவசரநிலையில் உதவியளித்தல் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றில் குறித்துரைக்கப்பட்ட கடப்பாடுகளுக்கு இந்தியா இணங்கி நடப்பதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி, அணை பாதுகாப்பு முதலான துறைகளில் ஒத்துழைப்புது தொடர்பாக இந்தியாவும் இலங்கையும் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

கதிரியக்க கழிவுகளை கையாளுவதற்கான அனைத்து வளங்களையும், பொருத்தமான அவசரகால பதிலளிப்புத் திட்டங்களையும் இந்தியா கொண்டுள்ளதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கதிரியக்க பாதுகாப்பு குறித்த தனது உண்மையான அர்ப்பணிப்பை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என சூழலியலாளரான ஜகத் குணவர்தன மற்றும் ஏனைய சூழலியலாளர்கள் பலர் கோரியுள்ளனர்.

"இந்தியாவானது தமது அர்ப்பணிப்பில் உண்மையாக இருந்தால், அணுசக்தி மற்றும் கதிரியக்க பாதுகாப்பு தொடர்பில் இலங்கையுடன் இந்தியா இரு தரப்பு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டும்" என மேற்படி சூழலியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். (சரஸி பரணமான்ன)

http://www.tamilmirr...6-16-16-32.html[/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இருக்கிற இடத்திலையிருந்து கொஞ்சகிலோமீட்டர் தூரத்திலைதான் உந்த அணுமின் கழிவுகளை தேக்கிவைக்கிற இடம் இருக்கு....அந்த இடத்தை பாதுகாக்க இவங்கள் படுறபாடு இருக்கே சொல்லி வேலையில்லை.......பயங்கரவாதியளிட்டையிருந்து பாதுகாக்கவே பெரிய செலவு செய்யுறாங்கள்.....போனமுறை யப்பானிலை சீறிச்சிதறினதும் எல்லாருக்கும் தெரியுமெண்டு நினைக்கிறன்.....பெரிய அழிவு வந்தால்....இப்பவும் பாணுக்கு கடன்வாங்கிற மத்திய அரசாலை சமாளிக்கேலுமெண்டு நான் நினைக்கேல்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

"உலகத்தில் மக்கள் தொகை அதிகமாகும் போதெல்லாம் அதை குறைப்பதற்கு நான் அவதாரம் எடுப்பன்" என்று பகவத் கீதையில் சொல்லபட்டு இருக்கு..

ராமாயண காலந்தொட்டு தமிழர்களையே போட்டு தாக்கி மக்கள் தொகையை குறைக்கிறார்களப்பா..

கல்கி அவதாரம் விசஸ்ணு யசஸ் என்ற தந்தைக்கு பிறந்தவர் கலியுகத்தில் மக்கள் தொகைய குறைக்க போறதா இதிகாசங்களில் சொல்லபட்டு இருக்கு..

அந்த காலத்திலே பரசு ராமர் 30,000 தமிழர்களை சாதாரண ஏர் கலப்பை கொண்டே அழித்து போட்டாராம் .. அப்போ அரக்கர் நாமதான்... நம்மை போட்டு தள்ளுவது புண்ணியம் போல கிடக்கு..

அதன் அடுத்த வடிவம் தான் கூடம் குளம்.. மொத்தமா ஒரு 1 லட்சம் பேர் மேல ரிக்கெட் வாங்கி போடுவார்கள்

டிஸ்கி:

நான் ஆத்திவாதியும் கிடையாது.. நாத்திக வாதியும் கிடையாது.. அண்டார்டிக்கா வாதியும் கிடையாது

வீண் விதண்டாவதமெல்லாம் பண்னகூடாது.. ராவணவன் காலந்தொட்டு தமிழர்களை சாகடித்துத்தான் உலகத்தின் மக்கள் தொகையை குறைக்கிறார்கள்.. ஆக நமக்கு இப்ப ஒரு தெளிவு வேண்டும் ஏன் நம்மை மட்டும் போட்டு தாக்குகிறார்கள்.. சிறி ரங்கம் ரங்கநாதர் இலங்கைய நோக்கி என்ன பண்ணலாம் என்று படுத்திட்டாரு..

மகாபாரதம் நடந்ததா சொல்லபடுகிற ஆப்கானிஸ்தான் .. ஈரான் போன்ற ஏரியக்கள் இன்னும் கலவரமாத்தான் கிடக்கு.. அங்கிட்டும் அவர்களுக்கு நிம்மதியான் வாழ்கை கிடையாது..

கால் வைத்த இடமெல்லாம் விளங்காது போல கிடக்கு... :icon_idea:

அலோ எனக்க்கு தெரிஞ்சி நீங்க பெரும்பாலோர் சிவபெருமானை கும்பிடுறீங்க.. காப்பாற்றவில்லெயே அப்பூ.. ஆனால் அவுங்க வேலை மட்டும் கரெக்டா நடக்குது...

இதற்கு சும்மா பேச்சு வார்த்தை லொட்டு லொசுக்கு என்று பிலீம் காட்டுவதை விடுத்து.. ஏதாவது ஆக்க பூர்வமாக பண்ணணும். மத்தவனுக்கு எல்லாம் என்ன தங்கத்துல தொங்குது .. நமக்கு என்ன தகரத்தில் தொங்குதா...

இதில் நம்மையும் மீறிய அளவில் ஏதோ வில்லங்கம் இருக்கு ...அதை கரெக்டா ரேலி பண்ணணும்..அப்பதான் பிழைக்க முடியும்...

:rolleyes: :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.