Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

புலிகளின் தியாக உணர்வை மெய்ச்சும் புத்த பிக்கு

தமிழீழ விடுதலைப் புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை ஒரு பயங்கரவாத அமைப்பு சமர்ப்பித்த யோசனைகள் என்று கூறி பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர்களே உண்மையான பயங்கரவாதிகள் என்று வணக்கத்துக்குரிய மகநெல்கடவல புண்ணியசாய் தேரர் தெரிவித்துள்ளார்.

சமாதானம், ஐனநாயகம் மற்றும் நற் பரிபாலனத்துக்கான மக்கள் மன்றம் குருநாகலில் நடத்திய ஒன்று கூடலின்போது வணக்கத்துக்குரிய புண்ணியசாய் தேரர் இதனை தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாக உணர்வை சிலர் கொச்சைப்படுத்த முயல்வதும் முறையற்றது எனவும், புலிகளின் தியாகத்தை தான் மெய்ச்சுவதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்று கூறுபவர்களோடு பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த தான் தயாராக இருப்பதாகவும் புண்ணியசாய் தேரர் குறிப்பிட்டார்.

நன்றி புதினம்...!

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply

ருபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை மீது இடைக்கால தடை

தேர்தல்கள் ஆணையாளர் 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதியும், 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதியும் வெளியிட்ட பரிந்துரைகளை மீறுவதை தடுக்கும் வகையில் இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின் மீது இடைக்கால தடை உத்தரவு ஒன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.எஸ்.சமரக்கோன் பிறப்பித்துள்ளார்.

இந்த இடைக்கால தடை உத்தரவு இவ் இரண்டு நிறுவனங்களில் கடமையாற்றும் பணிப்பாளர்கள், தொழிலாளர்கள், செய்தி வழங்குநர்கள், ஊழியர்கள் முகவர்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் கீழ் கடமையாற்றும் அனைவருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் மனுவொன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

2004 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதியும் இதே ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதியும் தேர்தல்கள் ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்ட அறிவுரைகளின் மூலம் அரச இலத்திரனியல் ஊடகங்களில் தமது செய்திகளிலும், ஏனைய நடப்பு விடயங்களிலும், சகல தரப்பினருக்கும் சம வாய்ப்பு வழங்குவதுடன் பக்க சார்பற்ற முறையில் செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இந்த அறிவுரைகளுக்கு அமைவாக இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனமும், சுயாதீன தொலைக்காட்சிச் சேவையும் செயற்படாததன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த இடைக்காலத் தடை உத்தரவு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி அமுலில் இருக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

நன்றி புதினம்...!

Tamil

Tamil Tiger rebels have threatened to kill the leader of a major faction who split from the group early this month.

"To safeguard our nation and our people, it has been decided to get rid of Karuna from our soil," the group said in on a pro-Tiger website.

Colonel Karuna took 6,000 troops of the 15,000-strong rebel movement with him when he left.

The internal split has thrown further doubt on the island's two-year-old ceasefire and fragile peace process.

Colonel Karuna left complaining that the east of Sri Lanka was not being represented by the rebels' northern-based leaders.

The Tamil leadership at first sought to play down the split, but their tone has changed dramatically in the latest statement.

'Treachery'

"Our cadres should comprehend Karuna's treachery and keep away from him," said the Liberation Tigers of Tamil Eelam on the Tamilnet website.

"Anybody who opposes disciplinary action against Karuna, will be considered as a traitor to the Tamil National cause."

The statement said fighters who abandoned Colonel Karuna - whose real name is Vinayagamoorthy Muralitharan - had permission to rejoin their families.

Correspondents say the vow to "get rid of" Colonel Karuna is unlikely to mean simply expelling him, as there is little tolerance for insubordination.

No comment has been reported from Colonel Karuna's camp.

புலிகளின் தலைமைப் பீடச் செய்தியை மையமாகக் கொண்ட செய்திக்கு BBC இப்படி தலைப்புக் கொடுத்துள்ளது...! அப்போ BBCக்கு இப்பதான் உண்மை புலப்பட்டிருக்குப் போல...???!

:twisted: :P :?: :shock:

  • தொடங்கியவர்

சிறிலங்காவின் 'கிங் மேக்கராக" தமிழீழத் தேசியத் தலைவர்: சர்வதேச ஊடகம்!!

சிறிலங்கா அரசியலை தீர்மானிக்கிற அரசியல் சக்தியாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உருவாக்கியுள்ளார் என்று சர்வதேச ஊடகமான ஏ.எஃப்.பி தனது ஆய்வுச்; செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் 2 ஆம் திகதியன்று இலங்கைத் தீவில் நடைபெற உள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆய்வுச்; செய்தி விவரம்:

49 வயதாகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் முதல் முறையாக சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுடன் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சிறிலங்கா அரசியலில் தீர்மானிக்கிற சக்தியாக வலுப்பெற்றுள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 15 முதல் 18 வரையிலான உறுப்பினர்கள் பிரபாகரனின் ஆதரவாளர்களாக இருப்பார்கள். இந்த 18 உறுப்பினர்கள் மூலம் சிறிலங்காவில் ஆட்சிப் பொறுப்பில் யார் உட்காருவது என்பதைத் தீர்மானிக்கிற சக்தியாக - கிங் மேக்கராக பிரபாகரன் உருவெடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை பிரபாகரன் மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறார். தமிழீழத் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த காலங்களில் அனுமதிக்கவில்லை. தற்போது தங்கள் நிர்வாகப் பகுதியில் உள்ள மக்கள் சூனியப் பிரதேசங்களில் அமைக்கப்பட உள்ள வாக்குச்; சாவடிகளில் வாக்களிக்க உரிய நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொண்டுள்ளது என்று அந்த செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

தற்போதைய நிலைமை பற்றி இந்திய பத்திரிகை ஒன்றின் கருத்து ....

Split in LTTE takes wind out of its sail

SWATI DAS

TIMES NEWS NETWORK[ FRIDAY, MARCH 26, 2004 05:18:19 PM ]

COLOMBO : The vertical split in the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had taken the world by surprise.

