Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வே சிறுவர் காப்பகத்திற்கு, போதிய.... அனுபவம் இல்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nor-ste%255B1%255D.jpg

சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லை : ஏற்றுக்கொண்டுள்ளார் அமைச்சர் இங்கே மார்ட்டே டோர்கெல்சன்.

நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் வெளிநாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பது தொடர்பில் தமது நாட்டு சிறுவர் காப்பகத்திற்கு போதிய அனுபவம் இல்லாதிருப்பதாக நோர்வே சிறுவர் நல விவகார அமைச்சர் (Inge Marte Torkelsen) இங்கே மார்ட்டே டோர்கெல்சன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து வெளிவருகின்ற அப்டன் போஸ்ட் (Aften Post) என்ற பத்திரிகை நேற்று 10ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரம் இலங்கை ஊடகங்களின் வாயிலாக சர்வதேச மட்டத்திற்கு வந்துள்ளதையடுத்து தற்போது இவ்விவகாரம் நோர்வே அரசாங்கத்திற்கு நெருவாரங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான தகவல்களும் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே நோர்வே நாட்டின் சிறுவர் விவகார அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருப்பதாக அப்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் சிறுவர் காப்பகத்தில் பொறுப்பேற்கப்பட்டுள்ள வெளிநாட்டு சிறுவர்கள் தொடர்பில் அமைச்சின் கவனம் திரும்பியிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க நோர்வே அரச மட்டத்திலுள்ள உயர் அதிகாரிகள் மத்தியிலும் நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் மற்றும் டொம் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் ஆகிய விடயங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி வீரகேசரி.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே சிறுவர் காப்பகத்தை விட மோசமான நிலையில் தமிழர்கள் வீடுகளில் பிள்ளைகளை நடத்துகின்றனர். இங்கே பிரிட்டனிலும் தமிழர் குடும்பங்கள் சிலவற்றிடம் இருந்து அதிகாரிகளால் பிள்ளைகள் காப்பங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். காரணம் சரியான பராமரிப்பின்மை.. மற்றும் துன்புறுத்தல்..!

மேலும் சில பொறுப்பற்ற குடும்பத் தலைவர்கள்/தலைவிகள் குடும்பத்தை கைவிட்டு வேறு பெண்களோடு/ ஆண்களோடு வாழும் நிலையும் இங்கு நம்மவரிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. படித்தவர்கள் படிக்காதவர்கள் எல்லோரிடமும் இந்த நிலை காணப்படுகிறது. இதனால் பிள்ளைகள் பராமரிப்பற்று விடப்படுவதோடு சிறுவயதிலையே தவறான பாதைகளில் தங்கள் வாழ்க்கையையும் கொண்டு செல்ல முனைகின்றனர்..!

அந்த வகையில்.. றிஸ்க் அதிகம் உள்ள இடங்களில் இருந்து பிள்ளைகளை பொறுப்பேற்று அரச காப்பகங்களில் வைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய செயலே..! பெற்றோர் தமது தவறுணர்ந்து திருந்தும் வரையாவது இது செய்யப்பட வேண்டும்..!

இப்பவும் அடிச்சு வளர்க்காத பிள்ளையும் இல்ல.. முறிச்சு வளர்க்காத முருங்கும் இல்லைன்னு சொல்லிக்கிட்டு முருங்கை மரக் காலத்தில் வாழும் நம்மவர்கள் பலர் புலம்பெயர் மண்ணிலும் உளர். இவர்கள் தொடர்பில் அரசுகள் விழிப்போடு இருப்பது அவசியம்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

அந்த வகையில்.. றிஸ்க் அதிகம் உள்ள இடங்களில் இருந்து பிள்ளைகளை பொறுப்பேற்று அரச காப்பகங்களில் வைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய செயலே..! பெற்றோர் தமது தவறுணர்ந்து திருந்தும் வரையாவது இது செய்யப்பட வேண்டும்..!

-------

பல பெற்றோர்... பணம், வேலை என்று அலைவதால்.. அவர்கள் பிள்ளை, தன்பாட்டில் வளரும் என்ற அறியாமையே... முதல் காரணம்.

கலியாணம் கட்டி பிள்ளை, பெற்றால்... மட்டும் காணாது, பிள்ளையை... வளர்க்கும், அறிவும் பெற்றோருக்கு ஊட்டப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.