Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடிப்படை மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துங்கள்! ஐநா செயலாளர் நாயகத்திற்கு மகஜர் கையளிப்பு.

Featured Replies

இன்று கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளை ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்களால் கையளிக்கபட்ட மகஜர் வருமாறு:

கிளிநொச்சி.

2012.09.27.

பொதுச்செயலாளர் நாயகம்,

ஐக்கிய நாடுகள் அமையம்,

ஜெனீவா.

அடிப்படை மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துங்கள்.

இலங்கைத்தீவில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக நில ஆக்கிரமிப்புக்கும் இன ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்நிலை 2009 அரசு, புலிகள் இறுதிப்போரின் பின்னர் அதிதீவிரத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நிலப்பறிப்பும் நில ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட முறையில் அரசினால் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு முழுமையும் இந்நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மிக செறிவாக மேற்கொள்ளப்படுகிறது. குடிமக்களுக்குச் சொந்தமான வாழ்விடங்கள் அபகரிக்கப்படுவதுடன் சொந்தக்காணிகளில் மீள்குடியேற முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்;டத்தில் பின்வரும் கிராமங்களில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளின் நிமித்தம் பாதிக்கப்பட்ட மக்கள்; 2012.09.27 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்ட அரச செயலகம் முன்பாக ஒன்று கூடி எமது மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புக்களை, கவலைகளை, கண்டனங்களை மீள்குடியேறுவதற்கான எமது உரிமையை இம்மனுவின் ஊடாகத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

சரித்திர பூர்வமாகத் தமிழர்கள் வாழ்ந்த நிலங்களும், அவர்களுடைய வளங்களும் அரசினாலும் அரசபடைகளாலும் பலவந்தமாகப் பறிக்கப்பட்டு வருகிறது. இப்பிரதேசத்தில் வாழுகின்ற குடிசன எண்ணிக்கைக்கு பொருத்தமற்ற விகிதாசாரத்தில் அதிகரித்த இராணுவப் படையணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய படைச்செறிவு அதிகரிப்பு எமது மக்களின் நாளாந்த வாழ்க்கையை அச்சுறுத்துவதாக அமைவதுடன் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீட்டுக்கும் வழிகோலியுள்ளது. தேசியபாதுகாப்பு, அபிவிருத்தி என்கின்ற கருத்து நிலைகளுக்கூடாக படைத்துறைப் பரவலாக்கலையும் நிலஅபகரிப்பையும் அரசு நியாயப்படுத்தி வருகிறது.

தமிழ்ச் சமூகத்தினதும் சர்வதேச சமூகத்தினதும் எதிர்பார்ப்புக்களான நல்லிணக்கம், பகைமறப்பு, மீளுருவாக்கம், மனித உரிமைகள் காப்பு, அதிகாரப்பகிர்வு என்பவற்றை புறந்தள்ளியவாறு தேசிய இனம் ஒன்றை ஒடுக்குவதற்கான நவீன தந்திரோபாயங்களுடன் தமிழ் இனத்தையும் அவர்களின் நிலத்தையும் அரசு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

தமிழ்ச் சமூகம் நம்பிக்கையோடு ஏற்றிருக்கின்ற ஜெனீவாத் தீர்மானத்தை மதிப்பதில்லை என்கின்ற அதிகார மமதையோடும் அரசியல், மற்றும் சிவில் சமூகங்களின் மீதான அச்சுறுத்தல்களை அதிகரித்தவாறும் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் பேணாதநிலை தொடர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே கிளிநொச்சி மாவட்டத்தின் பின்வரும் இடங்களில் எங்களுடைய காணிகளில் மீளக்குடியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேறுவதற்கு எமக்குள்ள உரிமையை உறுதிபடுத்தும் அதேவேளை தமிழ் மக்களுடைய அமைதியானதும், சுதந்திரமானதும் மனித உரிமைகள் தழுவியதுமான வாழ்வியல் ஒன்றைக் கட்டமைப்பதற்கு சர்வதேச சமூகம் தனது சர்வதேச கடப்பாடுகளை வலுவான முறையில் செயற்படுத்துமாறு வலியுறுத்தி இம்மனுவினைத் தங்களுக்கு முன்னளிக்கிறோம்.

chart1.jpgபிரதி : திருமதி.நவநீதம்பிள்ளை அவர்கள்,

மனித உரிமைகள் ஆணையாளர்,

ஐ.நா சபை.

கிளிநொச்சி.

2012.09.27.

அரசாங்க அதிபர்,

கிளிநொச்சி.

அம்மணி,

சொந்தக்காணிகளில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுங்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையான கிராமங்கள் மீளக்குடியேற்றம் நிறைவு பெற்றுவிட்டது. அரசாங்கம் மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் முகாமை மூடி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தின் பூர்வீகக் கிராமங்களான பரவிப்பாஞ்சான், இரணைதீவு, மருதநகர் மேற்கு, கிருஷ்ணபுரம் மத்தி, கிளிநொச்சி நகரத்தின்சிறுபகுதி ஆகிய இடங்களில் எமது சொந்தக் காணிகளில் எங்களைக் குடியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய காணிகளை இராணுவத்திற்குத் தருமாறும் எமக்கு மாற்றிடம் தருவதாகவும் இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் தெரிவித்து வருவது வருத்தம் அளிக்கிறது. எங்களைப்பொறுத்த வரையில் மாற்றிடம் என்ற பேச்சுக்கே இடம் இன்றி சொந்தக்காணிகளில் குடியேறுவதில் உறுதியாக இருக்கின்றோம்.

எமது கிராமங்களின் வரலாற்றையும் அதில் நாம் வாழ்ந்த வாழ்வின்; சிறப்பையும் தாங்கள் உணர்ந்தவராக எம்மை சொந்தக்காணியில் மீளக்குடியேற்றுவதில் மேலான கவனம் செலுத்துமாறு தயவுடன் வேண்டுகிறோம்.

எமது இவ்வேண்டுகையை இராணுவ தலைமைப்பீடம், கௌரவ அமைச்சர்கள், மேதகு ஜனாதிபதி அவர்கள் வரை எடுத்துச் சென்று எமது கௌரவமான மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றம் இடம் பெறும் வரை நாங்கள் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தங்களுக்கு அறியத்தருகிறோம்.

kili_pro_020.jpg

http://thaaitamil.com/?p=33591

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நல்லதொரு முயற்சி.

[size=5]அத்தனை இராணுவ முற்றுகைக்குள்ளும் அவர்கள் செய்யும்பொழுது நாமும் எம்மாலான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்![/size]

பரப்புரை: சமூக வலையில் நாள் ஒரு இணைப்பு:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107289

ஐ.நா. மனித உரிமை நாடுகளின் தொடர்புகள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108648

[size=4]K01(74).jpg

வட பகுதியில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பைக் கைவிடக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனோரின் உறவினர்கள், மீள்குடியேற்றப்பட்டாத கிராம மக்கள் மற்றும் பொதுமக்களுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், வினோ நோகதாரலிங்கம் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோ கணேசன் மற்றும் அக்கட்சியின் ஊடக செயலாளர் பாஸ்கரா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரன் வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன், பாண்டியன்குளம் பிரதேச சபையின் உபதலைவர் எஸ்.செந்தூரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.[/size]

[size=4]K02(73).jpg

K03(49).jpg

K04(29).jpg

K05(15).jpg

K06(11).jpg[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.