It was practically thought of as a tightly bound militant unit, which had eliminated any form of descent. But, today its no more so. The tiger Villupillai Pirabhakaran's leadership has been challenged by the organisations eastern commander V. Muralitharan alias Col Karuna. This paves the way for further challenges to Pirabhakarans power or the weakening of militancy in Sri Lanka .

Though the rivalry has threatened peace process and the flash election in the island on April 2, especially with the LTTE deciding to eliminate Karuna, diplomatic sources in the Indian High Commission feels that the events of last one and half years have belied such fears.

"There are two portions to sort out their rivalry. One is the suicidal attacks, as their ultimate safety is in eliminating each other. The second is through political will. Having relished peace, both Pirabhakaran and Karuna know that the first option would alienate them from the people. So the second option is more likely," said a source.

"For the first time in 22 years there has been no violence and neither do we expect any significant disturbances during the elections," said one of the sources.

The battle line-up between Pribhakaran and Karuna are almost equal, with Pirabhakaran holding sway in the north ( Jaffna peninsula) and Karuna in the east (Batticoloa). While Karuna has about 5090 fighting cadres and a total cadre base of 6540, Piribhakaran's count is 4010 fighting cadres and a total base of 9070. Though LTTEs strength lies in practically living in the jungles, it is in the east where there is more dense forest and catching Karuna would be a difficult task.

Having the election in close quarters, both factions of the LTTE are in the electoral process. The two factors benefiting Karuna is the pluralisation of the organisations politics, which has become an operational necessity and the second factor is that he has established a rapport with the Muslims of the region. However, the Indian embassy sources feel that it would be better if Karuna also makes peace with the Muslim leaders too, instead of by-passing them to the grassroots level.

On the other hand Pirabhakaran is "quite serious about the peace talks". Karuna's statement that the LTTE demand for Eelam (separate state for Tamils) is only a dream today, is also a reality that Pirabhakaran faces. The priority has now switched to power sharing wit the front-line political parties and vis-à-vis power share in the north and the east of the island.

The sources point out that the actions of the LTTE have been their undoing. The IPKF (Indian Peace keeping Force) operations ended hopes of a victory for the Sri Lankan military. And, the shot that killed Rajiv Gandhi dashed all hopes of Eelam for the LTTE Today Eelam is dead, so is the option of military solution, a diplomatic official said.

All said and done, India is still firm on the extradition of the two main accused in the assassination of the former Prime Minister Rajiv Gandhi on May 21, 1991 - Pirabhakaran and LTTE intelligence chief Pottu Amman (another accused, Akhila being dead). The Indian government renews its request with the Sri Lankan government from time to time, that the two be handed over for trials in India. The Indian High Commission also rejected the LTTE's plea that India lifts the ban and strike off the `terrorist label attached to it: "Nobody in India would accept the LTTE demand."

However, India assures that the diplomatic and trade ties with the island did not depend on the results of the April 2 election.

நன்றி - THE TIMES OF INDIA

  • தொடங்கியவர்

Prabhakaran's cut-outs at election Rally- Army seeks ruling from SLMM

Bandula Jayasekara in Colombo, SLT 4.55 P.M Friday 26 March. LTTE leader Vellupillai Prabhakarans cut-outs have been displayed at a rally organized by former TNA member of parliament N.Raviraj yesterday in Neeravely and the Sri Lanka Army has reported the incident as violation of the ceasefire agreement signed between the government and the LTTE. The Army is seeking a ruling from the Sri Lanka Monitoring Mission (SLMM) and awaiting the SLMM ruling on the matter since depiction of such LTTE cut-outs amounts to a violation of the provisions of the ceasefire agreement.

  • தொடங்கியவர்

பொலீஸார் - மாணவர் தகராறு

பெரும் மோதலாக வெடித்தது!

திருநெல்வேலியில நேற்று மாலை களேபரம்

தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆதரவாக நேற்று மாலை திருநெல்வேலிப் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அப்பகுதியில் கடமையில் ஈடுபட் டிருந்த பொலீஸாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு பெரும் கலவரமாக வெடித்தது.

இந்தக் கலவரத்தில் பொலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம், குண்டாந்தடிப் பிரயோகம் என்பவற்றை மேற்கொண்டனர். மாணவர்களும் பதிலுக்குப் பொலீஸார் மீது கற்களை வீசினர். பொலீஸாரின் குண்டாந்தடிப் பிரயோகங்களில் மாணவர்கள் சிலர் உட்காயங்களுக்கு இலக்காகினர்.

கலவரங்களையடுத்து மூன்று இளைஞர்கள் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்றுமாலை 6.30 மணியளவில் திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் மாணவர்கள் சிலர் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவேளை அங்கு வந்த பொலீஸார் அவ்விடத்தில் நின்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க வேண்டாம் என்று மாணவர்களைத் தடுத்தனர் என்றும் - இதனையடுத்தே இருதரப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை திடீரென ஷட்ரக்| வண்டிகளில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொலீஸார் அவ்விடத்தில் வந்து குவிந்தனர். தொடர்ந்து பெருமளவு மாணவர்களும் அங்கு திரண்டனர். அப்போது அங்கு போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.

ஒரு கட்டத்தில் பொலீஸார் திடீரென மாணவர்களை நோக்கி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், குண்டாந்தடிப்பிரயோகமும் மேற்கொண்டனர். பதிலுக்கு மாணவர்களும் பொலீ ஸாரை நோக்கி கற்களையும் தடிகளையும் வீசித் தாக்கினார். தனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. வர்தகர்கள் தமது கடைகளை அவசர அவகராமக இழுத்து மூடிவிட்டு அங்கிருந்து ஓடினர்.

