Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் தடையை மீறி ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் - கொள்வனவு செய்ய சென்ற இலங்கையின் கப்பல்கள் தடுத்து வைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தடையை மீறி ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் - கொள்வனவு செய்ய சென்ற இலங்கையின் கப்பல்கள் தடுத்து வைப்பு!

[ஸுன்டய், 2012௰௨8 08:16:42]

ஈரானில் இருந்து மசகு எண்ணெய்யை தருவிப்பதற்காக இலங்கையால் அனுப்பப்பட்ட கப்பல்கள் ஈரானின் கடல் எல்லையில் வைத்து அமெரிக்க கப்பல்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து அந்தக் கப்பல்கள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்கா பச்சை விளக்கை காட்டும் வரை இலங்கையால் ஈரானிடம் இருந்து எவ்வித மசகு எண்ணெய் கொள்வனவையும் மேற்கொள்ளமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தமது ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை.

எனினும் அமெரிக்க தடை காரணமாக, இலங்கையை சிறிய கப்பல்களை அனுப்புமாறு ஈரான் கோரியது. அதற்கமைய கப்பல்களும் அனுப்பப்பட்டன. எனினும் ஈரான் செல்லும் கப்பல்களுக்கு காப்புறுதியை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் முன்வர மறுக்கின்றன.

இதன் காரணமாக ஈரானுடன் வங்கி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=69146&category=TamilNews&language=tamil

[size=4]சிங்களம் மீது அமெரிக்கா விதிவிலக்கு அனுமதி தந்துள்ள நிலையில் சிங்களம் இதை வேண்டி வேறு யாருக்கோ விற்க முனைந்துள்ளது போலுள்ளது.[/size]

இப்படியான பொருளாதார நெருக்கடிகளை இலங்கை சந்திக்க வேண்டும் அதிலிருந்து இலங்கை அரசின் திறமை அற்ற நிர்வாக ,அரசியல் பொருளாதார உண்மைகளை இலங்கை மக்கள் உணரவேண்டும் ..............மனிதத்திற்கான ,மனித உரிமைக்கான போர் வெடிக்கவேண்டும் .அதன் மூலம் அனைத்து இலங்கை வாழ் சமுதாயங்களும் நல்ல ஒரு வாழ்க்கை தரத்தை பெறவேண்டும் ................இத்தகைய போராட்டங்கள் தமிழர் தரப்பை நிச்சயம் பாதிக்காது ஏனனில் நாம் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பது ...............மோசமான கீழ்த்தரமான பொருளாதார ,[வறுமை] கட்டமைப்பில் .............ஆகவே இது எம்மை ஒரு விதத்திலும் பாதிக்காது .....................

காரணம் இல்லாமல், தனக்குக் தொடர்பில்லாத ஒரு வியாபாரத்தை அமெரிக்கா தடுத்தால் அது போரின் ஆரம்பம் இல்லையா?

இலங்கையால் கப்பல்கள் அனுப்பப்பட்டுத்தான் எண்ணை இங்கே கொண்டுவரப்படுகின்றதென்பது உண்மையா?

இலங்கையின் கப்பலை அமெரிக்கா தடுத்தால், அமெரிக்கா இலங்கை மீது பொருளாதாரத்தடை போட்டிருக்கா? ஈரான் மீது போட்டிருக்கா?

அந்த கப்பல்களை ஏன் சவுதி தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா போட்ட நிதிதடைகளை எல்லா நாடுகளும் 100% பின்பற்றுகின்றனவா? பின்பற்றாத மற்றைய நாடுகளின் கப்பல்களையும் அமெரிக்கா தடுக்கிறதா?

கோபத்தபயாவின் கப்பல்களை ஏன் சவூதி தடுத்தது?

[size=4]சிறிலங்கா கப்பல்களை தடுத்து நிறுத்தியது அமெரிக்க கடற்படை[/size] [size=4][ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 01:35 GMT ] [ கார்வண்ணன் ][/size]

[size=4]USS-Blue-Ridge.jpgஈரானில் எரிபொருள் ஏற்றச் சென்ற சிறிலங்காவின் எரிபொருள் தாங்கி கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.

ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள அமெரிக்கா, தனது கடற்படைக் கப்பல்களின் மூலம் ஈரானுக்குச் செல்லும் கப்பல்களை தடுத்து வருகிறது.

எரிபொருள் தேவைக்கு ஈரானையே முழுமையாக நம்பியுள்ள சிறிலங்கா அரசாங்கம், எரிபொருளை ஏற்றி வருவதற்கு கப்பல்களை தெஹ்ரானுக்கு அனுப்பியிருந்தது.

இவற்றை அமெரிக்கா தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது,

அதனால், அந்தக் கப்பல்களை சவூதி அரேபியாவுக்கு சிறிலங்கா திருப்பி விட்டது.

ஈரான் எரிபொருள் இறக்குமதி தடைப்பட்டுள்ளதால், ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் சபுகஸ்கந்த ஆலை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தமது பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் மூலம் சிறிலங்காவுக்கு எரிபொருள் விநியோகிக்கத் தயார் என்று ஈரான் கூறியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவுக்கான ஈரானியத் துதுவர் ஹசானி, “ஈரானின் பாரிய எரிபொருள் தாங்கி கப்பல்கள் சிறிலங்காவின் சிறிய துறைமுகங்களுக்குள் நுழைய முடியாது என்று எமக்குத் தெரியும்.

ஒரே ஒரு தெரிவு உள்ளது. சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் வைத்து வேறு கப்பல்களுக்கு எரிபொருளை மாற்ற முடியும்.

இதுதொடர்பாக நாம் சிறிலங்கா அரசுடன் கலந்துரையாடி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.[/size]

http://www.puthinappalakai.com/view.php?20121028107205

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கிடையே, தமது பாரிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் மூலம் சிறிலங்காவுக்கு எரிபொருள் விநியோகிக்கத் தயார் என்று ஈரான் கூறியுள்ளது.

இந்தத் தாங்கிகளின், மூக்கையாவது அம்பாந்தோட்டைக்குள்ள விட ஏலாதா? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.