Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் படுகொலை - தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் போராட்டம்

Featured Replies

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் போராட்டம்

[சனிக்கிழமை, 20 மே 2006, 05:24 ஈழம்] [ச.விமலராஜா]

20060520001.jpg

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்க்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தினது மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தென்னாப்பிரிக்கத் தமிழர் கூட்டமைப்பு, அமைதிக்கும் நீதிக்குமான திராவிடர் அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

20060520002.jpg

அல்லைப்பிட்டியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 13 பேர் சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை ஏந்திய பதாகைகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை விளக்கும் பதாகைகளுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தென்னாப்பிரிக்காவுக்கான ஐ.நா. தூதுவரக அதிகாரி மைக்கேல் லுஜுஸ்ற்ரொமிடம் முறைப்பாடு மனு அளிக்கப்பட்டது.

மேலும் நாளை மே 21 ஆம் நாள்னறு டார்பன் நகரிலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

20060520003.jpg

20060520004.jpg

படங்கள்: தமிழ்நெட்

ஈழத் தமிழர் படுகொலை - கனேடிய தமிழர் கொண்டாட்டம்.

TVI & CMR (புகழ் பெற்ற தேசிய ஊடகங்கள்) இணைந்து வழங்கும் கொண்டாட்டம் www.businessfestival.ca

அது மட்டுமல்ல கானா உலகநாதனும் பரவை முனியம்மாவும் கலந்து சிறப்பிக்கும் பல்சுவை நிகழ்ச்சி ஒழுங்கு படுத்தீனம் மொன்றியலிலும் ஸ்காபரோவிலும் 10 ஆண்டு காலமாக உருளைக்கிழங்கின்ரை விலையும் வெங்காயத்தின்ரை விலையும் எழுதி கனடா வாழ் மக்களுக்கு சேவை செய்து வெற்றி நடை போடும் உதயன்.

  • தொடங்கியவர்

அது மட்டுமா? இங்கு சக்தி டிவி நிறுவனத்தின் தமிழ் டிஸ்கோ நிகழ்ச்சியும் கொழும்பில் நடைபெறவிருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

தென்னபிரிக்காத் தமிழனுக்கு இருக்கின்ற உணர்ச்சி கூட எம்மவர்களுக்கு கிடையாது.

நேற்று ஒரு நண்பர் சொல்கின்றார். கனடாத் தடை என்றவுடன் எம்மோடு துள்ளிக் குதித்தீர்களே, இப்போது ஜரோப்பிய யுூனியனின் தடைக்கு என்ன செய்யப் போகன்றீர்கள் என்று கேட்கின்றார். அப்படியே கேள்வி கேட்பதில் ஒரு வித பெருமிதம் அவருக்கு. எதோ தாங்கள் குற்றவாளிகளாக இருக்காவிட்டால் சரி என்ற எண்ணம் தான். இப்படிப்பட்டவர்களின் தேசியப் பற்று சுயநலம் மிக்கது.

இவர்களைக் குற்றம் சொல்லி பயன் இல்லை. காசி ஆனந்தன் சொல்வது போல "மாந்தநேயத்தின் கல்லறையில் ரசனை". சில விடயங்கள் பகிரங்கமாக சொல்லமுடியாது.

இவர்களைக் குற்றம் சொல்லி பயன் இல்லை. காசி ஆனந்தன் சொல்வது போல "மாந்தநேயத்தின் கல்லறையில் ரசனை". சில விடயங்கள் பகிரங்கமாக சொல்லமுடியாது.

ஈழத் தமிழர் படுகொலை - கனேடிய தமிழர் கொண்டாட்டம்.

TVI & CMR (புகழ் பெற்ற தேசிய ஊடகங்கள்) இணைந்து வழங்கும் கொண்டாட்டம் www.businessfestival.ca

அது மட்டுமல்ல கானா உலகநாதனும் பரவை முனியம்மாவும் கலந்து சிறப்பிக்கும் பல்சுவை நிகழ்ச்சி ஒழுங்கு படுத்தீனம் மொன்றியலிலும் ஸ்காபரோவிலும் 10 ஆண்டு காலமாக உருளைக்கிழங்கின்ரை விலையும் வெங்காயத்தின்ரை விலையும் எழுதி கனடா வாழ் மக்களுக்கு சேவை செய்து வெற்றி நடை போடும் உதயன்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா சகோதரர்களுக்கு அப்புவின் நன்றிகள்

  • தொடங்கியவர்

மகாறாஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சியின் களியாட்ட நிகழ்வில் தமிழ்ப் பெண்களுக்கு அனுமதி இலவசம்.

சக்தி தொலைக்காட்சியின் அனுசரணையுடன் இலங்கையில் முதல் தடவையாக தமிழர்களுக்கான களியாட்டமான டிஸ்கோ இரவு நிகழ்வொன்று 27ம் திகதி நடைபெற இருப்பதாகவும் இதனை சக்தி தொலைக்காட்சி நடாத்துவதாகவும் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சியில் போகின்றது. தமிழர் வகைதொகையின்றிக் கொல்லப்படும் போதும் தமிழ்ப் பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டுக் கொல்லப்படும் போதும் கொழும்பில் கலாச்சாரத்தைப் பேண வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தமிழர் கலாச்சாரத்தை விபச்சாரமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. 1972ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் சாவகச்சேரியைச் சேர்ந்த திசவீரசிங்கத்துடன் இணைந்து முற்றவெளியில் முதன் முதல் இத்தகைய ஒரு களியாட்ட நிகழ்வு ஒன்றிற்கே கைக்குண்டு எறிந்து தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தமிழர் கலாச்சாரத்திற்கு விரோதமான செயல்களை நிறுத்துவதற்கு கொழும்பின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முன்வராமை கவலைக்குரிய விடயம் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.