கண்ணீர்ப் புகைப் பிரயோகம் உக்கிரமடையத் தொடங்கியதும் அங்கு நின்ற அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது பொலீஸார் தமது கையில் அகப்பட்ட மூன்று இளைஞர்களை கோப்பாய் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்புத் தெரிவித்து மாணவர்கள் பலாலி வீதியில் - திருநெல்வேலி சந்திக்குச் சமீபமாக ஒன்று கூடி வீதிக்கு குறுக்காக தடிகள், கற்களைப் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அரசியல் துறைப் பொறுப்பாளர் சி;.இளம்பரிதி கோப்பாய் பொலீஸ் நிலையத்துக்குச் சென்று பொலீஸாருடன் பேச்சு நடத்தினார். இதனையடுத்து பொலீஸாரால் கைது செய்யப்ட்ட இளைஞர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்;களிடம் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று மட்டுமே பொலீஸார் கோரினர் என்றும் .

ஆனால், மாணவர்கள் அதற்கு உடன்படாததாலேயே அசம்பாவிதச் சம்பவம் ஏற்பட்டது என்றும். -

பொலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை,

மாணவர் - பொலீஸார் மோதலின் இடையே சிக்கி காயமடைந்தார் என்று கூறப்படும் கே.கேதீஸ்வரன் (வயது 24) என்பவர் கோப்பாய்ப் பொலீஸாரால் நேற்றிரவு யாழ்.ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

நன்றி - உதயன்

புலிகளின் தியாக உணர்வை மெய்ச்சும் புத்த பிக்கு

தமிழீழ விடுதலைப் புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை ஒரு பயங்கரவாத அமைப்பு சமர்ப்பித்த யோசனைகள் என்று கூறி பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர்களே உண்மையான பயங்கரவாதிகள் என்று வணக்கத்துக்குரிய மகநெல்கடவல புண்ணியசாய் தேரர் தெரிவித்துள்ளார்.

சமாதானம், ஐனநாயகம் மற்றும் நற் பரிபாலனத்துக்கான மக்கள் மன்றம் குருநாகலில் நடத்திய ஒன்று கூடலின்போது வணக்கத்துக்குரிய புண்ணியசாய் தேரர் இதனை தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாக உணர்வை சிலர் கொச்சைப்படுத்த முயல்வதும் முறையற்றது எனவும், புலிகளின் தியாகத்தை தான் மெய்ச்சுவதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

தமிழர்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்று கூறுபவர்களோடு பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த தான் தயாராக இருப்பதாகவும் புண்ணியசாய் தேரர் குறிப்பிட்டார்.

நன்றி புதினம்...!

சிங்களவங்கள் தேரருக்கு துரோகிப்பட்டம் குடுக்கேல்லையே..?

:lol: :P :D

  • தொடங்கியவர்

ஈ.பி.டி.பியினர் - மாணவர்கள் கொக்குவில் பகுதியில் அடிதடி! மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்டுக் காயம்

கொக்குவில் மஞ்சவனப்பகுதி யில் நேற்று முற்பகல் 10.00 மணி யளவில் இடம்பெற்ற ஒரு மோதல் சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்தலைவர் பர ராஜசிங்கம் பகீரதன் (வயது 26), மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் இராஜரட்ணம் புவிராஜ் (வயது 26) ஆகிய இருவரும் காய மடைந்தனர். ஈ.பி.டி.பி. உறுப்பினர் களால் தலையில் பிஸ்டலால் தாக் கப்பட்டதில் பகீரதன் மயக்கமுற் றார் என்று கூறப்படுகிறது. காய மடைந்த இருவரும் பின்னர் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மஞ்சவனப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்களுக் கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போதே இவர்கள் இருவரும் காயங் களுக்குள்ளாகினர்.

மஞ்சவனப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவிகள் சிலரை அப்பகுதியில் பொலீஸ் பாதுகாப்புடன் பிரசாரத்தை மேற்கொண்டிருந்த ஈ.பி.டி.பியினர் தகாத வார்த்தை களால் து}~pத்ததை அடுத்து அங்கு சென்ற மாணவர்கள் ஈ.பி.டி.பியின ருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட் டனர் என்றும் - அவ்வேளை ஈ.பி.டி. பியினரும் மாணவர்களும் கடுமை யாக மோதிக்கொண்டனர் எனவும் - கூறப்படுகிறது.

மோதலில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி. குழு வில் அதன் யாழ்.மாவட்ட அமைப் பாளர் கே.வி.குகேந்திரன்,நல்லு}ர் பிரதேச சபையின் முன்னாள் தலை வரும் ஈ.பி.டி.பி. முக்கியஸ்தருமான மணிபல்லவராஜன்(நி~hந்தன்) ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர் என்று மாணவர் தரப்பில் கூறப் படுகிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யத்தின் தலைவர் பகீரதன் தலை யில் துப்பாக்கியால் தாக்கப்பட்ட தில் சுயநினைவிழந்தார். இந்தச் சம் பவத்தின் போது மாணவர்களைத் தாக்கிய ஈ.பி.டி.பியினருக்குப் பொலீ ஸாரும் உடந்தையாகச் செயற்பட் டனர் என்றும் மாணவர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

நேற்றைய இந்த மோதல் சம் பவம் தொடர்பாக மாணவர்களும், ஈ.பி.டி.பியினரும் பொலீஸில் முறைப் பாடுகளைச் செய்திருக்கின்றனர். தேர்தல் கண்காணிப்பு அமைப்பு களுக்கும் முறையிடப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் தாக் கப்பட்ட சம்பவத்துக்கு மாணவர் அமைப்புகள் பலவும் கடும்கண்ட னம் தெரிவித்திருக்கின்றன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக மருத் துவ பீடமாணவர் ஒன்றியம், சர்வ தேச தமிழீழ மாணவர் பேரவை, உயர் தொழில்நுட்பக் கல்வி நிறு வக மாணவர் ஒன்றியம் ஆகியன கண்டனம் தெரிவிக்கும் அறிக்கை களைத் தனித்தனியாக விடுத்திருக் கின்றன.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றுக்கான காலம் கனிந்து வரும்வேளையில் அந்தச்சூழலைக் குழப்புவதற்கு ஈ.பி.டி.பி. தேச விரோதி கள் முற்படுகின்றனர் என்று விடுத லைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசி யல்துறை தெரிவித்திருக்கிறது.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களே திட்டமிட்டு தங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஈ.பி.டி.பி. அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது. நேற்றைய சம்பவத்தில் தமது உறுப்பினர் ஒருவரும், பொலீஸார் ஒருவரும் மாணவர்களால் கடுமையாகத் தாக் கப்பட்டிருக்கின்றனர் என்று ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது. ஈபி.டி.பி. தலைமை யகமான ஸ்ரீதர் தியேட்டரில் நேற்று அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

தமிழ்க் கூட்டமைப்பின் வேட் பாளர் கஜேந்திரனின் ஆதரவாளர் களே தமது அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தினர் என்று டக்ளஸ் தேவானந்தா அப்போது குற்றஞ்சாட் டினார். சம்பவம் தொடர்பாக ஈ.பி. டி.பி. விடுத்த ஒர் அறிக்கையில்:- யாழ்ப்பாண மாவட்ட வேட்பாள ரும், ஈ.பி.டி.பியின் பிரதான அமைப் பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்), நல்லு}ர் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், வேட்பாளருமான க.மணிபல்லவராஜன் (நி~hந்தன்) ஆகியோரடங்கிய ஈ.பி. டி.பியின் பிரசாரக் குழுவினர் கொக்குவில் மஞ்சவனப்பகுதி அருகே பிரசாரப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளையில், 57-5116 இலக்க முடைய நீலநிற டொல்பின் ரக வாகனத்தில் வந்த கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர், எமது பிரசார வாக னத்தினுள் அத்து மீறி நுழைந்து வானொலி உபகரணங்களைச் சேதப் படுத்தியதோடு ஆள்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த எமது விளம்பரப் பலகைகளும் சேதமாக்கப்பட்டன.

பொலீஸாரின் பாதுகாப்பையும் மீறி மூன்று பொலீஸார் மற்றும் கட்சி உறுப்பினர் மூவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கூட்ட மைப்பு வேட்பாளர் என அறிமுகப்ப டுத்தப்படும் புலிகளின் முக்கியஸ் தரான கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர் இந்த அத்து மீறிய தாக்கு தல்களை நடத்தியுள்ளனர். இதே சம்பவத்தின் போது யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளர் கே.வி.குகேந் திரன் (வி.கே.ஜெகன்), உதவி அமைப் பாளர் மணிபல்லவராஜன் (நி~hந் தன்) ஆகியோருக்கு நேரடி அச்சுறுத் தல்களும், மிரட்டல்களும் விடுக் கப்பட்டன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள் ளது.

நன்றி - உதயன்

ஈ.பி.டி.பியினர் - மாணவர்கள் கொக்குவில் பகுதியில் அடிதடி! மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட்டுக் காயம்

கொக்குவில் மஞ்சவனப்பகுதி யில் நேற்று முற்பகல் 10.00 மணி யளவில் இடம்பெற்ற ஒரு மோதல் சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்தலைவர் பர ராஜசிங்கம் பகீரதன் (வயது 26), மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் இராஜரட்ணம் புவிராஜ் (வயது 26) ஆகிய இருவரும் காய மடைந்தனர். ஈ.பி.டி.பி. உறுப்பினர் களால் தலையில் பிஸ்டலால் தாக் கப்பட்டதில் பகீரதன் மயக்கமுற் றார் என்று கூறப்படுகிறது. காய மடைந்த இருவரும் பின்னர் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மஞ்சவனப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்களுக் கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போதே இவர்கள் இருவரும் காயங் களுக்குள்ளாகினர்.

மஞ்சவனப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவிகள் சிலரை அப்பகுதியில் பொலீஸ் பாதுகாப்புடன் பிரசாரத்தை மேற்கொண்டிருந்த ஈ.பி.டி.பியினர் தகாத வார்த்தை களால் து}~pத்ததை அடுத்து அங்கு சென்ற மாணவர்கள் ஈ.பி.டி.பியின ருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட் டனர் என்றும் - அவ்வேளை ஈ.பி.டி. பியினரும் மாணவர்களும் கடுமை யாக மோதிக்கொண்டனர் எனவும் - கூறப்படுகிறது.

மோதலில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி. குழு வில் அதன் யாழ்.மாவட்ட அமைப் பாளர் கே.வி.குகேந்திரன்,நல்லு}ர் பிரதேச சபையின் முன்னாள் தலை வரும் ஈ.பி.டி.பி. முக்கியஸ்தருமான மணிபல்லவராஜன்(நி~hந்தன்) ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர் என்று மாணவர் தரப்பில் கூறப் படுகிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யத்தின் தலைவர் பகீரதன் தலை யில் துப்பாக்கியால் தாக்கப்பட்ட தில் சுயநினைவிழந்தார். இந்தச் சம் பவத்தின் போது மாணவர்களைத் தாக்கிய ஈ.பி.டி.பியினருக்குப் பொலீ ஸாரும் உடந்தையாகச் செயற்பட் டனர் என்றும் மாணவர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

நேற்றைய இந்த மோதல் சம் பவம் தொடர்பாக மாணவர்களும், ஈ.பி.டி.பியினரும் பொலீஸில் முறைப் பாடுகளைச் செய்திருக்கின்றனர். தேர்தல் கண்காணிப்பு அமைப்பு களுக்கும் முறையிடப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் தாக் கப்பட்ட சம்பவத்துக்கு மாணவர் அமைப்புகள் பலவும் கடும்கண்ட னம் தெரிவித்திருக்கின்றன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக மருத் துவ பீடமாணவர் ஒன்றியம், சர்வ தேச தமிழீழ மாணவர் பேரவை, உயர் தொழில்நுட்பக் கல்வி நிறு வக மாணவர் ஒன்றியம் ஆகியன கண்டனம் தெரிவிக்கும் அறிக்கை களைத் தனித்தனியாக விடுத்திருக் கின்றன.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றுக்கான காலம் கனிந்து வரும்வேளையில் அந்தச்சூழலைக் குழப்புவதற்கு ஈ.பி.டி.பி. தேச விரோதி கள் முற்படுகின்றனர் என்று விடுத லைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசி யல்துறை தெரிவித்திருக்கிறது.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களே திட்டமிட்டு தங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஈ.பி.டி.பி. அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது. நேற்றைய சம்பவத்தில் தமது உறுப்பினர் ஒருவரும், பொலீஸார் ஒருவரும் மாணவர்களால் கடுமையாகத் தாக் கப்பட்டிருக்கின்றனர் என்று ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது. ஈபி.டி.பி. தலைமை யகமான ஸ்ரீதர் தியேட்டரில் நேற்று அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

தமிழ்க் கூட்டமைப்பின் வேட் பாளர் கஜேந்திரனின் ஆதரவாளர் களே தமது அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தினர் என்று டக்ளஸ் தேவானந்தா அப்போது குற்றஞ்சாட் டினார். சம்பவம் தொடர்பாக ஈ.பி. டி.பி. விடுத்த ஒர் அறிக்கையில்:- யாழ்ப்பாண மாவட்ட வேட்பாள ரும், ஈ.பி.டி.பியின் பிரதான அமைப் பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்), நல்லு}ர் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், வேட்பாளருமான க.மணிபல்லவராஜன் (நி~hந்தன்) ஆகியோரடங்கிய ஈ.பி. டி.பியின் பிரசாரக் குழுவினர் கொக்குவில் மஞ்சவனப்பகுதி அருகே பிரசாரப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளையில், 57-5116 இலக்க முடைய நீலநிற டொல்பின் ரக வாகனத்தில் வந்த கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர், எமது பிரசார வாக னத்தினுள் அத்து மீறி நுழைந்து வானொலி உபகரணங்களைச் சேதப் படுத்தியதோடு ஆள்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த எமது விளம்பரப் பலகைகளும் சேதமாக்கப்பட்டன.

பொலீஸாரின் பாதுகாப்பையும் மீறி மூன்று பொலீஸார் மற்றும் கட்சி உறுப்பினர் மூவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கூட்ட மைப்பு வேட்பாளர் என அறிமுகப்ப டுத்தப்படும் புலிகளின் முக்கியஸ் தரான கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர் இந்த அத்து மீறிய தாக்கு தல்களை நடத்தியுள்ளனர். இதே சம்பவத்தின் போது யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளர் கே.வி.குகேந் திரன் (வி.கே.ஜெகன்), உதவி அமைப் பாளர் மணிபல்லவராஜன் (நி~hந் தன்) ஆகியோருக்கு நேரடி அச்சுறுத் தல்களும், மிரட்டல்களும் விடுக் கப்பட்டன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள் ளது.

நன்றி - உதயன்

இரும்புக் கம்பிகளாலும் பொல்லுகளாலும் துவக்குப் பிடிகளாலும் அகோரமாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் இருந்த படங்கள் போட்டவங்கள்தானே.. பார்த்தம்தானே தாக்குதலின் தன்மையை..

:lol: :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் பார்த்தனீங்களோ?

படம் பார்த்தனீங்களோ?
ஓமோம்.. நீங்கள் காட்டின படம் பார்த்தனான்..

:lol: :P :D

இல்ல தாத்தாவுக்கு என்ன கவலை என்றால் நிமலராஜனைப் போல தாக்கல்லையே எண்டு....தாத்தா நீங்கள் போனியள் எண்டா அப்படித் தாக்கலாம்...அரக்க வம்சமாச்சே...!

:twisted: :P :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம் அப்பிடியும் இப்பிடியும் பிரட்டிப் பிரட்டிப் பார்த்து கழுத்துச் சுழுக்கப் போகுது வயசான காலத்திலை

இல்ல தாத்தாவுக்கு என்ன கவலை என்றால் நிமலராஜனைப் போல தாக்கல்லையே எண்டு....தாத்தா நீங்கள் போனியள் எண்டா அப்படித் தாக்கலாம்...அரக்க வம்சமாச்சே...!
குருவி நேற்றே எனது கருத்து சொல்லிப்போட்டன்.. மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை..

:lol: :P :D

அட அதுதானே எல்லோரும் சொல்லினம் தமிழீழ தமிழ் தேசியத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை என்று...அட தாத்தா திருந்திட்டாரோ அல்லது மடங்கீட்டாரோ....அல்லது மாட்டீற்றாரோ...??! :lol:

:twisted: :P :D

அட அதுதானே எல்லோரும் சொல்லினம் தமிழீழ தமிழ் தேசியத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை என்று...அட தாத்தா திருந்திட்டாரோ அல்லது மடங்கீட்டாரோ....அல்லது மாட்டீற்றாரோ...??!

தீக்கோழி பலதும் உலாவருகுது..

மண்ணுக்குள்ளை தலையை புதைக்கிற கூட்டம்..

தளத்திலையிருந்து லிங்க் எடுத்தால் எங்கை தெரியவரும் எண்டு நினைக்கிற கூட்டம்..

உந்த தீக்கோழிக்குப் பயந்து மடங்கிறதுக்கு தாத்தா பயந்தாங்கொள்ளியில்லை.

:lol: :P :D

பெண் போராளிகள் வன்னியிலிருந்து திருகோணமலைக்குச்செல்ல Sri Lanka இராணுவத்தின் பாதுகாப்பை கோரியதாக இன்றைய உறவுப்பாலச் செய்தியிலும் சொன்னாங்கள்..

யாராவது என்ன நடக்குது எண்டு விளங்கப்படுத்துங்கோ.. நடக்கிறது ஒண்டும் புரியேல்லை..

:?: :?: :?:

இலங்கைத் தேர்தலுக்குப் பின் பிரபாகரன் -கருணா மோதல் அபாயம்

கொழும்பு, மார்ச் 27:

இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ள கருணாவை ஒடுக்குவோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர்.

இதை அடுத்து, இலங்கையில் தேர்தலுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் இரு கோஷ்டிகளுக்கும் இடையில் மோதல் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில், இலங்கை கிழக்குப் பகுதியில் உள்ள போராளிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி முன்னதாக போர்க்கொடி எழுப்பினார் கர்னல் கருணா என்ற வி. முரளீதரன். இதை அடுத்து அந்த இயக்கத்திலிருந்து கருணா நீக்கப்பட்டார். பின்னர் அவருக்குப் புலிகள் தலைமை பொதுமன்னிப்பு வழங்கியது. அதைக் கருணா நிராகரித்தார். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் விரிசல் வலுத்துள்ளது.

இந்நிலையில், "கருணாவை ஒடுக்குவோம்' என்று புலிகள் சபதம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்தி:

புலிகள் இயக்கத்துக்கு பெரிய ஊறு ஏற்படுத்திவிட்டார் கருணா. அவரது ஆதரவாளர்கள் அவரைக் கைவிட்டு வெளியேற வேண்டும்.

மட்டக்களப்பு, அம்பாறை மக்களைக் கருணா தொடர்ந்து ஏமாற்றுவதைத் தேசிய தலைவர் பிரபாகரன் இனியும் அனுமதிக்க மாட்டார்.

எமது மக்களையும் எமது மண்ணையும் காப்பதற்காக கருணாவை எங்கள் மண்ணிலிருந்து ஒடுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தான் செய்த துரோகம், குற்றச் செயல் ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கருணா தனது ஆதரவாளர்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்.

நாங்கள் எடுக்கும் நடவடிக்கையின்போது, எந்த ஒரு போராளியும் உயிரிழக்கக் கூடாது என்று பிரபாகரன் கருதுகிறார். அவரது நல்லெண்ணத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதை அவர்கள் கைவிட வேண்டும்.

இந்த வேண்டுகோளையும் மீறி அவருக்கு ஆதரவாகச் செயல்படுவோர், மோசமான விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

அவருடன் இருப்போர், புலிகளின் நடவடிக்கையில் உயிரிழக்க நேர்ந்தால், மாவீரர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்று புலிகளின் செய்தி தெரிவிக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது. அதில், புலிகள் நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும் அதன் ஆதரவு பெற்ற தமிழர் தேசிய கூட்டணி போட்டியிடுகிறது.

எனவே, தேர்தலுக்குப் பிறகு கருணா மீது புலிகள் ராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கருணாவின் ஆதரவாளர் வரதன் தெரிவித்தார்.

தங்களிடம் 5 ஆயிரம் போராளிகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வலுத்தபோது, புலிகள் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கிழக்குப் பகுதியில் உள்ள வெருகல் ஆற்றின் கரையில் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆற்றின் மறு கரையில் கருணாவின் போராளிகள் நின்றிருந்தனர்.

அப்போதே இரு தரப்பினருக்கும் மோதல் வெடிக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால், இலங்கை ராணுவம் உஷார் நிலையில் இருந்ததால், அப்போது தவிர்க்கப்பட்டது.

- தினமணி

  • தொடங்கியவர்

கருணா மீது சக போராளி துப்பாக்கிப் பிரயோகம்

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 27 மார்ச் 2004, 7:54 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணா மீது, அவருடன் கூட இருந்த போராளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து கருணா தப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணாவுடன் இணைந்திருந்த உறுப்பினர், கருணா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற போதும் கருணாவின் பதில் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் செஞ்சுடர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

கருணாவின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரின் உடலை அவருடைய உறவினருக்கு வழங்குவதற்கு கருணா குழுவினர் மறுத்திருப்பதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நன்றி - புதினம்

http://www.eelampage.com/index.shtml?id=20...70754134016&in=

  • தொடங்கியவர்

திம்புக்கோட்பாடும் தமிழர் தாயகமும்

தி ம்புக்கோட்பாட்டுக்கு ஒரே குரலில் தமிழ் தேசிய மக்கள் குரல் கொடுத்தார்கள். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம். அதன் இணைப்பு வரலாற்று முடிவாகும் என்று ஒரே குரலில் கூறினார்கள். விடுதலைப் புலிகளின் படைப்பலத்தையும் கண்ட பேரினவாதிகள் தங்களது நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கிவந்தார்கள். அதிகாரப் பகிர்விற்கு இணக்கம் தெரிவித்து நிற்கின்றனர். ஒஸ்லோ பிரகடனத்தின் மூலம் சமஷ்டி முறையை ஏற்றுக்கொண்டனர்.

1956 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கென்றும் கிழக்கென்றும் பாராது தமிழர்களின் உரிமைகளுக்காக பல போராட்டக்களங்களை அமைத்தனர். அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். காலக்கிரமத்தில் ஆயுத போராட்டமாக மாறியது. ஆயுத போராட்ட காலத்தில் பல அழிவுகளைக் கண்டனர். 2003 ஆம் ஆண்டு வரையும் தமிழ் தேசிய மக்கள் தலை நிமிர்ந்து நின்றனர். தேர்தலும் வந்தது. பாராளுமன்ற கதிரைகளுக்காக ஐம்பது வருடங்களாக கட்டிக் காத்து வந்த கொள்கைகளை, கடமை கட்டுப்பாடுகளை காற்றிலே பறக்க விட்டு விடுகின்றனர்.

அதிகாரம் இன்றேல் அபிவிருத்தி இல்லை என்று முழங்கியவர்கள் இன்று அபிவிருத்திதான் வேண்டுமென்று முணுமுணுக்கின்றார்கள். கிழக்கிலே உதிக்கின்றது இந்த குரல் பேரின வாதிகளுக்கு இனியதோர் இரை.

தமிழர்களுக்குத் தெரியாதா? அரசியல் உரிமைகள் பற்றிப் பேசிய பொழுதெல்லாம் சிங்கள பேரினவாதிகள் அபிவிருத்தியை மட்டும் பேசி இருக்கின்றார்கள். அந்த அபிவிருத்தி அலைக்கு சிலதமிழ் தலைவர்களும் துணை சென்றார்கள்.ஆனால் வாக்குறுதிகள் அளித்த வண்ணம் அபிவிருத்திகள் நடைபெற வில்லை. அதிகாரம் அவர்கள் கையில் அவர்கள் விரும்பும் பொழுது அபிவிருத்தி தொடங்கும் விரும்பாத பொழுது அபிவிருத்தி முடிவடையும்.

உரிமைகளும் அபிவிருத்திகளும் தேர்தல் காலங்களில்தான் பெரிதாகப் பேசப்படுகின்றன. தேர்தல் முடிந்ததும் நீயார். நான் யார் என்று கைவிரித்து விடுகின்றனர். பேரின வாதிகள் உரிமைகளையும் கொடுத்ததில்லை. அபிவிருத்திகளையும் செய்ததில்லை. இந்த இரண்டு விடயங்களிலும் தமிழ் தேசிய மக்கள் எப்பொழுதும் ஏமாற்றப்பட்டார்கள். தமிழ் தலைவர்களும் ஏமாறி நின்றார்கள். இதுதான் வரலாறு.

1944 ஆம் ஆண்டில் அபிவிருத்தி

அதிகாரப் பகிர்வில் தமிழர்கள் பங்குடமை கேட்டது 1944 ஆம் ஆண்டில்தான். அன்றைய கால கட்டத்தில் ஆற்றல் மிகுந்த இளங்சிங்கமாக அரசியல் களத்தில் குதித்தவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம். அவர் 1938 ஆம் ஆண்டு தொடக்கம் சமபல பிரதிநிதித்துவத்திற்காக ஓங்கிக்குரல் கொடுத்தவர். 1944 ஆம் ஆண்டு சோல்பெரி ஆணைக்குழுவினர் இலங்கைக்கு வந்தனர்.

புதியதோர் அரசியலமைப்பை வரைவதற்கு முயன்றனர். அவ்வேளையில்தான் சமபல பிரதிநிதித்துவக் கொள்கைக்கு பலம் கொடுப்பதற்காக தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். தமிழ் மக்களின் தேசிய கட்சியாக தொடங்கியது. சமபல பிரதிநிதித்துவக் கொள்கை உந்து சக்தியாக மிளிர்ந்தது. 1944 ஆம் ஆண்டு சோல்பெரி ஆணைக்குழுவின் முன் ஏறக்குறைய 13 மணித்தியாலங்களாக சமபல பிரதிநிதித்துவத்திற்காக வாதிட்டவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம்.

1938 ஆம் ஆண்டு ஆளுமை கொண்ட ஜீ.ஜீ.யின் குரல் சமபல பிரதிநிதித்துவத்தை முன்வைக்கத் தொடங்கிய பொழுது பேரினவாதிகள் அபிவிருத்தியைப் பற்றிக் கதைத்தனர். அதிகாரப் பகிர்வினை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் அன்றைய அரசியலில் கற்றுக்குட்டியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா வரையும் யாழ்ப்பாணம் சென்றனர். எவ்வளவு அன்பான ஆசைவார்த்தைகள், உடன் பிறந்த சகோதரர்கள் போல் அரவணைப்பு இரத்தத்தின் இரத்தமாக துடி துடிப்பு. மட்டக்களப்பு சென்றனர். அங்கும் அதே பேச்சு வவுனியா சென்றனர். அங்கும் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினர். அன்பு மழையில் தமிழ் மக்களை நனையவைத்தனர்.

கண்டிய இராச்சியத்தை கடைசிவரை காப்பாற்ற போராடியவன் தமிழன். சிங்கக் கொடியை விழவிடாமல் தூக்கிப்பிடித்தவன். தமிழன். தமிழர்கள் சிலகாலம் இலங்கையை ஆண்டார்கள். சிங்களவர்கள் சில காலம் ஆண்டார்கள். சிங்களவர்களை நம்புங்கள். நாங்கள் தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். எங்கள் தலைமையின்கீழ் நீங்கள் எங்களது இணைபிரியா சகோதரர்கள். உங்களுக்கு வேண்டிய தொழிற்சாலைகள், வீதிகள், வைத்தியசாலைகள். எல்லா வகை அபிவிருத்திகளையும் செய்து தருகின்றோம் என்றும் வினயமாக வேண்டி நின்றார். டி.எஸ்.சேனாநாயக்கா, அக்காலத்தில் தான் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பண்ணை தாம்போதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

பூநகரி மகாதேவா தாம் போதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.இரண்டாம் உலக மகா யுத்தத்தில் உபயோகிக்கப்பட்ட படைத்தளக்கட்டிடம் காச நோய் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. அதிகாரப்பகிர்வு பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித்திட்டங்கள் தொடங்கப்பட்டன. மட்டக்களப்பில் பட்டும் படாமலும் சில அபிவிருத்தித்திட்டங்கள் தொடங்கப்பட்டன.

மகாதேவாவும் நடேசனும், சுந்தரலிங்கமும் சிற்றம்பலமும் ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவர் டி.எஸ்.சேன நாயக்காவையும். ஆதரித்து நின்றனர். மட்டக்களப்பில் நல்லையா ஆதரித்து நின்றார். இவர்கள் தமிழர்களுக்கு அதிகாரம் தேவையில்லை. அபிவிருத்திதான் தேவை என்று குரல் கொடுத்தார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்தது. சேனநாயக்கா உரிமை குரல் எழுப்பிய தமிழர் தலைவனான ஜீ.ஜீ.க்கு வலை விரித்தார்.

சகல விதமான ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட சிங்கத்தமிழன் ஜீ.ஜீ. பொன்னம்பலம் டி.எஸ்.விரித்த வலையில் அகப்பட்டுக் கொண்டார். 1948 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 4 ஆம் திகதி அமைச்சரானார். அத்தோடு தமிழர்களின் அதிகாரப்பகிர்வின் வேட்கையும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

தமிழர்களின் அரசியல் உரிமைகளை அதிகாரப் பகிர்வை மழுங்கடிப்பதற்காக சேனநாயக்கா செயல்பட்டார். அதற்காகவே சில அபிவிருத்தி திட்டங்களைச் செய்வதற்கு தடைபோடாது விட்டார். புதிய அரவணைப்பின் கதகதப்பில் இருந்த ஜீ.ஜீ.சீமெந்து தொழில்சாலையை அபிவிருத்தி செய்தார். வாழைச்சேனை காகித தொழிற்சாலையையும் உருவாக்கினார். ஜீ.ஜீ.பொன்னம்பலம் அமைச்சராக இருந்த காலத்தில் தான் வடக்கிலும் கிழக்கிலும் சில அபிவிருத்திதிட்டங்கள் செய்யப்பட்டன. ஜீ.ஜீ.யின் சமபல பிரதிநிதித்துவத்தை மழுங்கடிப்பதற்காக சில அபிவிருத்தி எலும்புகளை தமிழர் முன்போட்டனர்.

கொடுக்கப்பட்ட சில அபிவிருத்தித்திட்டங்களுக்க

  • தொடங்கியவர்

vdp05.jpg

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு ஜோசப்பை வெளியேறுமாறு கருணா தரப்பு கடும் உத்தரவு! பிரசாரத்தில் ஈடுபடுவதற்கும் தடைவித்துள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப் பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் ஜோசப் பரராஜசிங்கம் அந்த மாவட்டத்தில் இருந்து உடன டியாக வெளியேறிவிடவேண்டும் என்றும் -தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் கருணா தரப்பு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு 11 மணி யளவில் கருணா தரப்பைச் சேர்ந்த துரை என்பவர் தொலைபேசி மூலம் ஜோசப் பரராஜசிங்கத்துக்கு இந்த உத் தரவைப் பிறப்பித்துள்ளார் எனத் தெரியவந்தது.

இந்த உத்தரவை ஏற்காது செயற் பட்டால் உமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.

அண்மையில் கூட்டமைப்பு வேட் பாளர்களை அழைத்துக்கலந்துரையா டிய கருணா தரப்பினர்.

தேர்தலில் கிழக்கு அபிவிருத் தியை முன்நிறுத்தியே பிரசாரம் செய் யவேண்டும் என்றும் - வடக்கு - கிழக்கு இணைந்த தாயகம், விடுத லைப் புலிகள் ஏகப்பிரதிநிதிகள் என் பதை முன்நிறுத்திப் பிரசாரம் செய் யக்கூடாது என்றும் - அறிவுறுத்தி யிருந்தனர்.

இந்த அறிவுறுத்தலை ஏற்கமறுத்து வடக்கு - கிழக்கு இணைந்த தாய கம், விடுதலைப் புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் என்ற விடயங்களை முதன்மைப்படுத்தி ஜோசப் பரராஜ சிங்கம் தனது பிரசாரங்களை மேற் கொண்டுவந்தார்.

இதற்கிடையில் - கூட்டமைப்பு வேட் பாளர்கள் யாவரையும் நேற்றுமுன்தினம் தம்மைச் சந்திக்கும்படி கருணா தரப்பு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று ஏழு வேட் பாளர்களும் அவர்களது பிரதேசத் துக்குச் சென்று இருந்தனர். ஜோசப் பரராஜசிங்கம் மட்டும் அங்கு செல்ல வில்லை.

தேர்தலை எப்படி முகம் கொடுப் பது என்பது குறித்து சென்றவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

சகல வேட்பாளர்களும் இணைந்து ராஜன் சத்தியமூர்த்தியை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றும் - ஒரு லட்சம் விருப்பு வாக்குகளை அவர் பெற சகல வேட்பாளர்களும் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் - கருணா தரப்பு அறிவுறுத்தல் விடுத் துள்ளது என அறியவந்தது.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

கருணாவை தீர்த்துக்கட்ட விடுதலைப் புலிகள் முடிவு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட அதன் முன்னாள் கிழக்குப் பகுதி தளபதி முரளிதரன் என்கின்ற கருணாவை தீர்த்துக்கட்டப் போவதாக புலிகளின் தலைமை வெளிப்படையாக அறிவித்துவிட்டது!

மட்டக்களப்பு, அம்பாறை மக்களை பகுதி உணர்வை தூண்டி கருணா ஏமாற்றி வருவதை இதற்கு மேலும் அனுமதிக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தயாராக இல்லை என்றும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தேசிய உணர்விற்கும் எதிரான துரோகிகளின் எதிரிகளின் கைப்பாவையாகிவிட்ட கருணாவை இதற்கு மேலும் தமிழீழ மண்ணில் அனுமதிக்க முடியாது என்று புலிகளின் அரசியல் பிரிவு வன்னியில் இருந்து விடுத்துள்ள அறிக்கை கூறுகிறது.

"உண்மையை அறியாத மக்களையும், தொண்டர்களையும் பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து வருகிறார் கருணா. ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக சிந்தப்பட்ட ரத்தத்தை, செய்யப்பட்ட தியாகத்தை எதிரிகளுடன் கருணா பேரம் பேசி வருகிறார். நமது தேசத்தையும், நமது மக்களையும் காப்பாற்ற இதற்கு மேலும் நமது மண்ணில் கருணா நீடித்திருக்க அனுமதிக்கப் போவதில்லை" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

கருணாவிற்கு விசுவாசமாக உள்ள தொண்டர்களை விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ள அந்த அறிக்கை, கருணாவிற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை எதிர்க்கும் எவரொருவரும் தமிழ் தேசியத்தில் துரோகியாக கருதப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

நன்றி - வெப் உலகம்

  • தொடங்கியவர்

கருணா மீது சக போராளி துப்பாக்கிப் பிரயோகம்

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 27 மார்ச் 2004, 7:54 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணா மீது, அவருடன் கூட இருந்த போராளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து கருணா தப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணாவுடன் இணைந்திருந்த உறுப்பினர், கருணா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற போதும் கருணாவின் பதில் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் செஞ்சுடர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

கருணாவின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரின் உடலை அவருடைய உறவினருக்கு வழங்குவதற்கு கருணா குழுவினர் மறுத்திருப்பதாகவும், அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நன்றி - புதினம்

http://www.eelampage.com/index.shtml?id=20...4134016&in=

இதைபற்றி வேறு ஏதாவது செய்திகள் கிடைத்தால் தாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.